தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, September 30, 2009

உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி

உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.

இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.

இப்ப‌ அந்த‌ சாமானிய‌ன் ரோலை இளைய‌ த‌ள‌ப‌தி டாக்ட‌ர் விஜ‌ய் செய்திருந்தா எப்ப‌டி இருந்திருக்கும்...

அவ‌ர் கைல‌ விதவித‌மா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவ‌ர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.

அடுத்து மார்க்கெட்ல‌ அவ‌ர் காய் வாங்க‌ போகும் போது ஒரு குழ‌ந்தை மேல‌ த‌க்காளி விழ‌ போகுது. அதை அவ‌ர் நாலு கிலோமீட்ட‌ர் தூர‌த்துல‌ இருந்து பார்க்க‌றாரு. அப்ப‌டியே அங்க‌ இருந்து ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்து வ‌ந்து அந்த‌ த‌க்காளியை எட்டி உதைச்சி, அந்த‌ குழ‌ந்தையைக் காப்பாத்த‌றாரு. இப்ப‌ அந்த‌ குழ‌ந்தை ஆச்ச‌ரிய‌மா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்ப‌டியே சிரிக்குது. இப்ப‌ தான் டாக்ட‌ர் முக‌த்தையே காட்ட‌றோம். இது தான் இண்ட்ரோ.

உட‌னே அங்க‌ ஒரு குத்துப் பாட்டு. டாக்ட‌ர் கை வைக்காத‌ க‌ருப்பு க‌ல‌ர் ப‌னிய‌ன் போட்டு ஆட‌றாரு. அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு. அந்த‌ குத்து பாட்டு முடியும் போது, அங்க‌ ஒருத்த‌ன் ஒரு பொண்ணு இடுப்புல‌ கை வைக்க‌றான். உட‌னே ஒரு ஃபைட். அவ‌னுக்கு துணையா ஆயிர‌ம் பேர் ட்ரெயின்ல வ‌ராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்ட‌ர் அடிச்சி பிரிச்சி மேய‌ராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.

இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.

விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!

லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?

விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)

லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற‌ ஒரே ஆள் நீ தான்.

விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்...

..........

இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?

ம‌ : ஹ‌லோ க‌மிஷ்ஷ்ஷ்ன‌ர் இருக்காரா? நான் தான் காஆம‌ன் மேன் பேச‌றேன்.

ச‌ : டேய் ம‌ண்டையா. நீ காம‌ன் மேனாடா. வேணும்னா டாப‌ர் மேனு சொல்லு. அந்த‌ நாயே வ‌ந்து உன் த‌லையை ந‌க்கி பாத்துட்டு செத்து போயிடும்.

ம‌: க‌மிஷ்ன‌ர்.. நாஆன் இந்த‌ ஊரை சுத்தி பாஆம் போட‌ போறேன்.

ச‌ : ஏன்டா. எவ‌னோ காக்காக்கு வெச்சிருந்த‌ ம‌சால் வ‌டையை எடுத்து தின்ன‌து இல்லாம‌ பாம் போட‌ போறேனு என‌க்கே ஃபோன் ப‌ண்ணி சொல்றியா? நீ சாதார‌ண‌மா போட‌ற‌ பாமே தாங்காது. இதுல‌ க‌ட‌லைப் ப‌ருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப‌ நான் என்ன‌ ப‌ண்ணுவேன்.

ம‌ : நான் ஊருக்குள்ள பாம் போடாம‌ இருக்க‌ணும்னா நீங்க‌ நாலு தீவிர‌வாதியை ரிலீஈஈஸ் ப‌ண்ண‌னும்.

ச‌ : நாங்க‌ தீவிர‌வாதியை ரிலீஸ் ப‌ண்றோம்.. அது வ‌ரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் ப‌ண்ணாம‌ இரு.

பாருங்க‌ ம‌க்க‌ளே. ஒரு க‌மிஷ்னர் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை ச‌மாளிக்க‌ வேண்டிய‌து இருக்குனு.

.........

சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

வ‌ண‌க்க‌ம். Gummisioner, நான்... Gaaman man பேசறேன்.
ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.

ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.
ஏ நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...

ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர். க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...

டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.

க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.
கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?

Wednesday, July 08, 2009

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

கவிதை எனக்குப் புரியாத‌ ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்ப‌தைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

குட்டிசுவற்றில் அமர்ந்து
கடக்கும் ஃபிகர்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்த இளைஞ‌ன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன ஃபிகர்கள்.

இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவனும்... நானும்

வகுப்பறையில் அவ‌னுக்கு
ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று
தலையை நிமிர்த்தி
பார்க்கிறான் அவன்.

எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
த‌லையை டேபிளில்
சாய்க்கிறேன் நான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

க‌டைசி க‌வுஜைக்கு கொஞ்ச‌ம் நிறைய‌ யோசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்க‌லாம்.

Tuesday, July 07, 2009

பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!

சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.


ஏர்சிம் :


பாட்ஷா ‍..
தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.


மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...


இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வைத்தியக்காரன் :


ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.


'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.


படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், ‍ பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)


படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.


மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.


சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.


................................................


சாதுஷா :


பாட்ஷா அண்ணன்களின் காவியம்.


"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.


இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?


"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இது ஏன் அண்ணன்களின் காவியம்?


எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.


விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.


கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வராதகவுண்டன்:
நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.


....................................................................


காவி.மன்னன் :


பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்


பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.


இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.


வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.


முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


fer0z 9@ndhi :


இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.


...............


புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.

Thursday, June 18, 2009

மணல் கயிறு = Linked List

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...


------------------------

இதை இங்கயும் படிக்கலாம் :)

நான் எவ்வளவு சொல்லியும் என் பேரு முரளிதரன் தான், நான் திண்டுக்கல்ல இருக்குற ஒரு காலேஜ் Professorனு உலகத்துக்கு எடுத்து சொல்லும் சாருவுக்கும், விவாதங்களே பிடிக்காதபட்சத்திலும் எனக்கு அறிவுரைக் கூற தனது பொன்னான நேரத்தை வீணாக்கி என் மேல் இருக்கும் பாசத்தால் தனிப்பதிவு போட்ட என் அருமை நண்பர், உலகமகா எலக்கியவாதி தம்பி உமாக்கதிருக்கும் நன்றி :)

Thursday, June 11, 2009

ஒட்டுக் கேட்டதும் பாட்டுப் போட்டதும்!!!

நேத்து ஏதேச்சயா மேனஜர் ரூம் பக்கம் போயிட்டு இருந்தேன். பார்த்தா அங்க அவர் எங்க டீம் லீட் கிட்ட பேசிட்டு இருந்தாரு, என்னடா நம்மல பத்தி ஏதோ பேசறாரேனு பார்த்தா,

மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.


உடனே என் மனசுல பாட்டு கேட்க ஆரம்பிச்சிது.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


...........

இப்ப முழுப் பாட்டு

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை!
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மீசிக் ஸ்டார்ட் )

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!

ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மறுபடியும் மீசீக்)

(டீம் மெம்பர்ஸ் ஒன் பை ஒன்... ஹை பிட்ச்ல)

கால காலத்துக்கும் இப்படியே நாம சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டியது தானா?

நாம மேனஜர் ஆகறது எப்ப?

இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம கோடிங் பண்ணிட்டு இருக்கறது?

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே
வரும் காலத்திலே நம் தலைமுறைகள்
நாம் சாப்ட்வேர் இஞ்சினியரில்லை என்ற முழங்கட்டுமே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

அப்படியே இது மனசுல ஓடி முடியறதுக்கும், Balaji, Can you please do this?னு என் டீம் லீட் பிங் பண்றதுக்கும் சரியா இருந்தது.

அப்படியே தலைவர் பாட்டையும் பார்த்துட்டு போங்க...


Friday, April 17, 2009

பேயை ஏமாற்ற முடியுமா?

13B படம் பார்த்ததுக்கு அப்பறம் இந்த 13 நம்பர் பத்தியே சிந்தனை ஓடிட்டு இருந்தது.

எங்க ஆபிஸ் கட்டடம் 13 ஃபிளோர். ஆனா 13க்கு பதிலா 14 போட்டிருப்பாங்க. லிப்ட்ல 12க்கு அப்பறம் 14 தான் இருக்கும். போன வாரம் மதியம் சாப்பிட்டு வரும் போது என் டீம் லீட் கூடவே வந்தாரு. அவர் இந்த 13 கான்செப்ட்ல தீவர நம்பிக்கை வெச்சிருக்கறவரு. 13ம் தேதி வெள்ளிக்கிழமை வந்துச்சுனா, அன்னைக்கு எதுவும் வேலை செய்யாதுனு பரிபூர்ணமா நம்புவாரு. அதுவும் மதியம் 2 மணிக்கு மேல எந்த வேலையும் ஆரம்பிக்க வேண்டாம்னு சொல்லிடுவாரு. இது நமக்கு சாதகமா இருக்கேனு விட்டுடுவேன்.

லிப்ட்ல வரும் போது இதைப் பத்தி பேச ஆரம்பிச்சேன். ”ஏன் ரோஜர் இந்த 12க்கு அப்பறம் 14 போட்டிருக்கீங்களே. ஏன் அப்படினு கேட்டேன்”

உடனே அவர், “பேய் லிப்ட்ல ஏறுச்சுனா 13ம் நம்பரைத் தான் தேடும். அப்படித் தேடி, அது இல்லைனா ஏமாந்து போயிடும்” அப்படினு சொன்னாரு.

உடனே நான், “பேய் லிப்ட்ல வராம படிக்கட்டுல வந்துச்சுனா என்ன பண்ணுவீங்கனு” கேட்டேன்.

”ஒரு ஒரு ஃப்ளோர்லயும் படிக்கட்ல ஏறும் போது கதவுக்கு முன்னாடி ஃப்ளோர் நம்பர் போட்டிருக்கும். அங்கயும் 12க்கு அப்பறம் 14 தான். அதனால மேல கீழனு மாறி, மாறி ஏறி, இறங்கி ஏமாந்து போயிடும்”னு சொன்னாரு.

விடுவோமா நாம. “பேய்க்கு இந்த நம்பர் சிஸ்டம் தெரியாம, மம்மி பேய் மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க. இல்லைனா ரோமன் நம்பர் மட்டும் தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க”னு கேட்டேன். மனுஷன் அப்படியே ஷாக் ஆகிட்டாரு.

அப்பறம் ஒரு வழியா சமாளிச்சி, “அந்த பேய் எல்லாம் ஈஜிப்ட்ல தான் இருக்கும். இங்க வெறும் அமெரிக்க பேய் மட்டும் தான் இருக்கும்”னு சொன்னாரு.

”அப்படினா அந்த பேய்க்கு ஏற்கனவே தெரியுமில்லை. 13வது ஃப்ளோரைத் தான் இவனுங்க ஏமாத்தி நம்பர் மாத்தி வெச்சிருக்காங்கனு. அப்ப ஈசியா அந்த ஃப்ளோருக்கு போயிடுமே”னு சொன்னேன்.

“புரியலை”

“இப்ப ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்களே நாளைக்கு செத்து பேயாகறீங்கனு வெச்சிக்கோங்க. அப்ப உங்களுக்குனு இந்த பில்டிங்ல 13வது ஃபிளோர் ஒதுக்கி வெச்சா, உங்களுக்கு 14தான் உண்மையிலே 13னு தெரியுமில்லை. அப்பறம் கரெக்டா வந்துட மாட்டீங்க” அப்படினு சொன்னேன். மனுஷன் ஜெர்க்காகிட்டாரு.

“அடப்பாவி. இதுக்கு என்னைய சாகடிச்சி பேயாக்கிட்டியே. சரி உங்க ஊர்ல இந்த பேய் எல்லாம் எப்படி சமாளிப்பீங்க” அப்படினு கேட்டாரு.

”அப்படி கேளுங்க. இந்த மாதிரி வீட்டுக்குள்ள இல்லை பில்டிங் உள்ள வரக்கூடாதுனா, முன்னாடி வேப்பிலையைக் கட்டணும்”

“வாட் இஸ் தட்”

“அது ஒரு மரத்துல இலை. அதுல லேடி காட் (உம்மாச்சி) இருப்பாங்க. அதை சொருகி வெச்சா பேய் வராது”

“வாவ். திஸ் இஸ் சூப்பர்”

“இது என்ன. இதை விட இன்னும் சூப்பரா எல்லாம் இருக்கு. கைல தாயுத்து கட்டினா கூட பேய் வராது. ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கு”

“என்ன பிரச்சனை”

“அந்த பேயே ஒரு சூப்பர் ஃபிகரா வந்து, ஒரு டான்ஸ் போட்டு, தாயத்தை கழிட்டிடும்”

“ரியலி?”

“இல்லை பெருச்சாளி. எவண்டா இவன். எதை சொன்னாலும் நம்பறான். பேயை பார்க்கறதுக்கும் சில டெக்னிக்ஸ் இருக்கு. தெரியுமா?”

“அது என்ன டெக்னிக்?”

“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”

“யா யா. தட் இஸ் ட்ரூ”

பல நாடுகள்ல, பல பேய்கள் இருந்தாலும், எல்லாரும் ஒத்துக்கறது இந்த ஒரு பேயை தான்.

சரி சின்ன வயசுல பேய் எப்ப எப்ப நம்ம பின்னாடி வரும்னு சொன்ன சம்பவங்கள்.

1. மதியம் பனிரெண்டு மணிக்கோ, ராத்திரி பனிரெண்டு மணிக்கோ தனியா நடந்து போனா வரும்.

2. சட்டில கறி சோறு எடுத்துட்டு தனியா போனா பின்னாடி வந்து கேக்கும்.

3. பொண்ணுங்க மல்லைகைப் பூ வெச்சிட்டு போனா பின்னாடி வரும்.

4. ராத்திரி சுடுகாட்டுல போய் முட்டையை உடைச்சா, பின்னாடி பொடனியிலே தட்டும். (அங்க போய் எதுக்கு முட்டையை உடைக்கணும்னு தெரியல)

5. ஞாயிறு சாயந்தரம் ராகுகாலத்துல சுடுகாட்டு பக்கமோ, ஆத்து பக்கமோ போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.

6. பேய் பிடிச்சவங்க முடியை எடுத்து ஆலமரத்துலயோ, அரச மரத்துலயோ ஆணி வெச்சி அடிச்சி வெச்சிருப்பாங்க. அதை எடுத்த அந்த ஆவி நம்மல பிடிச்சிக்கும்.

7. கறி சோறு சாப்பிட்டு ராத்திரி தனியா நடந்து போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.

8. பேய் ஓட்டும் போது அங்க போய் நின்னு சிரிச்சா, அந்த பேய் நம்மல வந்து பிடிச்சிக்கும்.

9. சிலுவைப் போடலனா ரத்தக்காட்டேரி வரும்.

10. வயசுப்பசங்க பின்னாடி மோகினிப் பேய் வரும். அது வரது பூ வாசனை, கொலுசு சத்ததுல தெரிஞ்சிக்கலாம் (அது பின்னாடி பசங்க போகாம இருந்தா சரி)

11. இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும். (ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா அப்படினு புத்திசாலித்தனமா கேள்வி கேக்காதீங்க. உங்களுக்கு தான் முதல்லயே சொல்லிட்டனே.)

Wednesday, March 04, 2009

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ - ’தல’ அஜித்

இப்ப எல்லா டீவிலயும் ஏதாவது ஒரு ப்ரோக்ராம் நடத்தி முடிஞ்சிடுச்சினா, உடனே சீசன் 2, சீசன் 3னு ஆரம்பிச்சி டார்ச்சர் பண்றானுங்க. அதான் சரி நாமலும் கவுண்டர்’ஸ் டெவில் ஷோ சீசன் 2 ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சரி யாரை இந்த ஷோவுக்கு கூப்பிடலாம்னு யோசிக்கும் போது போன ரவுண்ட்ல எஸ்கேப்பான ”தல”யை பிடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சரி நிகழ்ச்சிக்கு போகலாமா?

கவுண்டர் : வாப்பா அஜித். உட்காரு.

தல : உட்காரலாம். யார் வேணா உட்காரலாம். ஆனா நான் உட்காரணும்னா சூப்பர் ஸ்டார் நாற்காலில தான் உட்காருவேன்.

க : டேய் தல மண்டையா. நீ திருந்தவே மாட்டியா? இப்படி கேவலமா பேசறதுமட்டுமில்லாம உனக்கு சூப்பர் ஸ்டார் நாற்காலி வேணுமா. குசேலனுக்கு அப்பறம் அவரே அந்த நாற்காலில உட்காரதில்லையாம். சரி, நீ நின்னுட்டே பேசு. அப்பறம் அது என்னடா எப்ப பார்த்தாலும் கோட் போட்டுக்கிட்டே சுத்திட்டு இருக்க. காலைல கக்கூஸ்க்கு கோட் சூட் போட்டுட்டு தான் போகறயாம்.

தல : கோட் சூட். பில்லா படத்துல நடிச்சுதுக்கு காசுக்கு பதில் கிடைச்சது. கோட் சூட்.

க : ஓ அது தான் நீ கோட் சூட் போட்டு சுத்தறதுக்கு காரணமா. ஏன்டா பில்லா படத்துக்கு அப்பறம் ஸ்டைலா பேசறனு இப்படி பேசி கொல்லற. உன் ஸ்டைல்ல பேசுடா. அதை ரசிக்க தான் இங்க கூட்டமே

தல: அது! நான் பாத்து பாத்து பேசற வீட்டு மன்ஷனில்ல. தானா பேசற காட்டு மன்ஷன்.

க: டேய். ஸ்டாப் திஸ் பஞ்ச் டயலாக்ஸ். அப்பறம் அது என்னடா உன்னை எல்லாரும் தல, தலனு கூப்பிடறாங்க? ஏன் எங்களுக்கு எல்லாம் உடம்புக்கு மேல தல இல்லாம வாலா இருக்கு?

தல: சின் வயசுல என்ன எல்லாம் தறுதல தறுதலனு கூப்பிடுவாங்க. அது இப்ப ஷார்டா ஆகி தலனு எல்லாரும் கூப்பிடறாங்க.

க: ஓ இதுக்கு இப்படி ஒரு கேவலமான ஃபிளாஷ் பேக் இருக்கா? சரி விடு. அப்பறம் எல்லாரும் ஆரம்பத்துல கேவலமான படத்துல நடிச்சிட்டு அப்பறம் நல்ல படத்துல நடிப்பாங்க. நீ மட்டும் ஆரம்பத்துல நல்ல படத்துல நடிச்சிட்டு இப்ப கேவலமான படத்துல நடிக்கிற. அது எப்படிடா?

தல: ஏ! நான் ஒண்ணும் கேவலமான படத்துல நடிக்கல. எல்லாமே ஓப்பனிங்ல ரெக்கார்ட் பண்ணுது.

க: ஆமாண்டா. உன் ரசிகர்னு சுத்தற கூட்டம் எல்லாம் என்னுமோ ரெண்டாவது நாள் போனா டிக்கெட் கிடைக்காதுனு நினைச்சிக்கிட்டு முதல் நாளே போயிடறானுங்க. ரெண்டாவது நாள் தியேட்டர்ல ஈ ஓடுது. சரி, உனக்கு சனி பிடிச்சது சிட்டிசன் படத்துல தான். அங்க இருந்து நாம ஆரம்பிப்போம். அது ஏன்டா அந்த சிக்கி முக்கி கல்லு மோதுதே பாட்டுல அப்படி ஒரு காஸ்ட்யூம்ல நடிச்ச?

தல: வசுந்தரா தாஸுக்கு என்னைவிட பெரிய தொப்பைனு எல்லாரும் சொன்னாங்க. அதான் யாரோடது பெருசுனு மக்களே முடிவு பண்ணிக்கிட்டும்னு அப்படி ஒரு பாட்டு வெச்சோம். நான் தனி ஆள் இல்லை.

க: அது அந்த படத்தை பார்த்தாலே தெரியுது. அப்பறம் அந்த டயலாக் சொல்லி சொல்லி அன்லிமிடட் மீல்ஸ் நாலஞ்சி வாங்கி சாப்பிட்டதால தான் அப்படி ஆகிடுச்சி. சரி அது பரவாயில்லை, அந்த ரெட்னு ஒரு படம் நடிச்சியே. அது எப்படிடா அந்த மாதிரி ஒரு கொடுமை எல்லாம் நடிக்க முடியுது?

தல : ரெட். R for Revolution, E for Education, D for Development.

க: அதெல்லாம் இருக்கட்டும். அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ என்ன புரட்சி பண்ணிருக்கியா? இல்லை ஒழுங்கா பத்தாவதாவது பாஸ் பண்ணயா? இல்லை இந்த சமுதாய வளர்ச்சிக்கு உதவனியா? அதுல உனக்கும் எதுக்கும் சம்பந்தமில்லை. அப்பறம் ஏன் ராசா இந்த மாதிரி பில்ட் அப் எல்லாம்?

தல: !

க: அது சரி. அப்பறம் அது என்னடா ஆஞ்சனயானு ஒரு படம் நடிச்சியே? அந்த படத்துக்கும் பேருக்கும் என்னடா சம்பந்தம்? ஆஞ்சனெயர் என்னைக்குடா பொண்ணுங்க பின்னாடி பாவாடை, பஞ்சவர்ணம்னு பாட்டு பாடிட்டு போனாரு?

தல: அவன் மட்டும் கில்லினு பேர் வெச்சிட்டு கபடி ஆடலாம். என்னை மட்டும் கேள்வி கேக்கறீங்க?

க: டேய்! அவனே ஒரு குருவி மண்டையன். அவனோட ஏன்டா கம்பேர் பண்ணற? அப்பறம் அந்த ஜனானு ஒரு கொடுமை படம். அதுல நீ சாயந்தரம் கோட், சூட் போட்டு கண்ணாடி போட்டா யாருக்கும் உன்னை அடையாளம் தெரியாதா? அந்த காலத்துல MGR கூட ஒட்டு தாடி, மரூ எல்லாம் வெச்சிட்டு வருவாரேடா?

தல: அவன் மீசையை ட்ரிம் பண்ணிட்டு, கைல டேட்டு குத்திட்டு, கட் பணியன் போட்டு மார்கெட்ல ஆடனாவே தமிழ்நாட்டு போலிஸால கண்டு பிடிக்க முடியல. நான் கண்ணாடி போட்டு, கோட் சூட் போட்டிருக்கேன் என்னை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

க: டேய் பில்லா ரீமேக் மண்டையா, அந்த காலத்துல MGR, சிவாஜி, ரஜினி, கமல் போட்டியெல்லாம் மக்களை யார் அதிகமா எண்டர்டெயின் பண்றதுனு இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் யார் அதிகமா டார்ச்சர் பண்றதுனு போட்டி போடறீங்களேடா. அப்பறம் அது என்னடா காட் ஃபாதர் படத்துல, கடைசியா அப்பா செத்து காட் ஆகிட்டாரு, காட் ஃபாதர்னு சொல்லி முடிச்சீங்க?

தல: படத்துக்கு முதல்ல பேர் வெச்சாச்சி. அப்பறம் எப்படி யோசிச்சும் கதை வரலை. அதான் கடைசியா அப்பாவை சாகடிச்சி காட் ஃபாதர் ஆக்கிட்டோம்.

க: டேய் காட் ஃபாதர் மண்டையா. இந்த கொடுமையெல்லாம் காதுல கூட விழக்கூடாதுனு தாண்டா மரியோ புசோ செத்து போயிட்டாரு. சரி, அப்பறம் ”ஜி”னு ஒரு படத்துல நடிச்சியே. அதுக்கு அப்பறம் உன்னை எல்லாம் ஜினு தான் கூப்பிடுவாங்கனு அந்த டைரக்டர் கூட சொன்னாரே. அது என்னடா ஜி?

தல: எம்.’ஜி’.ஆர், ர’ஜி’னி, அ’ஜி’த் மூணு பேர்லயும் நடுவுல வர எழுத்து தான் ’ஜி’.

க: அட ச்சீ. இதுக்கு இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்கா? இந்த பேர் ஆராய்ச்சி பண்ற நேரத்தை கதை கேக்கறதுல பண்ணிருந்தா இந்நேரம் நீ எங்கயோ போயிருப்ப. அப்பறம் அது என்னடா ஆழ்வார் படத்துல சாமி வேஷம் போட்டு துப்பாக்கியால சுட்டுட்டு ”நான் கட்வுள்”, “நான் கட்வுள்”னு சொல்லிட்டு இருந்த?

தல: சாமி வேஷம் போட்டா அடையாளம் தெரியாதுனு தான் அப்படி போட்டேன்.

க: டேய் டேய்... ஏகன் மண்டையா, சாமி வேஷம் போட்டா அடையாளம் தெரியாதுனு சொன்னா ஒத்துக்கறோம். நீ சொல்ற “நான் கட்வுள்”, “நான் கட்வுள்” ஸ்லேங்கை வெச்சே சின்ன சூச்சூ கூட இது அஜித்னு கண்டுபிடிச்சிடுமே. தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா. அது எப்படி நீ பேசினா கண்டுபிடிக்காம போயிடுவாங்க? சரி நீ ஏன் அப்படி பேசனனு மக்களுக்கு தெரியும். நான் கடவுள் படத்துல நீ தொப்பையோட தலைக்கீழ நின்னா எப்படி இருந்திருக்கும்னு நீயே நினைச்சி பாரு. அந்த படமே காமெடி படம் ஆயிருக்காது? அதனால தான் பாலா வேண்டாம்னு சொல்லிட்டாரு. அது தெரியாம இப்படி “நான் கட்வுள்”, “நான் கட்வுள்”னு சொல்லிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?

தல: அது டைரக்டர் சொன்னது.

க: தப்பிச்சிட்டாண்டா. சரி இனிமே அந்த மாதிரி கேவலமான டைரக்டர் படத்துல எல்லாம் நடிக்காத. அப்பறம் இந்த பி.வாசு, பேரரசு, ராஜு சுந்தரம் கூட எல்லாம் சகவாசம் வெச்சிக்காத. சரியா?

தல: முழிச்சிட்டேன். தோ வரேன்.

க: டேய் தல மண்டையா. இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?

தல: ஏன்ணே நீங்க வேற? இது பஞ்ச் டயலாக். நான் பஞ்ச் டயலாக் பேசினா எல்லாமே காமெடியா போயிடுது.

க: டேய். இந்த ஸ்கிரின பாத்து பேசி மக்களை டார்ச்சர் பண்ணது போதும்டா. இனிமேவாது கதையை கேட்டு நடிச்சி மக்களுக்கு கொஞ்சம் நல்லது பண்ணுங்கடா. இல்லைனா அடுத்த தடவை நான் பேச மாட்டேன். என் கால் தான் பேசும்.

கவுண்டர் காலை தூக்க, தல எஸ்கேப் ஆகிறார்.

Thursday, February 19, 2009

SW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?

Thursday, February 12, 2009

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
....

2 நிமிடம் கழித்து

கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:

கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

Saturday, February 07, 2009

Software லொள்ளு

டேய் மச்சான், இன்னைக்கு திடீர்னு எங்க க்ளைண்ட் எங்க கம்பெனில எல்லா அக்கௌண்டையும் க்ளோஸ் பண்ணிட்டாண்டா. என்ன பண்றதுனு எல்லாரும் டென்ஷனா இருக்கும் போது எங்க ஹெச்.ஆர் என்னை கூப்பிட்டான். நானும் சரினு போனேன். அப்ப என்னை பார்த்து, 

”என்னங்க சிவா இப்படி ஆகிடுச்சி, படுபாவி பசங்க. எல்லாருமே சேர்ந்து உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே! சீட்டுக்கு போய் என்ன பண்ண போறீங்க சிவா, டெஸ்டிங் பண்ண போறீங்களா? மெயிண்டனன்ஸா இல்லைனா ஏதாவது ஜாவா கோடிங்... இல்லை நான் வேணா ஏதாவது கால் சென்டர்ல சொல்லி வேலை வாங்கி தரதா? 
ஐயய்யோ ஆனா அதுக்கெல்லாம் முன் அனுபவம் வேண்டுமே. உக்கார்ந்த இடத்துலே நோகாம நோம்பு கும்பிடற ஒரு வேலை இருக்கு செய்யறீங்களா? அதான் Naukriல ரெஸ்யூம் போட்டு வேலை தேடறது.” அப்படினு சொல்லிட்டாண்டா...

.......

எனக்கு ரெசஷன் பயத்தை காட்டிட்டானுங்க பரமா. அவுங்களுக்கு ஏதாவது பண்ணனும் பரமா. ஏதாவது பண்ணனும். 

.......
ஏன்டா பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?

கூட வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுக்கறது இல்லைங்கற மாதிரி, சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...

......
மக்கள் உணர்ந்து கொள்ள இது 2000 ரெசஷனல்ல... ரெசஷனல்ல... ரெசஷனல்ல...
அதையும் தாண்டி மோசமானது.

......
உண்மை கம்பெனி க்ளைண்ட்ஸ்க்கு நாங்க ப்ராஜக்ட் பண்ண மாட்டோம்னு எங்க சொன்னோம். க்ளைண்ட்ஸா வந்து எங்ககிட்ட பிராஜக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னோம்

- விநாயக மூர்த்தி

Wednesday, October 01, 2008

Software Recession Comedy

இந்தியால இருக்குற மென்பொருள் நிறுவனங்களின் CEO எல்லாம் டாக்டரின் ரசிகர்களாக இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.

TCS : 
நீ 10%ஐ (வேலையை விட்டு) தூக்கினா தூசு
நான் தூக்கினா மாஸூடா 

(எப்படியும் 15,000 பேர் வெளிய வருவாங்க)


Satyam:
எவ்வளவோ தூக்கிட்டோம், இப்போ தூக்க மாட்டோமா?


Infosys:
எவன் வேலையை விட்டு தூக்கினா எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஹெட் லைன்ஸுல வந்து, சாப்ட்வேர் மக்கள் எல்லாம் கதி கலங்குவாங்களோ அவன் தான் Infosys.


Wipro:
நான் ஒரு தடவை (மக்களை) வேலையை விட்டு தூக்கணும்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் (ஏன்னா 80% ஸ்டாக் என்கிட்ட தான் இருக்கு).


CTS: 
வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்க, CTSல இருக்கறவன் TCSல சேருவான் (ஃபீல்ட் சரியானவுடனே) TCSல இருக்கறவன் CTSல சேருவான்.

Sunday, September 28, 2008

செந்தில் இல்லாம கவுண்டருக்கு காமெடி பண்ண தெரியாதா?

ஆமாம் இது சூப்பர் ஸ்டார் பட ரிலீஸூ. எல்லாம் ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு வந்து நிக்க போறாங்க...




நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலைய்யா. புண்ணாக்கு விக்கறவன், குண்டூசி விக்கறவன் எல்லாம் தொழிலதிபர்களாம்.



காந்தக்கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பார்க்கறேன்





யார் வந்திருக்கானு பாரு... கருவாடு வந்திருக்கு.



ரீலு அந்து போச்சு... அடிச்ச அடில அண்ட்ராயரு கிழிஞ்சி போச்சு.

அவுங்களையாவது மன்னிச்சிடலாம் அதர் கண்ட்ரி அதர் ஸ்டேட்டு




புது மனிதன்


அடப்பாவிகளா புளி சாதத்துல முட்டையை வெச்சி ஏமாத்தறீங்களா?





உள்ளூர் செலவானிக்கே வக்கில்லாம தான் இங்க வந்து நிக்கறோம். இதுல அந்நிய செலவானி வேறயா?



ரோமாண்டிக் லுக்





உள்ளத்தை அள்ளி தா க்ளாசிக்







உதய கீதம்



தேங்காய் பாம்...



வர வர இந்த ஹவுஸ் ஓனர் தொல்லை தாங்க முடியலை






இன்னும் நிறைய இருக்கு... இதெல்லாம் சும்மா சாம்பிள் தான்...

Thursday, August 28, 2008

வலைப்பதிவர் வாத்தியார்கள்!!!

நம்ம பதிவர்கள் எல்லாம் இப்பவே இந்த ஆட்டம் போடறாங்களே, சின்ன வயசுல எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணியிருப்பாங்க. சரி எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணிருப்பாங்கனு தெரிஞ்சிக்கனும்னா யாரை கேட்கலாம்? வேற யாரை அவுங்களுக்கு பாடம் எடுத்த வாத்தியார்களை தான். அஞ்சாம் க்ளாஸ்ல எல்லாம் என்ன பண்ணாங்கனு இப்ப ஒவ்வொரு வாதியாருங்களா சொல்ல போறாங்க.

லக்கி லுக் வாத்தியார்:
இவனுக்கு Question Paper கொடுத்தா, நீங்க கேக்கற கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னா தாவூ தீர்ந்து, நீங்க அடிக்கிற அடில டவுசர் கிழிஞ்சிடும். நானே கேள்வி! நானே பதில்னு சொல்லி அவனுக்கு தெரிஞ்ச கேள்வி எல்லாம் எழுதி அவனே பதில் எழுதிட்டான்பா.

பாஸ்டன் பாலா வாத்தியார்:
கேள்விக்கு பதில் எழுத சொல்லி கேள்வி தாளை கொடுத்தா, எந்த எந்த பதிலுக்கு யார் யார் பேப்பரை பார்க்கனும் பதில் எழுதி கொடுத்தான்.

உண்மைத்தமிழன் வாத்தியார்:
Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா. முழு ஆண்டு பரிட்சை எழுதி முடிக்க நேரம் பத்தலனு, கோடை விடுமுறை முழுக்க உக்கார்ந்து நாலாயிரம் பக்கத்துக்கு விடை எழுதிட்டு வந்தான். அதை மியூசியம்ல வைக்க சொல்லி கொடுத்துட்டோம். இப்பவே இப்படி எழுதறான்னா இவன் படிச்சி முடிக்கும் போது இந்தியால ஒரு மரம் கூட மிஞ்சாதுனு அப்ப இருந்த வனத்துறை அமைச்சர் சொன்னாரு.

சுப்பையா ஐயா வாத்தியார்:
சுப்பையா முதல் பெஞ்ச்ல வந்து உக்காருனு சொன்னா, குரு நாலாம் இடத்துல இருக்கான், புதன் எட்டாம் இடத்துல இருக்கான், சுக்கிரம் ஒன்பதாம் இடத்துல இருக்கான். அதனால நான் நாலாவது பெஞ்ச்ல இரண்டாம் இடத்துல தான் இருப்பேனு சொல்லுவான்

ஜ்யோவ்ராம் சுந்தர் வாத்தியார்:

இவன்கிட்ட ஆம கத சொல்லுனு சொன்னா எனக்கு ஆம கதை எல்லாம் தெரியாது "கா"ம கதை தான் தெரியும்னு சொல்லி என்னை கதி கலங்க வெச்சிட்டான். அப்பறம் பசங்க எல்லாம் போனுதுக்கப்பறம் அந்த கதையெல்லாம் நான் தனியா கேட்டுக்கிட்டேன்.

மங்களூர் சிவா வாத்தியார்:
ஒவ்வொருத்தரா மெமரி போயம்ஸ் சொல்லுங்கனு சொன்னா, "முதல் பையன் சொன்னதுக்கு ரீப்பீட்டு"னு சொல்லி அப்பீட்டு ஆகிடுவான். எந்த கேள்வி கேட்டாலும் ஜெர்மனினு தான் பதில் சொல்லுவான். ஒரு தடவை இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தப்ப, இவனை ஏதாவது கேள்வி கேக்க சொன்னாங்க. ஹிட்லர் எந்த நாடுனு நான் கேட்க அவன் ஜெர்மனினு சொல்ல, இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த வாத்தியார் இவனுக்கு வாரமலர் பரிசு கொடுத்துட்டு போனாரு.

சர்வேசன் வாத்தியார்:
இவன் ஆரம்பிக்கற தொடர் விளையாட்டால பள்ளி கூடமே கதி கலங்கி போயிடும்பா. ஒண்ணுக்கு போயிட்டு வரதுல ஆரம்பிச்சி லீவ் போடற வரைக்கும் தொடர் விளையாட்டு நடத்திருக்கான்.

பரிசல்காரன் வாத்தியார்:
ஒரு வாத்தியார் திட்டிட்டாரு நான் பள்ளி கூடத்துல இருந்து விலக போறேனு பள்ளிக்கூட சுவத்துல எழுதி இவன் அடிச்ச லூட்டியை இன்னும் பள்ளிக்கூடத்துல யாரும் மறக்கலைங்க.

My Friend வாத்தியார்:
ஒரு வகுப்பு முடிஞ்சி அடுத்த வகுப்பு தொடங்கறதுக்கு வாத்தியார் வந்தா முதல் ஆளா எழுந்து வணக்கம் ஐயானு வேகமா சொல்லிட்டு "மீ தி ஃபர்ஸ்ட்டு"னு குதிப்பா.

கோவி கண்ணன் வாத்தியார்:
எந்த வகுப்பெடுத்தாலும் கடைசியா ஏதாவது கருத்து சொல்லனும்னு சொல்லுவான். நல்ல விஷயம் தானே நினைக்கறீங்களா? கணக்கு பாடத்துல கூட கருத்து கேட்டா எப்படிங்க? அப்படி நாங்க எதுவும் சொல்லலனா அவனே ஏதாவது கண்டுபிடிச்சி சொல்லுவான்.

அய்யனார் வாத்தியார்:
இவன் இது வரைக்கும் எழுதன பதில் எதுவும் ஒரு வாதியாருக்கு கூட புரிஞ்சதில்லைனு எங்க எல்லாருக்கும் சந்தோஷம். கோடிட்ட இடத்தை நிரப்புக கூட புரியாத மாதிரி தான் விடை எழுதுவான்.

குசும்பன் வாத்தியார் :
பள்ளி ஆண்டுவிழால கலந்துகிட்டது குத்தமாய்யா? அதுல எடுத்த ஃபோட்டோல நானும் கணக்கு டீச்சர் கனகாவும் பக்கத்துல நிக்கற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. நாங்க என்ன பேசிருப்போம் இவன் எழுதன கமெண்டால கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போன என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலைய்யா.

லதானந்த் அங்கிள் வாத்தியார்:
இவன் திடீர்னு "ஆசிரியருக்கு ஒரு பகிரங்க கடிதம்"னு க்ளாஸ் போர்ட்ல எழுதி வெச்சிட்டான்பா. வகுப்பறை ஒரு மாய உலகம்னும், நான் அதிகமா பாடம் எடுக்கறதாவும், அதனால என் தொண்டை கிழியறதை தவிர கிஞ்சித்தும் எந்த பயனும் இல்லைனும், இனிமே நான் அதிகமா பாடம் எடுக்க கூடாதுனும் எழுதி வெச்சிட்டான்.

இதுக்கு மேல உங்களுக்கு தோன்றதை நீங்க பின்னூட்டத்துல சொல்லுங்க :)

பி.கு: இது எல்லாம் வாத்தியாருங்க சொல்ற மாதிரி இருக்கறதால கொஞ்சம் அவன், இவனு இருக்கும். யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. தப்பா நினைச்சா சொல்லிடுங்க... நீக்கிடறேன் :)

Wednesday, August 27, 2008

கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்

முன்குறிப்பு: சிரிக்க மட்டுமே...

சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் யார் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்கே வருகிறார் நாரதர்.

அவரிடம் சென்று அவர்கள் நாரதரிடம், எங்களுள் சிறந்தவர் யார் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

நாரதர்: வள்ளல் சிகாமணிகளே!!! எனக்கு கலகம் செய்துதான் பழக்கமே தவிர, தீர்ப்பு சொல்லி பழக்கமில்லை. அதனால் நீங்கள் சரியாக தீர்ப்பு சொல்லும் யாரிடமாவது செல்லலாம்.

பாரி: நான்முகன் புதல்வனே!!! இந்த கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதியானவரை நீரே கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

நாரதர்: மன்னர் மன்னா!!! மேலுலகில் அனைவரும் பிஸியாக உள்ளனர். அதனால் பூவுலகில் இருக்கும் ஒருவரை நீங்கள் அணுகலாம்.

காரி: மூவுலகில் பவனம் வருகின்ற மூர்த்தியே!!! பூவுலகில் இதற்கு சரியாக தீர்ப்பு வழங்கும் தகுதி படைத்தவர் யார் என்றும் நீரே சொல்ல வேண்டும்.

நாரதர்: தானத்தில் சிறந்தவனே!!! பூலோகத்தில் இதற்கு தீர்ப்பு சொல்ல பல பேர் இருக்கிறார்கள். இப்போழுது யார் ஃபிரியாக இருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறேன்.

நாரதர் தன் ஞான திருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: குப்புசாமி வாத்தியார்னா பாடம் சொல்லி குடுக்குற வாத்தியார் இல்ல, சிலம்பம் சொல்லி குடுக்குற வாத்தியார்னு ஊருக்கே தெரியாத உண்மையை கண்டுபிடிச்ச "சின்ன கவுண்டர்" தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார்.

கடையேழு வள்ளல்கள்: ஐய்யய்யோ!!!

நாரதர்: கவலைப்பட வேண்டாம். இதை போல் பல பேர் இருக்கிறார்கள்.

மீண்டும் ஞானதிருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: பைனான்ஸ் கம்பெனில பணத்த போட்டு ஏமாந்தவங்களுக்கு "மழ நிக்கறதுக்குள்ள" னு சொல்லி பணத்தை வாங்கி கொடுத்த ரெட் அஜித்தை காணவில்லை.

க.வ: ஓ!!! நோ

நாரதர்: சரி இதற்கு சரியான ஆள் நம்ம நாட்டமையோட 3வது பங்காளி கவுண்டர்தான்.

பேகன்:பிரபோ!!! அவர் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா???

நாரதர்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வெச்சிருந்ததை கண்டு பிடித்தது அவர்தான்.

ஆய்: ஓ!!! அவ்வளவு திறமைசாலியா??? அப்ப அவரிடமே செல்வோம்... அனைவரும் என்ன சொல்கிறீர்கள்???
அனைவரும் ஒத்துக்கொண்டு கவுண்டர் வீட்டுக்கு செல்கிறார்கள்.

வெளியே அவருடைய தந்தை செந்திலை பார்த்து விஷயத்தை சொல்கிறார்கள். செந்தில் அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.

செந்தில்: மை சன்!!!

கவுண்ட்ஸ்: என்னடா பைசன்!!! சவுண்டு கொடுக்கற???

செந்தில்: மை சன்! விருந்தாளிங்க வந்துருக்காங்க... அவுங்க முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க???

கவுண்ட்ஸ்: உனக்கு எங்க இருந்து வந்துச்சுடா மானம்? அதுசரி அது யார்டா நம்ம வீட்டுக்கு விருந்தாளி???

செந்தில்: கடையேழு வள்ளல்களும் நம்ம வீட்டுக்கு உங்கிட்ட ஒரு வழக்கு சம்பந்தமா வந்துருக்காங்க!!! நீ தான் தீர்ப்பு சொல்லனுமாம்...

கவுண்ட்ஸ்: சத்தியராஜ் நடிச்ச படம் வள்ளல் தெரியும். அதுயார்டா கடையேழு வள்ளல்???

செந்தில்: கடைசியா இருந்த 7 வள்ளல்கள்.

கவுண்ட்ஸ்: அது சரி... நம்மகிட்ட தீர்ப்புகாக வந்துருக்காங்க... அதனால ஐ கிவ் ரெஸ்பெக்ட்யா!!! பிரச்சனை என்ன சொல்லுங்க???

பாரி: எங்களில் யார் சிறந்த கொடையாளி என்று தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

கவுண்ட்ஸ்: ஓ!!! இது ரொம்ப சாதாரண விஷயம்... சரி நீங்க என்ன என்ன செஞ்சிங்கனு சொல்லுங்க.... ஐ கிவ் தீர்ப்பு...

பாரி: நான் தான் பாரி... பரம்பு மலை அரசன்...

கவுண்ட்ஸ்: அதுக்கு என்ன இப்ப??? நீ என்ன பண்ணனு சொல்லு

பாரி: முல்லை கொடிக்கு தேர் கொடுத்தேன்...

கவுண்ட்ஸ்: எது நம்ம மூணாவது சந்து முக்கு வீட்ல இருக்கே அந்த முல்லைக் கொடிக்கா????

செந்தில்: மை சன்... அவுங்கள பத்தி தப்பா பேசாதீங்க... அவுங்க உங்களுக்கு சித்தி முறை ஆகறாங்க...

கவுண்ட்ஸ்: டேய் தகப்பா... நீ அவளையும் விட்டு வெக்கலயா... இவுங்க எல்லாம் போகட்டும்... உனக்கு இருக்கு

பாரி: இல்லை இல்லை.... நான் சொன்னது செடி, கொடி வகையை சார்ந்த முல்லை கொடி... அது படற வழியில்லாமல் வாடியதை பார்த்து என் மனம் பதைத்ததால் அதற்கு நான் சென்ற தேரை பரிசாக வழங்கினேன்

கவுண்ட்ஸ்: ஏன்டா... ஆனா ஊனா யாரங்கே யாரங்கேனு கையை தட்டுவீங்க... இதுக்கு ஒரு தடவை யாரங்கேனு கைய தட்டி குச்சி நட சொல்றத விட்டுட்டு அவ்வளவு காஸ்ட்லி தேர விட்டுட்டு வந்துருக்க... அது என்ன தேர்ல ஏறி நகர்வலமா வர போகுது. உனக்கு மூளையே இல்ல. யு ஆர் அன்செலக்டட்... நெக்ஸ்ட்...

பேகன்: என் பெயர் பேகன். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை வழங்கினேன்.

கவுண்ட்ஸ்: யாரு 16 வயதினிலேல வருமே அந்த மயிலுக்கா???
16 வயது வந்த மயிலே மயிலே
என்னை பாடா படுத்துதடி மயிலே மயிலே

கவுண்டர் தன்னுடைய வழக்கமான பாணியில் கையையும் காலையும் தூக்கி ஆட ஆரம்பிக்கிறார்.

பேகன்: இல்லை இல்லை... நான் சொல்வது பறவை இனத்தை சேர்ந்த மயில்.

கவுண்ட்ஸ்: ஏன்டா உங்க ரவுசுக்கு எல்லாம் அளவே இல்லையா??? அது அப்படியே முச்சு முட்டி செத்துருக்கும்... அப்பறம் கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு மயில் கறி சாப்பிட்டிருப்பீங்க... யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்... நெக்ஸ்ட்

ஆய் எழுனி: என் பெயர் ஆய் எழுனி.

கவுண்ட்ஸ்: என்ன மேன் பெர் இது??? இது பேரா??? இது பேரா??? யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்

செந்தில்: மை சன்... அதுக்குள்ள அன்செலக்ட் பண்ணிட்டீங்க...

கவுண்ட்ஸ்: ஏன்டா இது என்ன வாய்ல வர விஷயமா??? ஏன் ஒரு அஜித், விஜய், சூர்யானு பேர் வெச்சிக்க வேண்டியதுதான?... அவன் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்.

மற்ற நால்வரும் அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல அஞ்சுகிறார்கள்.

கவுண்ட்ஸ்: ஹு இஸ் தி நெக்ஸ்ட்???

செந்தில்: மை சன். அவுங்க எல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கே பயப்படறாங்க...

கவுண்ட்ஸ்: ஆமாம் இவனுங்க என்ன பண்ணிருப்பானுங்கனு தெரியாதா??? இவனுங்கள பத்தி பாட்டு பாடற 4-5 அள்ளக்கைங்கள வச்சிக்கிட்டு அவனுங்களுக்கு மக்கள் வரி பணத்துல இருந்து வர காச அள்ளி வீசிருப்பானுங்க... இவுங்கள எல்லாம் பாத்துதான் இப்ப இருக்குற அரசியல்வாதிங்க எதுவும் தெரியாத ஜால்ரா கேஸ்ங்கல எல்லாம் மந்திரி ஆக்கறானுங்க...

எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...

செந்தில்: நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு....

கவுண்ட்ஸ்: ஏன்டா அந்த முல்லைக்கொடி பொண்ணு அல்லிராணிய எப்படியாவது நான் கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா அவளை எனக்கு தங்கச்சியாக்கிட்ட... உன்ன நான் இன்னைக்கு பலி போடாம விடமாட்டன்...

கவுண்டர் துரத்த செந்தில் எஸ்கேப் ஆகிறார்.

Monday, June 30, 2008

மணல் கயிறு = Linked List

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...

Wednesday, June 25, 2008

சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு

ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

Monday, June 23, 2008

கவுண்டரும் நடிகர்களின் டைரக்டர் அவதாரமும்

வீட்டைவிட்டு வெளிய வந்தே பல நாட்கள் ஆன கடுப்பில் யாருக்கும் தெரியாமல் செந்திலுக்கு போன் போட்டு வர சொல்லி, வெளியே சாப்பிட கிளம்புகிறார் கவுண்டர். பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் ஓரமாக ஒரு டேபிளில் உட்கார்ந்து ஆர்டர் செய்கிறார்கள் இருவரும்.

க: என்னடா மண்டையா எப்படி இருக்க?

செ: என் நிலைமை ட்ராவிட் மாதிரி ஆகிடுச்சுண்ணே. கங்குலிக்கிட்ட திட்டு வாங்கிட்டே இருந்தப்பவாது பரவாயில்லை. இப்ப தோனி வந்தவுடனே டீம்லயே சேர்த்துக்க மாட்றாங்க. அந்த மாதிரி உங்ககிட்ட மிதி வாங்கிகிட்டாவது நடிச்சிட்டு இருந்தேன். இப்ப நீங்க இல்லாம என் நிலைமையை பார்த்தீங்களாண்ணே.

க: சரி விடு. பீல் பண்ணாத.

பக்கத்து டேபிலில் இருந்து கேட்ட குரல்கள் மிகவும் பரிட்சையமாக தெரிந்ததால் திரும்பி பார்க்கிறார்கள். கோடம்பாக்கமே அங்கே ஆஜராகி இருந்ததை பார்த்து ஜெர்க்காகிறார்கள்.

க: ஹாய் ஹீரோஸ். என்ன இங்க எல்லாருமே சேர்ந்து வட்ட மேஜை மாநாடு நடத்திட்டு இருக்கீங்க? ஹிந்தி படம் மாதிரி எல்லாரும் சேர்ந்து ஒரே படத்துல நடிக்க போறீங்களா?

விஜய்: ண்ணா. வாங்கண்ணா. பார்த்து ரொம்ப நாளாச்சி. ரொம்ப இளைச்சி போயிருக்கீங்க. ரெண்டு பாட்டில் குலுகோஸ் ஏத்தினா பழைய படி ஜம்முனு ஆகிடுவீங்கண்ணா.

க: டேய் வயசானவனுக்கும் உடம்பு சரியில்லாதவனுக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தான் பாரு. அவனை
சொல்லனும்டா. நான் இங்க இருந்தா ரணகளம் ஆகிடும். நான் கிளம்பறேன்.

விஜய்: ண்ணா. என்னங்கண்ணா இப்படி சொல்லிட்டீங்க? நாங்க இங்க ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கோம்ணா. நீங்க தான் எங்களை எல்லாம் நல்லா வழி நடத்தணும்.

க: சரி. ஹெல்ப்னு கேட்டுட்டா நாம எல்லாம் கர்ணன் மாதிரி. மேட்டரை சொல்லு

விஜய்: ண்ணா. S.J சூர்யால ஆரம்பிச்சி கரு.பழனியப்பன் வரைக்கும் நடிக்க வந்துட்டாங்க. போற போக்குல தமிழ்நாட்ல எங்களை எல்லாம் வெச்சி டைரக்ட் பண்ண ஆளே இல்லாம போயிடும் போலிருக்கு. அதுக்கு தான் ஒரு முடிவெடுக்கணும்னு இங்க கூடியிருக்கோம்.

க: ஒரு விதத்துல தமிழ் நாட்டு மக்கள் தப்பிச்சிட்டாங்கனு சந்தோஷப்பட்டாலும் அந்த கலர் மண்டையன் எல்லாம் நடிக்கறதை பார்க்கறது அவுங்களுக்கு தண்டனை தான். சரி, அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க. ஹாலிவுட் டைரக்டர்ஸை யாரையாவது இம்போர்ட் பண்ண போறீங்களா?

விஜய்: ண்ணா. என்னங்கண்ணா இப்படி சொல்றீங்க. அவுங்களுக்கு எல்லாம் திருப்பாச்சி மாதிரி சூப்பர் படம் எடுக்க தெரியுமா? அதான் நாங்களே படம் டைரக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.

க: டேய் குருவி மண்டையா. நீ நடிச்சாலே மக்கள் தாங்க மாட்டாங்க. நீ டைரக்ட் பண்ணா எப்படிடா தாங்குவாங்க? கதையை எங்க இருந்து பிடிப்ப?

விஜய்: என்னங்கண்ணா. இதுக்கூட தெரியாம இருக்கீங்க. இதுக்கூட யோசிக்காமலா முடிவெடுப்பேன். போன வாரமே பழைய தெலுகு படமெல்லாம் பார்த்தேன். 'டாக்டர்' NTR நடிச்ச "ராமுடு பீமுடு"வை ரீ மேக் பண்ணலாம்னு இருக்கேன்ணா. படம் கண்டிப்பா கில்லி மாதிரி ஓடும்னா.

க: அதான்னே. ரீமேக் படத்தை எந்த டைரக்டர் டைரக்ட் பண்ணா என்ன? அது என்னடா கில்லி மண்டையா அதுல அப்படி ஒரு சூப்பர் கதை?

விஜய்: ண்ணா. தமிழ்நாட்ல அப்படி ஒரு கதையோட எந்த படமும் இது வரைக்கும் வந்ததில்லை. அப்படி ஒரு கதை.

செந்தில் : அண்ணே. அந்த கதையை கொஞ்சம் சொல்ல சொல்லுங்கண்ணே. எனக்கு கேக்கணும்னு ஆசையா இருக்கு.

கவுண்டர்: டேய் அவிஞ்ச மண்டையா அவனுக்கு அவன் படத்து கதையே தெரியாது. இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான். அதுக்கே அவனுக்கு டபுல் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கணும். இவன் சொல்றானு கதையை கேக்கனும்னு சொல்றீயே.

செந்தில்: அண்ணே. நாம கதைல ஏதாவது சேஞ்ச் பண்ணி அப்படியே ஒரு சீன்ல நுழைஞ்சிடலாம்ணே.

கவுண்டர்: சரி விடு. ஏம்பா டாக்டர் மண்டையா. குழந்த புள்ள ஆசைப்படுது இல்லை. அப்படியே அந்த கதையை கொஞ்சம் சொல்லேன்.

விஜய் : ண்ணா. இதுல ஹீரோ டபுல் ஆக்ட்ண்ணா. ரெட்டை பிறவிங்க. ஒருத்தர் அக்கா வீட்ல பணக்கரணா, கோழையா வளர்றாரு. இன்னொருத்தர் பாட்டிக்கிட்ட வீரமா வளர்றார். கோழையா வளர்றவர் அவுங்க மாமாக்கிட்ட பயங்கரமா அடி வாங்கிட்டு வீட்டை விட்டு வெளியேறிடறாரு. அதுக்கு அப்பறம் ஆள் மாறாட்டம். அதுல பாருங்களேன், அந்த வீரமா இருக்கறவர் அவுங்க மாமாவை சவுக்கால அடிப்பாரு பாருங்க. அப்படி இருக்கும். இதுல இன்னொரு ஸ்பேஷாலிட்டி என்னன்னா வீரமா இருக்கறவருக்கு குத்து பாட்டுண்ணா, கோழையா இருக்கறவருக்கு மெலடி பாட்டுண்ணா. தமிழ் நாடே அலற போகுது பாருங்கண்ணா.

கவுண்டர்: டேய் போக்கிரி மண்டையா, இந்த படம் வந்து தமிழ் நாடே அலறிடுச்சிடா. நான் ஆணையிட்டால்னு MGR பாடின பாட்டை இன்னைக்கும் எல்லா எலக்ஷனுக்கும் போட்டுட்டு தான்டா இருக்காங்க.

விஜய்: ஆஹா. இதை MGR ஏற்கனவே நடிச்சிட்டாரா? அப்ப நான் என்ன பண்ண?

கவுண்டர்: நீ வேணா 'டாக்டர்' ராஜசேகர் நடிச்ச "இது தான்டா போலிஸ்" படத்தை ரீ-மேக் பண்ணு.

விஜய்: ண்ணா. சூப்பருங்கண்ணா. அவரும் டாக்டர் நானும் டாக்டர். அட்டகாசமா ப்ரஃபஷன் மேட்ச் ஆகுங்கண்ணா. இன்னைக்கே DVD வாங்கிடறேண்ணா.

சொல்லிவிட்டு விஜய் அங்கிருந்து எஸ் ஆகிறார்.

கவுண்டர் அடுத்த நபரை பார்க்கிறார்.

கவுண்டர்: ஏன்டா இந்த மெட்ராஸ் வெயில்ல கருப்பு கோர்ட், கருப்பு கண்ணாடி போட்டுட்டு வந்திருக்க?

அஜித்: ஏ! நா இந்த கர்ப்பு கலர் கன்னாடியும் கோர்ட்டும் போட்டு நட்ச்சா தான் படம் ஓடுது. அதான் இப்படி வந்துருக்கேன்.

கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. அது சரி நீ என்னா படம் டைரக்ட் பண்ண போற?

அஜித்: ஏ நான் தன் இ ஆள் இல்ல. முன்னூறு அசிஸ்டண்ட் டைரக்டர்களின் மூச்சு

கவுண்டர்: நீ பேசறது ஒரு பேச்சு. இதுல நீ மூன்னூறு பேரோட மூச்சா? உதை வாங்கறதுக்கு முன்னாடி ஓடிப்போ.

அஜித்: நான் முழுச்சிட்டேன். இதோ வரேன்.

சொல்லிவிட்டு எஸ் ஆகிறார்.

கவுண்டர்: அடப்பாவி. அப்ப இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?

செந்தில்: அண்ணே. அவர் முப்பது படம் தூங்கிட்டே நடிச்சிருக்காரு. இப்ப தான் அட்டகாசம் படத்துல எழுந்திரிச்சாரு.

கவுண்டர் : டேய் ஆஃப் பாயில் மண்டையா. அது பஞ்ச் டையிலாக்காம்.

அடுத்து கவுண்டர் கண்ணில் சிக்குகிறார் ஜெயம் ரவி.

கவுண்டர்: டேய் வளர்ந்து கெட்டவனே. நீ என்னடா இங்க பண்ணிட்டு இருக்க.

ஜெ.ரவி: இவுங்க பண்ற வித்தியாசத்தையே எங்க குடும்பத்துல நாங்க வித்தியாசமா பண்ண போறோம்?

கவுண்டர்: அப்படி என்னடா வித்யாசமா பண்ண போறீங்க? சொந்தமா கதை எழுதி நடிக்க போறீங்களா?

ஜெ.ரவி: அதெல்லாம் வித்யாசமாண்ணா? நாங்க அதைவிட வித்யாசமா பண்ண போறோம். அதாவது ஒரு நல்ல தெலுகு படத்தை ரீ மேக் பண்ண போறோம்.

கவுண்டர்: டேய் ரீ-மேக் மண்டையா என்னை டென்ஷனாக்காத.

ஜெ.ரவி: நான் இன்னும் சொல்லியே முடிக்கலைண்ணா. இதுல வித்யாசம் என்னன்னா, படத்தை நான் டைரக்ட் பண்ணறேன். எங்க அண்ணன் ஹீரோவா நடிக்கிறார். இன்னும் நல்ல படம் எதுவும் வராததால நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். எப்படி எங்க வித்தியாசம்?

சொல்லிவிட்டு ஒரு பக்க புருவத்தை மட்டும் உயர்த்தி காட்டுகிறார்.

கவுண்டர்: டேய் ஒழுங்கா ஓடிப்போயிடு. இந்த பக்கமே வராத.

அவர் அருகிலிருக்கு தனுஷை பார்க்கிறார் கவுண்டர்.

கவுண்டர் : ஏன்டா நீயும் உங்க அண்ணனை நடிக்க வெச்சி படம் எடுக்க போறியா? வேணாம்டா தமிழ் நாட்டு மக்கள் பாவம்டா. விட்டுடுங்கடா.

தனுஷ் : இல்லைங்கண்ணா. நான் தான் ஹீரோவா நடிக்க போறேன். கதை ரெடி. படத்துக்கான டைட்டில் தான் யோசிச்சிட்டு இருக்கேன்.

கவுண்டர்: ஓ. இந்த சின்ன உடம்புக்குள்ள இவ்வளவு திறமையிருக்கா. எங்க கதை சொல்லு பார்ப்போம். நான் வேணா டைட்டில் சொல்றேன்.

தனுஷ் : ரெண்டு அரியர் வெச்ச ஒரு பையன் இருக்கான். அவனுக்கு தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு. வேலை தேடாம தறுதலையா சுத்திட்டு இருக்கான். அவுங்க அப்பா எப்பவுமே அவனை தண்ட சோறுனுதான் திட்டிட்டு இருப்பாரு. திடீர்னு ஒரு நாள் அப்பாக்கும் மகனுக்கும் பிரச்சனையாகிடுது. உடனே மகன் பொறுப்பாகி வேலை தேடி வேலைல சேர்ந்திடறான். அப்படியே அவன் டாவடிக்கிற பொண்ணும் செட் ஆகிடுது. அப்படியே ஒரு குத்து பாட்டு. ரெண்டு ஃபைட்டு. இதுக்கு டைட்டில் என்ன வைக்கலாம்னு தெரியல. படிக்காதவன், அண்ணாமலை, தளபதி, பாட்ஷா இதுல ஏதாவது ஒண்ணு வைக்கலாம்னு இருக்கேன்.

கவுண்டர் : "பாபா"னு வை படம் பிச்சிக்கிட்டு ஓடும். டேய் ஓணான் மண்டையா ஒரே படத்து கதையை வெச்சிக்கிட்டு பேர் மட்டும் மாத்தி போட்டு மக்களை ஏமாத்தலாம்னு பார்க்காதீங்கடா. திருந்துங்கடா...

சொல்லிவிட்டு கவுண்டர் திரும்பி பார்க்கிறார். எல்லாரும் அந்த இடத்திலிருந்து எஸ் ஆகியிருந்தார்கள்.

Tuesday, April 03, 2007

லொள்ளு - 4

வரலாறு

சுஜாதா : தம்பி, என்ன இப்படி பண்ணிட்டீங்க?

அஜித் : ஒருத்தனுக்கு ஆடத்தெரியலைனு சொன்னா ஆடிக்காட்டிடலாம், பாடத் தெரியலைனு சொன்னா பாடிக்காட்டிடலாம். ஆனா ஆம்பிளை இல்லைனு சொன்னா... (கையை சொடக்குகிறார்)

சந்தான பாரதி (மனதிற்குள்) : நல்ல வேளை நான் சொன்னது காதுல விழல...

-------------------------------------------------------------------------------------------------

போக்கிரி :

விஜய் : நான் ஒரு முடிவெடுத்தா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்

மனதிற்குள் : நான் ஒரு படம் நடிச்சா என் படத்த நானே பாக்க மாட்டேன்

--------------------------------------------------------------------------------------------------

போக்கிரி

அறிமுக சண்டை காட்சி...
விஜய் : கதவை தொறந்து வை... ஓடறதுக்கு வசதியா இருக்கும்

படம் பார்க்க வந்தவன் : டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...

--------------------------------------------------------------------------------------------------

சிட்டிசன்

அஜித் : நான் தனி ஆள் இல்லை

ப்ரொடியுசர் : இப்படி சொல்லி சொல்லியே ரெண்டு அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டு தாலதான் உன் மார்க்கெட்டே போச்சு

Wednesday, March 28, 2007

கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள்

ஒரு சில விஷயங்களை ரொம்ப நாள் மறைக்க முடியாது... எப்படியும் உண்மை வெளிய வந்துடும்.

கொல்ட்டி - நான் முதல்ல எழுதுன கதை இது தான். அது எல்லாருக்கும் பிடிச்சி போனதுக்கான காரணம் என்னனு ஈஸியா சொல்லிடலாம். ஏன்னா அது நீங்க நினைக்கிற மாதிரி கதையல்ல... ஆமாம் அது நிஜமாக நடந்ததுதான்.

இத ஒரு சிலர் கண்டு பிடிச்சிருப்பீங்க. ஆனா இதுல நீங்க கண்டுபிடிக்காத ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. இது உங்க எல்லாருக்கும் ஆச்சரியமாக்கூட இருக்கலாம். ஆனா இது தான் உண்மை... இளகிய மனசு இருக்கவங்க இதுக்கு மேல படிக்காதீங்க. நான் சீரியஸா சொல்றேன்.

கதை தெரியாதவங்க அதை ஒரு தடவை படிச்சிடுங்க
. இல்லைனா இது புரியாது...

கதைல நாயகன் தெலுகு எழுத படிக்க கத்துக்கறான். அதுக்கப்பறம் என்ன ஆகறான்? நீங்க எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. அவன் தெலுகு படம் பார்த்து தமிழ்ல ரிவியூ எழுதறானு. ஆனா அது தான் இல்லை. ஏன் யாரும் அவுட் ஆப்ஃ தி பாக்ஸ் திங் பண்ண மாட்றீங்க???

Sometimes Truth Really is Stranger Than Fiction

ஏன் அந்த பையன் தெலுகு பையனா இருந்து அந்த பொண்ணு தமிழ் பொண்ணா இருந்திருக்ககூடாது. அந்த பையன் ஏன் தமிழ் எழுத, படிக்க கத்திருந்திருக்கூடாது. ஏன் அந்த பையனே தமிழ்ல ப்ளாக் ஆரம்பிச்சி உங்க கூட ஒருத்தனா எழுதிட்டு இருக்க கூடாது?

ஆமாம். அது தான் உண்மை.

நான் தமிழ் எழுத படிக்க கத்துக்கிட்டு ரெண்டு வருஷம் கூட ஆகலை.

ஒரு பதினெட்டு மாசம் தான் இருக்கும். அவள் (பேர் வேண்டாமே) என்னைவிட்டு போனாலும் அவள் பேசிய அந்த மொழியை மறக்க கூடாது என்று பல வகைகளில் கற்று கொள்ள ஆரம்பித்தேன். அந்த ஆர்வத்தில் தான் தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமும். எழுத்து கூட்டி படிப்பதற்குள் பல மணி நேரமாகியது.

என் ரூமேட் தனா தமிழ் தெரிந்த பையன். அவன் தான் எனக்கு ஓரளவு எழுத்து பிழையில்லாமல் அடிக்க சொல்லி கொடுத்தான். நான் முதலில் பெங்களூரிலிருக்கும் போது பேப்பரில் எழுதுவேன். அந்த கையெழுத்து எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய தேவையில்லை. ஒரு வேளை நான் கைப்பட எழுதியிருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.

பல நேரங்களில் நான் தவறு செய்வது "ள/ல", "ற/ர", "ண/ன" வில் தான். அதை முதலில் அவன் ஒரு முறை படித்து திருத்துவான். பிறகு அருமை தம்பி கப்பி ஒரு முறை பார்ப்பார். இதற்கு பிறகே பதிவிடுவேன். அப்படியும் சில சமயங்களில் எழுத்து பிழை இருந்துவிடும். இருந்தாலும் இன்று வரை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. (லகுட பாண்டிகளா! எழுத்து பிழையை சொல்லவில்லை... நான் ஆந்திரா என்பதை)

என் ப்ளாகை அவள் ஒரு முறையாவது பார்த்திருப்பாளா என்று தெரியவில்லை. பல நேரங்களில் நான் எழுதியது ஃபார்வேர்டில் வரும் போது அது அவள் படித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து சந்தோஷ(வருத்த)ப்பட்டிருக்கிறேன். சர்வேசன் அவர்களின் சிறந்த வலைப்பதிவர் விருது வாங்கிய அன்றே அனைவரிடமும் சொல்லலாம் என்று பார்த்தேன். ஆனா எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாமே என்று விட்டுவிட்டேன்.

இப்ப உங்களிடம் மறைப்பது மனதிற்கு கஷ்டமாக இருப்பதால் உண்மையை சொல்லிவிட்டேன். இதை தமிழ் மணத்தில் எந்த பிரிவில் சேர்ப்பது? சோகம் என்று ஒரு பிரிவிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனி என் கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்...


பி.கு: இதை நீங்கள் நம்புவதை பொறுத்தே என் வருங்காலம் பற்றிய முக்கிய தீர்மானமிருக்கும். இதையும் நீங்க உண்மைனு நினைச்சா நான் அடுத்து அரசியல்ல இறங்கலாம்னு இருக்கேன். எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா...

Tuesday, March 13, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - நட்சத்திர பதிவர் தம்பி

என் அருமை மகா ஜனங்களே!!! வர வர எதத்தான் காப்பி அடிக்கறதுனு இல்லை. நம்ம டெவில் ஷோவைக்கூட விட்டு வைக்க மாட்றானுங்க. சரி என்ன பண்றது. நம்ம கூட வளர்ந்த பசங்க. பொழைச்சிட்டு போகட்டும்.

எத்தனை நாள் தான் இந்த சினிமாக்காரவங்களையே கூப்பிடறது. கொஞ்சம் வித்யாசமா இந்த நிகழ்ச்சில வேற மீடியால இருக்கற ஆள கூப்பிட போறோம். இண்டர்நெட்ல ஓசில கிடக்குதுனு கண்டத எழுதற பசங்க கூட்டம் ஒண்ணு இருக்கு. அதுல இருந்து இன்னைக்கு ஒருத்தன கூப்பிட்டுருக்கோம். Its none other than our star blogger "Thambi"

க: வாங்க உமா கதிர்... உங்க ப்ளாகுக்கு எதுக்குங்க தம்பினு பேர் வெச்சிருக்கீங்க???

த: எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க!

க: டேய்! வெறும் "ம்"னு சொன்னாக்கூடத்தான் உதடு ஒட்டப்போகுது. அப்ப அதை வைக்க வேண்டியதுதானே? சரி இப்ப உதடு ஒட்றதால என்னத்த பெருசா ஆகப்போகுது? சொல்லு மேன்...

த: இல்லைங்க எல்லா பஸ்லையும் இந்த உதடு ஒட்டறத பத்தி ஒரு திருக்குறள் இருக்கும். அதையே நம்மளும் யூஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்...

க: ஓ நோ!!! அது என்ன மேன் திருக்குறள். உதடு ஒட்றத பத்தி

த: நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்னு ஒரு திருக்குறள் எல்லா பஸ்லயும் இருக்கும்.

க: டேய் கரும்புக்காடு மண்டையா அது திருக்குறள் இல்லைடா. கலைஞர் சொன்னது. இதுக்கு தான் திருக்குறள் எழுதுன எடத்துல எல்லாம் ஃபிரியாத்தான இருக்குனு கண்டத எழுத வேணாம்னு சொன்னா அவரு கேட்டாரா? இப்ப பாரு இதையே திருக்குறள்னு நினைச்சி சுத்திட்டு இருக்கு ஒரு கூட்டம். அது சரி நீ எதப்பத்தி எல்லாம் எழுதுவ?

த: மக்கள் சிந்திச்சி செயல்பட்டு சமுதாயம் பயனடைய பல கட்டுரை எழுதிருக்கேங்கண்ணா...

க: டேய்!!! தண்டவாளத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?னு பதிவு போட்டது நீ தானே?

த: ஆமாங்கண்ணா!

க: ஏனுங்க ஆப்பிசர் அப்படி இதுல என்ன பெருசா சமுதாயத்துக்கு எழுதிட்டீங்கணு நாங்க தெரிஞ்சிக்கலாமா? கவர்மெண்ட் அவ்வளவு செலவு பண்ணி கக்கூஸ் கட்டி வெச்சா அதுல போகாம தண்டவாளத்துல போயிருக்க. அதுல எதுக்கு மேன் இப்படி பண்ண?

த: இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...

க: அடேய் கதிரு மண்டையா, அவனவன் செவ்வாய்க்கு சேட்டிலைட் அனுப்பலாமா புதனுக்கு அனுப்புலாமானு ஆராய்ச்சி பண்ணா நீ என்னடானா தண்டவாளத்துல ஒண்ணுக்கு போனா ட்ரெயின் வழுக்கி விழுமானு ஆராய்ச்சி பண்ணிருக்க. உன்னைய என்ன பண்ணலாம் நீயே சொல்லு.

த: அண்ணே அதை விடுங்க. நான் அது இல்லாம நிறைய சமுதாயத்துக்கு பயனுள்ளத எழுதியிருக்கேன்.

க: எது மேன் அந்த ரஸ்னால கழுவுன மேட்டரா?

த: ஓ நீங்க அதை படிச்சிட்டீங்களா?

க: டேய் அதை படிச்சதுல இருந்து நான் ரஸ்னாவே குடிக்கறதில்லடா. அப்படி அவனுங்க உனக்கு என்னடா துரோகம் பண்ணாங்க?

த: அதுவா... நான் சின்ன வயசுல இருக்கும் போது நாயர் கடைல ரஸ்னா வித்தாங்க. அதை கேட்டா கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரு நாயரு. அதனால தான்....

க: டேய் சும்மா கேட்டா எவண்டா கொடுப்பான். அதுக்கு காசு கொடுக்கனும்டா. உங்கள மாதிரி நாலு பேர் இருந்தா போதும்டா. ஒரு பேக்டரியவே இழுத்து மூட வெச்சிடுவீங்கடா. ஆமாம் இந்த இங்கிலிஷ் படத்துக்கெல்லாம் ரிவியூ எழுதறயாமே. நிஜமாலுமே நீ படம் பார்த்து பிடிச்சி போய் தான் எழுதறியா?

த: என்னணே சின்ன புள்ளத்தனமா கேக்கறீங்க. பதிவு போட மேட்டரில்லைனா அப்படியே ஒரு படம் பார்த்து அத பத்தி எழுதிட வேண்டியதுதான்.

க: ஓ இதுதான் மேட்டரா? அப்பறம் கண்ணு.. கவித கவிதனு ஏதோ எழுதறயாமே. ஏன் இந்த விபரீத ஆசையெல்லாம். மக்கள் பாவமில்லையா?

த: போங்கண்ணே. உங்களுக்கு எப்பவுமே குறும்பு தான்.

க: இந்த அண்ணே நொண்ணே எல்லாம் வேணாம். அப்பறம் ஸ்டாராகரவங்க எல்லாம் ஏதோ லக்ல ஆகறாங்கனு சொன்னியாமே...

த: அண்ணே! நான் அப்படியெல்லாம் சொல்லலைங்கண்ணா. அந்த மாதிரி ஆனவங்களை அந்த வாரத்துல கவனிக்கும் போது தான் அவுங்க திறமை நிறைய தெரியுதுனு சொன்னென். அதை யாரோ தப்பா சொல்லிட்டாங்கண்ணா...

க: சரி பொழைச்சி போ. அப்பறம் அது என்ன "வயது: மூணே முக்கால் கழுதை வயசு." னு போட்டுருக்க? ஒரு கழுதை வயசு என்னனு தெரியுமா மேன் உனக்கு? 30ல இருந்து 50 வயசு வரைக்கும் ஒரு கழுதை உயிர் வாழும். மினிமம் 30னு வெச்சிக்கிட்டாக்கூட 100க்கு மேல வருது. அப்ப உன் உண்மையான வயசு என்ன மேன்? இந்த போட்டோ 80 வருஷத்துக்கு முன்னால எடுத்ததா??? ஏன்டா இப்படி ஊரை ஏமாத்தறீங்க?

த: அண்ணே! ஏழரை கழுதை வயசுனு எல்லாம் சொல்வாங்க. சரி யங்கா இருக்கலாம்னு அதுல பாதிய போட்டேன். இப்படி கோக்குமாக்கா நீங்க கேப்பீங்கனு நான் எதிர் பார்க்கலைங்க.

க: அப்படி தான்டா கேப்போம். இப்படி புத்திசாலித்தனமா சொல்றோம்னு நினைச்சி பதில் சொன்னா வேற என்ன பண்ணுவாங்க? திருந்துங்கடா.

த: சரிங்கண்ணே... நான் கிளம்பலாமா?

க: இருடி செல்லம். இன்னும் ஒரே ஒரு கேள்வி தான் பாக்கி.
வாசிப்பு அனுபவம்: எங்க ஊரு நூலகர் அங்கமுத்து சக்கரை இன்னமும்
என்னை தேடிட்டு இருக்காராம். எடுத்த புத்தகத்தை திருப்பி குடுத்தாதானே.

லைப்ரரில இருந்த புக்க திருடி, அதை வித்து கமரக்கட் வாங்கி சாப்பிட்டு, ஊரை விட்டு ஓடி வந்துதும் இல்லாம அதை பெருமையா வேற பேசிட்டு திரியற நீயீ... உன்னைய என்ன பண்ணலாம். நீயே சொல்லு.

த: அண்ணே இனிமே இப்படி புத்திசாலித்தனமா பதில் சொல்லமாட்டேங்க. என்னைய மன்னிச்சிடுங்க... சொல்லிவிட்டு ஜம்ப் பண்ணி ஒடுகிறார் தம்பி.