தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, June 25, 2010

வெட்டிப் பேச்சு - 25-Jun-10

பதிவு எழுதி எவ்வளவு நாளாச்சு. பதிவு எழுதாம சும்மா இருக்கறதும் ஒரு சுகம் தான்.

போன வருடம் இறுதியில் என் வலைப்பதிவில் ஏதோ வைரஸ் பிரச்சனை. பார்த்தால் தமிலிஷ் லிங் கொடுத்திருந்ததால் என்று தெரிந்தது. அப்படியே டெம்ப்ளேட் மாற்றி விட்டுவிட்டேன்.

ப்ராஜக்ட் முடிந்து இந்தியா சென்று இரண்டு மாதங்களாக இணையப் பக்கம் வராமல் இருந்தேன். அந்த நேரத்தில் vettipaiyal.com, vvsangam.com வலைத்தளங்களுக்கான ரினிவல் மெயில்கள் வந்திருக்கின்றன. அதைத் தவற விட்டுவிட்டேன். அதனால் மறுபடியும் ப்ளாகருக்கே வந்துவிட்டேன்.

மார்ச் முதல் வாரத்தில் மறுபடியும் ஆன் சைட் வந்துவிட்டேன். இந்த முறை ரோட் ஐலாண்ட் என்னும் மாநிலம். அமெரிக்காவில் மிக சிறிய மாநிலம் அது தான். வீட்டின் மிக அருகிலே கடற்கரை. ஆனால் குளிர்காலமாக இருந்ததால் அதிகமாக செல்ல முடியவில்லை.

பிறகு வேலை மாற்றம். ஆறரை ஆண்டுகளாக வேலைப் பார்த்த நிறுவனத்தில் இருந்து சில சொந்த காரணங்களுக்காக வேலை மாற வேண்டி வந்தது. மிகவும் கடினமான முடிவுதான். நிறைய சிந்தனைகளுக்குப் பிறகு மாறினேன்.

தற்பொழுது நியூ யார்க்கில் வேலை. தினமும் மதியம் வெளியே தான் சாப்பிடுகிறேன். சப், பீசா ஏதாவது வாங்கி எடுத்துக் கொண்டு, சுதந்திர தேவி சிலைக்கு செல்லும் படகு சவாரிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து குளிர்ந்த காற்றையையும், கடல் அலையையும் ரசித்த படி சாப்பிட்டு வருகிறேன்.

தினமும் இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். அது தான் க‌டின‌மாக‌ இருக்கிற‌து.

இர‌ண்டு முறை ப‌திவ‌ர் ஸ்ரீத‌ர் நாராய‌ண‌னை ச‌ந்தித்தேன். அருமையான‌‌ க‌தைக்க‌ள‌ன்க‌ளுட‌ன் கதைகளைச் சொன்னார். எப்பொழுது எழுதுவார் என்று காத்திருக்கிறேன்.

நானும் ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். எங்கே என் கதையை நானே காப்பி அடிக்கிறேன் என்று யாராவது பிரச்சனை செய்வார்களோ என்று பயத்தால் நிறுத்திவிட்டேன். ப‌ய‌ம் தெளிந்த‌வுட‌ன் அதை எழுதி முடித்து ப‌திவிடுகிறேன்.

மேலும் அறிவு ஜீவி ச‌மூக‌த்திற்கு அடியேனின் வேண்டுகோள். என் ப‌திவு என்னைப் போன்ற‌ மொக்கைக‌ளுக்காக‌த் தான். இல‌க்கிய‌ம் வேண்டுமென்றால் பிராஜ‌க்ட் ம‌துரையில் (http://projectmadurai.org/) நிறைய‌ இருக்கிற‌து. எடுத்து ப‌டித்துக் கொள்ள‌வும்.

Wednesday, September 30, 2009

உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி

உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.

இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.

இப்ப‌ அந்த‌ சாமானிய‌ன் ரோலை இளைய‌ த‌ள‌ப‌தி டாக்ட‌ர் விஜ‌ய் செய்திருந்தா எப்ப‌டி இருந்திருக்கும்...

அவ‌ர் கைல‌ விதவித‌மா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவ‌ர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.

அடுத்து மார்க்கெட்ல‌ அவ‌ர் காய் வாங்க‌ போகும் போது ஒரு குழ‌ந்தை மேல‌ த‌க்காளி விழ‌ போகுது. அதை அவ‌ர் நாலு கிலோமீட்ட‌ர் தூர‌த்துல‌ இருந்து பார்க்க‌றாரு. அப்ப‌டியே அங்க‌ இருந்து ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்து வ‌ந்து அந்த‌ த‌க்காளியை எட்டி உதைச்சி, அந்த‌ குழ‌ந்தையைக் காப்பாத்த‌றாரு. இப்ப‌ அந்த‌ குழ‌ந்தை ஆச்ச‌ரிய‌மா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்ப‌டியே சிரிக்குது. இப்ப‌ தான் டாக்ட‌ர் முக‌த்தையே காட்ட‌றோம். இது தான் இண்ட்ரோ.

உட‌னே அங்க‌ ஒரு குத்துப் பாட்டு. டாக்ட‌ர் கை வைக்காத‌ க‌ருப்பு க‌ல‌ர் ப‌னிய‌ன் போட்டு ஆட‌றாரு. அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு. அந்த‌ குத்து பாட்டு முடியும் போது, அங்க‌ ஒருத்த‌ன் ஒரு பொண்ணு இடுப்புல‌ கை வைக்க‌றான். உட‌னே ஒரு ஃபைட். அவ‌னுக்கு துணையா ஆயிர‌ம் பேர் ட்ரெயின்ல வ‌ராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்ட‌ர் அடிச்சி பிரிச்சி மேய‌ராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.

இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.

விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!

லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?

விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)

லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற‌ ஒரே ஆள் நீ தான்.

விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்...

..........

இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?

ம‌ : ஹ‌லோ க‌மிஷ்ஷ்ஷ்ன‌ர் இருக்காரா? நான் தான் காஆம‌ன் மேன் பேச‌றேன்.

ச‌ : டேய் ம‌ண்டையா. நீ காம‌ன் மேனாடா. வேணும்னா டாப‌ர் மேனு சொல்லு. அந்த‌ நாயே வ‌ந்து உன் த‌லையை ந‌க்கி பாத்துட்டு செத்து போயிடும்.

ம‌: க‌மிஷ்ன‌ர்.. நாஆன் இந்த‌ ஊரை சுத்தி பாஆம் போட‌ போறேன்.

ச‌ : ஏன்டா. எவ‌னோ காக்காக்கு வெச்சிருந்த‌ ம‌சால் வ‌டையை எடுத்து தின்ன‌து இல்லாம‌ பாம் போட‌ போறேனு என‌க்கே ஃபோன் ப‌ண்ணி சொல்றியா? நீ சாதார‌ண‌மா போட‌ற‌ பாமே தாங்காது. இதுல‌ க‌ட‌லைப் ப‌ருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப‌ நான் என்ன‌ ப‌ண்ணுவேன்.

ம‌ : நான் ஊருக்குள்ள பாம் போடாம‌ இருக்க‌ணும்னா நீங்க‌ நாலு தீவிர‌வாதியை ரிலீஈஈஸ் ப‌ண்ண‌னும்.

ச‌ : நாங்க‌ தீவிர‌வாதியை ரிலீஸ் ப‌ண்றோம்.. அது வ‌ரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் ப‌ண்ணாம‌ இரு.

பாருங்க‌ ம‌க்க‌ளே. ஒரு க‌மிஷ்னர் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை ச‌மாளிக்க‌ வேண்டிய‌து இருக்குனு.

.........

சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

வ‌ண‌க்க‌ம். Gummisioner, நான்... Gaaman man பேசறேன்.
ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.

ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.
ஏ நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...

ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர். க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...

டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.

க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.
கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?

Wednesday, July 08, 2009

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

கவிதை எனக்குப் புரியாத‌ ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்ப‌தைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

குட்டிசுவற்றில் அமர்ந்து
கடக்கும் ஃபிகர்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்த இளைஞ‌ன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன ஃபிகர்கள்.

இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவனும்... நானும்

வகுப்பறையில் அவ‌னுக்கு
ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று
தலையை நிமிர்த்தி
பார்க்கிறான் அவன்.

எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
த‌லையை டேபிளில்
சாய்க்கிறேன் நான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

க‌டைசி க‌வுஜைக்கு கொஞ்ச‌ம் நிறைய‌ யோசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்க‌லாம்.

Tuesday, July 07, 2009

பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!

சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.


ஏர்சிம் :


பாட்ஷா ‍..
தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.


மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...


இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வைத்தியக்காரன் :


ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.


'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.


படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், ‍ பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)


படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.


மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.


சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.


................................................


சாதுஷா :


பாட்ஷா அண்ணன்களின் காவியம்.


"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.


இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?


"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இது ஏன் அண்ணன்களின் காவியம்?


எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.


விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.


கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வராதகவுண்டன்:
நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.


....................................................................


காவி.மன்னன் :


பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்


பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.


இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.


வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.


முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


fer0z 9@ndhi :


இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.


...............


புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.

Sunday, July 05, 2009

கசினோவில் காசு சம்பாதிப்பது எப்படி?

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு.

முதல் காரணம், வாழ்க்கைல பெருசா இண்டரஸ்டிங்கா எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் இருந்தா நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கு மொனொடானஸாக வாழ்க்கை இருப்பதால் பெரிதாக பகிர்ந்து கொள்ள எதுவுமில்லை. அடுத்த மாதம் எப்படியும் பர்மிதா பாப்பா இங்கே வந்துவிட்டால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

..............

இந்த ஆறு மாசத்துல நிறைய தடவை கசினோ சென்று வந்துவிட்டேன். அதிகமாக காசு தேத்தவில்லை என்றாலும் பெரிதாக எதுவும் இழக்கவுமில்லை. அங்க எனக்கு பிடித்த விஷயமே அந்த டென்ஷன் தான்.

நான் ரோலே மட்டும் தான் விளையாடுவேன். அதுவும் அவுட்டர்ல வைக்க மாட்டேன். உள்ளே நம்பர்களில் தான் வைப்பேன். ஆனா பல தடவை அவுட்டரில் நான் சொல்லியது வந்துவிடும். குறிப்பாக எந்த பனிரெண்டில் வரும் என்பது. ஒண்ணு வெச்சா மூணு :)

நான் விளையாடும் போது நடந்த சில சுவாரஸியங்கள். நம்ம லிமிட் எப்பவும் இருநூறு டாலர் தான். அதுக்கு மேல நிச்சயம் விளையாட மாட்டேன். ஒரு தடவை நான் விளையாடிட்டு இருக்கும் போது ஒரு வயசான தாத்தா வந்து பக்கத்துல நின்னு ஒரு ரெண்டு ஆட்டம் பார்த்தாரு. அப்பறம் ரெண்டாயிரம் டாலருக்கு சிப் வாங்கினாரு. எல்லாமே ப்ளாக் (100$) சிப். அதை அப்படியே நம்பர்ல பிரிச்சி வெச்சாரு. ஒரு சில நம்பர்ல ஒரு சிப், ஒரு சில நம்பர்ல ரெண்டு சிப் வெச்சாரு.




விளையாட்டு தெரியாதவங்களுக்கு இங்க ஒரு விஷயம் சொல்லிடறேன். ரோலேல மொத்தம் முப்பத்தி எட்டு நம்பர் இருக்கும். 0, 00, 1-36. இதுல நம்பர்ல வெச்சி, வந்ததுனா ஒரு சிப்க்கு முப்பத்தி ஆறு தருவாங்க (வெச்சதையும் சேர்த்து). Odd, Evenல வெச்சா ஒரு டாலருக்கு ரெண்டு. 0-12, 13-24, 24-36ல வெச்சா ஒரு டாலருக்கு மூணு டாலர். அப்படி எல்லாம் Probability பேஸ் பண்ணி தான்.

இப்ப அவர் இருபது சிப் வாங்கி சில, பல நம்பர்ல வெச்சாரு. கடைசியா சுத்தறதுக்கு முன்னாடி, முப்பத்தி அஞ்சில இருந்த ஒரு சிப் எடுத்து முப்பத்தி நாலுல மாத்தினாரு. முப்பத்தி நாலுல ஏற்கனவே ஒரு சிப் வெச்சிருந்தாரு. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்பும் இல்லை. முப்பத்தி நாலுல இருநூறு டாலர் சிப். நான் எப்பவுமே முப்பத்தி நாலுல ஒரு நாலு, அஞ்சி வைப்பேன்.

அவர் முப்பத்தி அஞ்சில இருந்து எடுத்து வெச்சவுடனே எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சி. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்புமே இல்லை. சரினு கடைசி நேரத்துல நான் ஒரு ரெண்டு சிப் எடுத்து முப்பத்தி அஞ்சில வெச்சேன்.

அவர் என்னை பார்த்து சிரிச்சிட்டு, May be I am wrongனு சொன்னாரு. எனக்கும் முப்பத்தி நாலுல வந்தா சந்தோஷம் தான். எல்லாருமே செம டென்ஷன். கடைசியா பார்த்தா முப்பத்தி..... நாலு வந்துடுச்சி... ஒரே கொண்டட்டம் தான். இப்ப அவருக்கு ஏழாயிரம் டாலர் கொடுத்தாங்க.

மறுபடியும் சிங்கம் ரெண்டாயிரம் டாலரோட களம் இறங்குச்சு. மறுபடியும் நிறைய நம்பர்ல ஒரு சிப், சில நம்பர்கள்ல ரெண்டு சிப். அந்த தடவை அவர் ஒரு நம்பர்ல வெச்சிருந்தது வந்துச்சு. இப்ப மூவாயிரத்தி ஐநூறு டாலர் ஜெயிச்சாரு.

அடுத்து மறுபடியும் களம் இறங்கினாரு. இந்த தடவை எதுவும் ஜெயிக்கல. உடனே ஒரு இருநூறு டாலர் டிப் கொடுத்துட்டு கிளம்பிட்டாரு. நான் திக்கி, திணறி நானூறு டாலர் தான் ஜெயிச்சேன்.

இது நடந்தது Foxwoodsல.

..............

போன மாசம் நண்பனை பார்க்க Delaware போயிருந்தேன். உடனே அடுத்த நாள் Atlantic City போகலாம்னு முடிவு பண்ணோம். ஒரு தடவை Atlantic Cityக்கு போய் பயங்கர கஷ்டப்பட்டோம். ஆனா அந்த தடவை மூணு ஆட்டம் தான் ஆடினோம். மூணு தடவையும் ஜெயிச்சோம். அது 0-12, 13-24, 24-36ல வெச்சி ஜெயிச்சது. சீசர்ஸ் காசினோல.

இந்த தடவை தாஜ் மகால் கேசினோ போனோம். மூணு பேரா போனதால விளையாடக்கூடாதுனு முடிவு பண்ணிருந்தேன். ஏன்னா மூணு பேர் போனா விளங்காதுனு ஒரு செண்டிமெண்ட். ஒரு தடவை அப்படி போய் இருநூறு டாலரும் போச்சு. ஆனா உள்ள போனவுடனே என் கண்ணு வழக்கம் போல ரோலே டெபில்ல, முன்னாடி ஜெயிச்ச டேபில் நம்பர் எல்லாத்தையும் நோட் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அதுல ஒரு டேபில்ல எல்லாமே என் நம்பர் தான். நான் எப்பவும் சில குறிப்பிட்ட நம்பர்கள்ல வைப்பேன். அதே நம்பர்ஸ் வந்திருந்தது. உடனே நண்பன்ட ஒரு நூறு டாலர் கடன் வாங்கி களம் இறங்கினேன்.

முதல் ரவுண்ட், 0 வந்து ஆப்பு அடிச்சிது. ஆஹா... ஆரம்பமே அசத்துதேனு தோணுச்சு. ஆனா அன்னைக்கு என்னுமோ நாம இன்னைக்கு நிச்சயம் பணம் விட மாட்டோம்னு மனசுல தோணுச்சு. சரினு அடுத்த ரவுண்ட். மறுபடியும் 0. நிச்சயம் ஆப்பு தானு முடிவாகிடுச்சி. அடுத்து பதினெட்டு. இதுக்கு முன்னாடி நான் இருநூறு தோக்கும் போதும் கடைசியா முடிச்சி வெச்சது பதினெட்டு தான். நூறு டாலர் அவுட். தாஜ் மகால் ராசி இல்லை. ஏன்னா அது அழுவாச்சி மஹால்னு அப்ப தான் தோணுச்சு.

சரி, விட்றா சண்முகம்னு சீசர்ஸ்க்கு கிளம்பினோம். சீசர்ஸ்ல ஏற்கனவே ஜெயிச்ச ஹிஸ்டரி இருக்கு. ஆனா மூணு பேர்ல விளையாடணும்னு வந்த ரெண்டு பேரும் வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு வந்தாங்க. சரி ஏழுரையை எவ்வளவு நேரம் தான் நாமலே சுமக்கறதுனு அவுங்களை களம் இறங்க சொன்னேன். ஒரு நண்பன் சீசர்ஸ்ல ரொம்ப நேரமா விளையாடி நூறு டாலரை விட்டான். அப்ப தான் சரி, ஏழரையை பாஸ் பண்ணியாச்சி, இனிமே நாம களம் இறங்கலாம்னு முடிவு பண்ணேன்.

அப்பறம் சாப்பிட்ட Bally's கசினோ போனோம். ரொம்ப நேரமா சுத்திட்டே இருந்தோம். என் நம்பர்ஸ் வர டேபில் எதுவுமே இல்லை. எல்லாமே பயங்கரமான வேரியேஷன் இருந்தது. கொஞ்ச நேரம் போனவுடனே என் நம்பர் வர டேபில் ஒண்ணு பிடிச்சோம். இந்த தடவை சேஃப் கேம் ஆடணும்னு ஆட்டத்துக்கு இருபத்தி அஞ்சி டாலரா பிரிச்சிக்கிட்டேன்.



முதல் மூணு ஆட்டம் அவுட். கடைசி இருபத்தி அஞ்சி. இந்த இருநூறும் போச்சுனா இதுக்கு மேல கசினோ பக்கமே கால் வைக்க கூடாதுனு முடிவு பண்ணினேன். கடைசியா நான் ரெண்டு சிப் வெச்சிருந்தது வந்தது. எழுபது டாலர். மறுபடி எழுபதையும் உள்ளே வெச்சேன். அது அப்படியே இருநூறுக்கு மேல வந்துடுச்சி. நண்பன், வாடா பாலாஜி கிளம்பிடலாம்னு சொன்னான். நல்ல நேரம் இருக்கும் போது கிளம்பறது முட்டாள் தனம்னு அதிகமா பெட்டிங் ஆரம்பிச்சேன்.

ஒரு ஐநூறு, அறுநூறு டாலர் பக்கம் வந்துடுச்சி. இப்ப தான் சரி, ரிஸ்க் எடுக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த ட்ரிப்புக்கு மொத்த செலவு எவ்வளவோ அதை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன். மீதி ஜெயிச்ச காசு ஒரு நானூறு இருந்தது. அதை ரெண்டா பிரிச்சி ரெண்டு ஆட்டம் வைக்கலாம்னு முடிவு. ஜெயிச்சா லம்பா கிடைக்கும். தோத்தா நஷ்டம் எதுவுமில்லை. ஒரு சில நம்பர்ல இருபது சிப்புக்கு மேல கூட வெச்சேன்.

அஞ்சில வைக்கலாமா ஏழுல வைக்கலாமானு கடைசியா ஒரு குழப்பம். கிட்டதிட்ட பத்து டோக்கன் இருந்தது, ரெண்டிலும் பிரித்து வைத்திருக்கலாம். ஆனா இதுவே ரிஸ்க் எடுக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டு ஆடற கேம். அதனால நோ சேஃப் பெட். ஏழுல வெச்சேன். கரெக்டா அஞ்சு வந்துடுச்சி. சூப்பர்.

அடுத்து கடைசி இருநூறு. இந்த தடவையும் போன முறை மாதிரியே ஹை பெட்ஸ் தான். கடைசியா பதினெட்டுல வந்து நின்னுச்சி. பதினெட்டுல மட்டும் இது வரைக்கும் மூணு தடவை மாட்டி வெளிய வந்திருக்கேன். அப்படி என்னடா இந்த நம்பருக்கும் நமக்கும் எப்ப பார்த்தாலும் தகராறுனு நானும் ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.

என் கூட வந்த நண்பர் ஒருத்தர் விளையாட ஆரம்பிச்சிட்டாரு. அவரு வெளிய ரெட் ப்ளாக்ல விளையாடிட்டு இருந்தாரு. அப்ப ஒரு சிங்கி வந்தாரு. ரெண்டாயிரத்துக்கு ப்ளாக் சிப் வாங்கினாரு. ஆஹா இன்னைக்கும் ஒருத்தனா? அப்படினு பாக்க ஆரம்பிச்சேன். மனுஷன் அவுட்டர்ல விளையாட ஆரம்பிச்சாரு. தொடர்ந்து அஞ்சு ரெட் வந்திருந்தது. ஆயிரம் டாலரை ப்ளாக்ல வெச்சாரு.

எங்களுக்கு டென்ஷன். கூட வந்தவரு என்ன பண்றதுனு தெரியாம வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாரு. டீலர் சுத்த ஆரம்பிச்சாரு. நமக்கு டென்ஷன் எகிற ஆரம்பிச்சிது. பார்த்தா ரெட். திரும்பவும் ப்ளாக்ல வெச்சாரு. நமக்கா இங்க ஹார்ட் பீட் எகிறுது. மறுபடியும் ரெட். ரெண்டாயிரம் அவுட்.

திரும்ப ரெண்டாயிரம் டாலர்க்கு சிப் வாங்கினாரு. மறுபடியும் ப்ளாக்லயே வெச்சாரு. மொத்தம் ஏழு தடவை ரெட். நிச்சயம் இப்ப ப்ளாக் தான் வரும்னு கூட இருந்த நண்பரும் ப்ளாக்ல வெச்சாரு. மறுபடியும் டென்ஷன். எல்லாரும் இப்ப அந்த சிங்கி ஜெயிக்கணும்னு வேண்டிக்க ஆரம்பிச்சாங்க. இந்த தடவை.... யும் சிகப்பு தான். எல்லாருக்குமே ஷாக். அவன் அசராம அடுத்து கருப்புலயே வெச்சான். மறுபடியும் சிகப்பு வந்தா நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்னு அதைப் பாக்கற தைரியம் இல்லாததால நாங்க கிளம்பிட்டோம்.

அப்பறம் பதினெட்டு நம்பரைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். எங்க காலேஜ்ல பதினேட்டு ரோல் நம்பர் யாரு, அவனுக்கும் நமக்கும் ஏதாவது தகராறு இருந்திருக்கா, பதினெட்டாவது வயசுல நமக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்கா, சபரி மலைக்கு போகும் போது ஏதாவது தப்பு பண்ணோமா? இப்படி பல சிந்தனை. அப்பறம் பார்த்தா தான் தெரியுது, தங்கமணியோட பிறந்த நாள் பதினெட்டாம் தேதி வருதுனு. இதுக்கு மேல நீ விளையாடின, அவ்வளவு தான் காலி. பேசாம நீ கிளம்புனு வார்னிங் கொடுக்க தான் அப்ப அப்ப வந்து ஆப்பு வெச்சிருக்குனு புரிஞ்சிது.

................

கடைசியா...

கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....

ஒரே வழி...

கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.

Thursday, June 18, 2009

மணல் கயிறு = Linked List

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...


------------------------

இதை இங்கயும் படிக்கலாம் :)

நான் எவ்வளவு சொல்லியும் என் பேரு முரளிதரன் தான், நான் திண்டுக்கல்ல இருக்குற ஒரு காலேஜ் Professorனு உலகத்துக்கு எடுத்து சொல்லும் சாருவுக்கும், விவாதங்களே பிடிக்காதபட்சத்திலும் எனக்கு அறிவுரைக் கூற தனது பொன்னான நேரத்தை வீணாக்கி என் மேல் இருக்கும் பாசத்தால் தனிப்பதிவு போட்ட என் அருமை நண்பர், உலகமகா எலக்கியவாதி தம்பி உமாக்கதிருக்கும் நன்றி :)

Thursday, June 11, 2009

ஒட்டுக் கேட்டதும் பாட்டுப் போட்டதும்!!!

நேத்து ஏதேச்சயா மேனஜர் ரூம் பக்கம் போயிட்டு இருந்தேன். பார்த்தா அங்க அவர் எங்க டீம் லீட் கிட்ட பேசிட்டு இருந்தாரு, என்னடா நம்மல பத்தி ஏதோ பேசறாரேனு பார்த்தா,

மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.


உடனே என் மனசுல பாட்டு கேட்க ஆரம்பிச்சிது.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


...........

இப்ப முழுப் பாட்டு

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை!
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மீசிக் ஸ்டார்ட் )

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!

ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மறுபடியும் மீசீக்)

(டீம் மெம்பர்ஸ் ஒன் பை ஒன்... ஹை பிட்ச்ல)

கால காலத்துக்கும் இப்படியே நாம சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டியது தானா?

நாம மேனஜர் ஆகறது எப்ப?

இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம கோடிங் பண்ணிட்டு இருக்கறது?

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே
வரும் காலத்திலே நம் தலைமுறைகள்
நாம் சாப்ட்வேர் இஞ்சினியரில்லை என்ற முழங்கட்டுமே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

அப்படியே இது மனசுல ஓடி முடியறதுக்கும், Balaji, Can you please do this?னு என் டீம் லீட் பிங் பண்றதுக்கும் சரியா இருந்தது.

அப்படியே தலைவர் பாட்டையும் பார்த்துட்டு போங்க...


Friday, April 17, 2009

பேயை ஏமாற்ற முடியுமா?

13B படம் பார்த்ததுக்கு அப்பறம் இந்த 13 நம்பர் பத்தியே சிந்தனை ஓடிட்டு இருந்தது.

எங்க ஆபிஸ் கட்டடம் 13 ஃபிளோர். ஆனா 13க்கு பதிலா 14 போட்டிருப்பாங்க. லிப்ட்ல 12க்கு அப்பறம் 14 தான் இருக்கும். போன வாரம் மதியம் சாப்பிட்டு வரும் போது என் டீம் லீட் கூடவே வந்தாரு. அவர் இந்த 13 கான்செப்ட்ல தீவர நம்பிக்கை வெச்சிருக்கறவரு. 13ம் தேதி வெள்ளிக்கிழமை வந்துச்சுனா, அன்னைக்கு எதுவும் வேலை செய்யாதுனு பரிபூர்ணமா நம்புவாரு. அதுவும் மதியம் 2 மணிக்கு மேல எந்த வேலையும் ஆரம்பிக்க வேண்டாம்னு சொல்லிடுவாரு. இது நமக்கு சாதகமா இருக்கேனு விட்டுடுவேன்.

லிப்ட்ல வரும் போது இதைப் பத்தி பேச ஆரம்பிச்சேன். ”ஏன் ரோஜர் இந்த 12க்கு அப்பறம் 14 போட்டிருக்கீங்களே. ஏன் அப்படினு கேட்டேன்”

உடனே அவர், “பேய் லிப்ட்ல ஏறுச்சுனா 13ம் நம்பரைத் தான் தேடும். அப்படித் தேடி, அது இல்லைனா ஏமாந்து போயிடும்” அப்படினு சொன்னாரு.

உடனே நான், “பேய் லிப்ட்ல வராம படிக்கட்டுல வந்துச்சுனா என்ன பண்ணுவீங்கனு” கேட்டேன்.

”ஒரு ஒரு ஃப்ளோர்லயும் படிக்கட்ல ஏறும் போது கதவுக்கு முன்னாடி ஃப்ளோர் நம்பர் போட்டிருக்கும். அங்கயும் 12க்கு அப்பறம் 14 தான். அதனால மேல கீழனு மாறி, மாறி ஏறி, இறங்கி ஏமாந்து போயிடும்”னு சொன்னாரு.

விடுவோமா நாம. “பேய்க்கு இந்த நம்பர் சிஸ்டம் தெரியாம, மம்மி பேய் மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க. இல்லைனா ரோமன் நம்பர் மட்டும் தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க”னு கேட்டேன். மனுஷன் அப்படியே ஷாக் ஆகிட்டாரு.

அப்பறம் ஒரு வழியா சமாளிச்சி, “அந்த பேய் எல்லாம் ஈஜிப்ட்ல தான் இருக்கும். இங்க வெறும் அமெரிக்க பேய் மட்டும் தான் இருக்கும்”னு சொன்னாரு.

”அப்படினா அந்த பேய்க்கு ஏற்கனவே தெரியுமில்லை. 13வது ஃப்ளோரைத் தான் இவனுங்க ஏமாத்தி நம்பர் மாத்தி வெச்சிருக்காங்கனு. அப்ப ஈசியா அந்த ஃப்ளோருக்கு போயிடுமே”னு சொன்னேன்.

“புரியலை”

“இப்ப ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்களே நாளைக்கு செத்து பேயாகறீங்கனு வெச்சிக்கோங்க. அப்ப உங்களுக்குனு இந்த பில்டிங்ல 13வது ஃபிளோர் ஒதுக்கி வெச்சா, உங்களுக்கு 14தான் உண்மையிலே 13னு தெரியுமில்லை. அப்பறம் கரெக்டா வந்துட மாட்டீங்க” அப்படினு சொன்னேன். மனுஷன் ஜெர்க்காகிட்டாரு.

“அடப்பாவி. இதுக்கு என்னைய சாகடிச்சி பேயாக்கிட்டியே. சரி உங்க ஊர்ல இந்த பேய் எல்லாம் எப்படி சமாளிப்பீங்க” அப்படினு கேட்டாரு.

”அப்படி கேளுங்க. இந்த மாதிரி வீட்டுக்குள்ள இல்லை பில்டிங் உள்ள வரக்கூடாதுனா, முன்னாடி வேப்பிலையைக் கட்டணும்”

“வாட் இஸ் தட்”

“அது ஒரு மரத்துல இலை. அதுல லேடி காட் (உம்மாச்சி) இருப்பாங்க. அதை சொருகி வெச்சா பேய் வராது”

“வாவ். திஸ் இஸ் சூப்பர்”

“இது என்ன. இதை விட இன்னும் சூப்பரா எல்லாம் இருக்கு. கைல தாயுத்து கட்டினா கூட பேய் வராது. ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கு”

“என்ன பிரச்சனை”

“அந்த பேயே ஒரு சூப்பர் ஃபிகரா வந்து, ஒரு டான்ஸ் போட்டு, தாயத்தை கழிட்டிடும்”

“ரியலி?”

“இல்லை பெருச்சாளி. எவண்டா இவன். எதை சொன்னாலும் நம்பறான். பேயை பார்க்கறதுக்கும் சில டெக்னிக்ஸ் இருக்கு. தெரியுமா?”

“அது என்ன டெக்னிக்?”

“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”

“யா யா. தட் இஸ் ட்ரூ”

பல நாடுகள்ல, பல பேய்கள் இருந்தாலும், எல்லாரும் ஒத்துக்கறது இந்த ஒரு பேயை தான்.

சரி சின்ன வயசுல பேய் எப்ப எப்ப நம்ம பின்னாடி வரும்னு சொன்ன சம்பவங்கள்.

1. மதியம் பனிரெண்டு மணிக்கோ, ராத்திரி பனிரெண்டு மணிக்கோ தனியா நடந்து போனா வரும்.

2. சட்டில கறி சோறு எடுத்துட்டு தனியா போனா பின்னாடி வந்து கேக்கும்.

3. பொண்ணுங்க மல்லைகைப் பூ வெச்சிட்டு போனா பின்னாடி வரும்.

4. ராத்திரி சுடுகாட்டுல போய் முட்டையை உடைச்சா, பின்னாடி பொடனியிலே தட்டும். (அங்க போய் எதுக்கு முட்டையை உடைக்கணும்னு தெரியல)

5. ஞாயிறு சாயந்தரம் ராகுகாலத்துல சுடுகாட்டு பக்கமோ, ஆத்து பக்கமோ போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.

6. பேய் பிடிச்சவங்க முடியை எடுத்து ஆலமரத்துலயோ, அரச மரத்துலயோ ஆணி வெச்சி அடிச்சி வெச்சிருப்பாங்க. அதை எடுத்த அந்த ஆவி நம்மல பிடிச்சிக்கும்.

7. கறி சோறு சாப்பிட்டு ராத்திரி தனியா நடந்து போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.

8. பேய் ஓட்டும் போது அங்க போய் நின்னு சிரிச்சா, அந்த பேய் நம்மல வந்து பிடிச்சிக்கும்.

9. சிலுவைப் போடலனா ரத்தக்காட்டேரி வரும்.

10. வயசுப்பசங்க பின்னாடி மோகினிப் பேய் வரும். அது வரது பூ வாசனை, கொலுசு சத்ததுல தெரிஞ்சிக்கலாம் (அது பின்னாடி பசங்க போகாம இருந்தா சரி)

11. இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும். (ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா அப்படினு புத்திசாலித்தனமா கேள்வி கேக்காதீங்க. உங்களுக்கு தான் முதல்லயே சொல்லிட்டனே.)

Sunday, March 22, 2009

கசினோ, காதல் கதைகள் - 2

“What is this story man? I will tell you a story" அப்படினு மொனிஷ் ஆரம்பிச்சாரு. சரி, இதுக்கு மேல தமிழ்ல சொல்றேன்.


“நானும் அந்த பொண்ணும் மூணாவதுல இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல. அதுக்கு அப்பறம் காலேஜ் எல்லாம் வேற வேற இடத்துல. அதாவது டென் ப்ளஸ் டூ, இஞ்சினியரிங் எல்லாம். ஒரே ஏரியாவுல இருந்ததால அடிக்கடி பார்த்துக்குவோம். ஆனா பேசிக்கல. நான் யூ.எஸ்க்கு MS படிக்க புறப்பட்டேன். சரியா நான் செக் இன் பண்ண போறதுக்கு முன்னாடி எங்க இருந்தோ வந்தா. என் கைலை ஒரு பிள்ளையார் சிலையை கிப்ட் பண்ணா”


“வாவ்”


“நான் யூ எஸ் வந்தா ஆறாவது நாள், சரியா அவளும் இங்க MS படிக்க வந்தா”


எல்லாருக்கும் ஆச்சரியம்.


"அதுக்கு அப்பறம் ரெண்டு வருஷம். நானும் அவளும் தினமும் பேசிக்குவோம். ரெண்டு பேரும் வேற வேற யுனிவர்சிட்டி. ரெண்டு வருஷம் கழிச்சி நான் மறுபடியும் ப்ரொப்போஸ் பண்ணேன். இந்த தடவை அவ அதை ஏத்துக்கிட்டா”


“வாவ். சூப்பர்”


“அதுக்கு அப்பறம் மூணு வருஷம். நானும் அவளும் அமெரிக்காவுல சுத்தாத இடமே இல்லை. Florida, Vegas அப்படினு எல்லா இடமும் சுத்தினோம். We had lots of fun. ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு வீட்ல பர்மிஷன் கேட்டோம். எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க. ஆனா அவுங்க வீட்ல பயங்கர பிரச்சனை. அவுங்க வேற ஜாதி. அதனால அவுங்க கொஞ்சம் கூட ஏத்துக்கற மாதிரி இல்லை. அவுங்க அம்மா சூசைட் பண்ணிக்குவோம்னு அவளை மிரட்டினாங்க. அவள் வீட்டுக்கு ஒரே பொண்ணு. என்ன பண்றதுனு என்கிட்ட கேட்டாள். உங்க வீட்ல சொல்ற மாதிரி செய்னு சொல்லிட்டேன். அடுத்த மூணாவது மாசத்துல அவ வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா. ரெண்டு வருஷத்துல ஒரு பையன். நான் இங்க இப்படி இருக்கேன்”


ஒரு அஞ்சு நிமிஷம் கார்ல யாரும் பேசாம வந்தோம். என்ன பேசறதுனு யாருக்கும் தெரியலை.


செந்தில் பேச ஆரம்பிச்சாரு. “அதுக்காக நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறது சரியா? நீயும் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லை”


“நான் அவ கல்யாணம் பண்ண அந்த சமயத்துலயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன். ஆனா அது ஏதோ சரியா தெரியலை. கல்யாணம் பண்ணிக்கறது இந்த மாதிரி காரணத்துக்காகவானு யோசிச்சி விட்டுட்டேன்”


“இருந்தாலும் வயசாகிட்டே போகுதில்லை” மறுபடியும் செந்தில். எனக்கு என்ன பேசறதுனே தெரியலை. மொனிஷ்க்கு முப்பது வயசுக்கு மேல ஆச்சு.


“Is age is the only criteria for marraige? I think I am still not ready for the marraige”


“ஆனா இந்த தனிமை கஷ்டமா இல்லையா?” ஏதாவது கேக்கனுமேனு கேட்டேன்.


“நான் தான் எப்பவுமே பசங்களோட இருக்கனே. எனக்கு எதுவும் கஷ்டமில்லை. நிஜமா பார்த்தா காதல்னு ஒண்ணு இல்லை. நமக்கு அந்த பொண்ணு வேண்டும்னு நினைக்கிற எண்ணம் தான் அது. உண்மையான பாசம்னா அது பிள்ளைங்க மேல அப்பா, அம்மாக்கு இருக்குறது தான். மத்தது எல்லாம் பொய்”


மறுபடியும் அமைதி. கொஞ்ச நேரம் கழிச்சி பேச ஆரம்பிச்சாரு.


“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”


“அந்த பொண்ணு அதுக்கப்பறம் உங்களுக்கு எதுவும் ஃபோன் பண்ணி உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லலையா?” இது நான்.


“இல்லை. அதுக்கு அப்பறம் அவக்கிட்ட நான் எதுவும் பேசல”


ஒரு பத்து நிமிஷம் எல்லாரும் அமைதியா இருந்தோம்.


அடுத்து பாட்டு சிடி மாத்தினோம்.ஹாய் மாலினி. ஐ அம் கிருஷ்ணன் அப்படினு ஆரம்பிச்சது. நான் அவர்ட பேச ஆரம்பிச்சேன்.


”இந்த படம் தெலுகுல கூட வந்துச்சு. சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணா அப்படினு வந்துச்சு. அதுல ஹீரோ ஹீரோயினை முதல்ல ட்ரைன்ல பார்ப்பான். உடனே ப்ரப்போஸ் பண்ணிடுவான்...” அப்படினு படத்து கதையை சொன்னேன். முதல் ஹீரோயின் பாம் ப்ளாஸ்ட்ல செத்து போறதோட கதை முடிஞ்சிடுச்சினு நான் சொன்னேன்.


”இதை விட சில கொடுமைகள் எல்லாம் நிஜத்துலயும் நடந்திருக்கு” அப்படினு அவர் ஆரம்பிச்சாரு.


“என் ஃபிரண்ட் ஒருத்தன். காலேஜ்ல அவனும் ஒரு பொண்ணும் ரொம்ப நல்லா பழகிட்டு இருந்தாங்க. சம்மர் வெக்கஷனுக்கு அந்த பொண்ணு அவுங்க வீட்டுக்கு போச்சு. காலேஜ் ஆரம்பிச்சி மூணு மாசமாகியும் வரலை. அவன் ஒரு வழியா அவுங்க வீட்ல விசாரிக்கும் போது தான் தெரிஞ்சிது, அந்த வெக்கஷனுக்கு போகும் போது பஸ் ஆக்சிடெண்ட்ல அந்த பொண்ணு இறந்துடுச்சினு. அதுக்கு அப்பறம் அந்த பையன் தண்ணி, ட்ரக்னு தடம் மாறிட்டான். அவன் வாழ்க்கையே வீணா போயிடுச்சி”


இரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.

கசினோ, காதல் கதைகள்

வர வர ஆணி அதிகமாகி கடப்பாரை ரேஞ்சுக்கு ஆகிப்போச்சு. அதனால ஒரு வீக் எண்ட் வேலை இல்லைனாலும் பெரிய கொண்டாட்டமா தெரியுது. அப்படி இந்த வாரம் வேலை இல்லைனு தெரிஞ்சவுடனே என்ன பண்ணலாம்னு ப்ளான் பண்ணும் போது கசினோ போகலாம்னு முடிவாச்சி. புதன் கிழமையே ப்ளானை போட்டாச்சு. வெள்ளிக்கிழமை சாயந்தரம் கிளம்பறோம்னு. நான், என் ரூமெட்ஸ் செந்தில், சுந்தர் அப்பறம் கசினோல சில பல ஆயிரம் டாலர்களை சாதாரணமா சம்பாதிக்கிற தெலுகு ஃபிரெண்ட் ஒருத்தர். அவர் பேரு மொனிஷ்.

வெள்ளிக்கிழமை ஒரு எழரை மணிக்கு அட்லாண்டிக் சிட்டி கிளம்பினோம். இதை எழுதும் போது தான் தோணுது புறப்பட்ட நேரம் சரியில்லாததால தான் பெருசா ஜெயிக்க முடியலைனு. நிறைய ஜெயிச்சாலும் கடைசியா லம்பா ஜெயிக்கலாம்னு நான் சொன்ன ஐடியால ஜெயிச்சதெல்லாம் போயிடுச்சி. புறப்படும் போதே ஆயிரம் டாலர்க்கு மேல ஜெயிச்சா 50 இன்ச் டீவி வாங்கலாம்னு நான் சொன்ன ஐடியாவை நிறைவேத்த முடியல. மணி ரெண்டு ஆகிட்டதால புறப்பட்டோம். சரி அடுத்த மாசம் போயிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். 

வரும் போது வண்டி ஓட்றவர் தூங்கிட கூடாதுனு பேசிட்டே வரலாம்னு சொல்லி பேச ஆரம்பிச்சோம். நான் ஜாலியா ஒரு காதல் கதை எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சினு சொன்னேன். உடனே செந்தில் நான் ஒரு கதை சொல்றேன். அடெலசண்ட்ஸ் கதை. அதை நீ எழுதனும்னு சொன்னாரு. சரி அந்த மாதிரி கதையை தான் நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன், சொல்லுங்கனு சொன்னேன். உடனே அவர் ஒரு கதையை சொல்ல ஆரம்பிச்சாரு.

சென்னைல ஒரு பெரிய வீடு மாதிரி இருக்கும். அதுல நிறைய ஃபேமிலிஸ் எல்லாம் இருப்பாங்க அப்படினு ஆரம்பிச்சாரு. உடனே நான் கோட்ரஸ் மாதிரியா? அப்படினு கேட்டேன். கோட்ரஸ் மாதிரினு சொல்ல முடியாது. இது மிடிஸ் கிளாஸ் தங்கற மாதிரி ஒரு அறுநூறு சதுர அடி தான் இருக்கும். ஒரு வீட்ல இருந்து பார்த்தா அடுத்த வீடு தெரியும். மத்த ஊருல எல்லாம் இந்த மாதிரி நீ பாக்க முடியாது.

சத்தியமா அந்த வீடு எப்படி இருக்கும்னு எனக்கு புரியலை. சரி அது முக்கியமில்லை, நீங்க கதையை சொல்லுங்கனு சொன்னேன். 

“அங்க நம்ம ஹீரோ இருக்காரு”

”அந்த ஹீரோ நீங்க தானே” உடனே நானும் சுந்தரும் கோரஸா சொன்னோம்.

“அப்ப நீ எழுதற கதை எல்லாத்துலயும் நீ தான் ஹீரோவா”

“நீங்க என்னோட உங்களை கம்பேர் பண்ண முடியாது. நான் ஒரு பிறவி கலைஞன். நமக்கு கற்பனை ஊத்து தானா வரும்”

“ஏன் எங்களால எல்லாம் யோசிக்க முடியாதா?”

“முடியும். ஆனா முகத்துல இவ்வளவு பிரகாசம் தெரியாது” அப்படினு சொன்ன உடனே அவர் சிரிச்சிட்டு சொல்ல ஆரம்பிச்சாரு.

“ஹீரோ ஒன்பதாவது படிக்கிறாரு. அந்த காம்பௌண்ட்ல பக்கத்து வீட்ல இருக்குற பொண்ணு எட்டாவது படிக்குது. அந்த பையனுக்கு அந்த பொண்ணு மேல ஒரு அட்ராக்‌ஷன். அந்த பொண்ணு அவுங்க அம்மாக்கு ஹெல்ப் பண்றதை எல்லாம் அந்த பையன் தினமும் பார்ப்பான். அடுத்து அந்த பையன் அப்படியே பத்தாவது வரான். அந்த பொண்ணை பார்த்துட்டு எங்க போனாலும் அவனுக்கு நல்லதே நடக்குது. அந்த பொண்ணை பார்த்துட்டு ஹோம் வொர்க் பண்ணாம ஸ்கூலுக்கு போனா அங்க டீச்சர் ஹோம் ஒர்க் பத்தி எதுவும் கேக்க மாட்றாங்க. அந்த பொண்ணை பார்த்துட்டு பரிட்சை எல்லாம் எழுதினா எல்லாத்துலயும் நல்ல மார்க் வருது”

”What the fuck man? Its totally crap. There is no such thing called love." மொனிஷ் ஆரம்பிச்சாரு. வேற வழியில்லாம நான் செந்திலுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

“அப்படினு அந்த ஹீரோ நம்பறான். அது அவனோட நம்பிக்கை மட்டும் தான்” 

உடனே மொனிஷ் சைலண்ட ஆகிட்டாரு. மறுபடியும் செந்தில் கதையை சொல்ல ஆரம்பிச்சாரு.

“பப்ளிக் எக்ஸாம் ஆரம்பிச்சிது. அந்த நேரத்துல பரிட்சைக்கு போகும் போது அவனால அந்த பொண்ணை பார்க்க முடியலை. அதனால அவனுக்கு மார்க் குறைஞ்சிடுச்சி. இப்ப அந்த பையன் பதினொன்னாவது வந்தான். இப்ப அந்த பையன் கொ எட்ல இருந்து பசங்க மட்டும் படிக்கிற ஸ்கூலுக்கு மாறினான். அவனால முன்னாடி மாதிரி பொண்ணுங்ககிட்ட பேச முடியறதில்லை. அவனுக்கு ஒரே பொழுது போக்கு அந்த பக்கத்து வீட்டு பொண்ணை பார்க்கறது தான். தினமும் அந்த பொண்ணை அவன் வீட்ல இருந்து பார்த்துட்டே இருப்பான்”

“அப்படி அவன் தினமும் பாக்கற அளவுக்கு அந்த பொண்ணு அப்படி என்ன இண்ட்ரஸ்டா பண்ணும்” எனக்குள்ள இருக்குற கதா அலர்ட்டா இருந்தான்.

“சாதாரணமா பண்றது தான். வீட்டுக்கு வந்தவுடனே அவுங்க அம்மாக்கு பாத்திரம் எல்லாம் விலக்கி ஹெல்ப் பண்ணுவா. எப்பவும் ரோஸ் கலர் நைட்டியும், டார்க் ப்ளூ நைட்டியும் தான் போட்டிருப்பா. அவளுக்கு அது அழகா இருக்கும்”

“ரொம்ப முக்கியம்” இது சுந்தர்.

“ஆமாப்பா. அடுத்து அந்த பையன் பனிரெண்டாவது போனான். அந்த பொண்ணு பிளஸ் ஒன். இப்ப அந்த பொண்ணு டியூசன் போனா. இந்த பையனும் அதுக்காகவே அந்த பொண்ணு டியூசனுக்கு போனான். அங்க அந்த பையன் டியூஷன் கிளாஸ் எல்லாம் வேணாம். நான் இங்க உட்கார்ந்து படிச்சிக்கிறேனு ஸ்பெஷலா கேட்டு அந்த பொண்ணை பார்த்துட்டே படிக்கிறான்”

”இதெல்லாம் ஒரு பொழுப்பு” மறுபடியும் சுந்தர்.

“டேய் இதெல்லாம் உனக்கு புரியாதுடா. இப்ப மறுபடியும் பப்ளிக் எக்ஸாம். முதல் கொஞ்ச பரிட்சைக்கு அவனால அந்த பொண்ணை பார்க்க முடியலை. அதனால லேங்வேஜ்ல எல்லாம் மார்க் குறைஞ்சிடுச்சி. அடுத்து வந்த பரிட்சை எல்லாம் அந்த பொண்ணை பார்த்துட்டு போய் எழுதினான். இப்ப எல்லாத்துலயும் நிறைய மார்க். கெமிஸ்ட்ரி பரிட்சைக்கு பார்க்க முடியலை. அதனால மார்க் குறைஞ்சிடுச்சி”

“ஓ! அதான் உங்களுக்கு கெமிஸ்ட்ரி பரிட்சைல மார்க் குறைஞ்ச காரணமா?” இந்த தடவை சுந்தர் நச்சுனு பிடிச்சிட்டார். பப்ளிக் எக்சாம் பத்தி பேச்சு வந்தப்ப செந்திலுக்கு கெமிஸ்ட்ரில மார்க் குறைஞ்சிடுச்சினு போன வாரம் தான் சொல்லிட்டு இருந்தாரு. 

“கதையை கேளுங்கப்பா”

“You don't write these stories man. Better write some sex story. Everyone will read it and they will like it. but they won't tell you that they have read your story" அப்படினு மொனிஷ் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.

“ஆஹா. அந்த மாதிரி எல்லாம் நமக்கு எழுத வராது. நான் இப்படியே எழுதறேனே”

"what man, there is not even a kiss so far and that guy is an useless guy" அப்படினு எரிச்சலோட சொன்னாரு. செந்தில்கிட்ட இருந்து எந்த ரெஸ்பாண்டும் இல்லை. சரினு மொனிஷை கொஞ்சம் சமாதானப்படுத்தி செந்திலை கதை சொல்ல சொன்னேன்.

"அடுத்து எண்ட்ரன்ஸ் வந்துச்சி, அதுல அந்த பொண்ணை பார்த்துட்டு போயி இந்த பையன் நிறைய மார்க் எடுத்துட்டான். அவனுக்கு ஒரு நல்ல காலேஜ்ல இஞ்சினியரிங் சீட்டு கிடைச்சிது. ரொம்ப சந்தோஷமா இருந்தான். அந்த நேரம் பார்த்து அந்த பொண்ணுக்கு பர்த் டே வந்துச்சு. இந்த பையன் என்ன பண்ணான். ஒரு கிரிட்டிங் கார்ட் வாங்கி அதை அந்த பொண்ணோட கிளாஸ் மேட் ஒருத்தவன் கிட்ட கொடுத்து கொடுக்க சொல்லிட்டான். அந்த கிரிட்டிங் அந்த பொண்ணோட பெரியப்பாக்கிட்ட மாட்டிக்கிச்சு. அந்த பையனை கூப்பிட்டு நல்லா வாங்கு வாங்குனு வாங்கிட்டாரு.”

“அப்பறம் நீங்க என்ன பண்ணீங்க?” சுந்தர்

“அதுக்கப்பறம் அந்த பொண்ணுக்கூட டச்சே இல்லை” அப்படினு சொல்லி முடிச்சிட்டாரு.

“What is this story man? I will tell you a story" அப்படினு மொனிஷ் ஆரம்பிச்சாரு. சரி, இதுக்கு மேல தமிழ்ல சொல்றேன்.

“நானும் அந்த பொண்ணும் மூணாவதுல இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல. அதுக்கு அப்பறம் காலேஜ் எல்லாம் வேற வேற இடத்துல. அதாவது டென் ப்ளஸ் டூ, இஞ்சினியரிங் எல்லாம். ஒரே ஏரியாவுல இருந்ததால அடிக்கடி பார்த்துக்குவோம். ஆனா பேசிக்கல. நான் யூ.எஸ்க்கு MS படிக்க புறப்பட்டேன். சரியா நான் செக் இன் பண்ண போறதுக்கு முன்னாடி எங்க இருந்தோ வந்தா. என் கைலை ஒரு பிள்ளையார் சிலையை கிப்ட் பண்ணா”

“வாவ்”

“நான் யூ எஸ் வந்த ஆறாவது நாள், சரியா அவளும் இங்க MS படிக்க வந்தா”

....

சரி இதுக்கு மேல எழுதினா உ.த அண்ணன் பதிவு மாதிரி ஆகிடும். இதை நாளைக்கு கண்டினியூ பண்றேன்.

(தொடரும்...)



Wednesday, March 11, 2009

வெறுத்துப் போனவை!

சில சமயம் நாம பார்த்து ரொம்ப ஏங்கிய பொருட்கள், கிடைத்த சில நாட்களில் அதன் மேல் இருக்கும் மோகம் குறைந்து வெறுத்துப் போவது உண்டு. அப்படி நான் வெறுத்துப் போன சில விஷயங்களை பற்றிய பதிவு தான் இது.

ஏரோப்ளேன் பயணம்:
சின்ன வயசுல இருந்து ஏரோப்ளேன்னா அவ்வளவு ஆசை. எப்ப ஏரோப்ளேன் சத்தம் கேட்டாலும் வானத்தைப் பார்க்க பெரிய கூட்டமே இருப்போம். வகுப்பறைல‌ உட்கார்ந்திருக்கும் போது சத்தம் கேட்டுச்சுனா எல்லாரோட பார்வையும் ஜன்னல் வழியா வானத்துல தான் இருக்கும்.

சில சமயம் சத்தம் மட்டும் கேட்கும், ஏரோப்ளேன் எங்க இருக்குனு தெரியாது. மேகத்துக்கு நடுவுல ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும். வெளிய வந்தவுடனே யாராவது பார்த்து "அங்கப் பாரு, அங்கப் பாரு"னு சொன்னவுடனே எல்லாரும் அதை பார்த்து சந்தோஷமாயிடுவோம்.

வீட்ல இருக்கும் போது சத்தம் கேட்டுச்சுனா மொட்டை மாடிக்கு ஓடிப்போய் வேடிக்கைப் பார்ப்போம். அப்ப எங்க எல்லாரோட லட்சியமும் ஒரு தடவையாவது ஏரோப்ளேன்ல போகனும்னு தான்.

இப்ப‌டி சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்து ஏங்கிய‌ ஏரோப்ளேன் ப‌ய‌ண‌ம், முத‌ல் முறையா சென்னைல‌ இருந்து பாஸ்ட‌ன் வ‌ந்த‌ ப‌ய‌ண‌த்துல‌யே வெறுத்துப் போச்சு. சென்னைல‌ ஜெட் ஏர்வேஸ்ல‌ ஏறும் போது இருந்த‌ ச‌ந்தோஷ‌மும், குறுகுறுப்பும், பாரிஸ்ல‌ வ‌ந்து இற‌ங்கும் போதே குறைஞ்சி போச்சி.

ஏதோ பஸ் பயணத்துல‌ இருக்குற‌ ஒரு உயிரோட்ட‌ம் ஏரோப்ளேன் ப‌ய‌ண‌த்துல‌ இல்லை. ஒரே இட‌த்துல‌ உட்கார்ந்திருக்க‌ற‌து ம‌ட்டும் தான் கார‌ண‌மா, இல்லை ப‌க்க‌த்துல‌ உட்கார்ந்திருக்க‌ற‌ ம‌னித‌ர்க‌ளின் இறுகிய‌ முக‌ம் தான் கார‌ண‌மானு தெரிய‌ல‌. ஏரோப்ளேன் ப‌ய‌ண‌த்தை ரொம்ப‌ வெறுக்க‌ ஆர‌ம்பிச்சிட்டேன்.

ஒரு வேளை ரெண்டு ம‌ணி நேர‌ம், மூணு ப‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌மாக‌ இருந்திருந்தால் பிடித்திருக்கும் போல‌. சின்ன‌ வ‌யசுல‌ ஏங்கி இன்று பிடிக்காம‌ல் போன‌ லிஸ்ட்ல முக்கியமான‌ இட‌த்துல‌ இது தான்.

தொலைக்காட்சி :

சின்ன வயசுல டீவி பார்க்கறதுனா அவ்வளவு ஆர்வம் இருக்கும். தூர்தர்ஷன் வந்த புதுசுல எப்படி ஏங்கி ஏங்கி பார்த்திருக்கோம். முன்னோட்டம்னு ஒரு நிகழ்ச்சி இருக்கும், அதுல அடுத்து வாரம் வர போற எல்லா நிகழ்ச்சியை பத்தியும் சொல்லுவாங்க. அதை விடாம பார்த்து முக்கியமான நிகழ்ச்சியை எல்லாம் குறித்து வைத்துப் பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை ராத்திரியும், ஞாயிறு சாயந்திரமும் எங்க வீட்ல டீவி பார்க்க ஒரு பெரிய பட்டாளமே இருக்கும். எங்க வீட்ல டீவி வரதுக்கு முன்னாடி எங்க பக்கத்துத் தெருல தான் இருக்கும். நாங்க அங்க போய் பார்க்கறது பிடிக்காம எங்க அப்பா டீவி வாங்கினார். அதுவும் இல்லாமல் எங்க அப்பா டீவி எல்லாம் வாங்க மாட்டாரு, டீ தான் வாங்குவாருனு நான் கிண்டல் பண்ணது கூட காரணமா இருக்கலாம். அப்ப நான் அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன். அப்பவே நக்கலு, திமிரு எல்லாம் இருந்தது ;)

சில சமயம் டீவி திடீர்னு மக்கர் பண்ணும். உடனே ஆன்டனாவை திருப்பறதுக்கு ஒரு கூட்டமே இருக்கும். பொதுவா எங்க ஏரியால இருந்து ஊட்டி, கொடைக்கானல் ஸ்டேஷன் தான் தெரியும். ஏதாவது மக்கர் பண்ணுச்சுனா, ஆன்டெனா திருப்பறதுக்கு ஒரு கம்பி இருக்கும். அதை எடுத்துட்டு ஒரு நாலஞ்சி பேர் ஓடுவோம். ஊட்டி பக்கம் இருந்தா கொடைக்கானல் பக்கம் திருப்புவோம். அப்படி திருப்பும் போது பார்த்து பார்த்து திருப்பனும்.

ஒரு நாலஞ்சி டிகிரி மாறினாலும் தெளிவா தெரியாது. மாடில இருந்து தெரியுதா தெரியுதானு கீழ நிக்கறவர்கிட்ட கேட்போம். அவுங்க உள்ள இருக்கறவங்க கிட்ட கேட்டு சொல்லுவாங்க. தெரிய ஆரம்பிச்ச உடனே வேகமா கீழ ஓடி வருவோம். சில சமயம், இப்படி செஞ்சி தெரிய ஆரம்பிக்கறதுக்குள்ள ஒலியும் ஒளியும் முடிஞ்சிடும்.

இப்படி ரசிச்சி ரசிச்சி பார்த்த டீவி நிகழ்ச்சிகள், கேபில் வந்தவுடனே மாற ஆரம்பித்தது. ஊட்டி, கொடைக்கானல் மறந்து போனோம். தடங்கலுக்கு வருந்துகிறோம் மறந்து போனோம். அப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதன் பிறகு வந்த தொடர் நாடகங்களை எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தோம்.

ஆனால் இப்ப அந்த டீவியை பார்த்தாலே எனக்கு எரிச்சல் தான் வருது. கொஞ்ச நேரம் டீவி பார்க்கறேனேனு கெஞ்சிக் கொண்டிருந்த காலம் மாறி கொஞ்சம் டீவியை ஆஃப் பண்ணுங்களேன், ஒரே தலைவலினு சொல்ற மாதிரி இருக்கு. இன்னைக்கு ரேஞ்ச்ல அறிவியல் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தின் முதல் வில்லன் யார் என்று கேட்டால் நான் யோசிக்காமல் சொல்வது டீவியை தான்.

க்ளாடியேட்டர் படத்துல கமாடஸ் மக்கள் எதை பத்தியும் சிந்திக்கக் கூடாதுனு க்ளாடியேட்டர் ஆட்டத்தை நடத்தற மாதிரி, இன்னைக்கு மக்கள் எதைப் பத்தியும் சிந்திக்கக் கூடாதுனு டீவி நிகழ்ச்சிகளை நடத்துற மாதிரி ஒரு எண்ணம்.

செல் ஃபோன் :

வேலைக்குப் போனவுடனே முதல்ல வாங்கனும் நான் நினைச்சது செல் ஃபோன் தான். அது வரை என்னிடம் செல் ஃபோன் இல்லை. சம்பளம் வந்த முதல் மாசமே வாங்கினேன். அந்த அளவுக்கு செல் ஃபோன் மேல ஒரு க்ரேஸ் இருந்தது.

செல் ஃபோன்ல எந்நேரமும் பேசிட்டு இருந்தது எல்லாம் கூட ஒரு கனாக்காலம் மாதிரி தான் இருக்கு.

இப்ப ஏனோ எனக்கு செல் ஃபோன் பிடிப்பதில்லை. ஏதோ என் தனிமையைக் கலைக்க வந்த ராட்சசன் மாதிரி இருக்கு. அதுவும் ஒரு வாரம் விடாம சனி, ஞாயிறு காலைல ஃபோன் பண்ணி, பாலாஜி ரொம்ப முக்கியமான ஒரு பிரச்சனை, உடனே நீ லாகின் பண்ணனும்னு சொல்ற இந்த ஃபோன் கால் தான் எனக்கு இது மேல வெறுப்பு வர முதல் காரணம்.

அடுத்து ஆறு மணிக்கு வீட்டுக்கு போய் ஒரு ஒரு மணி நேரத்துல, பாலாஜி இப்ப ஒரு முக்கியமான டெஸ்ட் ரன் பண்ணனும், நீ கொஞ்சம் பார்த்து ஆரம்பிச்சிடறயா? ஆறு மணி நேரமும் பார்க்க வேண்டியதில்லைனு சொல்லும் போது அதை தூக்கி போட்டு உடைக்கலாமானு ஒரு கோபம் வருது.

லேப் டாப் :

நான் முத‌ன் முத‌லா லேப் டாப் தொட்டு பார்த்த‌து எங்க‌ ஃபைன‌ல் இய‌ர்ல (2003) தான். அதுவும் எங்க டிப்பார்ட்மெண்ட் செக்ர‌ட்ரி (எங்க‌ க்ளாஸ் மேட் தான்), சிம்போசிய‌ம் அப்ப‌ லேப் டாப் எடுத்துட்டு வ‌ந்தான். அவுங்க‌ அப்பா யூ.எஸ்ல‌ இருந்து அதை வாங்கி வ‌ந்து ஒரு வார‌ம் தான் ஆகியிருந்த‌து. அதை தொட்டு பார்க்க‌ற‌துக்கு அப்ப‌ அவ்வ‌ள‌வு போட்டி இருந்த‌து.

அதுக்கு அப்ப‌ற‌ம் நான் க‌ம்பெனில‌ ஜாயின் ப‌ண்ண கொஞ்ச‌ நாள்ல‌ எங்க‌ மேன‌ஜ‌ர் என்னை கூப்பிட்டு சில‌ ச‌ந்தேக‌ங்க‌ளை கேட்கும் போது அவ‌ர் லேப் டாப்பை என்கிட்ட‌ கொடுத்து அந்த‌ குறிப்பிட்ட‌ அப்ளிகேஷ‌னை ப்ர‌வுஸ் ப‌ண்ணிக் காட்ட‌ சொன்னாரு. என‌க்கு அதுல‌ ம‌வுஸ் இல்லாம‌ எப்ப‌டி நேவிக‌ட் ப‌ண்ற‌துனு தெரிய‌லை. அதை அவ‌ர் தான் சொல்லி கொடுத்தாரு.

அப்ப‌ற‌ம் ஆன்சைட் வ‌ரும் போது என‌க்கு எங்க‌ க‌ம்பெனில டொஷிபா லேப்டாப் கொடுத்தாங்க‌. வாங்கும் போது அவ்வ‌ள‌வு ஆசையா வாங்கினேன். ரொம்ப‌ நாள் அது எப்ப‌வும் என்கூட‌வே இருக்கும். ப‌டுக்கும் போது கூட‌ ப‌க்க‌த்துல‌ தான் இருக்கும். தூங்க‌ற‌ வ‌ரைக்கும் ஏதாவ‌து ப‌ண்ணிட்டே இருப்பேன். அப்ப‌ அப்ப‌ எழுந்து பின்னூட்ட‌த்தை வெளியிடுவேன் (2006ல‌).

எங்க ரூம்ல இப்ப ரெண்டு பேருக்கு, மொத்தம் ஆறு லேப் டாப். ஆளுக்கு மூணு லேப் டாப். எங்க கம்பனி லேப் டாப் ஒண்ணு, க்ளைண்ட் லேப் டாப் ஒண்ணு, பர்சனல் லேப் டாப் ஒண்ணு. இதுல‌ க்ளைண்ட் லாப் டாப்பால‌ தான் நிறைய‌ பிர‌ச்ச‌னை. எல்லா நேர‌மும் ஃபோன் ப‌ண்ணி க‌னெக்ட் ப‌ண்ண சொல்லுவாங்க‌. செம‌ டார்ச்ச‌ரா இருக்கும். லேப் டாப் எடுத்தாலே இப்ப‌வெல்லாம் க‌டுப்பா இருக்குது. இதை எவ‌ன்டா க‌ண்டுபிடிச்சான்னு கோப‌ம் வ‌ருது.

இந்த‌ப் ப‌திவுல‌ இருக்க‌ற‌தெல்லாம் நான் ரொம்ப‌ விரும்பி இப்ப‌ வெறுத்து போன‌ விஷ‌ய‌ங்க‌ள். ஒரு சில‌ர் இதை எல்லாம் கொஞ்ச‌ம் முன்னாடியே வெறுத்திருக்க‌லாம், ஒரு சில‌ர் இவைக‌ளை இன்னும் நேசித்து கொண்டிருக்க‌லாம். இதை நீங்க‌ள் வெறுக்க‌ ஆர‌ம்பிக்கும் போது என் ஞாப‌க‌ம் வ‌ர‌லாம்.

Thursday, March 05, 2009

வெட்டி பேச்சு - மார்ச் 6

இந்த முறை இந்தியா வந்திருந்த போழுது இரண்டு முறை கோவை வந்திருந்தேன். கோவைல தான் செட்டில் ஆகனும்னு இருக்குற எண்ணம் அநேகமா நிறைவேறிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

கோவைல இருந்து சென்னைக்கு ட்ரெயின்ல வந்தேன். ரெயில் வே ஸ்டேஷன் முழுக்க சிகப்பு கலர் ட்ரெஸ் போட்ட மக்கள். எல்லாரும் சமயபுரம் போகறாங்களாம். ஸ்பெஷல் ட்ரெயினாம். அடப்பாவிகளா, எப்படிடா இப்படி தானா போய் ஏமாறீங்கனு கேக்கனும்னு தோனுச்சு. கேக்கல. எங்க அம்மாக்கிட்ட சொன்னா அந்த அம்மன் சக்தியான அம்மனு சொல்லுவாங்க. ராமநாராயணன் படத்துல வர அம்மனுக்கு இருக்குற சக்தி இருந்தா கூட ஒரு டேன்ஸை போட்டு கைல வெச்சிருக்குற சூலத்தால குத்திருக்கும். இப்படி நாப்பது அம்பது கார்ல சுத்த விட்டுருக்காது. சரி நமக்கு எதுக்கு அது.

ட்ரெயின்ல அப்பர் பர்த் தான் நமக்கு ஒத்து வரும். அந்த ட்ரெயின்ல பார்த்தா சைட்லயும் மூணு பர்த் வந்ததால நமக்கு மிடில் பர்த் வந்துடுச்சி. என்ன கொடுமை சரவணன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது ஒரு அக்கா (டாக்டருக்கு படிக்கறாங்க போல) மிடில் பர்த் தான் வேண்டும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அந்த குளறுபடில அவுங்களுக்கு அப்பர் பர்த் வந்துடுச்சு. நைசா பேசி அப்பர் பர்த் வாங்கியாச்சு. மிடில் பர்த்தை கூட மக்கள் விரும்புவாங்கனு அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

சென்னைக்கு காலைல வந்து சேர்ந்தேன். வீட்டு அம்மணிக்கு போன் பண்ணி KK நகருக்கு பஸ் நம்பர் கேட்டு ஏறி உட்கார்ந்தேன் (11Dனு நினைக்கிறேன்). பார்த்தா அது பெண்கள் உட்கார சீட்டாம். அந்த சீட்டுக்கு மேல கூட பெண்கள்னு எழுதல. தெரியாம நானும் போய் உட்கார்ந்துட்டேன். உடனே அங்க வந்த பொம்பளை மெட்ராஸ் பாஷைல “பையை வெச்சிக்கிட்டு வந்து லேடிஸ் சீட்ல உட்காருது பாரு. போய் அந்த பக்கம் உக்காரு” அப்படினு ரொம்ப மரியாதையா சொன்னாங்க. இத்தனைக்கும் அந்த சீட்டுக்கு முன்னாடி சீட்ல இடம் இருந்துச்சு. 

சென்னைல யாரும் மனஷனை மனஷனா மதிக்க மாட்டாங்க போல. திடீர்னு எல்லார் தலையிலும் கொம்பு இருக்கற மாதிரி தெரிஞ்சுது.

..................


விசா இண்டர்வியூக்கு பெங்களூர்ல இருந்து ஷதாப்தி ட்ரெயின்ல சென்னைக்கு வந்தேன். உள்ளேயே ஹிக்கின்போத்தம்ஸ்ல கொஞ்சம் புக்கை பொறுக்கிட்டு வெளிய வந்தேன். டிசம்பர் 5 ராத்திரி. போலிஸ் கெடுபிடி அதிகமா இருந்தது. அந்த நேரம் நம்ம தலை கைப்ஸ் வேற ஃபோன் பண்ணி என்னப்பா இன்னைக்கு சென்னை புறப்படறாயானு கேட்டாரு. ஆபிஸ் விஷயமா வரதால கொஞ்சம் சீக்கிரமாவே புறப்பட்டு வந்தாச்சு.

முதல் முறையா அப்ப தான் சென்னை செண்டரலுக்கு வந்திருந்தேன். சரி கம்பெனி காசு தரும், அதனால வீட்டுக்கு ஆட்டோலயே போகலாம்னு முடிவு பண்ணிட்டு ஸ்டேஷனை விட்டு வெளிய வந்தேன். ப்ரீ பெய்ட் ஆட்டோல வர சொல்லி மாமனார் சொல்லியிருந்தாரு. நூறு இல்லைனா நூத்தி இருபது ரூபாய் கேப்பாங்கனு சொல்லியிருந்தாரு. 

அன்னைக்கு போலிஸ் கெடு பிடியால அங்க எதுவும் ஆட்டோ இல்லை. கொஞ்சம் தள்ளி தான் ஆட்டோ எல்லாம் நிறுத்திருந்தாங்க. நாம வேற காதுல ஐ பாட், கைல ஹிக்கின்போத்தம்ஸ் பேக், பின்னாடி ஒரு ஷொல்டர் பேக் அதுல சைட்ல ஒரு வாட்டர் பாட்டில் எல்லாம் வெச்சிருந்தோம். 

ஆட்டோவா சார்னு ஒரு சின்ன பையன் வந்து கேட்டான். நானும், ஆமாம் KK Nagar, நெசப்பாக்கம்னு சொன்னேன். ஃபோர் ஹண்ட்ரட் சார்னு சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. இரண்டு மடங்கு கேட்டா கூட சரினு ஏமாத்தரதுலயும் ஒரு நியாய தர்மம் பாக்கறாங்கனு பார்க்கலாம். இது அநியாய கொள்ளையா தானே இருக்குது. நான் நூறு ரூபாய் தரேனு சொன்னேன். மனசுக்குள்ளே ஏதோ பேசிட்டு போயிட்டான். அப்பறம் விசாரிச்சி பஸ் பிடிச்சி போனேன். அஞ்சு ரூபாய் தான் செலவு. 

..................

திங்க கிழமை காலைல விசா இண்டர்வியூ இருந்தது. KK நகர்ல இருந்து US Consulateக்கு நூறு ரூபாய் கேட்டாங்க. நானும் எவ்வளவோ பேரம் பேசி எண்பது ரூபாய்ல முடிச்சேன். அறுபது ரூபாய்னு சொல்லி தான் வீட்ல இருந்து அனுப்பினாங்க. 

விசா கிடைச்சி வெளிய வந்தவுடனே ஆட்டோ இருந்தது. 

“விசா கிடைச்சுதா சார்” ஆட்டோக்காரர்

“கிடைச்சிடுச்சுங்க”

“கங்க்ராட்ஸ் சார்”

“நன்றிங்க”

“எங்க சார் போகனும்?”

“KK நகர்”

“ஃபைவ் ஹண்ட்ரட் சார்”

“என்னது?”

“என்னங்க சார் டாலர்ல சம்பாதிக்க போறீங்க. பத்து டாலர் தானே சார்”

“நான் வரும் போது எண்பது ரூபாய் தான் கொடுத்தேன். வேணும்னா நூறு ரூபாய் தரேன்”

“இல்ல சார்”

வீட்ல வேற பாப்பாவை விட்டுட்டு நானும் மனைவியும் வந்திருந்தோம். என்ன பண்ணுதோனு தெரியலைனு ஒரு பயம் வேற. பவுடர் பால் கொடுத்து பழக்கமில்லை. அவுங்க பாட்டி தான் பார்த்துக்கிட்டாங்க. உடனே வீட்டு அம்மணியை கூப்பிட்டு பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்புக்கு போனேன். ஐடி கார்ட், டை எல்லாம் எடுத்து பைல போட்டேன். சட்டை கையை மடிச்சி விட்டு, டக் இன் பண்ண சட்டையை வெளியே எடுத்து விட்டேன். தலை முடியை கொஞ்சம் கலைச்சி விட்டேன். முதல்ல வந்த ஆட்டோவை நிறுத்தி KK நகர்னு சொன்னேன். 

”ஹண்ட்ரட் ருப்பீஸ் சார்” 

“இல்லைங்க நான் வரும் போது எண்பது ரூபாய் தான் கொடுத்தேன். எண்பதுனா சொல்லுங்க போகலாம்”

”சரிங்க சார். ஏறுங்க”

...................

நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே. மொழி தெரியாதவங்க சென்னை வந்தா என்ன பண்ணுவாங்க? Chennai is hellனு அவுங்க சொல்றது எனக்கு நியாயமாத்தான் பட்டுது. தமிழ் பேசறாங்கனு ஒரே காரணத்தால இவனுங்க ஏமாத்தறதை என்னால ஏத்துக்க முடியல. பெங்களூர் இஸ் பெட்டர். கோயமுத்தூர் இஸ் பெஸ்ட். 

Thursday, February 12, 2009

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
....

2 நிமிடம் கழித்து

கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:

கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

Saturday, February 07, 2009

Software லொள்ளு

டேய் மச்சான், இன்னைக்கு திடீர்னு எங்க க்ளைண்ட் எங்க கம்பெனில எல்லா அக்கௌண்டையும் க்ளோஸ் பண்ணிட்டாண்டா. என்ன பண்றதுனு எல்லாரும் டென்ஷனா இருக்கும் போது எங்க ஹெச்.ஆர் என்னை கூப்பிட்டான். நானும் சரினு போனேன். அப்ப என்னை பார்த்து, 

”என்னங்க சிவா இப்படி ஆகிடுச்சி, படுபாவி பசங்க. எல்லாருமே சேர்ந்து உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே! சீட்டுக்கு போய் என்ன பண்ண போறீங்க சிவா, டெஸ்டிங் பண்ண போறீங்களா? மெயிண்டனன்ஸா இல்லைனா ஏதாவது ஜாவா கோடிங்... இல்லை நான் வேணா ஏதாவது கால் சென்டர்ல சொல்லி வேலை வாங்கி தரதா? 
ஐயய்யோ ஆனா அதுக்கெல்லாம் முன் அனுபவம் வேண்டுமே. உக்கார்ந்த இடத்துலே நோகாம நோம்பு கும்பிடற ஒரு வேலை இருக்கு செய்யறீங்களா? அதான் Naukriல ரெஸ்யூம் போட்டு வேலை தேடறது.” அப்படினு சொல்லிட்டாண்டா...

.......

எனக்கு ரெசஷன் பயத்தை காட்டிட்டானுங்க பரமா. அவுங்களுக்கு ஏதாவது பண்ணனும் பரமா. ஏதாவது பண்ணனும். 

.......
ஏன்டா பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?

கூட வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுக்கறது இல்லைங்கற மாதிரி, சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...

......
மக்கள் உணர்ந்து கொள்ள இது 2000 ரெசஷனல்ல... ரெசஷனல்ல... ரெசஷனல்ல...
அதையும் தாண்டி மோசமானது.

......
உண்மை கம்பெனி க்ளைண்ட்ஸ்க்கு நாங்க ப்ராஜக்ட் பண்ண மாட்டோம்னு எங்க சொன்னோம். க்ளைண்ட்ஸா வந்து எங்ககிட்ட பிராஜக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னோம்

- விநாயக மூர்த்தி

Wednesday, October 01, 2008

Software Recession Comedy

இந்தியால இருக்குற மென்பொருள் நிறுவனங்களின் CEO எல்லாம் டாக்டரின் ரசிகர்களாக இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.

TCS : 
நீ 10%ஐ (வேலையை விட்டு) தூக்கினா தூசு
நான் தூக்கினா மாஸூடா 

(எப்படியும் 15,000 பேர் வெளிய வருவாங்க)


Satyam:
எவ்வளவோ தூக்கிட்டோம், இப்போ தூக்க மாட்டோமா?


Infosys:
எவன் வேலையை விட்டு தூக்கினா எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஹெட் லைன்ஸுல வந்து, சாப்ட்வேர் மக்கள் எல்லாம் கதி கலங்குவாங்களோ அவன் தான் Infosys.


Wipro:
நான் ஒரு தடவை (மக்களை) வேலையை விட்டு தூக்கணும்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் (ஏன்னா 80% ஸ்டாக் என்கிட்ட தான் இருக்கு).


CTS: 
வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்க, CTSல இருக்கறவன் TCSல சேருவான் (ஃபீல்ட் சரியானவுடனே) TCSல இருக்கறவன் CTSல சேருவான்.

Wednesday, August 27, 2008

கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்

முன்குறிப்பு: சிரிக்க மட்டுமே...

சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் யார் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்கே வருகிறார் நாரதர்.

அவரிடம் சென்று அவர்கள் நாரதரிடம், எங்களுள் சிறந்தவர் யார் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

நாரதர்: வள்ளல் சிகாமணிகளே!!! எனக்கு கலகம் செய்துதான் பழக்கமே தவிர, தீர்ப்பு சொல்லி பழக்கமில்லை. அதனால் நீங்கள் சரியாக தீர்ப்பு சொல்லும் யாரிடமாவது செல்லலாம்.

பாரி: நான்முகன் புதல்வனே!!! இந்த கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதியானவரை நீரே கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

நாரதர்: மன்னர் மன்னா!!! மேலுலகில் அனைவரும் பிஸியாக உள்ளனர். அதனால் பூவுலகில் இருக்கும் ஒருவரை நீங்கள் அணுகலாம்.

காரி: மூவுலகில் பவனம் வருகின்ற மூர்த்தியே!!! பூவுலகில் இதற்கு சரியாக தீர்ப்பு வழங்கும் தகுதி படைத்தவர் யார் என்றும் நீரே சொல்ல வேண்டும்.

நாரதர்: தானத்தில் சிறந்தவனே!!! பூலோகத்தில் இதற்கு தீர்ப்பு சொல்ல பல பேர் இருக்கிறார்கள். இப்போழுது யார் ஃபிரியாக இருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறேன்.

நாரதர் தன் ஞான திருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: குப்புசாமி வாத்தியார்னா பாடம் சொல்லி குடுக்குற வாத்தியார் இல்ல, சிலம்பம் சொல்லி குடுக்குற வாத்தியார்னு ஊருக்கே தெரியாத உண்மையை கண்டுபிடிச்ச "சின்ன கவுண்டர்" தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார்.

கடையேழு வள்ளல்கள்: ஐய்யய்யோ!!!

நாரதர்: கவலைப்பட வேண்டாம். இதை போல் பல பேர் இருக்கிறார்கள்.

மீண்டும் ஞானதிருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: பைனான்ஸ் கம்பெனில பணத்த போட்டு ஏமாந்தவங்களுக்கு "மழ நிக்கறதுக்குள்ள" னு சொல்லி பணத்தை வாங்கி கொடுத்த ரெட் அஜித்தை காணவில்லை.

க.வ: ஓ!!! நோ

நாரதர்: சரி இதற்கு சரியான ஆள் நம்ம நாட்டமையோட 3வது பங்காளி கவுண்டர்தான்.

பேகன்:பிரபோ!!! அவர் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா???

நாரதர்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வெச்சிருந்ததை கண்டு பிடித்தது அவர்தான்.

ஆய்: ஓ!!! அவ்வளவு திறமைசாலியா??? அப்ப அவரிடமே செல்வோம்... அனைவரும் என்ன சொல்கிறீர்கள்???
அனைவரும் ஒத்துக்கொண்டு கவுண்டர் வீட்டுக்கு செல்கிறார்கள்.

வெளியே அவருடைய தந்தை செந்திலை பார்த்து விஷயத்தை சொல்கிறார்கள். செந்தில் அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.

செந்தில்: மை சன்!!!

கவுண்ட்ஸ்: என்னடா பைசன்!!! சவுண்டு கொடுக்கற???

செந்தில்: மை சன்! விருந்தாளிங்க வந்துருக்காங்க... அவுங்க முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க???

கவுண்ட்ஸ்: உனக்கு எங்க இருந்து வந்துச்சுடா மானம்? அதுசரி அது யார்டா நம்ம வீட்டுக்கு விருந்தாளி???

செந்தில்: கடையேழு வள்ளல்களும் நம்ம வீட்டுக்கு உங்கிட்ட ஒரு வழக்கு சம்பந்தமா வந்துருக்காங்க!!! நீ தான் தீர்ப்பு சொல்லனுமாம்...

கவுண்ட்ஸ்: சத்தியராஜ் நடிச்ச படம் வள்ளல் தெரியும். அதுயார்டா கடையேழு வள்ளல்???

செந்தில்: கடைசியா இருந்த 7 வள்ளல்கள்.

கவுண்ட்ஸ்: அது சரி... நம்மகிட்ட தீர்ப்புகாக வந்துருக்காங்க... அதனால ஐ கிவ் ரெஸ்பெக்ட்யா!!! பிரச்சனை என்ன சொல்லுங்க???

பாரி: எங்களில் யார் சிறந்த கொடையாளி என்று தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

கவுண்ட்ஸ்: ஓ!!! இது ரொம்ப சாதாரண விஷயம்... சரி நீங்க என்ன என்ன செஞ்சிங்கனு சொல்லுங்க.... ஐ கிவ் தீர்ப்பு...

பாரி: நான் தான் பாரி... பரம்பு மலை அரசன்...

கவுண்ட்ஸ்: அதுக்கு என்ன இப்ப??? நீ என்ன பண்ணனு சொல்லு

பாரி: முல்லை கொடிக்கு தேர் கொடுத்தேன்...

கவுண்ட்ஸ்: எது நம்ம மூணாவது சந்து முக்கு வீட்ல இருக்கே அந்த முல்லைக் கொடிக்கா????

செந்தில்: மை சன்... அவுங்கள பத்தி தப்பா பேசாதீங்க... அவுங்க உங்களுக்கு சித்தி முறை ஆகறாங்க...

கவுண்ட்ஸ்: டேய் தகப்பா... நீ அவளையும் விட்டு வெக்கலயா... இவுங்க எல்லாம் போகட்டும்... உனக்கு இருக்கு

பாரி: இல்லை இல்லை.... நான் சொன்னது செடி, கொடி வகையை சார்ந்த முல்லை கொடி... அது படற வழியில்லாமல் வாடியதை பார்த்து என் மனம் பதைத்ததால் அதற்கு நான் சென்ற தேரை பரிசாக வழங்கினேன்

கவுண்ட்ஸ்: ஏன்டா... ஆனா ஊனா யாரங்கே யாரங்கேனு கையை தட்டுவீங்க... இதுக்கு ஒரு தடவை யாரங்கேனு கைய தட்டி குச்சி நட சொல்றத விட்டுட்டு அவ்வளவு காஸ்ட்லி தேர விட்டுட்டு வந்துருக்க... அது என்ன தேர்ல ஏறி நகர்வலமா வர போகுது. உனக்கு மூளையே இல்ல. யு ஆர் அன்செலக்டட்... நெக்ஸ்ட்...

பேகன்: என் பெயர் பேகன். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை வழங்கினேன்.

கவுண்ட்ஸ்: யாரு 16 வயதினிலேல வருமே அந்த மயிலுக்கா???
16 வயது வந்த மயிலே மயிலே
என்னை பாடா படுத்துதடி மயிலே மயிலே

கவுண்டர் தன்னுடைய வழக்கமான பாணியில் கையையும் காலையும் தூக்கி ஆட ஆரம்பிக்கிறார்.

பேகன்: இல்லை இல்லை... நான் சொல்வது பறவை இனத்தை சேர்ந்த மயில்.

கவுண்ட்ஸ்: ஏன்டா உங்க ரவுசுக்கு எல்லாம் அளவே இல்லையா??? அது அப்படியே முச்சு முட்டி செத்துருக்கும்... அப்பறம் கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு மயில் கறி சாப்பிட்டிருப்பீங்க... யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்... நெக்ஸ்ட்

ஆய் எழுனி: என் பெயர் ஆய் எழுனி.

கவுண்ட்ஸ்: என்ன மேன் பெர் இது??? இது பேரா??? இது பேரா??? யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்

செந்தில்: மை சன்... அதுக்குள்ள அன்செலக்ட் பண்ணிட்டீங்க...

கவுண்ட்ஸ்: ஏன்டா இது என்ன வாய்ல வர விஷயமா??? ஏன் ஒரு அஜித், விஜய், சூர்யானு பேர் வெச்சிக்க வேண்டியதுதான?... அவன் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்.

மற்ற நால்வரும் அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல அஞ்சுகிறார்கள்.

கவுண்ட்ஸ்: ஹு இஸ் தி நெக்ஸ்ட்???

செந்தில்: மை சன். அவுங்க எல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கே பயப்படறாங்க...

கவுண்ட்ஸ்: ஆமாம் இவனுங்க என்ன பண்ணிருப்பானுங்கனு தெரியாதா??? இவனுங்கள பத்தி பாட்டு பாடற 4-5 அள்ளக்கைங்கள வச்சிக்கிட்டு அவனுங்களுக்கு மக்கள் வரி பணத்துல இருந்து வர காச அள்ளி வீசிருப்பானுங்க... இவுங்கள எல்லாம் பாத்துதான் இப்ப இருக்குற அரசியல்வாதிங்க எதுவும் தெரியாத ஜால்ரா கேஸ்ங்கல எல்லாம் மந்திரி ஆக்கறானுங்க...

எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...

செந்தில்: நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு....

கவுண்ட்ஸ்: ஏன்டா அந்த முல்லைக்கொடி பொண்ணு அல்லிராணிய எப்படியாவது நான் கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா அவளை எனக்கு தங்கச்சியாக்கிட்ட... உன்ன நான் இன்னைக்கு பலி போடாம விடமாட்டன்...

கவுண்டர் துரத்த செந்தில் எஸ்கேப் ஆகிறார்.

Wednesday, July 09, 2008

PPIகளின் அட்டகாசங்கள்

NRI னா Non Returning Indiansனு மாறி பல வருஷமாயிடுச்சி. எங்கள மாதிரி ப்ராஜக்ட்க்காக வந்தவங்களுக்கு இனிமே PPIனு தான் சொல்லனும். அது என்ன PPI னு கேக்கறீங்களா? அதான் பொழைப்புக்காக புலம்பெயர்ந்த இந்தியர்கள் இல்லைனா பொட்டி தட்ட புலம்பெயர்ந்த இந்தியர்கள்னு வேணாக்கூட வெச்சிக்கலாம்.

ஆனா அப்படி ப்ராஜக்ட்டுக்காக வந்துட்டு ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இருந்துட்டு இவுங்க எல்லாம் இந்தியா வந்து பண்ற அலும்புக்கு அளவேயில்லை. (Not me.. I am a good guy.. u know) அமெரிக்காவுல இருந்த இந்த மாதிரி வரவங்க எல்லாம் என்ன என்ன அலும்பு பண்றாங்கனு சொல்ற பதிவு தான் இது.

முதல் விஷயம் யாரும் ட்ராபிக் ரூல்ஸயே மதிக்கறதில்லை. லேன் சேஞ்ச் பண்ணும் போது யாரும் இண்டிக்கெட்டரே போட மாட்றானுங்கனு ஃபீல் பண்ணுவானுங்க. (ஏன்டா, நம்ம ஊர்ல இருந்த வரைக்கும் லேன் எதுக்குனு தெரியுமா? கவர்மெண்டே கைல காசு நிறைய இருக்குனு என்ன பண்ணனும்னு தெரியாம ரோடுல கோடு போட்டு வெச்சிருக்கானுங்க. நம்ம டூ வீலர்ல போறவங்க எல்லாம் அந்த கோட்டு மேலே போனா ஜாலியா இருக்கும்னு போவானுங்க. கார்ல போறவங்க ப்ராக்டீஸ் பண்ணறதுக்கு வசதியா இருக்கும்னு அந்த கோடு காருக்கு நடுவுல வர மாதிரி ஓட்டி பழகுவானுங்க. இதுல லேன் சேஞ்ச்க்கு இண்டிக்கேட்டரா? அவன் அவன் திரும்பறதுக்கே இண்டிக்கேட்டர் போட மாட்டானுங்க இதுல இது வேறையா?)

"Z" - இதை இசட்னு சொல்ல மாட்டானுங்க. Zeeனு தான் சொல்லுவானுங்க.

Curdனு சொல்ல மாட்டானுங்க. Yogurtனு தான் சொல்லுவானுங்க.

Sauceனு சொல்ல மாட்டானுங்க. Ketch Upனு தான் சொல்லுவானுங்க.

"301" இதை த்ரி சீரோ ஒன்னுனு சொல்ல மாட்டானுங்க. த்ரி "ஓ" ஒன்னுனு தான் சொல்லுவானுங்க.

Purseனு சொன்னா சிரிப்பானுங்க. Walletனு தான் சொல்லனும்னு சொல்லுவானுங்க. (பர்ஸ் பொண்ணுங்க தான் யூஸ் பண்ணுவாங்கனு சொல்லுவானுங்க)

பீசாக்கு சாஸ் தொட்டு சாப்பிடறதை பார்த்தா கிண்டல் பண்ணுவானுங்க.

மைக்ரோவேவ் இல்லாம எப்படி சமையல் செய்யறதுனு கேள்வி கேட்பானுங்க. (என்னுமோ Father of Foreign Country மாதிரி பில்ட் அப் கொடுப்பானுங்க.)

ரோட்டை க்ராஸ் பண்றதுக்குள்ள கூட வர நம்ம உயிர வாங்கிடுவானுங்க. கேட்டா நடந்து போறவனுக்கு கார்ல போறவன் வெயிட் பண்ணனும்னு சொல்லுவானுங்க. (அப்படி நம்ம ஊர்ல நின்னா கண்ணகி சிலைக்கு பக்கத்துல அதே மாதிரி நாமலும் சிலையா நிக்க வேண்டியது தான்)

வீட்டு அட்ரஸ் சொன்னா Map Questல வழி பார்ப்பானுங்க.

இண்டர் நெட்ல படம் டவுன்லோட் பண்ணி பார்க்கலாம்னு சொல்லுவானுங்க. (வெண்ட்ரு.. இங்க படம் DVDயே 20 ரூபாய்ல வாங்கிடலாம்னு சொன்னா. "Oh Yeah.. I forgot that" அப்படினு பில்ட் அப் கொடுப்பானுங்க).

அமெரிக்காவுல எடுத்த போட்டோவை எல்லாம் காட்டி தினமும் உயிர வாங்குவானுங்க.

பெங்களூர்ல இருந்த வரைக்கும் லால் பாக் கூட போயிருக்காது. ஆனா அமெரிக்கா போனவுடனே இயற்கையை ரசிச்சி ஃபோட்டோ எடுத்துன்னே சொல்லி நம்மல கொல்லுவானுங்க.

Petrolனு சொல்ல மாட்டானுங்க.. Gasனு தான் சொல்லுவானுங்க.

போலிஸ்னு சொல்ல மாட்டானுங்க. காப்னு தான் சொல்லுவானுங்க. (கிடைக்க போறது என்னுமோ ஆப்பு. அதுல என்ன காப்பு?)

அமெரிக்கால இருக்கும் போது எல்லாத்தையும் ரூபாய்க்கு மாத்தி யோசிப்பானுங்க. இந்தியா வந்தவுடனே எல்லாத்தையும் டாலர்ல கணக்கு பண்ணுவானுங்க. ஒரு தோசை 45 ரூபாய்னா, ஒரு டாலர் தானே. ரொம்ப சீப்னு சொல்லுவானுங்க.

...............

உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லலாம்... இதெல்லாம் கண்டிப்பா நான் பண்ணமாட்டேனு இப்பவே வாக்கு கொடுத்துக்கறேன்...

Monday, June 30, 2008

மணல் கயிறு = Linked List

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...