"ரவி எழுந்திரிடா. எழுந்திரிச்சி இந்த பேப்பர் பாரு"
"என்னடா? இது சாயந்திரமா காலைலயா? மணி என்ன?"
"இது காலைல ஏழு மணி. முதல்ல கண்ணை திற. இந்த பேப்பரை பாரு"
"என்ன போட்டிருக்கு?"
"தினேஷ் ஒருத்தனை கொன்னுட்டாரு. அவரையும் யாரோ கொன்னுட்டாங்க. தினேஷை கொன்னவனை போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவன் எல்லாத்தையும் சொல்லிட்டான். உடனே அவுங்க ஃபோன் பண்ணி வெற்றியையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க போல. பெரிய கவர் ஸ்டோரியா Times of Indiaல முதல் பக்கத்துல வந்திருக்கு?"
"எப்ப?"
"இரு நான் இன்னும் முழுசா படிக்கலை"
"சீக்கிரம் படி"
இதாங்க விஷயம் அதுல போட்டிருந்தாங்க. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏமாற்றி வேலைக்கு சேர்ந்த பெண்களை ஒரு கும்பல் பயமுறுத்தி காசு பறித்தது. மேலும் பல தவறான விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று அவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் இருவர் மரணமடைந்தனர். ஒருவரை அருகிலிருந்த மக்கள் பிடித்து கொடுத்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்த அவர்களுடைய கூட்டாளி வெற்றி என்பவர் கைது செய்யப்பட்டார். வெற்றியும், கொலை செய்யப்பட்ட தினேஷும் அந்த பெண்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்டில் பணி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இன்ஸ்டிடியூட் மொத்தமும் சீல் வைக்கப்பட்டது. அங்கே படித்த மாணவர்களிடமும் போலிஸ் விசாரணை செய்தது.
அங்கே படித்து வேலைக்கு சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பற்றிய தகவலை போலிஸ் வெளியிட மறுத்து விட்டது. அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடமும் போலிஸ் அவர்களை விசாரிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளது.
அதே பக்கத்துல சாப்ட்வேர் கம்பனி HR நிறைய பேர் பேட்டி கொடுத்திருக்காங்க. இந்த Fake பிரச்சனையை எப்படி எதிர் கொள்றதுனு எல்லாரும் இன்னைக்கு பேச போறதா சொல்லியிருக்காங்க. இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகும்னு யாரும் நினைச்சி பார்க்கலனு சொன்னாங்க.
"ரவி. இதெல்லாம் இருக்கட்டும், நேத்து சாயந்திரம் வரும் போது நீ தூங்கிட்டு இருந்த. ராத்திரி எழுப்பி பார்த்தோம், அப்பவும் அடிச்சி போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. என்ன ஆச்சு?"
"ஓ. எனக்கு இப்ப தான் ஞாபகமே வருது. நேத்து மதியமே நான் இன்ஸ்டிடியூட்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன். தினேஷ் என்கிட்ட CD கொடுக்காம ஏமாத்திட்டு போயிட்டான். எனக்கு என்ன பண்றதுனு தெரியல. மொதல்ல அவன் அந்த குமார்கிட்ட தான் போய் மீதி CD எல்லாம் வாங்குவானு யோசிச்சி வேகமா வீட்டுக்கு வந்து அந்த Caller ID spoofing சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண ஃபோன்ல இருந்து குமாருக்கு ஃபோன் பண்ணேன். அப்ப கரெக்டா தினேஷ் அங்க தான் இருந்தான். அவன்கிட்ட CD கொடுக்க வேண்டாம்னு சொன்னேன். அவன் சரினு சொன்னான். எனக்கு அதுக்கு அப்பறம் என்ன பண்றதுனு தெரியாம யோசிச்சிட்டே இருந்தேன்"
"அப்படியே தூங்கிட்டியா?"
"இல்லை. திடீர்னு நித்யா ஃபோன் பண்ணி, அவளை யாரோ பொண்ணு பார்க்க வராங்க, உடனே கிளம்பி வானு வீட்ல சொன்னாங்கனு சொன்னா. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அவளுக்கும் என்னனு புரியல. உடனே கிளம்பிட்டா. எனக்கு எதுவுமே யோசிக்க முடியல. ஏதோ யோசிச்சிட்டே இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன். பத்து பதினைஞ்சி நாளா சரியா தூக்கமில்லை. அதான் அப்படியே தூங்கிட்டேன்"
"ஹிம்ம்ம்... அப்ப நீ ஃபோன் பண்ணும் போது அந்த குமாரும், தினேஷும் உயிரோட இருந்துருக்காங்க."
"ஆமாம். ஒரு வேளை நான் ஃபோன் பண்ணதால தான் அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு செத்துட்டாங்களோ?"
"டேய், நீ ஏன் டென்ஷனாகற. வீ ஆர் ஜஸ்ட் ய டூல். அவனுங்க என்ன என்ன தப்பு பண்ணாங்களோ. அந்த CDக்காக ரெண்டு உயிர் போயிருக்குனா அதுல என்னவெல்லாம் இருக்குதோ. அவனுங்க இதுக்கு முன்னாடி யாரையாவது கொன்னு கூட இருக்கலாம். நீ டென்ஷனாகாத. நம்ம எதுவும் தப்பு பண்ணல"
"இருந்தாலும்.. இப்ப எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஒரு வேளை நாம முன்னாடியே போலிஸ்ல போயிருந்தா, இப்படியெல்லாம் ஆகாம இருந்திருக்குமோ?"
"இங்க பாரு. எதுவும் நம்ம கைல இல்லை. அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு தண்டனை. அவ்வளவு தான். நீ முதல்ல எழுந்து குளிச்சிட்டு வா. நம்ம ஆபிஸ் போவோம். இன்னைல இருந்து ஒழுங்கா வேலை பார்க்கலாம். எந்த டென்ஷனும் வேண்டாம். முன்ன மாதிரியே சந்தோஷமா இருக்கலாம். சரியா?"
"ஹும்ம்ம்"
ஒரு வேளை நான் பண்ண தப்பால தான் நித்யா என் வாழ்க்கைல இருந்து இவ்வளவு சீக்கிரம் போறாளோ???
அடுத்த நாள் முழுக்க எல்லா பேப்பர்லையும் இதை பத்தி தான் பேசிக்கிட்டாங்க. இந்த பிரச்சனையை தீர்க்க சாப்ட்வேர் கம்பெனி எல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாங்க. இனிமே எந்த இயர் பாஸ் அவுட்டா இருந்தாலும் ஃபிரெஷ்ஷரா எடுத்துக்குவோம். அதே மாதிரி ஜாவா, டாட் நெட், மெயின் ஃபிரேம்னு கோர்ஸ் போறவங்களை அந்த குறிப்பிட்ட ஃபீல்ட்ல இண்டர்வியூ பண்ணி எடுத்துக்குவோம். ஆனா அவுங்களை ஃபிரெஷ்ஷரா தான் சேர்த்துக்குவோம். அவுங்களை அந்த ட்ரெயினிங்கு ஏத்த மாதிரி ப்ராஜக்ட்ல போட்டுடுவோம்னு சொல்லி எல்லா கம்பெனிகளும் சொல்லிட்டாங்க.
அப்பறம் TCS, Infosys, Wipro, Satyam எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணியிருக்காங்க. அதுல எல்லா சாப்ட்வேர் கம்பெனிங்களும் அவுங்க எம்ப்ளாயூ இன்ஃபர்மேஷனை ரெஜிஸ்டர் பண்ணனும். ஒவ்வொரு சாப்ட்வேர் இஞ்சினியருக்கும் ஒரு நம்பர் தரப்படும்னும் இனிமே இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணும் போது ரெஸ்யூமேல அந்த நம்பரும் கொடுக்கனும்னு சொல்லிட்டாங்க. அதனால இப்ப இருக்கற எல்லாருக்கும் ஒரு நம்பர் தருவாங்க. அது கடைசி வரைக்கும் மாறவே மாறாது. அமெரிக்கால சோஷுயல் செக்கியூரிட்டினு ஒரு நம்பர் இருக்குமாம். அதே மாதிரியே சாப்ட்வேர் இஞ்சினியர் நம்பர்னு ஒண்ணு கொடுத்துடுவாங்க.
அதனால எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத யாரும் அவ்வளவு சீக்கிரம் ஃபேக் போட்டு வர முடியாது. அதே சமயம், quantitative aptitude, Shakuntula Devi இதெல்லாம் படிக்க விருப்பமில்லாதவங்க ஏதாவது கோர்ஸ் போயிட்டு அது மட்டும் அட்டெண்ட் பண்ணி போகலாம்.
முடிஞ்ச வரைக்கும் கம்பெனி எல்லாம் இறங்கி வந்திருக்காங்க. பார்க்கலாம், இதுல எப்படி நம்ம ஆளுங்க ஏமாத்தறாங்கனு.
......
என்னடா காலங்காத்தால ஆபிஸ் போகாம வேற பக்கம் போயிட்டு இருக்கனு பாக்கறீங்களா? நித்யா ஊர்ல இருந்து வந்துட்டேனு ஃபோன் பண்ணா. நான் தான் உடனே கிளம்பி வரேனு சொல்லிட்டு கிளம்பிட்டேன். ரெண்டு நாளா சரியா வேலையே செய்ய முடியலைங்க. சும்மா அவளை பார்த்துட்டாக்கூட போதும். போய் நல்லா வேலை செய்யலாம்னு தோனுது. அதான் கிளம்பிட்டேன்.
வழியிலயே வினோதினி அக்காவும், வினிதாவும் போயிட்டு இருந்தாங்க. வினிதா ஏதோ இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண போறா போல. அனேகமா வினோதினி அக்கா யார் மூலமாவது ரெஃபரன்ஸ் பிடிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்.
நித்யா குளிச்சிட்டு ஃபிரெஷ்ஷா இருக்குறா. தூக்க கலக்கத்துல இருப்பானு நினைச்சேன்.
"என்னாச்சு?"
"எல்லாம் நல்ல படியா முடிஞ்சிது"
"ஏன் இவ்வளவு அவசரம்?"
"ஜெர்மனில இருக்காராம். விப்ரோல வேலை பார்க்கறாராம். ரெண்டு வாரம் வெக்கேஷன்ல வந்திருக்கார். அதான் உடனே கிளம்பி வர சொல்லிட்டாங்க"
"ஹிம்ம்ம்... எப்ப கல்யாணம்?"
"தெரியல"
"ஜெர்மனி போறயா?"
"அப்படி தான் நினைக்கிறேன். பார்க்கலாம். எல்லாம் நல்ல படியா முடியனுமில்லை"
"ஹிம்ம்ம்"
"அது சரி. நான் தான் ரோமிங்ல இருக்கனு தெரியுது இல்லை. அப்பறம் எதுக்கு நான் சாப்பிட்டுட்டேன், நீ ஒழுங்கா சாப்பிடுனு ரெண்டு நாளா மெசேஜ் பண்ணிட்டே இருந்த? உன்னால இருபது ரூபாய் தண்டம்"
"நீ தானே மெசேஜாவது அனுப்புனு கெஞ்சின"
"நான் கெஞ்சினனா? சும்மா சொன்னேன். நீ சீரியசா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண?"
"சரி. நான் கிளம்பறேன்"
என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது.
"இரு. இப்ப போய் என்ன பண்ண போற? உனக்கு என்ன வேலையா இருக்கு? என் கூட கொஞ்ச நேரமிறேன்"
எப்படி மனசாட்சி இல்லாம சொல்றா பாருங்க.
"உன் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா இப்ப என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. ப்ளீஸ் நான் கிளம்பறேன்"
"என்ன சொன்ன? திரும்ப சொல்லு"
"நான் எதுவும் சொல்லல. நான் கிளம்பனும்"
"ரவி. என்ன சொன்ன? என் முகத்தை பார்த்து சொல்லு"
"நான் எதுவும் சொல்லலைனு சொன்னேன் இல்லை"
"நிஜமா நீ எதுவும் சொல்லல. என் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு ஆசைப்பட்டேனு சொல்லல? பொய் சொல்லாத"
"ஆமாம் சொன்னேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ இல்லாம இருக்க முடியுமானு தெரியலை. இந்த ரெண்டு நாள்ல மத்த எந்த விஷயத்தையும் யோசிக்க விடாம என் மனசு முழுக்க நீ தான் ஆக்ரமிச்சிட்டு இருந்த. இப்ப என்னனா என்னை விட்டுட்டு போறனு சொல்ற. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் நித்யா. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை?"
நித்யா கண்ணும் கலங்கிருக்கு...
"எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையாங்கறது முக்கியமில்லை. உனக்கே எதுவும் வேலையில்லை. உன்னை எப்படி எங்க அப்பா, அம்மா நம்புவாங்க? அதை யோசிச்சியா ரவி?"
"எனக்கு வேலையில்லைங்கறது தான் பிரச்சனையா? அப்படினா நான் இப்ப உன்கிட்ட உண்மையை சொல்றேன். நான் கூகுள்ல வேலை செய்யறேன். மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ். நான் இப்ப எந்த நாட்டு கம்பெனில இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாலும் எடுத்துக்குவாங்க. உங்க வீட்ல பயப்பட வேண்டாம்னு சொல்லு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவனு சொல்லு"
"என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது. அதிர்ச்சில ஏதாவது மூளை குழம்பிடுச்சா?"
"சத்தியமா நான் கூகுள்ல தான் வேலை செய்யறேன். இங்க பாரு என் ஐடி கார்ட்"
"அப்ப என்கிட்ட இத்தனை நாள் பொய் சொல்லிருக்க? அப்படி தானே?"
"நீ என்கிட்ட நாலு வேலை கிடைச்சிதுனு ஏமாத்தின, நான் பதிலுக்கு பண்ணேன். உன்கிட்ட உண்மையை சொல்லனும்னு நிறைய தடவை முயற்சி பண்ணேன். ஆனா வாய்ப்பு கிடைக்கல. அந்த பிரச்சனைல நான் இதை மறந்திட்டேன். ஐ அம் ரியலி சாரி"
"சரி இப்ப நீ என்னை நிஜமா காதலிக்கறனு நான் நம்பனும்னா நான் என்ன பண்ண சொன்னாலும் பண்ணுவியா?"
"மாட்டேன். இது வரைக்கும் நான் உன்கிட்ட பழகின விதத்துல உனக்கு ஏன் மேல நம்பிக்கை வரலனா, இனிமேலும் வர வேண்டாம்"
"போடா" சொல்லிவிட்டு கன்னத்தில் அறைந்தாள்.
"இப்படி பேசி பேசியே என்னை மயக்கிட்டியேடா"
"என்ன? நான் உன்னை மயக்கினனா?"
"ஆமாம். உன் கூட ஒரு நாள் கூட பேசலைனா என்னால நார்மலா இருக்க முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நீ சாப்பிட்டயா சாப்பிடலயானு தெரியாம என்னால சாப்பிட கூட முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நான் அன்னைக்கு சொன்னப்ப அதை கூட புரிஞ்சிக்காம உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொல்ற. உனக்கு மனசாட்சியே இல்லைனு நினைச்சிக்கிட்டேன்"
"லூசு. நான் உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொன்னேன். என்ன கொடுப்பானு சொன்னனா? எப்படியும் நான் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேங்கற தைரியத்துல சொன்னேன்"
"சரி அப்படி என்ன கொடுப்ப?"
"வேணும்னா இப்ப கொடுக்கவா"
"ஏய். பக்கத்துல வராத. யாரும் இல்லாத வீட்ல வந்து இப்படி ஒரு சின்ன குழந்தைக்கிட்ட தப்பா பண்றியே. போ. தள்ளி போ"
"ஐய்யோ... அடிப்பாவி. நான் உன்னை தொட்டனா? பக்கத்துல வரதுக்கே இந்த மொத்து மொத்தற. கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு இருக்கு. ஆ. இதை மறந்துட்டனே. என்னை பிடிச்சிருந்தும் எனக்கு வேலை இல்லைனு நீ வேற ஒருத்தனை பார்த்துட்டு ஓகே சொல்லிட்டு வந்திருக்க இல்ல"
"உனக்கு எல்லாம் எவன் வேலை கொடுத்தான்? நீ வினோதினி அக்காகிட்ட சொன்னா எனக்கு விஷயம் வராம போயிடுமா?"
"அடிப்பாவி. உனக்கு தெரியுமா? இதுக்கு தான் பொண்ணுங்ககிட்ட ரகசியம் சொல்ல கூடாதுனு சொல்லியிருக்காங்க போல"
"நீ சொன்ன அடுத்த நாளே அந்த அக்கா என்கிட்ட சொல்லிட்டாங்க"
"அப்ப இப்ப பொண்ணு பாக்கறது எல்லாம் ட்ராமாவா?"
"இல்லை. அது உண்மை. ஆனா போய் எனக்கு விருப்பமில்லைனு சொல்லிட்டு வந்துட்டேன். நம்ம விஷயத்தை என் அண்ணிகிட்டயும் லைட்டா சொல்லிட்டு வந்திருக்கேன். ஹெல்ப் பண்றேனு சொல்லியிருக்காங்க"
"எப்படி அவ்வளவு தைரியமா சொல்லிட்டு வந்த? நான் உன்னை ப்ரபோஸ் பண்ணலைனா?"
"நீ பண்ணுவனு எனக்கு தெரியும்"
"ஹிம்ம்ம்"
"அப்பறம் பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சினு வினோதினி அக்கா சொன்னாங்க"
"ஆமாம். ஆனா என்னால தான் ரெண்டு உயிர் போச்சுனு எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு"
"இல்லை ரவி. உன்னால நிறையா நல்லது நடந்திருக்கு. இந்த பூமிக்கு எந்த உயிர் வரணும், எந்த உயிர் போகனும் எப்பவோ முடிவு பண்ணியாச்சு. அது நம்ம கைல இல்லை"
"ஹிம்ம்ம்... இருந்தாலும் எனக்கு மனசுல ஒரு வருத்தம் இருந்துட்டே இருக்கு"
"கவலைப்படாத. நான் உன் கூட இருக்கேன்"
"நித்யா, உன் கையை நான் கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறதா? எனக்கு ஏதோ ரொம்ப பாதுகாப்பா இருக்கற மாதிரி இருக்கும்"
என்னங்க இதுக்கு போய் முறைக்கிறா?
"சரி முறைக்காத. நான் கேக்கல"
"கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறனு சொல்ற? இந்த வாழ்க்கை முழுக்க பிடிச்சிக்கறனு சொல்லு" கையை நீட்டினாள்...
"வாழ்க்கை முழுக்க பிடிச்சிருந்தா வலிக்காது?"
""
"ஐய்யோ நான் விளையாட்டுக்கு சொன்னேன்... அடிக்காத அடிக்காத"
(ஆடு புலி ஆட்டம் முடிஞ்சிது... இங்க வேற ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி. நாம நடையை கட்டுவோம்)