“நல்லா பண்ணிருக்கேன்டா. அடுத்த வாரத்துல HR கால் இருக்கும்னு சொல்லிருக்காங்க”
“சூப்பர்டா. அப்ப இன்னைக்கு ட்ரீட் தாந்னு சொல்லு” இது ஹரி.
“எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டும். பெரிய ட்ரீட்டே வெச்சிடலாம்” சொல்லிவிட்டு ஷீ ஷாக்ஸை கழட்டிவிட்டு உள்ளே சென்றேன்.
வெளியே கதவை யாரோ வேகமாகத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டது.
பக்கத்து அறையில் தங்கியிருக்கும் கார்த்திக் அண்ணா. வேகமாக என்னிடம் வந்தவர், “வாட்ச் எங்க?”
நான் கழட்டிக் கொண்டே, “நீங்க காலை-ல்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் கோயான் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு.....” சொல்லிக் கொண்டே அவர் கையில் வாட்சைக் கொடுத்தேன். அதை வாங்கிப் பாக்கட்டில் வைத்துக் கொண்டார். திடீரென்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
”தா$ளிங்களா........இனிமே அண்ணே நொண்ணேனு எவனாவது ரூம் பக்கம் வந்தீங்க அவ்வளவு தான்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.
ராஜாவும், ஹரியும் வேகமாக என்னை நோக்கி எழுந்து வந்தனர். நான் கன்னத்தில் கை வைத்து நின்று கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. என்னை அறியாமல் என் கண்ணீல் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது.
“டேய்....என்னடா நடந்தது? அவருடைய வாட்சை நீ ஏன்டா எடுத்துட்டு போன? என்னோடது எடுத்துட்டு போயிருக்கலாமே” ஹரி.
“டேய் காலை-ல்ல டை வாங்கலாம்னு போனேன்டா. டை பக்கத்துல வாட்ச் இருந்தது. கோயன் அண்ணா-துனு நினைச்சி எடுத்துட்டு போயிட்டேன். அவர்ட சொல்லிட்டு தாண்டா எடுத்துட்டு போனேன். அதுக்காக இப்படியா அறையுவாங்க? எல்லாம் MNCல மாசம் அறுபதாயிரம் வேலை வாங்கற திமிர் அவனுக்கு. எனக்கு வேலை இல்ல-ல்ல? அதான்”
என்னை மீறி சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன். அழக்கூடாது என்று நினைக்க நினைக்க விம்மல் அதிகமானதே தவிர குறையவில்லை. வேகமாக ரூமிற்குள் நுழைந்து கதவை மூடி, தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.
கொஞ்சம் என்னைத் தனியா விடுங்க-ன்னு நான் சொன்னவுடன் கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மறுபடியும் கதவு தட்டும் சத்தம். எழுந்து கதவைத் திறந்தேன். கார்த்திக் தான்.
“கொஞ்சம் என் கூட வா”
“உங்க வாட்ச் எடுத்ததுக்கு சாரி. இப்ப நீங்க கொஞ்சம் வெளிய போறீங்களா?”
“டேய் தெரியாம அடிச்சிட்டேன். சாரி. இப்ப என்ன உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா?”
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க கிளம்புங்க”
“முதல்ல நீ வா” என் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.
வெளியே சென்று அவர் வண்டியை எடுத்தார்.
“வா. வந்து உட்காரு” எங்கே என்று கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன்.
நேராக மஞ்சுநாதா பாரில் வண்டியை நிறுத்தினார்.
உள்ளே ஏசி ஹாலிற்கு சென்று அமர்ந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.
உடனே கையில் ஒரு பேப்பருடன் ஆர்டர் எடுக்க ஒருவர் வந்துவிட்டார்.
“என்ன சாப்பிடற? பீரா, ஹாட்டா?”
“எனக்கு எதுவும் வேண்டாம்.”
“சும்மா சொல்லுடா. நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்-ல்ல? சொல்லு”
“கிங் ஃபிஷர்”
“ஒரு கிங் ஃபிஷர், RC லார்ஜ்”
”சைட் டிஷ் சார்” ஆர்டர் எடுப்பவர்.
“சிக்கன் லாலி பாப், அப்பறம் சிக்கன் கபாப்”
“ஓக்கே சார்”
நான் இரண்டு பீர் அடிப்பதற்குள் அவர் நான்கு லார்ஜ் முடித்திருந்தார். போகும் பொழுது எப்படியும் நான் தான் வண்டியை ஓட்ட வேண்டி இருக்கும் போல.
திடீரென்று எழுந்து பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்து டேபிள் மேல் வைத்தார்.
அவருடைய வாட்ச்.
“நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டி பார்த்திருக்கியா? உன் பேர் என்ன? மறந்துட்டேன். சாரி”
“வினோத்”
“ஹ்ம்ம். வினோத். நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டிப் பார்த்திருக்கியா?”
“தெரியல. நான் கவனிச்சது இல்லை. சாரி.”
“இதை யார் கொடுத்தா தெரியுமா வினோத்?”
எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு தான்.
“தமிழ். என் தமிழரசி. யூ நோ ஷி இஸ் குயின் ஆஃப் தமிழ். Do you know that?"
இன்னைக்கு நான் மாட்டினேனா? என் நேரமே சரியில்லை. என்ன கதை சொல்லப் போறானோ?
“நான் இதை ஏன் கைல கட்ட மாட்றேன் தெரியுமா? This is a damn leather watch man. இதை தினமும் கைல கட்டினா பிஞ்சு போயிடும். I should have taken a metal strap. I made a very big mistake. அப்ப தெரிஞ்சிருந்தா லெதர் எடுத்திருக்க மாட்டேன். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் அவள்ட பேசியே இருந்திருக்க மாட்டேனே. இல்லையில்லை. இப்ப நான் படற கஷ்டத்தை விட அப்ப அதிகமா சந்தோஷமா இருந்தேன். So I was right”
இந்த மாதிரி லவ் ஃபெயிலியர் கேஸுங்க கூட மட்டும் தப்பித் தவறி தண்ணி அடிக்க உட்காரக் கூடாது. அதுவும் தண்ணி அடிச்சா எப்படி தான் இங்கிலிஷ் வருதோ தெரியலை.
"இந்த வாட்ச் அவளோட முதல் மாச சம்பளத்துல எனக்கு வாங்கி கொடுத்தது.
you know what, we were just friends at that time. We believed so. You never know when you start loving someone. Love at first sight எல்லாம் கௌதம் மேனன் படத்துல தான்.
"இல்லை. எனக்கு பொண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கூட கிடையாது. நான் காலேஜ்ல கூட பொண்ணுங்ககிட்ட பேச மாட்டேன்”
“நானும் அப்படி தான் விஜய். விஜய் தானே?
“வினோத்”
“சாரி. வினோத். நானும் காலேஜ்ல எந்த பொண்ணுக்கிட்டயும் பேசனது இல்லை. தமிழ் தான் ஃபர்ஸ்ட். ஆல்சோ லாஸ்ட். அவள் என் ஃபிரெண்ட் பாஸ்கீயோட கஸினோட ஃபிரெண்ட். அவன் கஸின் கிருத்திகாவும், தமிழும் உங்களை மாதிரி தான் இங்க வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருந்தாங்க.
“இல்லை. இல்லை. சொல்லுங்க”
“காலைல ஆபிஸ் போனவுடனே. வேக வேகமா வேலையை முடிச்சிடுவேன். அவளுக்கு ஃபோன் பண்ணனும்னு ஆசையா இருக்கும். ஆனா எதுக்காக ஃபோன் பண்ணனு சொல்றதுக்கு ஒரு காரணம் வேணுமேனு தயக்கமா இருக்கும். அப்படியே யாஹீ, கூகுள் ஃபிரெஷர்ஸ் குரூப்ல தேடி ஏதாவது ஓப்பனிங்க் இருக்கானு பார்ப்பேன். அதையே காரணமா வெச்சி ஃபோன் பண்ணுவேன். அது அப்படியே ரெண்டு, மூணு மணி நேரம் போகும்.
“இல்லை வேண்டாம்”
“சும்மா சாப்பிடு. இல்லை கிளம்பலாமா?”
“இல்லை நீங்க சொல்லுங்க”
“வீக் எண்ட்னு இல்லாம சில சமயம் அவள் போர் அடிக்குதுனு சொன்னா, வீக் டேஸ் ஈவனிங் கூட கிளம்பி போவேன். அதுக்காக அவ பசங்க கூட சுத்தறவனு நினைச்சிக்காத. அவ என்னைத் தவிர வேற எந்த பையன்கிட்டயும் பேசி நான் பார்த்தது இல்லை. அவளுக்கும் அந்த ஆச்சரியம். எப்படி என் கூட மட்டும் இவ்வளவு க்ளோஸ் ஆனானு.
நெத்தில சிவப்புக் கலர்ல திலகம் மாதிரி வெச்சிட்டு. அங்க நாலஞ்சி couples இருந்தோம். மொத்தமா சுத்தி வளைச்சிட்டாங்க. மொத்தமா எல்லா கப்பில்ஸையும் ஒண்ணா சேர்த்துட்டாங்க.
ஒரு நிமிடம் நிறுத்தினார்.
“அவ ராக்கி எடுக்கல. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியல”
“என்ன பண்ணீங்க?”
“We are friends. We are studying here. அப்படினு கைல வெச்சிருக்க புக்கை காட்டினேன். புக்கை மூடாம, கைல பேனா திறந்து இருந்ததைப் பார்த்து நம்பி விட்டுட்டாங்க. ஆனா ஏதோ கன்னடத்துல திட்டினாங்க. வேகவேகமா அந்த இடத்துல இருந்து பைக்கை எடுத்துட்டு போய் அவளை PG ல விட்டேன்.
“ஆமாம்”
“சரி. நேரமாச்சு. கிளம்பலாமா?”
“இன்னும் கதை முடியலையே.”
“கதையா? இது கதை இல்லை வினோத். This is my life. I think you are not getting it”
“சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படி mean பண்ணல. அப்பறம் என்ன ஆச்சு?”
“ஒரு வழியா அந்த இண்டர்வியூ அவ க்ளீயர் பண்ணிட்டா. ஒரு மாசத்துல வேலைல சேர்ந்தா. அப்பறம் ஃபோன் பேசறது ஓரளவு குறைஞ்சது. இருந்தாலும் வீக் எண்ட்ல மீட் பண்ணிக்குவோம். ஷாப்பிங் எல்லாம் சேர்ந்து தான் பண்ணுவோம். முதல் மாச சம்பளத்துல வீட்ல எல்லாருக்கும் துணி வாங்கி கொடுத்தா.
என்னைப் பொருத்த வரைக்கும் என்னுடைய தமிழ் தான்.
“இல்லை நான் தான் சொல்லணும். எனக்குத் தெரியாது. ஐ ஆம் சாரி. நீங்க அவுங்களுக்கு ப்ரபோஸ் பண்ணலீயா?”
”ப்ரப்போஸ்? ஐ லவ் யூனு நாங்க வார்த்தைல சொல்லணுமா? ஐ லவ் யூங்கறது ஜஸ்ட் வார்த்தை கிடையாது. உங்க அம்மாட்ட என்னைக்காவது நான் கோபமா இருக்கேன், சோகமா இருக்கேனு சொல்லிருக்கியா வினோத்?”
“இல்லை. என்னுடைய முகத்தையும் ரியாக்ஷனையும் பார்த்து அவுங்களா புரிஞ்சிக்குவாங்க”
“காதலும் அப்படித்தானே? நான் உன்னை காதலிக்கிறேனு சொல்லணுமா? அது தானா புரிஞ்சிக்கறது தானே. பொண்ணுங்க மனசைப் புரிஞ்சிக்க முடியாது, கஷ்டம். கடலை விட ஆழம்னு சொல்றது எல்லாம் சுத்த ஹம்பக்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.
“தமிழ், இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனு தெரியலை. ஒரு வாரம் தாங்குவனானு கூட நிச்சயம் இல்லை. நான் இருக்கும் பொழுது நீ காதல் கல்யாணம் பண்ணிட்டா எல்லாரும் என்னைக் கேலி பேசுவாங்க. குறை சொல்லுவாங்க. அதை நான் நிச்சயம் தாங்கிக்குவேன்.
“நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்ணே”
“நான் காத்திருந்து என்ன பிரயோஜனம்? அவுங்க அப்பா உயிரோட இருக்கும் போழுதே கல்யாணம் பண்ணனும்னு ஒரே வாரத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. அவ கடைசியா என்கிட்ட ஃபோன்ல பேசினது இது தான்...................அன்னைக்கு பார்க்ல நான் ராக்கி கட்டாததைப் புரிஞ்சிட்டு நீங்க தாலி கட்டிருக்கலாமே கார்த்திக்-ன்னு கேட்டா.
”சார், டைம் ஆச்சு. பார் க்ளோஸ் பண்ண போறோம். பார்சல் எதாவது வேணுமா?”
“இல்லைங்க நாங்க கிளம்பறோம்” நான் தான் சொன்னேன்.
ஒரு வழியாக அவரை உட்கார வைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவரை ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து கதவை மூடி விட்டு வந்தேன்.
வாட்சைப் பாக்கெட்லயே வெச்சிருக்காரே. திரும்பிப் படுக்கும் போது உடைஞ்சிடப் போகுதுனு மறுபடியும் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது.