கவிதை எனக்குப் புரியாத ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்பதைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.
அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஃபோர் ஃபைவ் சிக்ஸ்
குட்டிசுவற்றில் அமர்ந்து
கடக்கும் ஃபிகர்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்த இளைஞன்.
வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.
பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.
கடக்கின்றன ஃபிகர்கள்.
இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருபத்தி ஒன்றுக்காக
காத்திருக்கிறேன் நான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அவனும்... நானும்
வகுப்பறையில் அவனுக்கு
ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று
தலையை நிமிர்த்தி
பார்க்கிறான் அவன்.
எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
தலையை டேபிளில்
சாய்க்கிறேன் நான்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கடைசி கவுஜைக்கு கொஞ்சம் நிறைய யோசிக்க வேண்டியதா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்கலாம்.