தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, January 25, 2008

பனி விழும் மலர் வனம் - 1

அப்பாடா ஒரு வழியா மெஜெஸ்டிக் வந்து சேர்ந்தாச்சுங்க. இந்த பெங்களூர் ட்ராபிக் ஜாம் இருக்கே. கொடுமைலயும் கொடுமைங்க. MGரோட்ல இருக்குற எங்க ஆபிஸ்ல இருந்து மெஜெஸ்டிக் வந்து சேரதுக்குள்ள எங்க ஊர்ல இருந்து கடலூர்க்கே போயிடலாங்க. ஓ எங்க ஊர் என்னனே உங்களுக்கு சொல்லலை இல்லை. எங்க ஊர் பேரு திருக்கோவிலூர்ங்க. திருவண்ணாமலைல இருந்து அரை மணி நேரத்துல போயிடலாம்.

இப்ப கூட திருவண்ணாமலை பஸ் தான் பிடிக்க போறேன். இன்னைக்கு வேற பௌர்ணமியா போயிடுச்சி. பஸ்ல எப்படியும் சீட் கிடைக்கறது கஷ்டம் தான். அதான் மடிவாலா போகாம நேரா மெஜெஸ்டிக்கே வந்துட்டேன். மெஜெஸ்டிக் பஸ் ஸ்டாண்ட்ல கொஞ்சம் கஷ்டப்பட்டா சீட் பிடிச்சிடலாம்.

மெஜெஸ்டிக்ல உள்ள நுழைஞ்சதும் முதல்ல ஒரு காபி குடிச்சிடறது நம்ம பழக்கங்க. அதுவும் அந்த கேத்தோஸ் காபிதாங்க நம்ம ஃபெவரைட். அஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு சூப்பரான காபி நம்ம ஊர்ல கிடைக்காதுங்க. இருங்க ஒரு காபி குடிச்சிட்டு வந்திடறேன்.

காபி வழக்கம் போல சூப்பரா இருந்துச்சுங்க. அதுவும் நமக்கு ஏத்த மாதிரி ஸ்டராங்கா, சக்கரை கொஞ்சம் கம்மியா. சுருக்கமா சொன்னா நம்ம கொயம்பத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி. சரி காபி புராணத்த நிறுத்துவோம். நான் அதை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருப்பேன்.

இவ்வளவு நேரம் பேசிட்டே இருக்கோம். என் பேரை சொல்லல பாருங்க. என் பேரு... ஐயோ அங்க வர பஸ் திருவண்ணாமலை பஸ் மாதிரி தெரியுது. இருங்க முதல்ல பஸ்ல போய் இடம் பிடிப்போம்.

ஆஹா... அந்த பஸ்ல உக்கார இடமில்லைங்க. அதான் இந்த பஸ்ல ஏறிட்டேன். அஞ்சு மணி நேரம் நின்னுட்டு போக முடியாது இல்லையா? இந்த மூணு பேர் உக்கார சீட்ல உக்காரவே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் வேற வழியில்லாததால உக்கார்ந்துக்கிட்டேங்க. அடுத்து யாராவது வந்தா நடு சீட்ல உக்கார சொல்லனும். ஜன்னல் சீட்ல இருக்கற அந்த ஆளை எப்படியும் நகர சொல்ல முடியாது. நடுல உக்கார்ந்து போறதை விட வேற கொடுமை இல்லை. அதான் இப்படி ஓரமாவே ஒட்டிட்டு உக்கார்ந்து இருக்கேன்.

என்னங்க இவ்வளவு பேசியும் என் பேரை சொல்ல நேரமில்லை பாருங்க. நான் தாங்க ரவி. ரவி ஷங்கர். இந்த ட்ராபிக் ஜாம் ஊர்ல தான் கூகுள்ல வேலை செய்யறேன். அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ்ல நானும் என் எதிரி மாலதியும் செலக்ட் ஆனோம். அவ MS பண்ண போயிட்டா. நான் மூணு வருஷமா அங்க தான் குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

நான் நல்ல பையங்க. ஆனா அப்பப்ப கொஞ்சம் பொய் மட்டும் சொல்லுவேன். அதுல முக்கியமான ஒண்ணு பஸ்ல போகும் பக்கத்துல இருக்குற யார் கேட்டாலும் வேலை தேடிட்டு இருக்கறனு சொல்றது. கொஞ்சம் நல்லா கல கலனு போகும். நிறைய பேர் அட்வைஸ் கொடுப்பாங்க. அட்டகாசமான டிப்ஸ் எல்லாம் கொடுப்பாங்க. நானும் நல்ல பையனா கேட்டுக்குவேன். ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான் அதிகம் பேசுவாங்க. அதான் இப்படி.

இன்னைக்கு யாரும் சிக்க மாட்டாங்க போல. சரி பார்க்கலாம். எப்படியும் பக்கத்துல ஒரு ஆள் வருவான் இல்லை.

ஆஹா... என்னங்க அந்த பொண்ணு நம்ம பக்கத்துல வந்து நிக்குது. இடத்தை மாத்த சொல்ல போறாங்களா? திரு திருனு முழிச்சிட்டு நிக்குது.அநேகமா நகுந்து உக்கார சொல்லுதுனு நினைக்கிறேன்...

நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...

(தொடரும்...)

Friday, January 04, 2008

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 9

ஆம்பலில் இதுவரை..

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்

ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்



"ஏ அஞ்சலி! நம்ம பானு வரதுக்கு லேட் ஆகுமாம் எப்பவும் போல ஏணியை இறக்கி வெச்சிடு" சொல்லி கொண்டே அஞ்சலி அருகில் சாப்பாட்டு தட்டுடன் அமர்ந்தாள் மீனா.

"மகராணி எங்க போயிருக்காங்க?"

"அவ சுரேஷோட ஷாப்பிங் போனாளாம். அப்படியே படத்துக்கு போயிட்டு வரலாம்னு போயிட்டாங்களாம்"

"அது என்னடி படிக்கும் போதே படம் கிடம்னு சுத்திட்டு இருக்கா?"

"ஏய்! நீ ஏன் இப்படி சீன் போடற? அவ லவ் பண்றா, படத்துக்கு போறா. இதுல என்ன இருக்கு? சுரேஷும் ரொம்ப நல்ல பையன் தான்"

'சுரேஷ் நல்ல பையனு இவ எனக்கு சொல்றா' மனதிற்குள் சொல்லி கொண்டாள்

"சரி அப்ப நீயே ஏணியை இறக்கி வெச்சிடு. நான் லைட் ஆஃப் பண்றதுக்குள்ள தூங்கிடுவேன். அதுவுமில்லாம இந்த வார்டனுக்கும் எனக்கும்

நேத்து தான் சண்டை"

"செல்லம் இல்லை. எனக்காக இதை செஞ்சிடு அஞ்சலி. கார்த்திக் ராத்திரி ஃபோன் பண்றனு சொல்லிருக்கான்பா. ப்ளீஸ்"

"யாரு அந்த கெமிக்கல் கார்த்தியா? எக்கேடோ கெட்டு போ!"

"ஏணி எடுத்து வெச்சிடற இல்லை? சரியா ஒரு மணிக்கு எல்லாம் எடுத்து வெச்சிடுடா. ப்ளீஸ்"

"சரி"

ஒரு மணி வரை என்ன செய்வதென்று புரியாமல் அடுத்த அறைக்கு சென்றாள் அஞ்சலி. அங்கே லதாவின் பழைய டைரி அவள் படுக்கை மேல்

கிடந்தது. அவள் வரும் வரை அவளுக்கு தெரியாமல் படிக்க ஆரம்பித்தாள் அஞ்சலி. காலேஜ் முதல் நாள்

"எங்க க்ளாஸ்ல ஆறே பொண்ணுங்க தான்.
Anita - மெட்ராஸ் பொண்ணு. எதுக்கெடுத்தாலும் இங்கிலீஷ்லயே பேசறா
Anjali - விழுப்புரம் பக்கத்துல ஒரு ஊர். பேர் மறந்து போச்சு. ரொம்ப நல்ல பொண்ணு. நல்லா பேசறா
Meena - இவ ஊர் சேலம். வாய திருந்தா மூடவே மாட்டா போல தெரியுது.
Banu - இவ மதுர பக்கத்து பொண்ணு. இன்னைக்கு முழுக்க அமைதியா இருந்தா.
Archana - இவ ஊரு திண்டுக்கல். இன்னும் இவக்கிட்டயும் பேசல.

ஸ்கூல்ல இருந்த மாதிரி எங்க எல்லாரோட பேரையும் சேர்த்து குருப்பா ஒரு பேர் வைக்கனும். என்ன வைக்கலாம்?

ஹிம்ம்ம்... எல்லாரோட முதல் எழுத்தையும் சேர்த்து பார்க்கலாம்.
AAMBAL கரெக்ட்- "ஆம்பல்"

"வேங்கையும் பூங்கொடி"ல படிச்ச பூ...

"ஆம்பல் பூத்த
அதரங்கள் நெகிழ
அன்றைய கடமைகள்
ஆற்ற வந்தாள்."

.....................................................

"இங்க பாருப்பா சுரேசு.. உங்க ஐயாரு கண்டிப்பா சொல்லிட்டாக நீ அவுக தங்கச்சி புள்ளய தான் கட்டிக்கனுமாம்"

"அம்மா உனக்கு எத்தனை முறைமா சொல்றது. அவுக ரொம்ப வசதியான இடம். அந்த பொண்ணும் நிறையா படிச்சிருக்கு. என்

உத்யோகத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதுமா"

"இங்க பாரு. அவக தங்கச்சி தான் இதை பத்தி உங்க அயாருக்கிட்ட பேசிருக்காங்க. பொட்ட புள்ள என்ன படிச்சா என்ன? வேலைக்கா போக

போகுது. உன் கூட நல்லா குடும்பம் நடத்துவாய்யா. நீ எதுவும் பயப்படாத"

"அம்மா. எனக்கு என்னுமோ இது சரியாப்படல. மெட்ராஸ்ல படிக்கிற புள்ள. அதுவுமில்லாம என் உத்யோகம் வேற ஒரு மாதிரி. எப்ப

வீட்டுக்கு வருவேன், எப்ப போவேனு எனக்கே தெரியாது"

"அதெல்லாம் நீ ஏண்டா பயப்படற. கயலு ரொம்ப தங்கமான பொண்ணு. உன்னைய நல்லா வெச்சி பார்த்துக்குவா"

"எதுக்கும் நீயே ஒரு தடவை பேசி பாரும்மா"

"அவளுக்கு நீயே வேணும்னா ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. உங்க ஐயா அந்த காலெண்டர்ல அவ நம்பர் எழுதி வெச்சிருக்காரு. அப்பறம்

ஃபோன் பண்ணி கயல்னு கேக்காத லதானு கேளு"

"தெரியும்மா..."

(தொடரும்...)
.....................

இதை ஆன்மீக முற்போக்குவாதி(???) KRS தொடருவார்...