சுடர் என் கைகளில் வந்த நாளன்று அதை கொடுத்தவர் யாரென்று எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயலவில்லை. ஆனால் அது தெரிந்து கொண்ட பொழுது மனம் கனக்கவே செய்தது. அவர் ஆன்மா சாந்தியடையவும், அவர் இழப்பை அவரது குடும்பம் தாங்கி கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.
மகேந்திரன் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னளவிளான பதில்கள்...
1. திராவிடன் என்பவன் யார் என்ற உங்கள் நெடுநாள் சந்தேகம் தீர்ந்ததா?இந்த கேள்விக்கு பதில் ஆம்/இல்லை. கேள்விகள் தான் நிறைய இருக்கு.
கேள்வி கேட்டாலே தப்பா நினைக்கறாங்கனு நான் அதிகமா கேக்கறதில்லை. இப்பவும் மனசுல இந்த கேள்விகள் எல்லாம் இருக்கு.
1. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லாம் திராவிட நாடுகளா?
2. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் அவ்வாறு சொல்லி கொள்வதில்லை?
3. பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்னும் பட்சத்தில், வட இந்தியாவில் உள்ள பிராமணர் அல்லாத சமூகம் என்ன இனம்?
இன்றைய என்னுடைய புரிதல். பார்ப்பணியத்திற்கு (பிறப்பால் மட்டுமே தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் குணம். பிறாப்பாலே தனக்கு எல்லா தகுதிகளும் வந்துவிடுகிறது என்று நினைக்கும் அகம்பாவம், ஆணவம் நிறைந்த கூட்டத்திற்கு) எதிராக பெரியாரால் வளர்க்கப்பட்டதே திராவிடம்.
ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.
-----------------------------------------------------------------------------------
2. அனானி கழக தோழர்களால் வலைப்பூ உலகம் ஏற்றம் அடைகிறதா இல்லையா?
செந்தழல் ரவி போஸ்டா இல்லை லக்கி லுக் போஸ்டானு ஞாபகம் இல்லை இந்த கமெண்டை ஒரு 3, 4 மாசத்துக்கு முன்னாடி பார்த்தேன்... பொன்ஸ் அக்காவை பாரதி கண்ட புதுமை பெண்ணு சொல்லி இருந்தாரு. அதுக்கு உடனே ஒரு அனானி
"தலைவா நீ பாரதி கண்ட புதுமை பையன்"னு சொல்லி போட்டிருந்தாரு. இதை அடிக்கடி நினைச்சி சிரிச்சிக்குவேன். ரொம்ப சாதாரணமா ரவுஸ் விட்டிருந்தாரு ஒரு அனானி.
ப்ளாகர் எப்படி ஆரம்பிக்கறது, ஆரம்பிச்சி என்ன எழுதறதுனு தெரியாதவங்க அனானிமஸா பின்னூட்டம் போடறாங்க. அனானிமஸா இருக்கவங்க படிக்கக்கூடாதுனு சொல்லி சட்டம் போட்டா இங்க யாராவது எழுதுவாங்களா??? ப்ளாக் எழுதறவன் நம்மல பாராட்டி பின்னூட்டம் போட்டா அதுக்கு பல காரணம் இருக்கலாம். முக்கியமா அடுத்து நமக்கும் ஒரு பின்னூட்டம் இவன்கிட்ட இருந்து வரும்னு கூட இருக்கலாம். ஆனா அனானியா ஒருத்தர் போடும் போது அந்த மாதிரி எதுவும் சொல்ல முடியாது.
பிரச்சனை சில சமயம் அனானியா அசிங்கமா பின்னூட்டம் போடறதுதான். வலைப்பதிவுளையும் அசிங்கமா எழுதறவங்க இருக்காங்க. அவுங்களால எல்லா வலைப்பதிவையும் தடை செய்ய சொல்லலாமா? எனக்கு ப்ளாக் இல்லாதப்ப நானே அனானியா கமெண்ட் போட்டிருக்கேன். செல்வன் பதிவுகளில் போட்டிருக்கிறேன் (கதைக்கு தான்.. ஆனா அவர் அதை முடிக்கவே இல்லை :-(()
அனானி தோழர்கள் தான் வலைப்பூ உலகின் ஏற்றத்திற்கு பெரும் காரணம். இதை நான் முழுதும் நம்புகிறேன். -----------------------------------------------------------------------------------------
3.உங்களுக்கு நெருக்கமானவர் ஒரு போலி என்று அறிய வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன ?நான் கொஞ்சம் ஓட்ட வாய். யார் எது கேட்டாலும் மனசுல இருக்கறத சொல்லிடுவேன். அதனால என்கிட்ட யார் பேசினாலும் மத்தவங்களை பத்தி சொல்லிடுவேன். அப்படி என்கிட்ட இருந்து ஒரு இன்ஃபர்மேஷனை வாங்கி அவரை அசிங்கப்படுத்தினால் கண்டிப்பாக அவரை மன்னிக்க மாட்டேன். அடுத்து பேசவும் மாட்டேன். ரொம்ப ரொம்ப வருத்தப்படுவேன்.
என்கிட்ட இருந்து என்னை பற்றி இன்ஃபர்மேஷன் வாங்கிட்டு என்னை மட்டும் அசிங்கமா திட்டி எழுதினா ஏன்டா நாயே இப்படி பண்ணனு உரிமையா கேட்பேன். என்னை திட்றதுனா நீ பேசும் போதே திட்லாம்டா. தனியா வேற பேர்ல திட்டினா உன் மனசுக்கே பின்னாடி கஷ்டமா இருக்கும்டானு சொல்லுவேன். சண்டை போடறதுக்கு நான் எப்பவுமே ரெடி தான். நான் எந்த கருத்து சொன்னாலும் பொதுவா எனக்கும் ஜி.ராக்கும் சண்டை தான் வரும். இருந்தாலும் அவர் என்னுடைய ஒரு சிறந்த வழிக்காட்டி. அந்த மாதிரி ஜாலியாவே சண்டை போட்டுக்கலாம்டானு சொல்லுவேன்.
அவரே ஒரு பெயரில் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வேறு பெயரில் பலமாக எதிர்ப்பு தெரிவித்தால் (உனக்கு என்ன பெருசா கருத்து இருக்கு? ஆதரிக்கவும் சண்டை போடவும்னு சொல்லப்படாது) சூப்பர்டா மச்சி... கலக்கறனு சொல்லுவேன். சில சமயம் நானே என் கருத்துக்கு பலமான எதிரி. அதனால இது சாதரணம்னு விட்டுடுவேன்.
வேற யாரையாவது அசிங்கமா திட்டியோ இல்லை அவுங்க குடும்பத்தை பத்தி திட்டியோ எழுதினான்னா கண்டிப்பா அவன்ட பேசி அதை நீக்க சொல்லுவேன். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும்னு சொல்லுவேன். கோழைகள் தான் அந்த மாதிரி செய்வாங்க. வீரனா எழுந்து சண்டை போடுனு சொல்லுவேன். என்ன சொல்லியும் கேக்கலைனா போட வெண்டரு உன்கிட்ட இனி பேசவே போறதில்லைனு சொல்லி விலகிடுவேன். ஆனா அது கடைசி வரை முடியாத பட்சத்தில்...
---------------------------------------------------------------------------------------------
4.உயர்கல்வியில் இடஒதுக்கீடும் க்ரீமி லேயரும் எல்லோருக்கும் புரியும் விதமாக விளக்கவும்ஆஹா... சொல்றேன்
முதலில் இட ஒதுக்கீடு எதுக்குனு என்னுடைய புரிதலை சொல்லிடறேன்...
இன்னைக்கு என்னதான் சாதி பார்க்க கூடாதுனு நம்ம சவுண்ட்விட்டாலும் நம்மலையும் அறியாம சாதி பார்க்கத்தான் செய்யறோம். ஒரு உதாரணத்திற்கு ஒரு X சாதில இருக்கறவங்களே அதிக அளவுல வக்கீலா இருக்காங்கனு வைங்க. ஒரு சமயமில்லனா ஒரு சமயத்துல அந்த`சாதிக்காரன் சாதாரணமா தப்பு பண்ணி சுலபமா தப்பிக்கலாம். தப்பிக்கலாம்னு சொல்றத விட அவனுக்கு செக்யுரிட்டி கொஞ்சம் அதிகம். அதே மாதிரி`டாக்டர், போலிஸ் இப்படி ஒவ்வொரு துறையும் சொல்லலாம்.
ஒரு ஊர்ல போலிஸ்காரர்களெல்லாம் ஒரே சாதியிலிருந்தால் அல்லது மேல் அதிகாரிகள் எல்லாம் ஒரே சாதியிலிருந்தால் மற்ற சாதியிலிருப்பவருக்கு நீதி கிடைப்பதில் பிரச்சனையிருக்கும்.
எல்லாருக்கும் மனசுல நம்ம சாதிக்காரனு ஒரு பாசம் இருக்கு. சிலர் இல்லைனு சொல்லலாம். ஆனா சுத்தி இருக்கவங்க அந்த மாதிரி சிந்திக்க வெச்சிடுவாங்க. (ஆனா இந்த ஜென்ரேஷன்கிட்ட குறையிதுனு நினைக்கிறேன்). இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் அனைத்து பணியிடங்களிலும் இருக்கனும்னு (Social Equality) கொண்டு வந்தது தான் இந்த இட ஒதுக்கீடு. அதனால குழலியோ செல்லாவோ சொல்ற மாதிரி இது ஒருவனுடைய வசதியை கணக்கில் கொண்டு வந்த திட்டமல்ல. They are right in that.
இதெல்லாம் ஒரு 40 - 50 வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஆளுங்க வகுத்த திட்டங்கள். (Except MBC, I beleive). இன்றைய நிலைமைல இந்த திட்டத்துல நிறைய ஓட்டைகள் இருக்கு. ரெண்டு மூணு ஜெனேரேஷனை கணக்குல வெச்சி எல்லாம் அவுங்க போடுவாங்கனு நம்ம ஆசைப்படக்கூடாது. அதுவும் இல்லாம அவுங்களும் உன்னையும் என்னையும் மாதிரி சாதாரண மனுஷங்க தான். அதனால அந்த திட்டத்துல இன்னைக்கு தப்பு இருக்குனு சொல்றதால அன்னைக்கு அவுங்க போட்ட திட்டத்தில தப்புனு அர்த்தமில்லை.
முதல்ல க்ரீமி லேயர்னா யாரு?
நல்ல கல்வி கற்கும் சூழலும், வசதி வாய்ப்புகளும் கிடைத்த மாணவர்கள்தான் இந்த க்ரீமி லேயர்ல வரான். இதுல வருபவர்கள் ஒரு ஒரு பிரிவிலும் 10% - 20% என்று எடுத்து கொண்டாலும், அவர்களே போதும் அனைத்து தரமான கல்லூரிகளிலும் இடம்பிடித்து கொள்ள.
சின்ன எடுத்துக்காட்டு தரேன்...
ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு SC ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு SSLC முடிக்கிறாருனு வைங்க (கண்டிப்பா அவர் அதை முடிக்கனும்னா அவரும் ரொம்ப அவமானங்களை சந்தித்திருக்கணும், அவர் அப்பாவும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்க வேண்டும்). அவருக்கு அரசாங்க சலுகைல எப்படியோ ஒரு கான்ஸ்டெபில் வேலை கிடைக்கிறது.
அதிலும் அவர் பல அவமானங்களை அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்கிறார். அவர் மகனுக்கு இருபது வயதாகும் நிலையில் அவர் ஓரளவு நல்ல நிலையை அடைகிறார் (மினிமம் ஒரு இன்ஸ்பெக்டர்). கையில் நல்ல காசும் சம்பாதித்து வைத்திருக்கிறார். இவர் மகன் சென்னை SBOAவிலோ, இல்லை ஈரோடு BVBயிலோ படிக்கிறார் என்று வைத்து கொள்ளவும்.
இந்த நிலைமையில் இவருக்கு கோட்டாவில் அண்ணா யுனிவர்சிட்டியில் சீட் கிடைக்கிறது. இவர் இந்த இட ஒதுக்கீட்டை இரண்டாவது தலைமுறையாகவோ இல்லை மூன்றாவது தலைமுறையாகவோ பயன்படுத்துகிறார். ஆனால் முதல் முறையே இட ஒதுக்கீட்டால் பயன்பெறாத ஒரு பெரிய கூட்டம் நம்மிடையே இருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்த உயர் போலிஸ் அதிகாரியின் மகனுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை விட அதே சாதியில் அதை பயன்படுத்தாத ஒரு கூட்டத்திற்கு சென்று அடைய வேண்டும் என்றே நான் சொல்கிறேன். சமத்துவத்தை ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட திட்டம் அது. காலத்திற்கு ஏற்றவாரு மாற்றம் கொண்டு வரப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும்.
இட ஒதுக்கீட்டால் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டவர்கள் பலர். அவர்களை அப்படியே தூக்கிட்டு புதுசா வரவனுக்கு இடம் கொடுக்கணும். இல்லைனா அதே கூட்டம் எல்லா இடத்துலயும் சலுகையை அனுபவிச்சிட்டு இருக்கும். இந்த இட ஒதுக்கீட்டுமுறை முதலில் வந்தவனை மட்டுமே வாழ வைக்கிறது. விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன மாதிரி முதல்ல விழிச்சிக்கிட்டவனுக்கு மட்டுமே திரும்ப திரும்ப பலனளிக்கிறது. ஒரு தலைமுறை பின்னாலிருக்கும் கூட்டத்திற்கு வழி அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. அந்த வழியை ஏற்படுத்தி அனைவருக்கும் பலனளிக்கும் ஒரு திட்டமாக மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.
இது சும்மா கொசுறு:
இப்ப பார்த்தீங்கனா, யாரும் சமுதாய சம நிலைக்காக வாழ நினைப்பதில்லை. எந்த தொழிலில் பணம் கிடைக்கிறதோ அதில் நுழையவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள். எந்த ஆசிரியரும் தன் பிள்ளைகள் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. அனைவரும் ஒரு இஞ்சினியராகவோ, டாக்டராகவோ அல்லது MBAவோ படித்து பணம் சம்பாதிக்கவே ஆசைப்படுகிறார்கள். இது தான் உண்மையும் கூட. ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரென்றால், அவன் நன்றாக படிக்காத நிலைமையில் மட்டும் தான். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க ஒரு திட்டம் இருப்பது எவ்வளவு சரியென்று நாம் யோசிக்க வேண்டும்.
அடுத்து ஒரிசால கேக்கல, பிகார்ல கேக்கல நீங்க மட்டும் ஏன் இட ஒதுக்கீடு கேக்கறீங்கனு கேக்கறவங்களுக்கு. அங்க அவங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் இருக்கறதே தெரியுமானு தெரியல. நான் இது வரைக்கும் ஒரு 300 - 400 வட இந்திய பசங்களை பார்த்திருக்கேன். பெரும்பாலும் எல்லாம் FC தான்.
அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.----------------------------------------------------------------------------------------
5. நீங்கள் எழுதுவதெல்லாம் கற்பனை கதையா இல்லை சொந்த கதைகளா? அப்படி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இது தெரியுமா?என்னை முதன்முதலில் கதை எழுத தூண்டியது நீங்களும், கப்பியும் தான். சும்மா முயற்சி செய்னு நீங்க சொல்ல போக நான் அப்படியே செஞ்சி பார்த்தேன். ஓரளவு க்ளிக்காகிடுச்சி.
கதை எல்லாமே கற்பனை தான். கோழி காமெடி மட்டும் தான் உண்மை. அதிலும் எது எது உண்மை என்று அங்கங்கே சொல்லி விட்டேன். அவனுக்கு அது நன்றாக தெரியும் :-).
-------------------------------------------------------------------------------------
நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!