தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, April 14, 2007

நாகர்கோவில் - வலைப்பதிவர் சந்திப்பு

அன்பு வலைப்பதிவர்களுக்கு!
"சற்றுமுன்" திரு.சிறிலலெக்ஸ் அவர்கள் கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தற்பொழுது நாகர்கோவில் வந்திருப்பதாகவும், திரு.மா.சிவக்குமார் அவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதாகவும் மதியம் 1 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்(எப்போதும் இங்கு போராட்டங்கள் மட்டுமே நடக்கும்) சந்திப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்தார். நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது! நாகர்கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டி இந்தப் பதிவு.

தொடர்புகொள்ள: சிறில் அலெக்ஸ் - (9444846025)



அன்புடன்...
சரவணன்.

12 comments:

உங்கள் நண்பன்(சரா) said...

என்னால் பதிவிடமுடியாமல் தங்களிடம் உதவிகேட்டேன்! பதிவிட்டு உதவியமைக்கு நன்றி பாலாஜி! பதிவர்களுடனான முதல் சந்திப்பு, எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்!

தொடர்புக்கு:
சிறில் அலெக்சின் செல்பேசி எண்: 9444846025
மா. சிவகுமாரின் செல்பேசி எண்: 9884070556

அன்புடன்...
சரவணன்.

வெட்டிப்பயல் said...

என்ன சரா நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு... மேட்டரே டைப் பண்ணி கொடுத்துட்ட...

உனக்காக ஒரு பதிவு போட மாட்டனா??/

அனைவரையும் விசாரித்ததாக கூறவும்...

உங்கள் நண்பன்(சரா) said...

இல்ல பாலாஜி! நீ நல்ல எண்ணத்தில் தான் உதவினாய் ஆனால் நமது சில "நல்ல" நண்பர்கள் வந்து உன்னிடம் , பாரு அவனுக்கு ஆணி அதிகம் அதான் நீ வெட்டியாய் இருப்பாய்னு உங்கிட்ட கொடுத்து பதிவெழுதவிட்டுடான்னு போட்டுக் கொடுப்பாய்ங்க நம்ம சங்கத்துப் பயகலப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன?அதான் முன்னெச்சரிக்கையாக அந்த டிஸ்கி பின்னூட்டம்

//அனைவரையும் விசாரித்ததாக கூறவும்... //

கண்டிப்பாக அனைவரிடமும் நீ விசாரித்ததாக சொல்லிவிடுகிறேன்!

கதிர் said...

//இல்ல பாலாஜி! நீ நல்ல எண்ணத்தில் தான் உதவினாய் ஆனால் நமது சில "நல்ல" நண்பர்கள் வந்து உன்னிடம் , பாரு அவனுக்கு ஆணி அதிகம் அதான் நீ வெட்டியாய் இருப்பாய்னு உங்கிட்ட கொடுத்து பதிவெழுதவிட்டுடான்னு போட்டுக் கொடுப்பாய்ங்க நம்ம சங்கத்துப் பயகலப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன?அதான் முன்னெச்சரிக்கையாக அந்த டிஸ்கி பின்னூட்டம்//

தோணலன்னாலும் தோணவச்சிடுவாங்க போலருக்கே!

சத்தியமா பதிவ படிச்சிட்டு சரா சொல்ற மாதிரி நினைக்கவே இல்ல.
சரா ஒருவேளை உள்குத்து வச்சி சொல்றிங்களோ!

நல்லா சந்திங்க சாமிகளா...

நாகை சிவா said...

சரா,
ரொம்ப பெரிய மக்கள் மீட் பண்ண போற, சைலண்டாவே இரு!

நாகை சிவா said...

//நீ நல்ல எண்ணத்தில் தான் உதவினாய் ஆனால் நமது சில "நல்ல" நண்பர்கள் வந்து உன்னிடம் , பாரு அவனுக்கு ஆணி அதிகம் அதான் நீ வெட்டியாய் இருப்பாய்னு உங்கிட்ட கொடுத்து பதிவெழுதவிட்டுடான்னு //

இது உண்மை இல்லைனு சொல்ல வறீயா! ஏதாச்சும் நம்புற மாதிரி சொல்லு சரா.... நீ எப்ப எங்க என்ன நினைப்ப எங்களுக்கு தெரியாதா என்ன?

நாகை சிவா said...

//எப்போதும் இங்கு போராட்டங்கள் மட்டுமே நடக்கும்//

என்ன ஒரு உள்குத்துடா!

ALIF AHAMED said...

//

வெட்டிப்பயல் said...
என்ன சரா நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு... மேட்டரே டைப் பண்ணி கொடுத்துட்ட...

///

மேட்டரை டைப் பன்ன நேரம் இருக்கும் போது அதை பதிவில் ஏற்ற நேரமில்லை என்னும் போது வெட்டி யை எதிலோ மாட்டிவிட பாக்குறனு தெரியுது ம் வெட்டி அவ்வளவு நல்லவனா நீ ....????



(ஏதோ நம்மலால முடிஞ்சது...::) )

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலாஜி.
பதிவாளர்கள் சந்திப்பு நல்லபடியாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.
விவரங்களையும் பதிவிடும் பொட்து படிக்க வெகு சுவையாக இருக்கும்.
உங்கள் நண்பனுக்கும் உங்களுக்கும் எல்லாப் பதிவாளர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வெட்டிப்பயல் said...

//உங்கள் நண்பன் said...

இல்ல பாலாஜி! நீ நல்ல எண்ணத்தில் தான் உதவினாய் ஆனால் நமது சில "நல்ல" நண்பர்கள் வந்து உன்னிடம் , பாரு அவனுக்கு ஆணி அதிகம் அதான் நீ வெட்டியாய் இருப்பாய்னு உங்கிட்ட கொடுத்து பதிவெழுதவிட்டுடான்னு போட்டுக் கொடுப்பாய்ங்க நம்ம சங்கத்துப் பயகலப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன?அதான் முன்னெச்சரிக்கையாக அந்த டிஸ்கி பின்னூட்டம்
//
எவனும் சிந்திக்கலைனாலும் நீயே எடுத்து கொடு...

// //அனைவரையும் விசாரித்ததாக கூறவும்... //

கண்டிப்பாக அனைவரிடமும் நீ விசாரித்ததாக சொல்லிவிடுகிறேன்! //
ரொம்ப டாங்கிஸ்...

வெட்டிப்பயல் said...

//
மேட்டரை டைப் பன்ன நேரம் இருக்கும் போது அதை பதிவில் ஏற்ற நேரமில்லை என்னும் போது வெட்டி யை எதிலோ மாட்டிவிட பாக்குறனு தெரியுது ம் வெட்டி அவ்வளவு நல்லவனா நீ ....????//

வா மின்னலு...
ரொம்ப நாள் ஆச்சி உன்ன பார்த்து...

நல்லவனா இருந்தே பழக்கமாயிச்சி... என்ன பண்ண???

வெட்டிப்பயல் said...

//வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலாஜி.
பதிவாளர்கள் சந்திப்பு நல்லபடியாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.
விவரங்களையும் பதிவிடும் பொட்து படிக்க வெகு சுவையாக இருக்கும்.
உங்கள் நண்பனுக்கும் உங்களுக்கும் எல்லாப் பதிவாளர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி வல்லியம்மா...

தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வாண்டூஸ்கும் சொல்லிடுங்க...