தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, May 03, 2021

கே வி ஆனந்த் - நினைவு குறிப்புகள்

2005 பெங்களூர்ல நண்பர்களுடன் தங்கி இருந்தேன். அப்ப பெரும்பாலும் தமிழ்ல வர எல்லா படத்தையும் பார்த்துடுவோம். அந்த கூட்டத்துல ஆட்டோகிராஃப் படம் பார்த்துட்டு கோபிகாவோட தீவிர ஃபேன் ஒருத்தன் இருந்தான். அவனுக்காக கனா கண்டேன் படத்துக்கு போனோம்


எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம பார்க்க ஆரம்பித்த படம். முதல்ல பையன் பொண்ணு பிரண்ட்ஷிப், அப்படியே அழகா லவ், ரொமான்ஸ், தண்ணி பிரச்சனைக்குத் தீர்வு தேடற ஹீரோனு போயிட்டு இருந்த படம், திடீர்னு ஸ்மார்ட்டான செகண்ட் ஹீரோ மாதிரி ஒருத்தர் வந்தவுடனே ட்ராக் மாற ஆரம்பித்தது


அதுவரை நாம பார்த்த வில்லன்களில் இருந்து வித்தியாசமா, ஆனா அதே சமயம் கொடூரமான வில்லனா ப்ரித்விராஜ் மிரட்டியிருந்தார். அதுலயும் நீ ஏன் இப்படி பணம் பணம்னு அலையறனு கோபிகா கேட்கும்போது, க்ளிஷேவா சில டயலாக் சொல்லிட்டு, அதெல்லாம் சொல்லுவேனு பார்த்தையா? இல்லை, I just love the smell of Money நு சொல்லுவார். எவன்டா இவன் இப்படி இருக்கானு தோணும்


ஹீரோவும் க்ளைமாக்ஸ் வரை என்னடா மொக்கை வாங்கிட்டு இருக்கானேனு தோணும் போது, கடைசியா அவர் படிப்பை பயன்படுத்தி White Phosphorus அப்படி இப்படினு சொல்லி ஜெயிப்பார். இப்ப பார்த்தா மொக்கையா கூட இருக்கலாம். ஆனா அப்ப நல்லா, வித்யாசமா இருந்தது. படத்துல சில பாடல்களும் சூப்பரா இருக்கும். அதுலயும் சின்ன சின்ன சிகரங்கள் காட்டி எல்லாம் மிட் நைட் மசாலால தொடர்ந்து வரும்


அதுக்கு அப்பறம் யாருடா டைரக்டர்னு பார்க்கும் போது K V Anand, காமிரா மேனா இருந்து டைரக்டரா மாறியிருக்கார்னு தெரிஞ்சுது. அதே சமயம் கதை சுபா நு தெரிஞ்சுது. நான் பத்தாவது படிக்கும் போது தீவிரமா க்ரைம் நாவல் படிப்பேன். அதுல எனக்கு ராஜேஷ் குமாரைவிட, சுபா தான் பிடிக்கும். இந்த மாதிரி டைரக்டர்ஸ் ரைட்டர்ஸை பயன்படுத்தினா, இப்படி வித்யாசமா கிடைக்குமேனு தோணுச்சு. K V Anand ரெண்டாவது படத்துக்குக் காத்திருந்தேன்.


கிட்டதட்ட நாலு வருஷம் கழிச்சி வந்தது அயன். அப்ப யூ எஸ்ல இருந்தேன். இதுவும் நண்பர்களுடன் தான் பார்த்தேன். படம் தாறுமாறு. படம் முதல் சீன்ல இருந்து கடைசி வரை பரபரப்பு. இதுலயும் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி செமயா இருக்கும். இது பெரும்பாலும் எல்லாருக்கும் பிடிச்ச படம் தான்


2016 சென்னை ஏர்போர்ட் ட்ரெயினிங் போகும் போது தான் சொன்னாங்க அதுல வந்தது எல்லாம் நிஜமாலுமே சென்னை ஏர்போர்ட்ல பிடிச்ச கேஸுங்கனு. உண்மையாலும் குருவிங்க வாழ்க்கை அதுல வர ஜெகன் மாதிரி தான் இருக்கும்னு சொன்னாங்க. சினிமாங்கறதால ரொம்ப ஹீரோயிசமா காட்டியிருக்காங்கனு புரிஞ்சிது


அடுத்த வந்த கோ வும் நல்ல படம் தான். இதுலயும் செகண்ட் ஹீரோ மாதிரி இருக்கவன் வில்லனா மாறுவது தான் ட்விஸ்ட். அதுலயும் க்ளைமாக்ஸ்ல அஜ்மலோட பாடி லாங்குவேஜ் வேற லெவல். கிட்டதட்ட கனா கண்டேன் ப்ரித்வி ராஜ் வகை தான். ஹாட்ரிக் வெற்றி.


அதற்கு பிறகு தான் சறுக்கல். ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த மாற்றான் அவ்வளவு சிறப்பா இல்லை. கதை கேட்கும் போது அட்டகாசமா இருந்திருக்கும். குறிப்பா உலகத்துல பெஸ்டா இருக்கவங்களோட ஜீன்ல இருந்து உருவாகற ஹீரோனு கேக்கும் போது அப்படியே ஜிவ்வுனு இருந்திருக்கும். ஆனா திரைல அதை கொண்டுவரதுல ஏனோ கொஞ்சம் சொதப்பல்


அனேகன் கூட நல்ல கதை தான். எனக்கு பிடிச்சிருந்தது. முன் ஜென்ம காதல், பல தடங்கள்கலால் ஒன்று சேர முடியாதவர்கள் இந்த ஜென்மத்தில் சேருவது. கிட்ட தட்ட நெஞ்சம் மறப்பதில்லையை இந்த காலத்துக்கு பட்டி டிங்கரிங் பண்ண கதை. ஆனா பெருசா ஹிட் அடிக்கல


கவன், காப்பான் ரெண்டுமே ஏனோ K V Anand தரத்துக்கு இல்லாத மாதிரி ஒரு எண்ணம். ஆனா எப்படியும் அயன் மாதிரி மறுபடியும் சூப்பர் ஹிட் படம் கொடுப்பார்னு நம்பிக்கை இருந்தது. என்ன சொல்றதுனு தெரியல


Thank You K V Anand Sir for entertaining us. You will be always remembered for your work.