தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, September 30, 2008

I am an hosteler - 3

வார நாட்கள்ல தினசரி அட்டவனையை பார்த்தாச்சு. இப்ப வாரயிறுதி அட்டவனையை பார்க்கலாம்.

சனி

5:30 - வழக்கம் போல சனிக்கிழமையும் 5:30க்கு எழுந்திடனும். எப்பவாது வெள்ளிக்கிழமை படம் போட்டிருந்தா 6 மணிக்கு எழுந்திரிக்கலாம். அதே மாதிரி பல்லு விளக்கி, தலை சீவி 5:55 ஸ்டடிக்கு உட்கார்ந்திடனும்.

5:55-7:45 - வழக்கம் போல ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம்.

7:45 - 8:30 - பிரேக் ஃபாஸ்ட். இன்னைக்கு பொங்கல் போடுவாங்க. ஆனா நான் சனிக்கிழமை விரதம். அதனால சாப்பிட போகமாட்டேன். எனக்கு பொங்கல் ரொம்ப பிடிக்கும். கடைசி வரை அங்க பொங்கல் சாப்பிடவேயில்லை

8:30 - 9:55 - விளையாட்டு நேரம். விளையாடறதுக்கு எல்லாம் ஷார்ட்ஸ் டீ-சர்ட் தான் போட்டிருக்கனும். இதை போன பதிவுல விட்டுட்டேன். இந்த விளையாட்டு பொருட்களை வைக்கறதுக்கு ஒரு ரூம் இருக்கும். அதுக்கு லீடர் பேரு பால் ரூம் மானிட்டர். +1ல நான் பால் ரூம் மானிட்டராத்தான் இருந்தேன். அப்பறம் பாதியிலே பள்ளி மாறிட்டேன். பால் ரூம் மானிட்டரா இருக்கறதுல நிறைய அட்வாண்டேஜ் இருக்கு. முக்கியமான ஒண்ணு, புது தண்ணியில குளிச்சிட்டு லேட்டா ஸ்டடிக்கு போகலாம்.

9:55 - 10:30 - குளியல்.

10:30 - 12:25 - ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம்.

12:25 - 1:30 - லன்ச் டைம்.

1:30 - 2:30 - Recreation டைம். நான் இந்த நேரத்துல தூங்குவேன். இல்லைனா செஸ் விளையாடிட்டு இருப்பேன். சில சமயம் ராஜேஷ் குமார் நாவல் படிச்சிட்டு இருப்பேன். இல்லைனா துணி துவைக்கிற நண்பர்களுக்கு பக்கத்துல உட்கார்ந்து கதை பேசிட்டு இருப்பேன். நான் 7வதுல இருந்து ஹாஸ்டல்ல படிச்சாலும் துணி துவைச்சதே இல்லை.

வாரம் வாரம் வீட்ல இருந்து வந்து அழுக்கு துணியை வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு வாரம் கூட தவறாம ஞாயிற்று கிழமை எங்க அப்பா, அம்மா வந்தது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. வீக் எண்ட்னா நாம எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கும் போது அவுங்க ஒரு வாரம் கூட தவறாம வந்தது எவ்வளவு பெரிய சாதனைனு இப்ப தெரியுது.

2:30 - 4:30 - ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம். இந்த ஸ்டடில தான் நிறைய பேர் தூங்கி மாட்டுவாங்க. இந்த ஸ்டெடில தமிழ் தான் படிப்பேன். முதல் ரெண்டு மூணு மாசத்துலயே எப்படியும் எங்க புக் படிச்சி முடிச்சிடுவேன். அதுக்கு அப்பறம் அடுத்த வருஷம் புக் வாங்கி படிப்பேன். அதுவும் ரெண்டு மாசத்துல முடிச்சிட்டு அதுக்கு அடுத்த வருஷம் புக் வாங்கி படிப்பேன். அப்பறம் சீனியரோட வரலாறு புத்தகம் வாங்கி படிப்பேன். 

ஒன்பதாவது படிக்கும் போதே பனிரெண்டாவது வரைக்கும் தமிழ் புத்தகமும் (இலக்கியம் படிக்க கோனார் நோட்ஸ் விளக்கவுரை தான்), ஒன்பதாவது, பத்தாவது வரலாறு புத்தகமும் படிச்சி முடிச்சிட்டேன். சில சமயம் ஏழாவது, எட்டாவது பசங்களோட அறிவியல் புத்தகம் வாங்கி படிப்பேன். அப்ப அது எல்லாம் சுலபமா புரியும் :). ஆனா அதையெல்லாம் பாட புத்தகமா நினைக்காம கதை புத்தகமா படிப்பேன். அப்ப தான் தூக்கம் வராது. அந்த காலத்துல படிக்கறதுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. (ஆங்கிலத்துக்கு ஜெயக்குமார் நோட்ஸ்னு ஒண்ணு இருக்கும். யாருக்காவது ஞாபகமிருக்கா?)

4:30 _ 5:00 - டிபன். டீ பன் :)

5:00 - 6:00 - விளையாட்டு.

6 - 6:30 - குளியல்

6:30 - 8 - ஸ்டடி.

அப்பறம், சாப்பாடு, தூக்கம். சில சமயம் ஏதாவது கேசட் எடுத்துட்டு வந்து டெக்ல படம் போடுவாங்க.

ஞாயிறு (ரொம்ப சந்தோஷமான நாள்)

6:00 - இந்த ஒரு நாள் மட்டும் ஆறு மணி வரை தூங்கலாம். 6:25க்கு ஸ்டடி.


6:25 - 7:30 - ஸ்டடி.

7:30 - 8:15 ப்ரேக் ஃபாஸ்ட். இன்னைக்கு ரோஸ்ட். ரோஸ்ட்னா கொஞ்சம் மெல்லிசா பெருசா இருக்கும். அதுக்காக ஹோட்டல் மாதிரி எல்லாம் இருக்கும்னு நினைச்சிக்காதீங்க.

8:15:- 9:25 - விளையாட்டு.

9:30 - 10:30 - குளியல். இந்த நாள் ஆயில் பாத். நல்லா நல்லெண்ணெய் தேச்சி, புலி மார்க் சியக்காய் தூள் போட்டு தேச்சி குளிக்கலாம். இதுவும் கம்பல்சரி. மொதல்ல கொஞ்ச நாள் இந்த எண்ணெய், அப்பளம் சுட்டதுல மீதமான எண்ணெய்னு புரளியை நம்பி எண்ணெய் தேச்சி குளிக்காம ஏமாத்திட்டு இருந்தேன். அப்ப டான்சில்ஸ் வேற. அதுக்கு அப்பறம் ஆப்பரேஷன் பண்ணதுக்கப்பறம் தான் எல்லாம் சரியாச்சு. பின்னாடி ஆயில் பாத்னா முதல் ஆளா நிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆயில் பாத் சுகமே சுகம் தான்.

10:30 - 11:15 - ஸ்டெடி. இனிமே தான் முக்கியான விஷயமே.

11:15 - 11:30 வரை பதினஞ்சி நிமிஷம் Recreation டைம். அப்பவே எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வந்திடுவாங்க. இது நான் பதினொன்னாவது படிக்கிற வரைக்கும் நடந்தது. அப்ப சமோசா (வெங்காய சமோசா தான். எனக்கு உருளைக்கிழங்கு சமோசா பிடிக்காது), பலாப்பழ சீசன்ல பலாப்பழம் (வர வழியில தான் பண்ரூட்டி இருக்கு), மேங்கோ ப்ரூட்டி எல்லாம் வாங்கிட்டு வருவாங்க. சில சமயம் இட்லி கறிக்குழம்பு. இந்த பதினஞ்சி நிமிஷத்துல இதெல்லாம் சாப்பிட்டு அடுத்த ஸ்டெடிக்கு ஓடிடுவேன்.

11:30 - 12:25 - இந்த ஸ்டடில எதுவுமே படிக்க தோனாது. வெளில அப்பா, அம்மா காத்துட்டிருக்கறதே மனசுல இருக்கும். சில சமயம் அந்த வெறிலயே கூட நிறைய படிப்பேன். அப்ப அப்ப மனசை பொறுத்து மாறும். நான் முதல் முதல்ல ஏழாவதுல அடி வாங்கியது இந்த ஸ்டடி தான். தப்பு செஞ்சா தான் அடிப்பாங்க, நான் தப்பே செய்ய மாட்டேன். என்னை அடிக்கவே முடியாதுனு சொல்லி தான் நான் அந்த பள்ளிக்கூடத்துலயே சேர்ந்தேன். ஆனா தப்பு செய்யாமலும் அடி வாங்க முடியும்னு அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன். 

என் பக்கத்துல இருந்த பையன் என் நட்ராஜ் ஜாமெண்ட்ரி பாக்ஸை கீழ தள்ளிவிட்டுட்டான். அந்த சத்தம் கேட்டு வார்டன் அங்க வந்தாரு. யாரோட ஜியாமட்ரி பாக்ஸ்னு கேட்டு என்னை ஸ்டடி ஹால் நடுவுல வந்து நிக்க சொன்னாரு. நான் தள்ளிவிடலைனு சொன்னேன். ஜியாமட்ரி பாக்ஸ் கீழ விழுந்ததுக்கு ரெண்டு அடி, கூப்பிட்டவுடனே வெளிய வராம பதில் பேசனதுக்கு ரெண்டு அடி. மொத்தம் நாலு அடி. அதுவும் செம்ம அடி. எங்க அப்பா, அம்மா அதை பார்த்தாங்க. எனக்கு அழுகை தாங்கல. 

அது வரைக்கும் யாரும் என்னை அடிச்சதுமில்லை. அடி வாங்கிற மாதிரி நான் நடந்துக்கிட்டதுமில்லை. அதுக்கு அப்பறம் அந்த வார்டனை பார்த்து எங்க அப்பா பேசி நான் அவருக்கு செல்லப்பிள்ளையாகிட்டேன். ஸ்கூல்ல நல்லா படிச்சாலே போதும். எல்லாருக்கும் ஃபேவரைட்டா ஆகிடலாம். அதுக்கு அப்பறம் நிறைய அடி வாங்கிருந்தாலும் இது என்னால வாழ்க்கைலயே மறக்க முடியாது.

12:25 - 2:30 - லஞ்ச் + Recreation. முதல்ல வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த துவைச்சி, அயர்ன் பண்ணி கொண்டு வந்த துணி, அப்பறம் அந்த ஒரு வாரத்துக்கு சாப்பிட வாங்கிட்டு வந்த தீனி எல்லாம் கொண்டு போய் பாக்ஸ் ரூம்ல வெச்சிட்டு, அழுக்கு துணி எல்லாம் எடுத்துட்டு வருவேன். அப்பறம் வந்து சாப்பாடு. சாதம், ஆட்டு கறி குழம்பு, ஆட்டு கறி வறுவல் கண்டிப்பா இருக்கும் (புரட்டாசி மாதம் தவிர). எங்க அப்பா காலைல 5:00க்கு கடை திறந்த உடனே வாங்கிட்டு வந்துடுவாரு. அதை ஏழுரை மணிக்குள்ள சமைச்சி புறப்பட்டுடுவாங்க.புரட்டாசி மாசம்னா கீரை பருப்பு போட்டு கடைஞ்சிருப்பாங்க அப்பறம் உருளைக்கிழங்கு வறுவல். 1:30க்குள்ள சாப்பிட்டு முடிச்சிட்டு, அப்பா அம்மாவோட ஊர் கதை பேசிட்டு இருப்பேன்.

 எப்பவும் எங்க அம்மா சொல்றது இது தான். “நீ நல்லா படிச்சி உங்க மாமாங்க முன்னாடி எல்லாம் நாம பெருமையா வாழற மாதிரி வரணும் பாலாஜி. அதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்படறோம். நீ மட்டும் நல்லா படிக்காம போனா எல்லார் முன்னாடியும் உங்க நைனாவுக்கு தலை குனிவாகிடும். வரவுக்கு மீறி செலவு பண்ணி படிக்க வைக்கறோம். எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சிடு பாலாஜி. கடலூர்லயே ரெண்டு மாமா (அம்மாவோட அண்ணன்கள். ரெண்டு பேரும் இஞ்சினியர்ஸ். எங்க அப்பா க்ளார்க்) இருந்தும் அவுங்க வீட்ல எல்லாம் உன்னை தங்கி படிக்க வைக்காம இருக்கறதுக்கு காரணம், நாளைக்கு உங்க அத்தைங்க எல்லாம் எதுவும் சொல்லிடக்கூடாதுனு தான். எந்த காரணத்துக்காகவும் உன் படிப்புக்கோ, வேலைக்கோ அவுங்ககிட்ட நிக்கற மாதிரி வெச்சிடாதப்பா” (நாரயணன் அருளால இதை நான் காப்பாத்திட்டேன். அது மட்டுமில்லாம பத்தாவது, பணிரெண்டாவது ரெண்டுலயுமே எங்க குடும்பத்துல இது வரை நான் எடுத்த மார்க் தான் அதிகம். எனக்கு அப்பறம் நிறைய பேர் +2 படிச்சிட்டாங்க. ஆனா இது வரைக்கும் என் மார்க் தான் அதிகம்). இது ஒவ்வொரு முறையும் சொல்லுவாங்க. எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டார். அவருக்கு என் மேல எப்பவுமே நம்பிக்கை அதிகம்.

2:30 - 4:15 - ஸ்டெடி. இந்த ஸ்டெடில வெறித்தனமா படிப்பேன். தூக்கம் வந்தா எழுந்து நின்னுட்டு இல்லைனா வார்டன்கிட்ட சொல்லிட்டு முகம் கழுவிட்டு வந்து படிப்பேன். எப்பவும் ஹாஸ்டல்ல முதல் மாணவன்னு என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. முகம் கழுவ எழுந்து போறதெல்லாம் எல்லாருக்கும் விட மாட்டாங்க. என்னால கான்சண்ட்ரேட் பண்ண முடியலனு சொல்லிட்டு போய் முகம் கழுவுற தைரியும் நிறைய பேருக்கு இருக்காது.

4:15 - 4:45 - டிபன்

4:45 - 6 - விளையாட்டு

மறுபடியும் வழக்கம் போல தான் 9 மணி வரை.

9 - 10 : நைட் ஸ்டடி. இது மட்டும் என்னால முடியவே முடியாது. 9:30க்கு அப்பறம் கண்டிப்பா தூங்கி மாட்டிக்குவேன். அது என்ன ஞாயிறு மட்டும் நைட் ஸ்டடினு பாக்கறீங்களா? எங்க ஸ்கூல்ல வார வாரம் திங்க கிழமை காலைல பரிட்சை இருக்கும். இதுக்கு பேரு வீக்லி டெஸ்ட். மன்த்லி டெஸ்ட் எல்லாம் கிடையாது. முதல் ரெண்டு பீரியட் சேர்த்து டெஸ்ட் வைப்பாங்க. 25 மார்க். அதை அப்படியே நூத்துக்கு மாத்திக்குவாங்க. அஞ்சு வாரம் முடிஞ்சா ஒரு சைக்கிள் முடிஞ்சிடும். அதனால வார வாரம் ஞாயிறு நைட் ஸ்டெடி தான். சில சமயம் ஃபாதர் வந்தாருனா அவர்கிட்ட நான் எல்லாத்தையும் படிச்சிட்டேன், நீங்க எதுல இருந்து வேணா கேள்வி கேக்கலாம்னு சொல்லி புத்தகத்தை கொடுத்துடுவேன். அவரும் ரெண்டு மூணு கேள்வி கேட்டுட்டு விட்டுடுவாரு. வார்டன் மட்டுமிருந்தா விட மாட்டாரு. கஷ்டப்பட்டு பத்து மணி வரை முழிச்சிருக்கனும்.

இதோட St.Joseph பள்ளி அட்டவணை பதிவு முடியுது. ஆனா எப்படியும் என்னோட தனிப்பட்ட வாழ்க்கை அங்க எப்படி இருந்துச்சு. ஏழாவதுல 40% கூட அட்டெண்டன்ஸ் இல்லாத நான் எட்டாவதுல இருந்து பத்தாவது வரை 100% அட்டெண்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணது எப்படி? ஏழாவதுல இது பள்ளி கூடமே இல்லை நரகம்னு சொல்லிட்டு இருந்த நான் பின்னாடி இது தான் சொர்கம்னு சொல்ற அளவுக்கு எப்படி மாறினேன். ஏழாவதுல இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிற பசங்க கூட மட்டுமே பேசிட்டு இருந்த நான் வரும் போது தமிழ் மீடிய பசங்களோட மட்டுமே நண்பனா இருக்கற அளவுக்கு எப்படி மாறினேனு எல்லாம் கண்டிப்பா பதிவெழுதறேன். இந்த பதிவு நிறைய பேர் படிக்கறில்லைனாலும் என்னோட ஆசைக்காக எழுதன தொடர் இது. நிறைய இடங்களில் நான் என் பள்ளிக்கூடத்துல இன்னும் படிக்கிற உணர்வை தந்தது. விளையாடிட்டு வந்து லைன்ல நிக்கும் போது வரும் வேர்வை வாசனையை மீண்டும் நுகர்ந்தேன்.

மீண்டும் நுகர்வேன்....





Sunday, September 28, 2008

செந்தில் இல்லாம கவுண்டருக்கு காமெடி பண்ண தெரியாதா?

ஆமாம் இது சூப்பர் ஸ்டார் பட ரிலீஸூ. எல்லாம் ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு வந்து நிக்க போறாங்க...




நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலைய்யா. புண்ணாக்கு விக்கறவன், குண்டூசி விக்கறவன் எல்லாம் தொழிலதிபர்களாம்.



காந்தக்கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பார்க்கறேன்





யார் வந்திருக்கானு பாரு... கருவாடு வந்திருக்கு.



ரீலு அந்து போச்சு... அடிச்ச அடில அண்ட்ராயரு கிழிஞ்சி போச்சு.

அவுங்களையாவது மன்னிச்சிடலாம் அதர் கண்ட்ரி அதர் ஸ்டேட்டு




புது மனிதன்


அடப்பாவிகளா புளி சாதத்துல முட்டையை வெச்சி ஏமாத்தறீங்களா?





உள்ளூர் செலவானிக்கே வக்கில்லாம தான் இங்க வந்து நிக்கறோம். இதுல அந்நிய செலவானி வேறயா?



ரோமாண்டிக் லுக்





உள்ளத்தை அள்ளி தா க்ளாசிக்







உதய கீதம்



தேங்காய் பாம்...



வர வர இந்த ஹவுஸ் ஓனர் தொல்லை தாங்க முடியலை






இன்னும் நிறைய இருக்கு... இதெல்லாம் சும்மா சாம்பிள் தான்...

முருங்கை காய் சாம்பார், Eagle Eye, எங்க சின்ன ராசா, சர்வேசன்

வெள்ளிக்கிழமை பாட் லக் போயிட்டு வந்தாச்சு. Pot Luckனா என்னனு தெரியாதவங்களுக்கு, ஆளுக்கு ஒரு ஐட்டம் சமைச்சி எடுத்துட்டு போய் கலந்து கட்டி சாப்பிடறதுக்கு பேரு தான் பாட் லக். முன்ன எல்லாம் திருப்பதி போகும் போது அப்படித்தான் எடுத்துட்டு போவோம். எங்க வீட்ல இட்லி வெங்காய சட்னி, எங்க மாமா வீட்ல பூரி மசாலா, அப்பறம் இன்னும் ஒருத்தவங்க புளி சாதம் இப்படி எடுத்துட்டு வருவாங்க. கடைசியா எல்லாரும் கலந்து சாப்பிட்டுக்குவோம். இப்ப எல்லாம் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்னு சொல்லி புறப்பட்டுடறாங்க. யாருக்கும் செய்யறதுக்கு தெம்போ, மனசோ இல்லை :(

சரி அதை விடுங்க. அன்னைக்கு நான் காலி ஃபிளவர் செய்யலாம்னு பார்த்தா என் ரூமேட் தமிழ் நாடு ஐட்டம் ஏதாவது செய்டானு சொல்லிட்டான். சரினு சாம்பார் செஞ்சி எடுத்து போனேன். அதுவும் முருங்க காய் சாம்பார். எல்லாரும் ஃபோர்க்ல சாப்பிட்டு முருங்கை காயை அப்படியே விட்டுட்டாங்க (என்ன கொடுமை சரவணன் இது?). சாம்பார் எல்லாம் நல்லா கைல பிசைஞ்சி சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். 

அப்பறம் மீதமானதை கொண்டு வந்து ரெண்டு நாளா தோசைக்கு தோட்டு சாப்பிட்டு இருக்கோம்.


.......................


படத்துக்கு போயே ரொம்ப நாள் ஆகுதுனு நேத்து எப்படியும் போறதுனு முடிவு பண்ணிட்டோம். கடைசியா நான் பார்த்தது டார்க் நைட். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுவும் அந்த ஜோக்கர் சான்சே இல்லை. ரெண்டாவது தடவை பார்க்கனும்னு முடிவு பண்ணிருந்தோம். நேரம் கிடைக்கல. 

நேத்து Eagle Eye போயிருந்தோம். படத்துல நிறைய சீன் மத்த படங்கள்ல பார்த்த மாதிரியே இருந்தது. முதல் சீன் “Iron Man"ல வர மாதிரி ஆப்கானிஸ்தான்ல ஆரம்பிக்கிறது. அப்பறம் வாடகை குடுக்காம வீட்டு ஓனர்கிட்ட நாயகன் பேசறது "Spider Man”ஐ நினைவு படுத்தியது. அடுத்து ஃபோன் கால் வந்து ஓடுனு சொல்றது "Matrix"ஐ நினைவு படுத்தியது. அடுத்து ட்ராஃபிக் சிக்னலை எல்லாம் கட்டு படுத்தறது, F-16 எல்லாம் கொண்டு வந்து சேஸ் பண்றது “Die Hard"ஐ நினைவு படுத்தியது. கடைசியா க்ளைமாக்ஸ் "iRobot"வை நினைவு படுத்தியது. மொத்தத்துல எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்கானுங்க. மசாலா பிரியர்கள் பார்க்கலாம். 


.........................


நேத்து மதியம் எங்க சின்ன ராசா படம் பார்த்தேன். நிறைய தடவை பார்த்தாலும் பார்க்க அலுக்காத படம். ஒரு சின்ன ஸ்டோரி லைனை எவ்வளவு அழகான ஸ்க்ரின் ப்ளேவா மாத்திருக்காரு பாக்யராஜ். படத்துல ஆரம்பமும் முடிவும் பார்த்திபனோட குரல் கனீர்னு ஒலிக்குது. அப்ப பார்த்திபன்னு யாருக்கும் தெரிஞ்சிருக்காது இல்ல. 

இந்த படத்துல நிறைய பாடல்கள் இருந்தாலும் எல்லாமே அருமையான பாடல்கள். படத்துல நிறைய இடங்கள் அடல்ஸ் ஒன்லி தான். S J சூர்யா எங்க இருந்து எல்லாம் படிச்சிருக்காருனு பாக்யராஜ் படங்கள் பார்த்தா தெரியுது. பாக்யராஜ் படங்களை ரீ ரிலிஸ் பண்ணா டீசண்டா ஓடும்னு நினைக்கிறேன்.


.........................


சிறுகதை போட்டி வெச்சி ரொம்ப நாளாகுது. சர்வேசன், சிறில் அலெக்ஸ் ரெண்டு பேரும் (ரெண்டா?) ரொம்ப பிஸி போல. அடுத்து ஏதாவது போட்டி வெச்சா கொஞ்சம் சுவாரஸ்யமா போகும்னு நினைக்கிறேன். என்னோட சாய்ஸ் ”டீனேஜ்” கதைகள். அந்த வயசுல நடந்த பல விஷயங்களை சுவாரஸ்யமா சொல்றதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க. சில கிளு கிளுப்பு கதைகள் வரதுக்கும் சான்ஸ் இருக்கு. படிக்க குஜாலா இருக்கும் ;)

என்ன சர்வேஸ் ஓகேவா?

Friday, September 26, 2008

Subway, தீபாவளி, வெற்றி திருநகர், Coke

புரட்டாசி மாசம் வந்தாலும் வந்துச்சு, இந்த பத்து நாள்ல நாலு அஞ்சு தடவைக்கு மேல Subway தான். இல்லைனா BK (#6) , KFC, Taco Bell இப்படி மாத்தி மாத்தி சாப்பிட்டிருக்கலாம். நேத்து பிசாவும் சாப்பிட்டாச்சு. கரெக்டா இந்த மாசம் தான் Fall கலர் பார்க்க ஊர் சுத்துவோம். ஏதாவது காடு, மலைனு போய்ட்டு இருக்கும் போது வெஜ் மட்டும் சாப்பிடனும்னா கடுப்பா தான் இருக்கும். ஆனா இப்படி இருந்தா தான் சிக்கன் சாப்பிடாம வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை வரும்.


இன்னைக்கு ராத்திரி ஒரு பாட் லாக் வேற. அங்கயும் சிக்கன் சாப்பிடாம வெஜ் தான் சாப்பிடனும். மத்த பாட் லாக்ல எல்லாம் நான் சைவத்தை பத்தி யோசிக்கவே மாட்டேன். இப்ப நானே சைவம் அப்படிங்கறதால அதுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தாச்சு. நல்லா சமைக்கற ஒருத்தவங்களை வெஜ் ஃபிரைட் ரைஸ் செய்ய சொல்லியாச்சு. நான் காலி ஃபிளவர் ஃபிரை செய்ய போறேன். நமக்கு பிரச்சனையில்லை.

................................................

இந்தியாக்கு கிளம்பற தேதில கொஞ்சம் பிரச்சனையிருந்தது. நான் அக்டோபர் 25ஆம் தேதி போகனும்னு சொன்னேன். இங்க இருக்குற ஒரு மேனஜர் அதெல்லாம் முடியாது 31ஆம் தேதி தான் கிளம்பனும்னு சொன்னாரு. இன்னைக்கு இந்தியால இருக்கிற மேனஜர்கிட்ட பேசினதுல 25ஆம் தேதியே கிளம்பலாம்னு சொல்லிட்டாரு. இன்னும் வீட்ல சொல்லலை. இந்திய நேரம் காலைல ஃபோன் பண்ணி சொல்லனும். அது ஏன் 25ஆம் தேதினு பாக்கறீங்களா? 27ஆம் தேதி (தலை) தீபாவளி.

.................................................

அகிலனோட வெற்றி திருநகர் படிச்சிருக்கீங்களா? அருமையான கதை. தமிழ்நாட்ல இத்தனை தெலுங்கர்கள் எப்படி வந்தாங்கனு அதுல அழகா சொல்லியிருப்பாரு. விஜய நகர பேரரசும், கிருஷ்ண தேவ ராயரும் மனதை கொள்ளை கொள்வார்கள்.

ஆனா சோழ சாம்ராஜ்யம் அழிஞ்சி போய் தஞ்சைலயே சாப்பாட்டுக்கு கஷ்டப்படற மாதிரி எல்லாம் படிக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.

பொன்னியின் செல்வனளவுக்கோ, வேங்கையின் மைந்தன் அளவுக்கோ விறுவிறுப்பு இருக்காது. இருந்தாலும் படிக்க நல்லா இருக்கும். இது நான் போன வருஷம் இந்தியா போகும் போது ஃபிளைட்ல படிச்சிட்டு போனது.


....................................................

இந்தியால குடிக்கிற Cokeகிற்கும் அமெரிக்காவில் குடிக்கிற Cokeகிற்கும் டேஸ்ட்ல அதிக வித்தியாசம் இருக்கு. யாராவது உணர்ந்திருக்கீங்களா?


அங்க கோக்ல பூச்சி கொல்லி மருந்து இருக்குனு சொல்றாங்க. கோக் கம்பெனியோ இந்திய நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துறோம். அப்படி பூச்சி கொல்லி மருந்து இருந்தா அது தண்ணில இருந்து வரது தானு சொல்றாங்க.

கோக்கை சோதனை பண்ணி பார்க்கும் போது அதுல இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருப்பது உறுதினு வந்துச்சு. அதே மாதிரி அவுங்க சொன்ன நிலத்தடி நீரை சோதனை செய்து பார்த்தாங்களா? அப்படி சோதிக்கும் பட்சத்தில் நம் நிலத்தடி நீரிலே பூச்சி கொல்லி மருந்து இருக்குமானால் அதை சரி செய்ய வழிமுறைகள் இருக்கிறதா?

குடி நீரே விஷமானால் அது மிகவும் ஆபத்தான விஷயமில்லையா? இதை பற்றி ஆராய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? கோக்கை எதிர்த்து போராடிய கூட்டமும் அதை பற்றி எழுதிய மீடியாக்களும் அதை விட பெரிய பிரச்சனையாக வாய்ப்பிருக்கும் குடிநீர் மாசு பற்றி கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?

இதை பத்தி யாருக்காவது ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

.......

Thursday, September 25, 2008

I am an Hosteler - 2

காலைல சில நாட்கள் ப்ரேயர் இருக்கும். அப்படி ப்ரேயர் இல்லாத நாட்கள்ல மாரல் சயன்ஸ் பீரியட் இருக்கும். எனக்கு அந்த மாதிரி கதை கேட்க ரொம்ப பிடிக்கும். அப்ப க்ரிஸ்டியன்ஸ்க்கு கேட்டிசம் க்ளாஸ் (பைபிள் க்ளாஸ்) தனியா இருக்கும். இது இருபது நிமிஷம் இருக்கும். அதுக்கு அப்பறம் வழக்கம் போல நாலு வகுப்பு. மதியம் 12:35க்கு லஞ்ச்க்கு விடுவாங்க. இப்ப மறுபடியும் ஹாஸ்டல்.

12:35 - 1:25 - இதுல ரெண்டு பேட்ச் நடக்கும். நர்சரி லஞ்ச் டைம் 12:00 - 12:30. அதனால நாங்க வரும் போது அவுங்களுக்கு முடிஞ்சிருக்கும். சாப்பாட்டுக்கு நம்ம சொந்தமா தட்டு எடுத்துட்டு போகனும். நான் எப்பவும் சாப்பாட்டு தட்டு, பொறியல் வாங்க சின்ன தட்டு, டபரா, டம்ப்ளர் வெச்சிருப்பேன். அது பாதி நேரம் எவனாவது எடுத்துக்குவான். அப்ப நாம வேற எவன் தட்டையாவது ஆட்டய போட்டு சாப்பிட்டு வெச்சிடனும். ஆனா சாயந்திரம் வந்து தட்டை கண்டுபிடிச்சி வேற ஒரு பாதுகாப்பான இடத்துல வெச்சிடுவேன். ஒவ்வொரு வகுப்புக்கு குறிப்பிட்ட ரேக் இருக்கும். அதனால மத்த பேட்ச் பசங்க தட்டை எடுத்தா வார்டன் பார்த்து அடி பின்னிடுவாரு. அப்பவும் சில சமயம் ஏமாத்தி எடுக்க வேண்டியது வந்துடும். ஏன்னா நம்ம க்ளாஸ் ரேக்ல ஒண்ணுமே இருக்காது.

சில சமயம் தட்டு கிடைக்காம சாப்பிடாம போன சமயங்களும் உண்டு. அப்ப யாராவது நண்பர்கள் வார்டனுக்கு தெரியாம சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க. அப்படி வரும் போது மாட்டினா தர்ம அடி தான். (அந்த மாதிரி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த நண்பர்கள் கேசவன், இளங்கோ, மதன் எல்லாம் இப்ப டச்லயே இல்லை :( ). சரி ரொம்ப பர்சனல் எல்லாம் இதுல வேண்டாம். அதுக்கு வேற ஒரு தொடர் இருக்கு :)

இங்க சாப்பாடு செம ஸ்பீடா சாப்பிடணும். ஏன்னா அடுத்த பேட்ச்க்கு மக்கள் ரெடியா இருப்பாங்க. சாம்பார் வந்து அஞ்சு நிமிஷத்துல ரசம் வந்துடும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல மோர் வந்திடும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல க்ளீன் பண்றவர் வந்துடுவார். இப்படி வேகமா சாப்பிட்டு பழகனது இன்னும் போக மாட்டீங்குது. 

1:25 - 1:35  - ஸ்டடி டைம். பேருக்கு தான் ஸ்டடி டைம். ஆனா ஸ்கூலுக்கு பேசாம கிளம்பினா போதும். இப்ப லைனா போக வேண்டியதில்லை.

4:30 வரைக்கும் பள்ளிக்கூடம்.

4:30 - 5- டிபன். சுண்டல், பன்னு, கேக்கு ஏதாவது கொடுப்பாங்க. அப்படியே டீ. இது சாப்பிட்டதுக்கு அப்பறம் தான் நாங்க எல்லாரும் எஞ்சாய் பண்ற ப்ளே டைம்.

5 - 5:55 - இந்த நேரத்தில கண்டிப்பா விளையாடியே ஆகனும். உடம்பு சரியில்லைனா சிக் ரூம்ல இருக்கலாம். அதை தவிர வேற எந்த காரணத்துக்காவும் விளையாடாம இருக்க கூடாது. நல்லா வேர்வை வர விளையாடனும். அதனால "No Cricket". ஏன்னா பேட்டிங் டீம்னு சொல்லிட்டு 10 பேர் உட்கார்ந்திருக்க கூடாது. எங்க ஸ்கூல் ஸ்போர்ட்ஸ்ல எப்பவுமே பட்டையை கிளப்பும். ஃபுட் பால் கிரவுண்ட் - 3. (எல்லாமே ஸ்டேட் லெவல் மேட்ச் நடத்துற தகுதியோட இருக்கும்). ஹாக்கி கிரவுண்ட்-2. வாலி பால் கோர்ட்-4. பாஸ்கெட் பால் கோர்ட்-5, பால் பேட்மிண்டன் கோர்ட்-4. மொத்தத்துல இப்படி ஒரு ஸ்கூல நீங்க பார்த்திருப்பீங்களானு சொல்ல முடியாத அளவுக்கு பெரிய ஸ்கூல்.

5:55க்கு மணி அடிக்கும். எல்லாரும் வந்து ஹாஸ்டெல் முன்னாடி வகுப்பு வாரியா லைன்ல நிக்கனும். ஒரு அஞ்சு நிமிஷம் வேர்வை அடங்கற வரைக்கும் அங்க காத்திருக்கனும். அதுக்கு அப்பறம் தான் ஹை லைட்டே. குளிக்கறதுக்கு பாத் ரூமெல்லாம் கிடையாது. நிறைய தொட்டி கட்டி விட்டுருப்பாங்க. எல்லாரும் ஷார்ட்ஸோட தான் குளிப்பாங்க. எல்லாரும் கைல மக்கும், சோப்பும் எடுத்துட்டு போகனும். வார்டன் வந்து கை தட்டுவார். எல்லாரும் தண்ணி எடுத்து ஊத்திக்கனும். அடுத்து ஒரு 4-5 நிமிஷத்துல மறுபடி கை தட்டுவார். அப்ப எல்லாரும் சோப் போட ஆரம்பிக்கனும். மறுபடி கை தட்டுவார். மறுபடியும் தண்ணி எடுத்து ஊத்திக்கனும். அடுத்து கை தட்டினார்னா இடத்தை காலி பண்ணனும். எந்த காலமா இருந்தாலும் பச்சை தண்ணி தான். சுடு தண்ணி வேணும்னா ஸ்பெஷல் பர்மிஷன் + பதினைஞ்சி ரூபா எக்ச்ட்ரா. அவுங்க மட்டும் 5:45க்கு வந்து குளிக்கலாம். 

சோப்பு போட்டு முடிச்சிட்டு தண்ணியை எடுத்து ஊத்த ஆரம்பிக்கும் போது ஒரே நிமிஷத்துல தொட்டி முழுக்க சோப்பா ஆகிடும். அந்த தண்ணியையே எடுத்து ஊத்திக்குவோம். இப்ப நினைச்சா ஒரு மாதிரி இருக்கு. அப்ப எதுவும் தெரியல. ஒரு மாசத்துல எல்லாம் பழகி போச்சு. இதுல நான் சொல்ற மாதிரி எல்லாரும் மக் வெச்சிருக்கறது ஐடியல் கண்டிஷன். ஆனா ஒரு மக் தான் ஏழெட்டு பேர் பயன்படுத்துவோம். வேகமா தண்ணி எடுத்து ஊத்திட்டு அடுத்தவனுக்கு கொடுத்துடுவோம். குளிச்சி முடிச்சிட்டு போய் வேகமா துணி மாத்திட்டு வந்து ஷார்ட்ஸும், ஜட்டியும் அந்த தொட்டி தண்ணில துணி சோப் போட்டு துவைச்சிடுவோம். 

6:25 - 8 - இது எல்லாத்தையும் முடிச்சிட்டு 6:25 ஸ்டடில போய் உட்காரணும். இந்த ஸ்டடில படிச்சா எல்லாமே மண்டைல ஏறிடும். 7:30 வரைக்கும் எது படிச்சாலும் மண்டைல ஏறிடும். அதுக்கு மேல பசிக்க ஆரம்பிச்சிடும். 7-8 டியூஷன் போகனும்னா போகலாம். டியூஷன் போனா என்ன ஒரு நல்ல விஷயம்னா ஜாலியா பேசலாம். எப்படியும் ஸ்கூல் வாத்தியாருங்க தான் வருவாங்க. நம்ம ஒண்ணு அவுங்ககிட்ட பேசலாம், இல்லை பசங்ககிட்ட பேசலாம். எப்பவுமே நான் வாத்தியாருங்களுக்கு செல்லமா தான் இருந்திருக்கேன். அதனால என்னை எதுவும் திட்ட மாட்டாங்க. 10வதுல மட்டும் டியூஷன் போகலை. ஏன்னா நல்லா படிக்கனும்னு ஒரு எண்ணம் தான். இப்பவும் என் நம்பிக்கை டியூஷன் போனா ஜாலியா அரட்டை அடிக்கலாம். வகுப்பு நேரத்தில கவனிக்காதது எதுவும் அங்க சொல்லி தர போறதில்லை. 

7:30 வரை ஏதாவது படிக்க வேண்டியதை படிப்பேன். அதுக்கு பிறகு கண்டிப்பா கணக்கு பாடம் தான். பசிக்கும் போது கணக்கு தான் படிப்பேன். அதே மாதிரி சனி, ஞாயிறும் கணக்கு படிக்க நிறைய ஸ்டடி டைம்ஸ் இருக்கு.

8- 8:55 டின்னர் + Recreation Time. இந்த நேரத்துல வழக்கம் போல ஒரு பேட்ச் சாப்பிடும். இன்னொரு பேட்ச்க்கு ரெக்ரியேஷன். அதாவது நண்பர்கள் கூட ஜாலியா பேசலாம். சாப்பிடும் போதோ, குளிக்கும் போதோ, விளையாடும் போது (தேவையில்லாமல்) பேச கூடாது. அப்படி பேசினா அடி பட்டையை கிளப்பிடுவாங்க. நான் முதல் முறை அடி வாங்கனது இன்னும் ஞாபகமிருக்கு. அது ஒரு ஞாயிறு. சேர்ந்த இரண்டாவது மாதம். அம்மா, அப்பா வந்திருந்தாங்க (வார வாரம் வருவாங்க). செல்லோ டேப் சுத்தின பிரம்பால நாலு அடி. பின்னாடி. ரொம்ப வலிச்சிது. சரி அடுத்த பதிவுல அதை பார்க்கலாம்.

அந்த டைம்ல நம்ம பாய் எல்லாம் எடுத்து கரெக்டா இடம் பார்த்து போட்டு வெச்சிடனும். இதெல்லாம் கூட்டமா சேர்ந்து தான் செய்வோம். அப்படியே பேசிக்கிட்டே. நம்ம லேட்டா போனால் நம்ம பெட் கிடைக்காது. அதனால சீக்கிரம் போய் கண்டுபிடிச்சி வராண்டாவை பெருக்கி பெட்டை போட்டு வரணும். மழை பெஞ்சா க்ளாஸ் ரூம்ல போய் படுக்கனும். அதுக்கு ஏத்த மாதிரி இடம் பிடிக்கனும். அப்பறம் போய் கீழ மண்ல உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்கலாம்.

8:55- Attendance + Prayer 8:55 க்கு மணி அடிக்கும். எல்லாரும் ஹாஸ்டல் முன்னாடி போய் நிக்கனும். அட்டெண்டென்ஸ் எடுப்பாங்க. ஒரு ஒரு க்ளாஸ்க்கு ஒரு ஹாஸ்டல் லீடர் (மானிட்டர்) இருப்பான். அவன் தான் அட்டெண்டென்ஸ் எடுத்து சொல்லுவான். அது அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சிடும். அடுத்து ஏதாவது இன்ஸ்ட்ரெக்‌ஷன் கொடுக்கனும்னா வார்டன் கொடுப்பாரு. அப்பறம் ஏதாவது நன்னடத்தை கதை சொல்லுவாரு.

 வாரத்துல ரெண்டு நாள் ஃபாதர் வருவாரு. அவர் வந்தா அட்டகாசமான கதை சொல்லுவாரு. எதுவுமே கிருத்துவ மத சம்பந்தமா இருக்காது. சில சமயம் இந்து தெய்வங்களின் கதையையும் சொல்லுவார். எனக்கு கதை கேட்க எப்பவுமே பிடிக்கும். அதுக்கு அப்பறம் எல்லாரும் போய் படுத்து தூங்கனும். நல்லா ஓடி விளையாண்டதால சீக்கிரமே தூக்கம் வந்திடும். என்னால அப்பவெல்லாம் 9:15 மேல முழிச்சிருக்க முடியாது. 

சனிக்கிழமை ராத்திரி படம் போடுவாங்க. அதுக்கூட நான் பார்க்க மாட்டேன். ஞாயித்தி கிழமை நைட் ஸ்டடி இருக்கும். அதுல எப்பவுமே நான் தூங்கி மாட்டிக்குவேன். ஏன்னா அப்ப எல்லாம் என்னால 9:30க்கு மேல எந்த காரணத்துக்காவும் முழிச்சிருக்க முடியாது. (எவ்வளவு மாறிட்டேன்). அடுத்த நாள் காலைல 5:30க்கு எழுந்திரிக்கனும். அடுத்த பகுதில வீக் எண்ட் பத்தி பார்க்கலாம்...

 

லேப்டாப், மெமெண்டோ, எண்ணெய் கத்திரிக்காய், கூகுள் ஃபோன்

இன்னும் ஒரு வாரத்துக்கு கண்டதையும் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். 

இந்தியா வரதால புது லேப் டாப் வாங்கிருக்கேன். HP லேப் டாப். வெயிட் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு. நவம்பர் கடைசில கிளம்பற மாதிரி இருந்திருந்தா கருப்பு வெள்ளி (Black Friday - Day After Thanks giving day) சேல்ல வாங்கியிருக்கலாம். இதுவும் ஓரளவு நல்ல டீல் தான். லேப் டாப் முந்தா நேத்து தான் வந்துச்சு. 

Deals2buy.comல பார்த்து வாங்கினேன்.
(HP Pavilion dv6700t, Intel(R) Core(TM) 2 Duo T5750, 2.0GHz, 15.4" WXGA, 3GB RAM, 250GB, LightScribe SuperMulti 8X DVD+/-R/RW with Double Layer Support, 256MB NVIDIA GeForce 8400M GS, 802.11 b/g, Webcam, Fingerprint Reader, High Capacity 6 Cell Battery, Windows Vista Home Premium » for $673.99 at HPShopping.com)


வீண்டோஸ் விஸ்டா நல்லா தான் இருக்கு. ஆனா இன்னும் முழுசா பயன்படுத்தி பார்க்கல. இத்தனை நாள் ஈ-கலப்பை பயன்படுத்தியிருந்தேன். லக்கி சொல்லி NHM பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன். இது ஈ-கலப்பையை விட நல்லா இருக்கு. இப்ப ப்ரவுசரும் Chromeதான். இத்தனை நாள் Firefox பயன்படுத்திட்டு இருந்தேன். மறுபடியும் மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

.................

போன வாரம் Memento படம் பார்த்தேன். கஜினிக்கும் மெமெண்டோவிற்கும் உள்ள ஒரே தொடர்பு அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அப்படிங்கற கான்செப்ட் மட்டும் தான். மத்தபடி இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மெமெண்டோ மிக அருமையான படம். ஆனா அலைபாயுதே, 12 Bயே புரியாத நம்ம ஊர்ல இப்படி படம் வந்தா கண்டிப்பா ஒரு நாள் கூட ஓடாது. 

ஸ்ரீதர் நாராயணனோ, கப்பியோ இதற்கு விமர்சனம் எழுதினால் அருமையாக இருக்கும். சான்ஸ் கிடைத்தால் தவறாமல் பார்க்கவும்.


..................

சமையல் குறிப்புல இன்னைக்கு கத்திரிக்காய் புளிக்குழம்பு @ எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 1 - 2
தக்காளி - 2
பூண்டு - 4-5 பல்
கத்திரிக்காய் - 8 - 10
வெந்தயம்.
புளி (இங்க concentrated Tamarind Paste கிடைக்கும். அதை தான் பயன்படுத்தறேன். நம்ம ஊர்னா ஒரு 100 கிராம் புளினு நினைக்கிறேன். கைல அளவு பார்த்தா தான் தெரியும்)
கடுகு
கருவேற்பிலை
நல்லெண்ணெய் - 3-4 ஸ்பூன்.

முதலில் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்த பின் கருவேற்பிலை, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறம் (எந்த பொண்ணுனு கேக்காதீங்க) வரும் வரை வதக்கவும், பிறகு தக்காளி போடவும். அது நன்றாக வெந்த கத்திரிக்காயை போடவும். கத்திரிக்காயை கட் பண்றதே ஒரு லாஜிக் இருக்கு. முன்னாடி காம்பை நீக்கிவிட்டு பின்னால் நான்காக குறுக்குவாட்டில் வெட்டவும் (அடுத்த முறை சமைக்கும் போது போட்டோ எடுத்து வெச்சிக்கறது நல்லது). இதை நன்றாக வதக்கவும். அதுல மேல வேணும்னா லைட்டா நல்லெண்ணெய் விடலாம். நன்றாக வதங்கிய பிறகு மூன்று நான்கு ஸ்பூன் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் மஞ்சள் போட்டு அரை டம்ப்ளார் தண்ணீர் ஊற்றவும். மசாலா ஓரளவு வெந்த பிறகு புளி கரைசலை ஊற்றவும். நல்லா கொதிச்சவுடன் உப்பு காரம் சரியாக இருக்கா என பார்த்து சரி பண்ணவும். கொஞ்சம் ஃபிரைட் ஆனியன்ஸூம் போடலாம்.

.....................

நான் ஆவலோட எதிர்பார்த்த கூகுள் ஃபோன் புக்கிங் ஆரம்பிச்சிடுச்சி. அடுத்த மாசம் 22ம் தேதி வெளியாகிறதாம். அடுத்த முறை எப்ப வருவனோ தெரியாது. எப்படியும் அப்ப மூணு நாலு ஜெனரேஷன் வந்திருக்கும்னு நினைக்கிறேன். 

.....................

Wednesday, September 24, 2008

I am an Hosteler - 1

என்னுடைய ஹாஸ்டல் அனுபவங்களை பத்தி நிறைய எழுதனும்னு ஆசை. எனக்கு கடலூர் புனித வளனார் பள்ளியில படிச்சேன் என்பது ரொம்ப பெருமையான விஷயம். நான் அதுக்கு அப்பறம் +2 ராசிபுரம் SRVல படிச்சிருந்தாலும், நீ எந்த பள்ளியில படிச்சனு யாராவது கேட்டா உடனே கடலூர் St.Joseph Schoolனு சொல்லிடுவேன். எனக்கு அந்த பள்ளி அவ்வளவு சந்தோஷங்களை கொடுத்திருக்கிறது.

நல்ல ஆசிரியர்கள், நல்ல கல்வி, ஒழுக்கம் (ரொம்ப இல்லைனாலும் ஓரளவுக்கு பின்பற்ற முயல்கிறேன்), நல்ல நண்பர்கள் எல்லாத்தையும் எனக்கு கொடுத்தது அந்த பள்ளி. அப்பறம் என் பள்ளியோட தாரக மந்திரம் "உழைப்பே உயர்வு தரும்" எனக்கு இப்பவும் வாழ்க்கைல ஒரு பிடிப்பை தருகிறது.

நான் வேலைக்கு சேர்ந்த பிறகும், ஏன் இந்த மூணு நாள் உட்கார்ந்து சர்டிஃபிகேஷனுக்கு படிக்கும் போதும் கனவுல நான் அங்க படிக்கிற மாதிரியும் ஸ்டடி ஹால்ல உட்கார்ந்திருக்கிற மாதிரியும், கொடில துணி போடறது, மழை வந்தா வேகமா ஓடிப்போய் துணியெல்லாம் எடுத்து
ஏதாவது க்ளாஸ் ரூம் ஜன்னல்ல போடறது, மழை அடிக்கும் போது வேகமா எழுந்து நண்பர்களை எல்லாம் எழுப்பி வரண்டால இருந்து ஏதாவது க்ளாஸ் ரூம்ல எல்லாருக்கும் படுக்க எடம் பார்த்து படுக்குறது எல்லாம் ஞாபகம் வரும். படுக்க இடமில்லைனா டெஸ்க் பெஞ்ச் எல்லாம் நகற்றி போட்டு படுப்போம். காலைல எழுந்து எல்லாத்தையும் சரி பண்ணிடனும்.

சரி இதை பத்தி எழுதினா ஒரு பெரிய தொடரே வரும். இப்போழுது என்னோட தினசரி டைம் டேபிள் மட்டும் எழுதறேன். பின்னாடி எழுத பயன்படும். முக்கியமான ஒரு விஷயம், அமெரிக்கால இருந்து அமெரிக்கர்களோட இனிமையான அணுகுமுறையை உணர்வதற்கும் ஆப்கானிஸ்தான்லயோ ஈராக்லயோ இருக்கற அமெரிக்கர்களோட அணுகுமுறைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ அதே அளவு காலேஜ் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கூட ஹாஸ்டலுக்கும் வித்தியாசமிருக்கு. தெரியாதவங்க ஏ நாகூர் பள்ளில படிச்ச பசங்களை கேக்கறது உத்தமம். அங்க தான் நூத்துக்கு நூறு வாங்கினாலும் அடி விழும். (அந்த பயத்துல தான் அடுத்த தடவை ஒழுங்கா படிப்பாங்கனு)

ஹாஸ்டல்னா ஒரு நூறு இருநூறு பேரை நீங்க கற்பனை பண்ணிருந்தீங்கனா வெல்கம் டூ செயிண்ட் ஜோஸப்... இங்க ஆயிரம் பேருக்கு மேல ஹாஸ்டல்ல படிப்பாங்க. சாப்பாடே மூணு பேட்ச் நடக்கும். ஒரு க்ளாஸ்க்கு எண்பது பேர் இருப்பாங்க. நான் பத்தாவதுல "M" செக்ஷன்.
இப்ப இந்த பள்ளில எத்தனை பேர் படிப்பாங்கனு கணக்கு போட்டு பாருங்க.

காலை 5:30 : மணி அடிக்கும். எழுந்திரிக்கணும். அஞ்சு நிமிஷத்துல எழுந்திரிக்கலைனா வார்டன் இல்லை ஃபாதர் பிரம்போட வருவாங்க. அடியோட எழுந்திரிக்கணும். பத்தாவது, பதினோன்னாவது, பனிரெண்டாவது மக்களுக்கு மட்டும் தான் பெட் ரூம். மீதி மக்களுக்கு எல்லாம் க்ளாஸ் ரூம்
வராண்டா தான். அங்க இருந்து எழுந்து, போர்வையை மடிச்சி வெச்சி தலையணையும் போர்வையையும், பாயோட சுருட்டி எந்த பெட் ரூம்ல கொண்டு போய் ஏதாவது ஒரு இடத்தை பார்த்து வைக்கணும். தினமும் ஒரே ஏரியால வெச்சா ஞாபகமா ராத்திரி வந்து எடுத்துக்கலாம். இல்லைனா ராத்திரி கஷ்டப்படணும்.

எழுந்து போய் பல்லு விளக்கிட்டு முகம் கழுவிட்டு தலை சீவி, தெளிவான முகத்தோட படிக்க உட்காரணும்.

5:55 AM : ஸ்டெடி பெல். இந்த நேரத்துல எல்லாரும் ஸ்டெடி ஹால்ல புத்தகத்தை விரிச்சி உட்கார்ந்திருக்கனும். ஒவ்வொருவருக்கும் ஒரு டெஸ்க் இருக்கும். அதுல தான் புத்தகம், முகம் பார்க்கிற கண்ணாடி, சீப்பு, பவுடர், விபூதி (நான் எப்பவும் விபூதி வைப்பேன். பவுடர் அடிக்க மாட்டேன். அதுவே நல்லா தெளிவா இருக்கானு காட்டிடும்) எல்லாம் இருக்கும். 5:45க்கெல்லாம் பல்லு விளக்கிட்டு வந்து உட்கார்ந்துட்டா பத்து நிமிஷத்துல படிக்க தயாரா ஆகிடலாம்.

ஸ்டெடி டைம்ல இடத்தை விட்டு நகரக்கூடாது, பேசக்கூடாது. இந்த ஸ்டெடில எதுவும் எழுத கூடாது. காலைல படிச்சா தெளிவா மண்டைல ஏறும் என்பதால் இந்த ஸ்டெடி டைம் படிக்க மட்டுமே. நான் இந்த ஸ்டெடில சைன்ஸ் மட்டும் தான் படிப்பேன். கணக்கு பரிட்சை தவிர மத்த நாட்களில் கணக்கு கூட இந்த ஸ்டெடியில் பண்ண கூடாது.

6:45 - 6:55 - Recreation Time (அப்படி தான் சொல்லுவாங்களே. தமிழ்ல எல்லாம் சொல்ல மாட்டோம்). இந்த நேரத்துல நியூஸ் போடுவாங்க. நான் புயல் காலத்துல மட்டும் நியூஸ் கேட்பேன். முக்கால்வாசி சரியா இருக்கும். கடலோரமா இருக்கறதால வருஷா வருஷம் புயல் வரும். 8:45 முதல் 9:30 வரை ஓரளவு மழை பெய்தாலும் பள்ளி விடுமுறை தான். ஏன்னா பக்கத்து கிராமங்களிலிருந்து வரும் மக்கள் அதிகம். மழை இல்லாத காலங்களில் இந்த பத்து நிமிஷம் தூங்கிடுவேன். சில சமயம் 400 மீட்டர் கிரவுண்டை ஓட சொல்லுவாங்க. ஓடிட்டு வந்து தூங்குவேன்.

6:55 - 7:45 - அடுத்த ஸ்டெடி. இதுவும் படிக்க மட்டும் தான். ஆனா முதல் ஸ்டெடி அளவுக்கு நான் ஆக்டிவா இருக்க மாட்டேன். அதனால God
Father (அதாங்க வரலாறு) இல்லைனா தமிழ் படிக்க ஆரம்பிச்சிடுவேன். இது ரெண்டும் படிக்கும் போது தானா ஆக்டீவாகிடுவேன். எனக்கு பிடிச்ச ரெண்டு சப்ஜெக்ட்ஸ் இது தான். வேற ஏதாவது படிச்சா தூங்கறது வாய்ப்பு அதிகம். அப்படி ஸ்டெடி டைம்ல தூக்கம் வந்தா எழுந்து நின்னு படிக்கலாம். அப்படி இல்லாம தூங்கி வழிஞ்சா கண்டிப்பா ஒரு அஞ்சி பத்து நிமிஷத்துல மாட்டிக்குவோம். பிரம்பால இரண்டு முதல் நான்கு அடிகள் உறுதி.

7:45 - 8:45 - Break Fast டைம். இந்த நேரத்துல மொத்தம் மூணு பேட்ச் நடக்கும். முதல் பேட்ச் நர்சரி. அடுத்த பேட்ச் பத்தாவது வரை. கடைசி பேட்ச் +1, +2 மற்றும் கோச்சிங் சென்று வரும் மாணவர்கள். இந்த கோச்சிங் பத்தி இன்னொரு பதிவுல விவரமா சொல்றேன்.

(நானும் ரெண்டு வருஷம் கோச்சிங் போயிருக்கேன். இது படிக்க இல்லை. விளையாட. எங்க பள்ளி எப்பவுமே விளையாட்டுல கலக்கற பள்ளி. நான் படிக்கும் போது ஸ்டேட்ல ஃபுட் பால், ஹாக்கி, கோ-கோ, பால் பேட்மிட்டன் நாலுலயும் ரோலிங் கப் வாங்கினாங்க. ரோலிங் கப்னா தொடர்ந்து மூன்று வருஷம் ஸ்டேட்ல கோல்ட் மெடல்னு அர்த்தம். மீதி நிறைய ஸ்போர்ட்ஸ்லயும் வாங்கினாங்க. ஆனா தொடர்ந்து மூன்று வருஷம் வாங்க முடியல.)

இந்த நேரத்துல மத்த பேட்ச் பசங்க சாப்பிடும் போது நம்ம க்ளாஸிக்கு ரெடியாகிடனும். துணி வைக்கிற பெட்டி எல்லாம் ஒரு ரூம்ல ரேக்ல
இருக்கும். அதுக்கு பேரு பாக்ஸ் ரூம். இதுவும் ரெண்டு மூணு இடத்துல இருக்கும். எட்டாவது வரைக்கும் ஒரு இடம், ஒன்பது பத்தாவதுக்கு ஒரு
இடம், ஹையர் செகண்டரிக்கு ஒரு இடம்.

ஹாஸ்டல் பசங்க பொதுவா காலைல குளிக்க மாட்டாங்க. சாயங்காலம் விளையாடிட்டு வந்து தான் குளிப்பாங்க. கோச்சிங் போற பசங்க மட்டும் காலைல ப்ராக்டீஸ் முடிச்சிட்டு வந்து குளிப்பாங்க.

8:45 - 9:25 - அடுத்த ஸ்டெடி. இதுல ஏதாவது ஹோம் ஒர்க் இருந்தா எழுதலாம். கணக்கு போடலாம். இந்த ஸ்டெடி தான் பொதுவா நான் கணக்கு ஹோம் ஒர்க் எழுத பயன்படுத்துவேன். இந்த ஸ்டெடில இருந்து நேரா எழுந்து ஸ்கூலுக்கு போயிடனும். போகற வழியில பேசக்கூடாது. லைனா போகனும்...

முக்கியமான விஷயம். நான் படிச்சது 93ல இருந்து (சில்வர் ஜீபிலி இயர் - 125th Year) 97 அக்டோபர் வரை. +1 பாதியிலே பள்ளி மாறிட்டேன்.
நான் படிக்கும் போது Principal - Ref. Fr. Ratchagar. ஹாஸ்டல் ஃபாதர் - Ref.Fr. Agnel.

எங்க ஸ்கூல் பாடலோட முதல் பேரா மட்டும் ஞாபகமிருக்கு.

உழைப்பின் நல் மேன்மையை நாம் உணர்ந்திடுவோம்
உழைப்பினால் உயர்ந்திடுவோம் -
உண்மையுடன் நல் ஒழுக்கமும் சேர்ந்திட
உன்னத நிலையடைவோம்


(தொடரும்...)

Tuesday, September 23, 2008

பரிட்சை, உடையார், பருப்பு, ஆங்கில படங்கள்

நான் வேலை செய்யற கம்பெனில வருஷத்துக்கு ரெண்டு சர்டிஃபிகேஷன் பண்ணனும். இந்தியா போனா படிக்க நேரமிருக்குமானு தெரியல. அதனால இப்பவே பண்ணலாம்னு போன வாரம் ஒரு சர்டிஃபிகேஷனுக்கு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். ஒரு வழியா இன்னைக்கு ஒண்ணு எழுதி வெற்றிகரமா முடிச்சாச்சி. படிச்சி ரொம்ப நாள் ஆனதால படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

...............

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பாலகுமாரனோட உடையார் படிச்சேன். இது வரைக்கும் நான் படிச்ச வரலாற்று புதினங்களை சொல்லிடறேன். அப்ப தான் மத்ததுக்கும் உடையாருக்கும் இருக்குற வித்தியாசம் புரியும். இது வரை நான் படிச்சது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர், கடல் புறா, யவன ராணி, ஜல தீபம். 

மத்த எல்லா கதைக்கும் உடையாருக்கும் நிறைய வித்தியாசமிருந்தது. முக்கியமான வித்தியாசம் உடையார் அளவுக்கு சமுதாய சூழ்நிலைகளையும், தமிழ் சமூகத்தில் நிலவிய சாதிய கோட்பாடுகளையும் மத்த கதைகள் பேசவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த எந்த சூழ்நிலைகளில் எந்த எந்த சமூகத்தை சேர்ந்தோர் முக்கியத்துவமடைகின்றனர் என்பதும் இதில் சுவையாக சொல்லப்பட்டுள்ளது. அதே போல் பிராமணர்கள் எப்படி வேத பாடங்களை பயில்வதிலிருந்து அரசு இயந்திரம் அனைத்திலும் நுழைந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் என்றும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. நான் முன்னுரை படிக்காததால எது கற்பனை எது உண்மைனு சொல்ல முடியல. ஆனா என்னோட கணிப்பு இது எல்லாமே கற்பனை தான். ஆனா நம்பும்படியான அழகான கற்பனை.

இந்த கதைல நாயகன் உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் தான். ஆனா மத்த கதைகள் அளவுக்கு அவர் ஹீரோயிசம் எதுவும் பண்ணல. கதை முழுக்க முழுக்க தஞ்சை பெரிய கோவிலையே சுற்றி சுற்றி வருகிறது. நிறைய இடங்களில் தகவல் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. (உதாரணமாக பஞ்சமன் மாதேவிக்கும் ராஜேந்திரனுக்கும் இரண்டு வயதே வித்தியாசம்னு ஒரு இடத்தில் சொல்வதும், பஞ்சமன் மாதேவி திருமணம் முடிந்து தஞ்சை வரும் போது ராஜேந்திரனுக்கு வயது பத்து என்பது... இந்த மாதிரி நிறைய...)

பொன்னியின் செல்வனில் விடை கிடைக்காத ஆதித்த கரிகாலன் மரணம் பற்றி விரிவாக பேசப்படுகிறது. சிட்டிசன்ல கடைசி சீன்ல அஜித் கொடுக்க சொல்ற தண்டனை (பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், மாமன், மச்சான்.... அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டும்) இங்க இருந்து தான் காப்பி அடிச்சிருக்காரு போல :)

நான் ரொம்ப ரசிச்சி படிச்சேன். இதை பத்தி எழுத நிறைய இருந்தாலும் பின்னாடி ஒரு நாள் விரிவா எழுதலாம், இப்ப இதை படிக்க சிபாரிசாவது செய்யலாம்னு சொல்லிட்டேன். 

இதை படிச்சி நான் கடைசியா ஃபீல் பண்ணது, மன்னராட்சி ரொம்ப கொடுமையானது. போர் அதை விட ரொம்ப கொடுமையானது. 


.................

அமெரிக்கா வந்ததுக்கப்பறம் நடந்த ஒரு உருப்பிடியான விஷயம் நான் சமைக்க கத்துக்கிட்டது தான். இங்க என் சமையலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. இந்தியா போனா கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்து போயிடுங்கற காரணத்தால ஒண்ணு ஒண்ணா இங்க ரெசிப்பி எழுதி வெச்சிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். இது முக்கியமா எனக்கு மறக்க கூடாதுனு தான். உங்களுக்கும் பயன்பட்டுச்சினா சந்தோஷம். நிறைய ஐட்டம் ஆந்திரா ஸ்டைல்ல இருக்கும். ஏன்னா என்னுடைய பழைய ரூமேட் ஒருத்தர் தெலுகு. அவர் சமையல் பிடிச்சதால அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.

இன்னைக்கு தால் @ பப்பு @ பருப்பு

(ரெண்டு பேருக்கு ரெண்டு வேளை / நாலு பேருக்கு ஒரு வேளைக்கு)

1 கப் துவரம் பருப்பு. (எலக்ட்ரிக் குக்கர் கப். 200 ml இருக்கும்னு நினைக்கிறேன்)
வெங்காயம் - 1 (சின்ன சின்னதா கட் பண்ணனும்னு அவசியமில்லை)
தக்காளி - 1 / 2 (சைஸ் பொருத்து. சின்ன தக்காளியா இருந்தா ரெண்டு, பெருசா இருந்தா ஒண்ணு)
பச்சை மிளகாய் - 5-6
மஞ்சத்தூள் - கொஞ்சம் (அரை ஸ்பூன்)
நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் (ரொம்ப குழையாமலும் ஒட்டிக்காமலும் இருக்கும்)
தண்ணி மூணு கப்

இதை குக்கர்ல வெச்சி மூணு விசில் விடற வரைக்கும் வைக்கனும். 

அதுக்கு அப்பறம்

வெங்காயம் - ஒண்ணு (பொடி பொடியா நறுக்கிக்கனும்)
பூண்டு - 3-4 பல்
கருவேற்பிலை 
சீரகம்
கடுகு (அப்படியே ரிவர்ஸ் ஆர்டர்ல போட்டிருக்கேன்)

இதெல்லாம் போட்டு நல்லா வதக்கணும். 


இப்ப வதக்கனதை எடுத்து குக்கர்ல போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள் (அரை ஸ்பூன்), தேவையான அளவு உப்பு போட்டு (நான் கைல தான் கொட்டி போடுவேன். அதனால ஸ்பூன் அளவு தெரியாது.) தண்ணி நல்லா போற வரைக்கும் அடுப்புல வைக்கணும். அவ்வளவு தான்.

(பருப்பு கீரை @ ஸ்பீனாச் டால் - இதே செய்முறைதான். கீரையை சேர்த்து வேக வைக்கணும்)

அவ்வளவு தான். சோ சிம்பிள். இப்படி தினமுன் நம்ம ஃபெவரைட் ஐட்டம்ஸ் ஒண்ணு ஒண்ணா எழுதி வைக்க போறேன் :)

..................


இங்கிலிஷ் படங்களோட ரேபிட் ஷேர் லிங் இங்க கிடைக்கும் - www.th3zone.com.
அப்படியே ரேபிட் ஷேர்ல பிரிமியம் அக்கவுண்ட் ஒரு மாசத்துக்கு ஓப்பன் பண்ணா தினமும் 5 படங்கள் டவுன்லோட் பண்ணலாம் :)
ஒரு 1 TB ஹார்ட் டிஸ்க் வாங்கினா எல்லாத்தையும் அதுல சேவ் பண்ணிடலாம்.



Tuesday, September 16, 2008

நேற்று! இன்று!! நாளை!!!

"கிருஷ்ணா, நீ சொல்லி தானே இன்னைக்கு காலைல பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லியிருந்தோம். இப்ப திடீர்னு வேலை இருக்குனு ஆபிஸ் கிளம்பிட்டிருந்தா எப்படி?" சூடான காப்பியை ஆற்றி கொண்டே பேசி கொண்டிருந்த ராஜலக்ஷ்மிக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது வயதிற்குள்ளிருக்கும்.

"அம்மா. திடீர்னு ஒரு ப்ரடக்ஷன் இஷ்ஷூமா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள முடிச்சாகணும். நாளைக்கு காலைல அவனுங்க ஆபிஸ் வரும் போது அது சரியா இருக்கனும். அமெரிக்கன் க்ளைண்டா இருந்தா பிரச்சனையில்லை. இது ஆஸ்ட்ரேலியன் ப்ராஜக்ட். அவுங்களுக்கு நமக்கு முன்னாடி விடிஞ்சிடும்"

"அதெல்லாம் எனக்கு தெரியாது. எப்படியாவது பர்மிஷன் போட்டுட்டு ஒரு மணி நேரமாவது வந்துட்டு போ"

"அம்மா. நான் என்ன பர்மிஷன் போடறதுக்கு அப்பா மாதிரி கவர்மெண்ட் எம்ப்ளாயியா? ரெண்டு மணி நேரம் பர்மிஷன்னு சொல்லிட்டு அரை நாள் லீவ் போட்டாலும் கண்டுக்காம விடறதுக்கு அது என்ன கவர்மெண்ட் ஆபிஸா?" சொல்லிவிட்டு டீவியில் கல்யாண மாலை பார்த்து கொண்டிருந்த அப்பாவை பார்த்து சிரித்தான்.

"ஏன் அம்மாவும் புள்ளையும் என் தலையை உருட்டறீங்க? அவன் வரலைனா என்ன நீயும் நானும் போய் பார்த்துட்டு வருவோம். பிடிச்சிருந்தா அடுத்த வாரம் இவனையும் கூப்பிட்டு போகலாம்"

"சூப்பர்ப்பா. இந்த டீல் எனக்கு ஓகே"

"என்னங்க இது? ஒரு பொண்ணு வீட்டுக்கு எத்தனை தடவை போவாங்க? அந்த வீட்ல ஒரு வாரம் முழுக்க டென்ஷனா வேற இருக்கும். அது அவுங்களுக்கு வீண் சிரமம் தான். இவன் இன்னைக்கு வரலைனா நாம போய் பார்ப்போம். பிடிச்சிருந்தா ஓகே சொல்லிடுவோம். நாங்க பார்த்து சொன்னா ஓகே தானே? அந்த காலத்துல எல்லாம் உங்க அப்பாவை கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் பார்க்கவேயில்லை"

"உன்னை மாதிரி உன் பையனுக்கும் அதிர்ஷ்டமடிக்குமா என்ன? என்னை மாதிரி அவனும் துரதிஷ்ட சாலியா இருந்தா என்ன பண்ண?"

"சொல்லுவீங்க சொல்லுவீங்க. இந்த வயசுக்கும் உங்களுக்கு வாயிக்கு ருசியா சமைச்சி போடறனில்ல. ஏன் சொல்ல மாட்டீங்க?"

"சரி. உங்க ரெண்டு பேர் ரொமான்ஸையும் நான் போனதுக்கப்பறம் வெச்சிக்கோங்க. நான் எப்படியும் சாயந்திரம் அஞ்சு மணிக்கு வர பார்க்கிறேன்"

"நாலரை ஆறு ராகு காலம். காலைல போயிட்டு வரது தான் உத்தமம். அவுங்களும் டென்ஷனில்லாம ஃப்ரியா இருப்பாங்க"

"ஏன்மா இப்படி உயிரை வாங்கற. எது சொன்னாலும் ஒத்து வராத மாதிரியே சொல்ற?"

"காலைல பதினோரு மணிக்கு நாங்க அங்க வரோம். நீ போய் ஒரு ரெண்டு மணி நேரம் வேலை பார்த்துட்டு நேரா வந்து சேர்ந்துடு. சரியா?"

"சரி. அங்க ரொம்ப நேரமாகாதில்லை?"

"பொண்ணு பாக்க தான் போறோம். நீ வந்து பார்த்துட்டு பத்து நிமிஷத்துல கிளம்பிடலாம். அப்படி ஏதாவது பேசனும்னா நானும் உங்கப்பாவும் பேசிட்டு வரோம். சரியா?"

"சரிம்மா"

வேகமாக வண்டியை எடுத்து கிளம்பினான் கிருஷ்ணா. இவ்வளவு நேரமாகியும் நம்ம கிருஷ்ணாவை சரியா பார்க்கல இல்ல. கிருஷ்ணா சென்னைல ஒரு.... சரி சரி நீங்க நினைக்கிற மாதிரி ஐடி கம்பெனில தான் வேலை பார்க்கிறான். ஐந்தடி பத்து அங்குலம் உயரம். பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம். அதனாலயே ரஜினி ரசிகனானான். வெள்ளைத் தோல் இருக்கறவங்க தான் சினிமால ஹீரோவா இருக்க முடியுங்கறதை உடைச்ச ஒரே காரணத்தாலே அவனுக்கு ரஜினி பிடிச்சிது. அப்பறம் அந்த ஸ்டைல், சுறுசுறுப்பு எல்லாமே பிடிச்சி போச்சு. அவன் முதல் நாள் பார்த்த ரஜினி படங்களின் எண்ணிக்கையும், அதுக்கு அவன் டிக்கெட் வாங்க பட்ட கஷ்டமும் இந்த கதைக்கு தேவையில்லை என்பதால் இதோட நிறுத்திக்கறோம்.

அவனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு ஒரு பதட்டமிருந்தது. இருந்தாலும் இந்த ப்ரடக்ஷன் இஷ்ஷுவை முடிச்சிட்டா கொஞ்சம் நிம்மதியா பொண்ணு பார்க்க போகலாம். அங்க போய் என்ன என்ன கேள்வியெல்லாம் கேக்கனும்னு அவன் ஃபிரெண்ட் நித்யா அவனுக்கு ஒரு செக் லிஸ்ட் கொடுத்திருந்தா. அதெல்லாம் பல நாட்களுக்கு முன்னாடியே மனப்பாடம் பண்ணியிருந்தான்.

கிருஷ்ணா ஆபிஸிலிருந்து புறப்படும் பொழுது மணி பத்தரை முடிந்து ஏழரை நிமிடமாகியிருந்தது. அவன் அப்பாவிடம் வழி கேட்டு அவன் அங்கே சென்ற பொழுது மணி பதினொன்று இருபது. சரியாக அவன் வண்டியை நிறுத்தவும் அவன் அப்பாவும், அவன் அப்பா வயதையொத்த ஒருவரும் அவனை அழைத்து செல்ல வெளியே வந்தனர்.

"என்ன கிருஷ்ணா. ட்ராஃபிக் அதிகமா?"

"ஆமாம்பா. வழக்கம் போல தான். வீக் எண்ட் கொஞ்சம் குறைவா இருக்கும்னு நினைச்சேன்"

"இந்த நேரத்துல வீக் டேஸ்ல தான் ட்ராஃபிக் குறைவா இருக்கும். வீக் எண்ட் எல்லா நேரமும் கொஞ்சம் ட்ராஃபிக்கா தான் இருக்கு" சொல்லிவிட்டு அவனை பார்த்தார் அப்பாவோடு வந்தவர்.

"உள்ள வாங்க"

அவன் உள்ளே சென்றவுடன் அவன் அம்மா அருகில் சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

"ஏன்டா ஏதாவது ஆட்டோ பிடிச்சி வந்திருக்கலாம் இல்ல. வண்டில வந்து தலை முடியெல்லாம் கலைஞ்சி, பொண்ணு பாக்க வந்தவன் மாதிரியா இருக்க?" பொறுமையாக யாருக்கும் கேட்காத வண்ணம் சொன்னாள்.

"நாங்க எல்லாம் உனக்காக தான் காபி கூட குடிக்காம வெயிட் பண்ணிட்டு இருக்கோம்" கிண்டலாக சொன்னார் அவன் அப்பா. அது காபி கொண்டு வரலாம் என்பதற்கான சிக்னல் என்பதை புரிந்து கொண்டான்.

உள்ளேயிருந்து கையில் ஒரு ட்ரேயும் அதில் மூன்று கப் காபியுடன் நீல நிறப்பட்டுப்புடவையில் வந்த பெண்ணை பார்த்தான் கிருஷ்ணா. அவன் கண்கள் விரிந்ததை பார்த்தவுடன் அவனுக்கு அந்த பெண்ணை ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதை அவன் அம்மா உணர்ந்து கொண்டாள்.

அமைதியாக வந்த அந்த பெண், சரி இதுக்கு மேல எதுக்கு அந்த பெண்ணுனு சொல்லிட்டு ரம்யானே சொல்லலாம். ரம்யா அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு கிட்சனுக்கு சென்றுவிட்டாள்.

.......

கிருஷ்ணா அவன் சீட்டிற்கு சென்று அமரும் போது மணி ஒன்றாக பத்து நிமிடமிருந்தது. அங்கே அவனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த கார்த்திக், கிருஷ்ணாவின் குழப்பமான முகத்தை பார்த்ததும் அவனுடைய சுழற்நாற்காலியை நகற்றி அருகில் வந்தான்.

"ஏன் டல்லா இருக்க? பொண்ணை பிடிக்கலயா?"

"டேய் அங்க யார் இருந்தா தெரியுமா? நம்ம ஜீனியர் ரம்யாடா? ஞாபகமிருக்கா?"

அதை கேட்டதும் கார்த்திக் சிரித்த சத்தத்தை கேட்டு பக்கத்து க்யூபிக்களிலிருந்து சில தலைகள் எட்டி பார்த்து மறைந்தன.

"ஏன்டா ஜாதகத்துல எந்த காலேஜ்னு இல்லையா?"

"இல்லையே. வெறும் BEனு தான் இருந்தது"

"ஏதாவது பேசனயா?"

"இல்லை. என்ன பேசறதுனு எல்லாமே மறந்து போச்சு. அதுவுமில்லாம நான் அவசரமா வந்திருக்கேனு எங்க அம்மா சொல்லிருந்தாங்க. அதனால உடனே கிளம்பற மாதிரியாகிடுச்சி. எங்க அம்மா, அப்பா அங்க இன்னும் கொஞ்ச நேரமிருந்து பேசிட்டு வரேனு சொல்லியிருக்காங்க"

"நீ என்ன யோசிச்சிட்டிருக்க?"

"டேய் நான் அவளை வெச்சி வினோத்தை ஓட்னது மறந்துட்டியா?"

"ஏன்டா அவங்க ரெண்டு பேரும் சிம்போசியம்ல ஒரு ப்ரோக்ராம் ஆர்கனைஸ் பண்ணாங்க. அவுங்க ரெண்டு பேர் மட்டுமில்லை மொத்தம் அஞ்சு பேர் சேர்ந்து அந்த ப்ரோக்ராம் ஆர்கனைஸ் பண்ணாங்க. அப்ப அந்த பொண்ணுக்கூட அவன் எல்லாரோடையும் போடற மாதிரி கடலை போட்டான். உடனே நீ அவனை அதை வெச்சி ஓட்ட ஆரம்பிச்சிட்ட. அந்த சிம்போசியத்துக்கப்பறம் நீ அவன் அந்த பொண்ணுக்கூட பேசறதை பார்த்திருக்கியா?"

"இல்லை. நான் ஓட்னதுல பயந்து அவன் அதுக்கப்பறம் பேசவேயில்லை. கேண்டீன்ல பார்த்தா கூட வெளிய ஓடிடுவான்."

"நீ அந்த பொண்ணை வெச்சி அவனை ஓட்னது அந்த பொண்ணுக்கு தெரியுமா?"

"தெரியாதுனு தான் நினைக்கிறேன். ஆனா அவுங்க க்ளாஸ் பசங்க ஒரு சிலருக்கு தெரியுமே"

"சரி. இப்ப அதனால பிரச்சனையென்ன?"

"வேற ஒருத்தனை வெச்சி நான் ஓட்டின பொண்ணை எப்படி நானே கல்யாணம் பண்ணிக்கறதுனு ஒரு யோசனை"

"சரி. இப்ப காலேஜ் படிக்கும் போது ரம்யா உன்னை ப்ரப்போஸ் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்ப?"

"அக்சப்ட் பண்ணியிருக்கலாம்"

"ஏன், நான் உன்னை வெச்சி வினோத்தை ஓட்டிட்டு இருக்கேன். அதனால அவனை போய் ப்ரபோஸ் பண்ணுனு சொல்ல வேண்டியது தானே?"

"ஏன்டா நான் என்ன லூசா அப்படி சொல்ல?"

"ஓ இப்ப சமீப காலமா தான் அப்படி ஆகிட்டியோ?"

"டேய் ஏன்டா குழப்பற?"

"ஒழுங்கா உன்னை பிடிச்சிருக்கானு கேளு. பிடிச்சிருக்குனு சொன்னா ஓகே சொல்லிடு. உனக்கும் அவளை பிடிச்சிருக்குனு நல்லா தெரியுது. ஒழுங்கு மரியாதையா பேசி பார்த்துட்டு முடிவு பண்ணு"

"ஹும்ம்ம்"

"என்னடா ஹும்ம்ம்... இப்ப அப்பா அங்க தான இருக்காரு?"

"தெரியல. கிளம்பியிருக்கலாம்"

"சரி நான் ஃபோன் பண்ணி ரம்யா செல்ஃபோன் நம்பர் வாங்கறேன். கொஞ்ச நேரம் கழிச்சி நீ பேசு"

"தப்பா நினைக்க மாட்டாங்களா?"

"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு"

கார்த்திக் வேகமாக கிருஷ்ணா அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தான்.

"அப்பா. இன்னும் நீங்க பொண்ணு வீட்ல தான் இருக்கீங்களா?"

" "

"ஆமாம்பா. ரம்யா எங்க ஜீனியர் தான். கிருஷ்ணா எதுவுமே பேசாம வந்துட்டானாம். பிடிச்சிருக்கானு ஒரு வார்த்தையாவது கேக்கனுமாம்.

அவனுக்கு ரம்யா ஃபோன் நம்பர் வாங்கி தாங்களேன்"

" "

"சொல்லுங்க. நோட் பண்ணிக்கறேன்"

" "

"சரி. அவுங்க வீட்ல முன்னாடியே சொல்ல சொல்லிடுங்க. பையன் ஒரு ரெண்டு வார்த்தை பேசனுமாம்னு. சாப்பிட்டு ஃபோன் பண்றோம்"


.....

கார்த்திக் ரம்யாவின் அலை பேசிக்கு அழைக்கும் பொழுது மணி இரண்டு.

"ஹலோ. நான் கிருஷ்ணா ஃபிரெண்ட் கார்த்திக் பேசறேன். நானும் உன் சாரி சாரி உங்களுக்கு சீனியர் தான்."

" "

"ஞாபகமிருக்கா? சூப்பர். இருங்க அவன்கிட்ட கொடுத்துட்டு நான் எஸ்கேப் ஆகறேன்"

கார்த்திக் கிருஷ்ணாவிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

"ரம்யா. சாரி எனக்கு வேலை அதிகமா இருந்துச்சு. அதான் ஒரு வார்த்தை கூட பேச முடியாம வந்துட்டேன்"

" "

"இப்ப மட்டும் எப்படி நேரமிருக்கா? லஞ்ச்க்கு எல்லாம் போயிருக்காங்க. நான் உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்"

" "

"பேசிட்டு போய் எப்படியும் சாப்பிடத்தான் போறேன். சரி நான் இதை நேர்ல பார்த்து தான் கேட்கனும்னு நினைச்சேன். பட் சிச்சிவேஷன் சரியா அமைல. உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல ஓகே தானே?"

" "

"இங்க பாரு. எனக்கும் வீட்ல என்ன சொன்னாலும் ஓகே தான். ஆனா உனக்குனு ஒரு விருப்பம் இருக்குமில்லையா? அதை சொல்லு"

" "

"என்னாது எங்க அம்மா அப்பாவை பிடிச்சிருக்குனு ஓகே சொல்லிட்டியா? சரி தான். நீ கல்யாணம் பண்ணிக்க போறது என்னை தான். அதனால என்னை பிடிச்சிருக்கானு தான் முதல்ல யோசிக்கனும்"

" "

"ஓகே ஓகே. சரி, நான் இப்ப சாப்பிட போறேன். இது தான் என் செல் நம்பர். பேசனும்னு தோணும் போது பண்ணு"

" "

"நானும் பண்றேன். பை"

கிருஷ்ணா கேண்டின் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

"நான் ஓகே சொல்லிட்டேனு சொன்னதுல இருந்துமா புரியல. இப்ப நீங்க என் விருப்பத்தோடத்தான் என்னை கைப்பிடிக்கனும்னு என் விருப்பத்துக்கு மரியாதை கொடுக்கறதுல இருந்து என் முடிவு சரினு எனக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சு. போதுமா?" அவள் கடைசியாக சொன்னது அவன் காதுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.

Friday, September 05, 2008

ஆடு புலி ஆட்டம் - 21

"ரவி எழுந்திரிடா. எழுந்திரிச்சி இந்த பேப்பர் பாரு"

"என்னடா? இது சாயந்திரமா காலைலயா? மணி என்ன?"

"இது காலைல ஏழு மணி. முதல்ல கண்ணை திற. இந்த பேப்பரை பாரு"

"என்ன போட்டிருக்கு?"

"தினேஷ் ஒருத்தனை கொன்னுட்டாரு. அவரையும் யாரோ கொன்னுட்டாங்க. தினேஷை கொன்னவனை போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவன் எல்லாத்தையும் சொல்லிட்டான். உடனே அவுங்க ஃபோன் பண்ணி வெற்றியையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க போல. பெரிய கவர் ஸ்டோரியா Times of Indiaல முதல் பக்கத்துல வந்திருக்கு?"

"எப்ப?"

"இரு நான் இன்னும் முழுசா படிக்கலை"

"சீக்கிரம் படி"

இதாங்க விஷயம் அதுல போட்டிருந்தாங்க. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏமாற்றி வேலைக்கு சேர்ந்த பெண்களை ஒரு கும்பல் பயமுறுத்தி காசு பறித்தது. மேலும் பல தவறான விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று அவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் இருவர் மரணமடைந்தனர். ஒருவரை அருகிலிருந்த மக்கள் பிடித்து கொடுத்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்த அவர்களுடைய கூட்டாளி வெற்றி என்பவர் கைது செய்யப்பட்டார். வெற்றியும், கொலை செய்யப்பட்ட தினேஷும் அந்த பெண்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்டில் பணி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இன்ஸ்டிடியூட் மொத்தமும் சீல் வைக்கப்பட்டது. அங்கே படித்த மாணவர்களிடமும் போலிஸ் விசாரணை செய்தது.

அங்கே படித்து வேலைக்கு சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பற்றிய தகவலை போலிஸ் வெளியிட மறுத்து விட்டது. அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடமும் போலிஸ் அவர்களை விசாரிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளது.

அதே பக்கத்துல சாப்ட்வேர் கம்பனி HR நிறைய பேர் பேட்டி கொடுத்திருக்காங்க. இந்த Fake பிரச்சனையை எப்படி எதிர் கொள்றதுனு எல்லாரும் இன்னைக்கு பேச போறதா சொல்லியிருக்காங்க. இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகும்னு யாரும் நினைச்சி பார்க்கலனு சொன்னாங்க.

"ரவி. இதெல்லாம் இருக்கட்டும், நேத்து சாயந்திரம் வரும் போது நீ தூங்கிட்டு இருந்த. ராத்திரி எழுப்பி பார்த்தோம், அப்பவும் அடிச்சி போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. என்ன ஆச்சு?"

"ஓ. எனக்கு இப்ப தான் ஞாபகமே வருது. நேத்து மதியமே நான் இன்ஸ்டிடியூட்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன். தினேஷ் என்கிட்ட CD கொடுக்காம ஏமாத்திட்டு போயிட்டான். எனக்கு என்ன பண்றதுனு தெரியல. மொதல்ல அவன் அந்த குமார்கிட்ட தான் போய் மீதி CD எல்லாம் வாங்குவானு யோசிச்சி வேகமா வீட்டுக்கு வந்து அந்த Caller ID spoofing சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண ஃபோன்ல இருந்து குமாருக்கு ஃபோன் பண்ணேன். அப்ப கரெக்டா தினேஷ் அங்க தான் இருந்தான். அவன்கிட்ட CD கொடுக்க வேண்டாம்னு சொன்னேன். அவன் சரினு சொன்னான். எனக்கு அதுக்கு அப்பறம் என்ன பண்றதுனு தெரியாம யோசிச்சிட்டே இருந்தேன்"

"அப்படியே தூங்கிட்டியா?"

"இல்லை. திடீர்னு நித்யா ஃபோன் பண்ணி, அவளை யாரோ பொண்ணு பார்க்க வராங்க, உடனே கிளம்பி வானு வீட்ல சொன்னாங்கனு சொன்னா. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அவளுக்கும் என்னனு புரியல. உடனே கிளம்பிட்டா. எனக்கு எதுவுமே யோசிக்க முடியல. ஏதோ யோசிச்சிட்டே இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன். பத்து பதினைஞ்சி நாளா சரியா தூக்கமில்லை. அதான் அப்படியே தூங்கிட்டேன்"

"ஹிம்ம்ம்... அப்ப நீ ஃபோன் பண்ணும் போது அந்த குமாரும், தினேஷும் உயிரோட இருந்துருக்காங்க."

"ஆமாம். ஒரு வேளை நான் ஃபோன் பண்ணதால தான் அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு செத்துட்டாங்களோ?"

"டேய், நீ ஏன் டென்ஷனாகற. வீ ஆர் ஜஸ்ட் ய டூல். அவனுங்க என்ன என்ன தப்பு பண்ணாங்களோ. அந்த CDக்காக ரெண்டு உயிர் போயிருக்குனா அதுல என்னவெல்லாம் இருக்குதோ. அவனுங்க இதுக்கு முன்னாடி யாரையாவது கொன்னு கூட இருக்கலாம். நீ டென்ஷனாகாத. நம்ம எதுவும் தப்பு பண்ணல"

"இருந்தாலும்.. இப்ப எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஒரு வேளை நாம முன்னாடியே போலிஸ்ல போயிருந்தா, இப்படியெல்லாம் ஆகாம இருந்திருக்குமோ?"

"இங்க பாரு. எதுவும் நம்ம கைல இல்லை. அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு தண்டனை. அவ்வளவு தான். நீ முதல்ல எழுந்து குளிச்சிட்டு வா. நம்ம ஆபிஸ் போவோம். இன்னைல இருந்து ஒழுங்கா வேலை பார்க்கலாம். எந்த டென்ஷனும் வேண்டாம். முன்ன மாதிரியே சந்தோஷமா இருக்கலாம். சரியா?"

"ஹும்ம்ம்"

ஒரு வேளை நான் பண்ண தப்பால தான் நித்யா என் வாழ்க்கைல இருந்து இவ்வளவு சீக்கிரம் போறாளோ???

அடுத்த நாள் முழுக்க எல்லா பேப்பர்லையும் இதை பத்தி தான் பேசிக்கிட்டாங்க. இந்த பிரச்சனையை தீர்க்க சாப்ட்வேர் கம்பெனி எல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாங்க. இனிமே எந்த இயர் பாஸ் அவுட்டா இருந்தாலும் ஃபிரெஷ்ஷரா எடுத்துக்குவோம். அதே மாதிரி ஜாவா, டாட் நெட், மெயின் ஃபிரேம்னு கோர்ஸ் போறவங்களை அந்த குறிப்பிட்ட ஃபீல்ட்ல இண்டர்வியூ பண்ணி எடுத்துக்குவோம். ஆனா அவுங்களை ஃபிரெஷ்ஷரா தான் சேர்த்துக்குவோம். அவுங்களை அந்த ட்ரெயினிங்கு ஏத்த மாதிரி ப்ராஜக்ட்ல போட்டுடுவோம்னு சொல்லி எல்லா கம்பெனிகளும் சொல்லிட்டாங்க.

அப்பறம் TCS, Infosys, Wipro, Satyam எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணியிருக்காங்க. அதுல எல்லா சாப்ட்வேர் கம்பெனிங்களும் அவுங்க எம்ப்ளாயூ இன்ஃபர்மேஷனை ரெஜிஸ்டர் பண்ணனும். ஒவ்வொரு சாப்ட்வேர் இஞ்சினியருக்கும் ஒரு நம்பர் தரப்படும்னும் இனிமே இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணும் போது ரெஸ்யூமேல அந்த நம்பரும் கொடுக்கனும்னு சொல்லிட்டாங்க. அதனால இப்ப இருக்கற எல்லாருக்கும் ஒரு நம்பர் தருவாங்க. அது கடைசி வரைக்கும் மாறவே மாறாது. அமெரிக்கால சோஷுயல் செக்கியூரிட்டினு ஒரு நம்பர் இருக்குமாம். அதே மாதிரியே சாப்ட்வேர் இஞ்சினியர் நம்பர்னு ஒண்ணு கொடுத்துடுவாங்க.

அதனால எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத யாரும் அவ்வளவு சீக்கிரம் ஃபேக் போட்டு வர முடியாது. அதே சமயம், quantitative aptitude, Shakuntula Devi இதெல்லாம் படிக்க விருப்பமில்லாதவங்க ஏதாவது கோர்ஸ் போயிட்டு அது மட்டும் அட்டெண்ட் பண்ணி போகலாம்.

முடிஞ்ச வரைக்கும் கம்பெனி எல்லாம் இறங்கி வந்திருக்காங்க. பார்க்கலாம், இதுல எப்படி நம்ம ஆளுங்க ஏமாத்தறாங்கனு.

......

என்னடா காலங்காத்தால ஆபிஸ் போகாம வேற பக்கம் போயிட்டு இருக்கனு பாக்கறீங்களா? நித்யா ஊர்ல இருந்து வந்துட்டேனு ஃபோன் பண்ணா. நான் தான் உடனே கிளம்பி வரேனு சொல்லிட்டு கிளம்பிட்டேன். ரெண்டு நாளா சரியா வேலையே செய்ய முடியலைங்க. சும்மா அவளை பார்த்துட்டாக்கூட போதும். போய் நல்லா வேலை செய்யலாம்னு தோனுது. அதான் கிளம்பிட்டேன்.

வழியிலயே வினோதினி அக்காவும், வினிதாவும் போயிட்டு இருந்தாங்க. வினிதா ஏதோ இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண போறா போல. அனேகமா வினோதினி அக்கா யார் மூலமாவது ரெஃபரன்ஸ் பிடிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்.

நித்யா குளிச்சிட்டு ஃபிரெஷ்ஷா இருக்குறா. தூக்க கலக்கத்துல இருப்பானு நினைச்சேன்.

"என்னாச்சு?"

"எல்லாம் நல்ல படியா முடிஞ்சிது"

"ஏன் இவ்வளவு அவசரம்?"

"ஜெர்மனில இருக்காராம். விப்ரோல வேலை பார்க்கறாராம். ரெண்டு வாரம் வெக்கேஷன்ல வந்திருக்கார். அதான் உடனே கிளம்பி வர சொல்லிட்டாங்க"

"ஹிம்ம்ம்... எப்ப கல்யாணம்?"

"தெரியல"

"ஜெர்மனி போறயா?"

"அப்படி தான் நினைக்கிறேன். பார்க்கலாம். எல்லாம் நல்ல படியா முடியனுமில்லை"

"ஹிம்ம்ம்"

"அது சரி. நான் தான் ரோமிங்ல இருக்கனு தெரியுது இல்லை. அப்பறம் எதுக்கு நான் சாப்பிட்டுட்டேன், நீ ஒழுங்கா சாப்பிடுனு ரெண்டு நாளா மெசேஜ் பண்ணிட்டே இருந்த? உன்னால இருபது ரூபாய் தண்டம்"

"நீ தானே மெசேஜாவது அனுப்புனு கெஞ்சின"

"நான் கெஞ்சினனா? சும்மா சொன்னேன். நீ சீரியசா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண?"

"சரி. நான் கிளம்பறேன்"

என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது.

"இரு. இப்ப போய் என்ன பண்ண போற? உனக்கு என்ன வேலையா இருக்கு? என் கூட கொஞ்ச நேரமிறேன்"

எப்படி மனசாட்சி இல்லாம சொல்றா பாருங்க.

"உன் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா இப்ப என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. ப்ளீஸ் நான் கிளம்பறேன்"

"என்ன சொன்ன? திரும்ப சொல்லு"

"நான் எதுவும் சொல்லல. நான் கிளம்பனும்"

"ரவி. என்ன சொன்ன? என் முகத்தை பார்த்து சொல்லு"

"நான் எதுவும் சொல்லலைனு சொன்னேன் இல்லை"

"நிஜமா நீ எதுவும் சொல்லல. என் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு ஆசைப்பட்டேனு சொல்லல? பொய் சொல்லாத"

"ஆமாம் சொன்னேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ இல்லாம இருக்க முடியுமானு தெரியலை. இந்த ரெண்டு நாள்ல மத்த எந்த விஷயத்தையும் யோசிக்க விடாம என் மனசு முழுக்க நீ தான் ஆக்ரமிச்சிட்டு இருந்த. இப்ப என்னனா என்னை விட்டுட்டு போறனு சொல்ற. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் நித்யா. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை?"

நித்யா கண்ணும் கலங்கிருக்கு...

"எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையாங்கறது முக்கியமில்லை. உனக்கே எதுவும் வேலையில்லை. உன்னை எப்படி எங்க அப்பா, அம்மா நம்புவாங்க? அதை யோசிச்சியா ரவி?"

"எனக்கு வேலையில்லைங்கறது தான் பிரச்சனையா? அப்படினா நான் இப்ப உன்கிட்ட உண்மையை சொல்றேன். நான் கூகுள்ல வேலை செய்யறேன். மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ். நான் இப்ப எந்த நாட்டு கம்பெனில இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாலும் எடுத்துக்குவாங்க. உங்க வீட்ல பயப்பட வேண்டாம்னு சொல்லு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவனு சொல்லு"

"என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது. அதிர்ச்சில ஏதாவது மூளை குழம்பிடுச்சா?"

"சத்தியமா நான் கூகுள்ல தான் வேலை செய்யறேன். இங்க பாரு என் ஐடி கார்ட்"

"அப்ப என்கிட்ட இத்தனை நாள் பொய் சொல்லிருக்க? அப்படி தானே?"

"நீ என்கிட்ட நாலு வேலை கிடைச்சிதுனு ஏமாத்தின, நான் பதிலுக்கு பண்ணேன். உன்கிட்ட உண்மையை சொல்லனும்னு நிறைய தடவை முயற்சி பண்ணேன். ஆனா வாய்ப்பு கிடைக்கல. அந்த பிரச்சனைல நான் இதை மறந்திட்டேன். ஐ அம் ரியலி சாரி"

"சரி இப்ப நீ என்னை நிஜமா காதலிக்கறனு நான் நம்பனும்னா நான் என்ன பண்ண சொன்னாலும் பண்ணுவியா?"

"மாட்டேன். இது வரைக்கும் நான் உன்கிட்ட பழகின விதத்துல உனக்கு ஏன் மேல நம்பிக்கை வரலனா, இனிமேலும் வர வேண்டாம்"

"போடா" சொல்லிவிட்டு கன்னத்தில் அறைந்தாள்.

"இப்படி பேசி பேசியே என்னை மயக்கிட்டியேடா"

"என்ன? நான் உன்னை மயக்கினனா?"

"ஆமாம். உன் கூட ஒரு நாள் கூட பேசலைனா என்னால நார்மலா இருக்க முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நீ சாப்பிட்டயா சாப்பிடலயானு தெரியாம என்னால சாப்பிட கூட முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நான் அன்னைக்கு சொன்னப்ப அதை கூட புரிஞ்சிக்காம உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொல்ற. உனக்கு மனசாட்சியே இல்லைனு நினைச்சிக்கிட்டேன்"

"லூசு. நான் உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொன்னேன். என்ன கொடுப்பானு சொன்னனா? எப்படியும் நான் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேங்கற தைரியத்துல சொன்னேன்"

"சரி அப்படி என்ன கொடுப்ப?"

"வேணும்னா இப்ப கொடுக்கவா"

"ஏய். பக்கத்துல வராத. யாரும் இல்லாத வீட்ல வந்து இப்படி ஒரு சின்ன குழந்தைக்கிட்ட தப்பா பண்றியே. போ. தள்ளி போ"

"ஐய்யோ... அடிப்பாவி. நான் உன்னை தொட்டனா? பக்கத்துல வரதுக்கே இந்த மொத்து மொத்தற. கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு இருக்கு. ஆ. இதை மறந்துட்டனே. என்னை பிடிச்சிருந்தும் எனக்கு வேலை இல்லைனு நீ வேற ஒருத்தனை பார்த்துட்டு ஓகே சொல்லிட்டு வந்திருக்க இல்ல"

"உனக்கு எல்லாம் எவன் வேலை கொடுத்தான்? நீ வினோதினி அக்காகிட்ட சொன்னா எனக்கு விஷயம் வராம போயிடுமா?"

"அடிப்பாவி. உனக்கு தெரியுமா? இதுக்கு தான் பொண்ணுங்ககிட்ட ரகசியம் சொல்ல கூடாதுனு சொல்லியிருக்காங்க போல"

"நீ சொன்ன அடுத்த நாளே அந்த அக்கா என்கிட்ட சொல்லிட்டாங்க"

"அப்ப இப்ப பொண்ணு பாக்கறது எல்லாம் ட்ராமாவா?"

"இல்லை. அது உண்மை. ஆனா போய் எனக்கு விருப்பமில்லைனு சொல்லிட்டு வந்துட்டேன். நம்ம விஷயத்தை என் அண்ணிகிட்டயும் லைட்டா சொல்லிட்டு வந்திருக்கேன். ஹெல்ப் பண்றேனு சொல்லியிருக்காங்க"

"எப்படி அவ்வளவு தைரியமா சொல்லிட்டு வந்த? நான் உன்னை ப்ரபோஸ் பண்ணலைனா?"

"நீ பண்ணுவனு எனக்கு தெரியும்"

"ஹிம்ம்ம்"

"அப்பறம் பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சினு வினோதினி அக்கா சொன்னாங்க"

"ஆமாம். ஆனா என்னால தான் ரெண்டு உயிர் போச்சுனு எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு"

"இல்லை ரவி. உன்னால நிறையா நல்லது நடந்திருக்கு. இந்த பூமிக்கு எந்த உயிர் வரணும், எந்த உயிர் போகனும் எப்பவோ முடிவு பண்ணியாச்சு. அது நம்ம கைல இல்லை"

"ஹிம்ம்ம்... இருந்தாலும் எனக்கு மனசுல ஒரு வருத்தம் இருந்துட்டே இருக்கு"

"கவலைப்படாத. நான் உன் கூட இருக்கேன்"

"நித்யா, உன் கையை நான் கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறதா? எனக்கு ஏதோ ரொம்ப பாதுகாப்பா இருக்கற மாதிரி இருக்கும்"

என்னங்க இதுக்கு போய் முறைக்கிறா?

"சரி முறைக்காத. நான் கேக்கல"

"கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறனு சொல்ற? இந்த வாழ்க்கை முழுக்க பிடிச்சிக்கறனு சொல்லு" கையை நீட்டினாள்...

"வாழ்க்கை முழுக்க பிடிச்சிருந்தா வலிக்காது?"

""

"ஐய்யோ நான் விளையாட்டுக்கு சொன்னேன்... அடிக்காத அடிக்காத"

(ஆடு புலி ஆட்டம் முடிஞ்சிது... இங்க வேற ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி. நாம நடையை கட்டுவோம்)

Thursday, September 04, 2008

யாருக்கும் புரியாத என்னுடைய கதை

லிப்ட் ப்ளீஸ்னு முன்னாடி நான் ஒரு தொடர் எழுதினேன். அப்ப யாருக்கும் புரியல. உங்களுக்கு புரியுதானு பார்த்து சொல்லுங்க :)...

இந்த கதை பிடிச்சா இப்ப எழுதற ஆடு புலி ஆட்டமும் உங்களுக்கு பிடிக்கறதுக்கான வாய்ப்பு அதிகம். அது இன்னும் ஒரு பாகத்தோட முடியப்போகுது.. படிச்சி பாருங்க... பிடிக்கும் ;)

--------------------------------------1-------------------------------------------

ஈஸிஆர் ரோட்டின் இருளை கிழித்துக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த சிகப்பு நிற மாருதி எஸ்டீம்.

வழக்கத்தைவிட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பாண்டியிலிருந்து சென்னை வரும் சொகுசு பேருந்துகளே பெரும்பாலும் அந்நேரத்தில் பார்க்க முடிந்தது.

வேகமாக சென்று கொண்டிருந்த அந்த எஸ்டீம், தன் வேகத்தை குறைத்து சாலையின் ஓரத்தில் நின்றது. காரின் ஜன்னல் திறந்தது...

"என்னங்க இந்த நேரத்திலும் லிஃப்டா???" காரிலிருந்து கேட்டவருக்கு சுமார் முப்பத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது.

"ஆமாங்க... கொஞ்சம் அவசரமா கோயம்பேடு போகனும். நீங்க சிட்டிக்குள்ள இறக்கிவிட்டுட்டீங்கனா நான் டேக்ஸி பிடிச்சி போயிக்கறேன்"

"நான் அண்ணா நகர்தான் போறேன்... அப்படியே உங்கள கோயம்பேடுல இறக்கி விட்டுடறன். ஏறுங்க!!!"

காருக்குள் ஏறிய பெண்ணிற்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது. அந்த காலத்து காஞ்சனாவை நியாபகப்படுத்தினாள்.

"என்னங்க இந்த நேரத்துல இப்படி தனியா இந்த மாதிரி இடத்துல நின்னுக்கிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன அவசரம். காலைல போகக்கூடாதா?"

"இல்லைங்க சேலத்துல இருக்கிற அப்பாக்கு உடம்பு சரியில்ல. நெஞ்சுவலினு போன் வந்துச்சு... சரி எப்படியும் ஏதாவது பஸ் பிடிச்சி போயிடலாம்னு புறப்பட்டுட்டேன்"

"பரவாயில்லைங்க இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் தைரியமா இருக்கீங்க"

"இல்லைனா பொழைக்க முடியாதுங்களே"

"அதுவும் சரிதான்... நீங்க என்ன பண்றீங்க?"

"நான் எம்.எஸ்.ஸி மைக்ரோபயலஜி படிச்சிருக்கேன். இங்க திருவான்மியூர்ல இருக்குற அன்னை ஹாஸ்பிட்டல்ல லேப் டெக்னீஷியனா இருக்கிறேன்"

"ஓ!!! அப்ப நிறைய இரத்தம் பாப்பீங்க போல இருக்கே!!!"

"ஹிம்... இரத்தம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்..."

....


காரில் ஒரு இனம் புரியாத நிசப்தம் நிலவியது.

--------------------------------------2-------------------------------------------

"என்னங்க இப்படி பக்கத்துல இருக்குற பிரெண்ட் வீட்டுக்கு போறன்னு அக்காட்ட சொல்லிட்டு இப்ப எங்கயோ போயிட்டு இருக்கீங்க???"

"கொஞ்சம் பேசாம அமைதியா வா"

"சரி. நம்ம இப்ப எங்க போறோம்???"

"ஊட்டி"

"என்ன ஊட்டியா??? என்னங்க இப்படி பண்றீங்க"

"பின்ன டூ-வீலர்ல ஊட்டி போறோம்னு சொன்னா உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா??? அதனாலதான் பிரெண்ட் வீட்ல லன்ச்க்குன்னு சொல்லி கூப்பிட்டு வந்துருக்கேன். சாயந்திரம் 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிடலாம்... அமைதியா வா"

"இருந்தாலும் நீங்க பண்றது தப்பு.. ஃபிரெண்ட் வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு எங்க மாமாகிட்ட வண்டி வாங்கிட்டு வந்து இப்படி ஊட்டி போனாம்னு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க"

"இங்க பாரு... நான் காலேஜ் படிக்கும் போதே பிரெண்ட்ஸ் கூட நிறைய தடவை டூ-வீலர்ல ஊட்டி போயிருக்கேன். அப்பவே அவன் அவன் கேர்ள் பிரெண்ட்ஸோட வருவாங்க. நான் மட்டும் எந்த பொண்ணையும் ஏத்தாம தனியா வருவேன். அப்பவே மனசுல தீர்மானிச்சுக்கிட்டேன். கால்யாணம் ஆனவுடனே கண்டிப்பா என் பொண்டாட்டிய வண்டில கூப்பிட்டு வருவேன்னு. இப்பவே 6 மாசம் லேட். நல்ல வேளை உங்க அக்கா வீடு கோயம்பத்தூர்ல இருக்கு"

"இருந்தாலும் யாராவது பாத்து மாமாகிட்ட சொல்லிட்டா"

"அதெல்லாம் யாரும் பாக்க மாட்டாங்க. தெரிஞ்சாலும் உங்க மாமா எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. நான் என் பொண்டாட்டிய தான கூப்பிட்டு போறேன். இந்த மாதிரி பேசாம சந்தோஷமா எதாவது பேசிட்டு வா"

"நீங்க நிஜமாலுமே எந்த பொண்ணையும் கூப்பிட்டு போகலையா???"

"பார்த்தியா!!! இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் சந்தேக புத்தி போகவே போகாது"

--------------------------------------3-------------------------------------------

"உங்க ரெக்கார்ட பாத்தா நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு"

"டாக்டர்... நீங்க சரியா புரிஞ்சிக்க மாட்றீங்க"

"இல்ல. நீங்க சொல்றது எனக்கு புரியுது. எனக்கு என்னுமோ நீங்க நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு.எதுக்கும் நான் என் சீனியர் டாக்டர்கிட்ட கன்ஸெல்ட் பண்ணி சொல்றன். அவர் ஒரு கான்ஃபரன்ஸ்க்கு டெல்லி போயிருக்கார். நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க... நான் அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிடறேன். அவர் டெஸ்ட் பண்ணா கரெக்டா இருக்கும்னு நான் ஃபீல் பண்றேன்"

"ஓகே டாக்டர். தேங்க்ஸ்"

"ஓகே. அடுத்த வாரம் பாக்கலாம்"

----------------------------------------------4--------------------------------------------

"இப்பவே மணி 5 ஆச்சு... சீக்கிரம் போங்க. வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் 8 ஆயிடும்"

"ஏய்!!! ஐயா டிரைவிங் பத்தி என்ன நினைச்ச!!! 6:30க்கு எல்லாம் வீட்ல இருக்கலாம்"

"ஐயோ சாமி !!! நீங்க பொறுமையாவே போங்க... லேட்டா போனாலும் பிரச்சனையில்லை"

"என்ன சீக்கிரம் போன்னு சொல்லற... பொறுமையா போனு சொல்லற... மனஷன பைத்தியமாக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட"

"உங்க இஷ்டத்துக்கு ஓட்டுங்க!!! நான் எதுவும் சொல்லல"

.....

"என்னங்க இப்படி தூறல் போட ஆரம்பிச்சிடுச்சு... மழை பெய்யறதுக்குள்ள சீக்கிரம் போங்க"

"கவலைப்படாத சீக்கிரம் போய் சேந்துடலாம்..."

பத்தாவது ஹேர் பின் வளைவில் வண்டி அதன் கட்டுப்பாட்டை இழந்தது. மழையில் நனைந்து வழுவழுப்பாக இருந்த ரோட்டை பிரேக்கால் வெற்றி கொள்ள முடியவில்லை. வண்டி எதிரில் வந்த காரில் மோதியது.

----------------------------------------------5--------------------------------------------

"என்னங்க இரத்தம்னா பிடிக்குமா??? "

"ஆமாங்க... அதுவும் பாவம் செய்றவங்க இரத்தம்னா ரொம்ப பிடிக்கும்"

அவள் கையில் மின்னிய கத்தி அந்த இருளிலும் அவன் கண்களில் பயத்தை உண்டாக்கி அதன் கடமையை செய்தது.

"ஏ...என்ன செய்யப்போற நீ... நான் எந்த தப்பும் பண்ணல"

"என்ன நீ எதுவும் தப்பு பண்ணலையா??? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊட்டில நடந்தது உனக்கு நியாபகமில்ல" அவள் வார்த்தைகள் மிக கடுமையாக இருந்தன.

"ஊட்டிலயா??? நான் எந்த தப்பும் செய்யலையே"

"ஊட்டில இருந்து இறங்கற ஒரு வண்டில மோதிட்டு வந்தியே நியாபகமில்ல???" அவள் கண்கள் சிவந்திருந்தன.

"அது என் தப்பு இல்ல.. அந்த டூ-வீலர்தான் ராங் சைட்ல வந்தான்"

"இருக்கட்டும்... ரெண்டு உயிர் அடிப்பட்டு துடிச்சிட்டு இருக்கும் போது... உனக்கு வண்டிய நிறுத்தி காப்பாத்தனும்னு தோனல... இல்ல"

"போலிஸ் கேஸாகிடும்னு பயந்து நிறுத்தாம வந்துட்டேன்... என்ன மன்னிச்சிடு" அவன் வார்த்தைகள் பயத்தில் குழறின.

"அன்னைக்கு நீ மட்டும் நிறுத்தியிருந்தா நான் என் புருஷன இழந்திருக்கமாட்டேன்..."

"வேணாம் என்ன எதுவும் பண்ணிடாத... ப்ளீஸ்.... என்ன எதுவும் பண்ணிடாத ஆஆஆஆஆஆஆஆஆ.........."

----------------------------------------------6--------------------------------------------

"என்ன எஸ்.ஐ சார்... காலைலே ஆக்ஸிடெண்ட் கேஸா"

"ஆமாம்... நம்ம தாலி அறுக்கறத்துக்குனே வரானுங்க.
நானும் இந்த ஏரியா வேணாம்... மாத்திக்குடுங்கனா அந்த டி.எஸ்.பி வேற விடமாட்றான்... வாரத்துக்கு ஒரு பொணம் பாக்க வேண்டியதா இருக்கு"

"இன்னைக்கு எத்தன???"

"ஒன்னுதான்... தண்ணியடிச்சிட்டு ஓட்டிருப்பான்னு நினைக்கறேன். மரத்துல போய் மோதியிருக்கான்...
சரி... டாக்டர் எப்ப வருவாரு???"

"போன் பண்ணிட்டன் சார்... வந்துடுவாரு. ஷிப்ட் முடிஞ்சி அஞ்சி நிமிஷத்துக்கு முந்திதான் மூர்த்தி சார் போனாரு"

"சரி... நான் ஒரு கான்ஸ்டெபுல இங்க போட்டுட்டு போறேன். போஸ்ட்மார்டம் முடிஞ்சவுடனே ரிப்போர்ட்ட அவர்ட குடுத்துடுங்க. இன்னைக்கு வேற என் மச்சான் ஊர்ல இருந்து வரான். நான் 7 மணிக்குள்ள கறி வாங்காம போனா என் வூட்டுக்காரி என்ன வீட்லயே சேத்துக்க மாட்டா... நான் ரொம்ப நேரம் இங்க வெயிட் பண்ண முடியாது"

"சரி சார்..."

"மாரிமுத்து... நான் எஸ்.ஐதான் பேசறன். உடனே புறப்பட்டு ஜி.எச் வந்துடுங்க. ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸ். நீங்க பக்கத்துல இருந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்ட வாங்கிட்டு வந்துடுங்க.. நீங்க வர வரைக்கும் நான் இங்க வெயிட் பண்றேன்"


--------------------------------------7--------------------------------------

"என்னங்க சகல... இன்னைக்கு உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் லன்ச்க்கு கூப்பிடலயா???"

"அன்னைக்கு சாப்பிட்ட லன்ச்சே இன்னும் செரிக்காம இருக்கு"

"உங்களுக்கு மட்டுமா??? எனக்கும்தான்... நீங்க ஏன் வண்டி சாவிய குடுத்திங்கனு என்ன புடிச்சி திட்டிக்கிட்டே இருந்தா"

"பின்ன... இவரே யூஸ் பண்ணாத வண்டிய குடுத்தா திட்டாம என்ன செய்வாங்க??"

"பரவால விடுக்கா... எல்லாம் இவர சொல்லனும்.
இப்ப நெனச்சாலும் எனக்கு கொல நடுங்குது.
நல்ல வேள புண்ணியவான் ஒருத்தன் கார நிறுத்தி ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனான்... இல்லனா... நெனிச்சுப்பாக்கவே பயமா இருக்கு"

--------------------------------------8--------------------------------------

"என்ன சரவணன்... ஏதோ ரொம்ப சிக்கலான கேஸ்னு சொன்னீங்க!!! பாத்தா அப்படி ஒண்ணும் தெரியலையே"

"சார்... நீங்க இது என்னவா இருக்கும்னு ஃபீல் பண்றீங்க???"

"உங்க குழப்பம் என்னனு சொல்லுங்க... நான் அப்பறம் சொல்றேன்"

"நான் டெஸ்ட் பண்ணத வெச்சி பாக்கும் பொது அவருக்கு Schizophreniaவா இருக்குமோனு சந்தேகப்படறேன்"

"எத வெச்சி அப்படி சொல்றீங்க???"

"முதல் காரணம்... அவர் பேச்சு சில சமயம் சம்பந்தமே இல்லாம இருந்துச்சு"

"அடுத்து..."

"அவர ஹிப்னாடிக் ட்ரிட்மெண்ட் பண்ணும் போது அவர் ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஏதோ ஆக்ஸிடெண்ட் பண்ணியிருக்கார். அதுல வண்டி ஓட்னவர் இறந்துட்டார். அவர் மனைவி விதவையாகிட்டாங்கனு தீர்க்கமா நம்பறார். அதுவும் இல்லாம அவுங்க இவர பழிவாங்க தேடறாங்கனு பரிபூர்ணமா நம்பறார்"

"வேற..."

"அவருக்கு நிறைய உருவங்கள் நகரமாதிரி தெரிஞ்சிருக்கு... ஆனா அதெல்லாம் போட்டோல இருக்குற உருவங்கள்... இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கு"

"சரி... இப்ப உங்க சந்தேகம் என்ன??? சொல்லுங்க"

"போதுவா Schizophrenia பேஷண்ட்டுக்கு ஆடியோ ஹாலோஸினேஷன் தான இருக்கும்... இவருக்கு எப்படி விஷ்வல் ஹாலோஸினேஷன் இருக்குன்றதுதான்"

"சரவணன்!!! யு ஹேவ் ப்ருவ்ட் யுவர் பிரில்லியன்ஸி. பட் நீங்க பண்ண தப்பு நீங்க முதல்ல ஒரு விஷயத்தை திர்மானிச்சிட்டு அப்பறம் ஆராய ஆரம்பிச்சிருக்கிங்க. சரி Schizophreniaனா என்ன சொல்லுங்க?"

"அது ஒருவகையான மன நோய். அது இதனாலதான் வருதுனு சொல்ல முடியாது. ஆனால் அதனுடைய அறிகுறிகள் ஒரு விஷயத்தில் தீவிர நம்பிக்கை, மாய ஒலிகள், நேர்த்தியற்ற பேச்சு, தீவிரமடையும் நிலையில் செயல்பட முடியாத நிலை"

"சரியா சொன்னீங்க... ஆனா அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு.. அத கவனிச்சீங்களா???"

"சார்... யூ மீன் டு சே... இட்ஸ் பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ்" (Peduncular Hallucinosis)

"யு ஆர் அப்சல்யூட்லி ரைட்... பொதுவா இந்த டிஸிஸால பாதிக்கப்பட்டவங்க கண்ணுக்கு இந்த மாதிரி பல மாய தோற்றங்கள் தெரியும். முதல்ல சொன்னதுக்கும் இதுக்கும் வித்தியாசம்... இதுல மாய உருவங்கள் தெரியும் ஆனா Schizophreniaல மாய ஒலிகள் மட்டும் கேக்கும்."

"ஆனா பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ் மாய குரல் எதுவும் கேக்காதே... "

"அங்க தான் நீங்க தப்பு பண்ணறீங்க... Caplan 1980ல பண்ண முக்கியமான தீஸிஸ்ல இது இருக்கு... இந்த நோயால பாதிக்கப்பட்டங்களுக்கு சில சமயம் உருவங்களுடன் சத்தங்களும் கேட்கும்னு சொல்லி ப்ரூஃப் கொடுத்துருக்காரு"

"சார்... ஆனா அவர் பண்ண அந்த ஆக்ஸிடெண்ட் பயம்... அந்த பொண்ணு பழி வாங்குவானு அவர் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை"

"அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே பயம்னு... அவ்வளவுதான்.
அதுக்குத்தான் மனசாட்சினு பேர்"

"எனக்கு என்னுமோ அவர் Schizophreniaவாலயும் அஃபக்ட் ஆகியிருப்பார்னு இன்னமும் தோனுது சார்...
எனக்கு இருந்த அந்த ஒரு சின்ன சந்தேகத்தால தான் நான் அவர்ட எதையும் சொல்லல..."

"குட்... டெஸ்ட்க்கு எப்ப வருவார்னு சொன்னீங்க???"

"நாளைக்கு சாயந்திரம் 7 மணிக்கு அப்பாயின்மெண்ட்"

"அப்ப நாளைக்கு தெரிஞ்சிடும்..."

---------------------------------------9---------------------------------------

"என்னது!!! ஹார்ட் பீட் முதல்ல நின்னதுக்கப்பறம்தான் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கா???"

"ஆமாம் சார்... டாக்டர் அப்படிதான் சொன்னாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லயும் ஹார்ட் அட்டாக்னு தான் எழுதியிருக்காறாம். எதுக்கும் உங்கள ஒரு தடவ போன் பண்ண சொன்னாரு"

"இந்த போனை கண்டுபிடிச்சவன முதல்ல உள்ள தூக்கி போடனும்யா. எதுக்கு எடுத்தாலும் போன் பண்ண சொல்லிடுவானுங்க... அதுதான் ஹார்ட் அட்டாக்னு ரிப்போர்ட் கொடுத்துட்டாரில்ல. கேஸ க்ளோஸ் பண்ண வேண்டியதுதான்"

(முற்றும்)

ஆடு புலி ஆட்டம் - 20

"வெற்றி சார்கிட்ட ஆரக்கிள் CD கேட்டிருந்தோம். புதுசா எழுதி தரேனு சொல்லியிருந்தாரு. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி உங்ககிட்ட கொடுத்திருக்கேன். வாங்கிக்கோங்கனு சொன்னாரு"

தினேஷ் எங்களை சந்தேகமா பார்க்கிறானு அவன் கண்ணுல தெரியுது...

"அப்படியா? ஆரக்கிள் எந்த வெர்ஷன் கேட்டிருந்தீங்க?"

"ஆரக்கிள் 9ஐ தான் கேட்டிருந்தோம். இப்ப தான் உங்ககிட்ட யாரோ ஃபிரெண்டை விட்டு கொடுத்தனு சொன்னாரு"

"ஓ அதுவா? இப்ப தான் நம்ம சாஃப்ட்வேர் எல்லாம் வைக்கிற சர்வர் ரூம்ல வெச்சேன். இங்கயே இருங்க. நான் போய் எடுத்துட்டு வரேன்"

அந்த CD வாங்கிட்டு அவர் சர்வர் ரூமுக்கே போகல. நேரா இங்க வந்ததை பார்த்தேன். இப்ப இப்படி சொல்லிட்டு போறார். அவ்வளவு தான் தப்பாயிடுச்சினு நினைக்கிறேன்.

என்னங்க திடீர்னு சுகுமாரன் இந்த ரூமுக்கு வரார். தினேஷ் ஏதோ கேம் ப்ளே பண்ற மாதிரி இருக்குது.

"என்ன ரெண்டு பேரும் இந்த நேரத்துல வந்திருக்கீங்க? உங்க க்ளாஸ் ஈவனிங் தானே?"

"ஆமாம் சார். ஒரு சாப்ட்வேர் வாங்கலாம்னு வந்தோம்"

"ஓ அதுவா? அதை தினேஷ் தேடிட்டு இருக்கார். நீங்க லாஸ்ட் வீக்கே ஒழுங்கா வரலை இல்ல"

"ஆமாம் சார். கொஞ்சம் பர்சனல் ஒர்க்"

"சரி. நான் போன வாரம் உங்க க்ளாஸுக்கு எடுத்ததை அடுத்த பேட்ச்க்கு எடுக்க போறேன். நீங்க ரெண்டு பேரும் இப்ப என் கூட வாங்க"

ஆஹா... இப்ப என்ன பண்றதுனு தெரியலையே. சரி வரோம்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடலாம்.

"சரி சார். வரோம்"

"சரி நான் க்ளாஸ் போறேன்பா. வந்து சேருங்க"

நல்ல வேளைங்க சொல்லிட்டு போயிட்டாரு.

"இப்ப என்ன பண்ண போற ரவி"

"நித்யா, நீ அவர் க்ளாஸுக்கு போ. நான் போய் தினேஷை பார்த்துட்டு வரேன்"

"சரி"

ஆஹா... எங்க தேடியும் தினேஷை காணோம். எங்க போனார்னு தெரியலையே. இப்ப என்ன பண்ணலாம்?

..............................

உங்க எல்லார்கூடயும் நிதானமா பேசனும்னு நான் ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன். இப்ப பாருங்க. இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலைல பேறச மாதிரி ஆகிடுச்சி. நான் தான் தினேஷ். என் மேல உங்க எல்லாருக்கும் கோபம் இருக்கும். அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. இந்த உலகம் எப்பவுமே Unfair தான். இப்ப பாருங்க. எதுவுமே தெரியாதுனு நான் நினைச்சிட்டு இருந்த வெற்றியே என் முதுகுல குத்தியிருக்கான்.

இப்ப தான் என் ரூம்ல அதை CDல நான் பார்த்தேன். எனக்கு தெரியாம நான் ஒரு பொண்ண பண்ணதை CDல பிடிச்சிருக்கான். அதை ஏன் அவன் இப்படி என் கைல கொடுத்து அந்த பையன் கைல கொடுக்க சொல்லனும்னு தான் எனக்கு புரியலை. ஒரு வேளை அந்த பையன் ஏதாவது டபுல் கேம் ஆடறானானும் புரியலை. இப்ப எனக்கு இருக்கற ஒரே கவலை, இதே மாதிரி மத்த பொண்ணுங்களை பண்ணதையும் CDல பிடிச்சிருக்காங்களானு கண்டுபிடிக்கறது தான்.

அதுக்கு தான் இப்ப லாட்ஜுக்கு போயிட்டு இருக்கேன். அதை தெரிஞ்சதுக்கப்பறம் முதல்ல அந்த பையனை பிடிக்கனும். அப்பறம் வெற்றி, குமார், துரைக்கு இருக்குது ஆப்பு. இருங்க லாட்ஜ் வந்துடுச்சி.

வெற்றி அவன் ரூம்ல தான் இருக்கான் போல. கதவு திறந்து தான் இருக்கு. இருங்க உள்ள போய் காரியத்தை முடிச்சிட்டு வரேன்.

"என்ன தினேஷ். அந்த CD தானே?"

"இல்லை குமார். நீ தப்பா எடுத்துட்டு வந்திருக்க. வெற்றி ஃபோன் பண்ணி உன்கிட்ட மீதி எல்லாமும் இருக்கு. எதுனு சரியா பார்த்து எடுத்துக்கோனு சொன்னான். அதான் வந்தேன்"

"ஓ. அப்படியா? இரு எடுத்து தரேன்"

என்னங்க திடீர்னு ஃபோன் அடிக்குது.

"இங்கயே இரு தினேஷ் வரேன். உள்ள சரியா சிக்னல் கிடைக்காது"

என்னங்க சொல்லிட்டு வெளிய போறான். இருங்க என்ன பேசறானு இங்க இருந்தே கேக்குது.

"சொல்லு வெற்றி"

" "

"ஆமாம். தினேஷ் இங்க தான் வந்திருக்கான்"

" "

"ஆமாம். அந்த CD இல்லை. வேற CDனு சொன்னான்."

" "

"இல்ல. நான் இன்னும் கொடுக்கல"

" "

"சரி நான் அது இங்க இல்லனு சொல்லி அனுப்பிடறேன். நீ பயப்படாத"

இருங்க உள்ள வரான். வெற்றிக்கு ஊர்ல இருந்து சிக்னலே கிடைக்காதே. எப்படி சரியா இந்த நேரத்துல நான் இங்க இருப்பனு பண்றான்.

எனக்கு எதுவுமே புரியலை. எப்படியும் இவனை மிரட்டி வாங்கிட்டு போயே ஆகனும்.

"தினேஷ். நீ சொல்ற CD வெற்றிக்கிட்ட இருக்கு. அவன் வந்தவுடனே வாங்கிக்கோ"

பாருங்க எவ்வளவு திமிரா பேசறான்.

"சரி. அப்ப உன் கிட்ட இருக்கற CDயையாவது கொடு"

"என்கிட்ட எதுவுமில்ல"

வேற வழியே இல்லைங்க. இவனை மிரட்டியாவது வாங்கிட்டு போகனும். இந்த கத்தியை எதுக்கும் கொண்டு வந்தது நல்லதா போச்சு.

"தினேஷ். எதுக்கு இப்ப கத்தியெல்லாம் எடுக்கற? நமக்குள்ள எந்த பிரச்சனையும் வேண்டாம்"

"நானும் அதை தான் சொல்றேன். என் முதுகுலயே குத்த பாக்கறீங்களாடா? முதல்ல அந்த CDயெல்லாம் கொடு. உன்னை எதுவும் செய்ய மாட்டேன்"

என் கைல கத்தி இவ்வளவு அழகா, பளபளப்பா இருக்கும்னு நானே நினைச்சி பார்த்ததில்லைங்க. யாரோ கதவை திறக்கற சத்தம் கேக்குது. துரை வந்துட்டான் போல.

"ஆஆஆஆஆ...." என்னங்க என் கைல ஒரே ரத்தமா இருக்கு. கத்தி கைப்பிடி மட்டும் தெரியுது.

நான் துரையை திரும்பி பார்த்த நேரத்துல இந்த குமார் என் மேல பாய்ஞ்சிட்டான். என்ன பண்றதுனு தெரியாம நான் கத்தியால வேகமா தடுக்க, அவன் கீழ் தாடைல குத்திட்டு உள்ள போயிடுச்சி. வெறும் கைப்பிடி மட்டும் அவன் தாடைக்கு கீழ தெரியுது. கத்தி முழுசா அவன் தலைக்குள்ள போயிடுச்சி போல.

"துரை நான் வேணும்னே பண்ணல. என்னை அப்படி பார்க்காத"

துரை நான் சொன்னதை கேக்காம என் மேல பாய்ச்சிட்டான். என் கழுத்தை பிடிச்சிட்டாங்க. மூச்சு விட முடியலையே. டேய் என்னை விடுடா. விடுடா. நான் சொல்றது அவனுக்கு கேக்கல போல. ஆ... தலையை பின்னாடி செவுத்துல இடிக்கறான். வலி உயிர் போகுது. யாராவது வாங்களேன். யாராவது வந்து என்னை காப்பாத்துங்களேன். பின்னாடி தலைக்குள்ள என்னுமோ கூரான ஒண்ணு இறங்கிடுச்சி போல. நிறைய பேர் கதவை திறந்துட்டு வராங்க. என்னை காப்பத்திடுவாங்....

(ஆட்டம் தொடரும்...)

Wednesday, September 03, 2008

ஆடு புலி ஆட்டம் - 19

என்னடா இவ்வளவு சீக்கிரமா எழுந்து வெளிய போயிட்டு இருக்கோம்னு பாக்கறீங்களா? நான் நேத்து ராத்திரி அந்த போன் பேச்சை கேட்டதுக்கு அப்பறம் தூங்கவேயில்லை. படுத்தும் ஏதேதோ சிந்தனை ஓடிட்டே இருக்குது. அதான் ஆறு மணிக்கெல்லாம் அசோக்கை எழுப்பிட்டேன். ஒரு டீ குடிச்சிட்டு வந்தா நல்லா யோசிக்கலாம்னு அவன் தான் சொன்னான். அதான் போயிட்டு இருக்கோம். அதுவும் இந்த பெங்களூர் குளூருக்கு இதமா இருக்கும்.

ஒரு வழியா டீ குடிச்சிட்டு வந்தாச்சுங்க. அசோக் அதை மறுபடியும் கேட்டுட்டு இருக்கான். கேட்டு முடிச்சிட்டான் போல. கொஞ்சம் இருங்க அசோக் ஏதோ பேச வரான்.

"என்ன வெற்றியும் தினேஷும் தானா?"

"ஆமாம் அசோக். அப்படி தான் தெரியுது."

"சரி இப்ப என்ன பண்ணலாம்? இந்த ஆடியோ ஃபைலோட போலிஸ்கிட்ட போயிடலாமா? வெற்றி அவன் ஊருக்கு போறதுக்குள்ள பிடிச்சிடுவாங்க"

"இல்லை. எனக்கு அது சரியாப்படல. எனக்கு ஒரு ஐடியா இருக்கு"

"சொல்லு"

"அவன் பேசும் போது ஏதோ ஒரு CDயை பத்தி பேசினான். அதை பத்தி தினேஷுக்கும் தெரியாதுனு சொன்னான். அதே மாதிரி அது யார் கைலயாவது மாட்டினா கூண்டோட எல்லாரும் மாட்டிக்குவோம்னு சொன்னான்"

"கரெக்ட். அதுல என்ன இருக்கும்னு ஏதாவது கெஸ் பண்ணியா?"

"அதுல என்ன இருக்கும்னு என்னால தெளிவா சொல்ல முடியல. ஆனா அது ஒரு CD இல்லை. நிறைய CD. அதுவும் அந்த CDல தினேஷ்க்கு தான் பிரச்சனைனும் சொன்னான். அதை வெச்சி பொண்ணுங்களை இன்னும் மிரட்டி லம்பா காசு வாங்கலாம்னு சொன்னான்"

"அப்ப அந்த CDயை நாம வாங்கிட்டா அதை வெச்சி சுலபமா அவனுங்களை மாட்டி விட்டுடலாம்"

"கரெக்ட். அதுவுமில்லாம நாம எல்லாம் இதுல சம்பந்தப்பட்டிருக்கோம்னு போலிஸுக்கு சொல்லாமலே அவனுங்களை மாட்டிவிடலாம்"

"ஏன். நாம போலிஸுக்கு போனா என்ன?"

"நாம போனா நமக்கும் பெரிய பிரச்சனை. அப்பறம் வினோதினி அக்காக்கும் பிரச்சனை வரும். வேற வழியில்லைனா நாம அதை பண்ணி தான் ஆகனும். ஆனா இந்த மாதிரி CD கிடைச்சா அதை நாம போலிஸுக்கு நம்ம பேர் சொல்லாமலே அனுப்பினாக்கூட போதும்"

"குட். நானும் பயந்துக்கிட்டே இருந்தேன். சரி அந்த CDயை எப்படி வாங்கறது?"

"வேற வழியில்லை Caller ID spoofing யூஸ் பண்ணி தான் ஆகனும்"

"டேய் R&D ப்ராஜக்ட் எல்லாத்தையும் யூஸ் பண்ண சொல்றீயேடா"

"என்னுமோ நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி பேசறீங்களேடா. இதுக்கு எல்லாம் எவ்வளவு சர்வீஸ் ப்ரவைடர்ஸ் இருக்காங்கனு தெரியுமில்ல. ஏதோ VOIP யூஸ் பண்ணாம செல்ஃபோன்லயே சாப்ட்வேர் மூலமா பண்ற மாதிரி நீங்க கஸ்டமைஸ் பண்ணிருக்கீங்க. ஞாபகம் வெச்சிக்கோ"

"சரி. இப்ப நமக்கு எதுக்கு அது?"

"வெற்றி செல் ஃபோன்ல இருந்து பண்ற மாதிரி பண்ணா தான் இதை சுலபமா சாதிக்க முடியும். இப்ப அந்த சாப்ட்வேர் யூஸ் பண்ணா நான் வெற்றி ஃபோன்ல இருந்து பண்ற மாதிரி போகும். அந்த குமார் வெற்றி தான் பண்றானு நினைச்சிக்குவான். வெற்றி மாதிரியே நான் பேசிடறேன். "

"சரி. அவன்கிட்ட என்ன பேச போற?"

"அதை நாளைக்கு பார்த்துக்கோ. அதுக்குள்ள உன் செல்ஃபோன்ல அந்த சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணி இன்னைக்கு முழுசா டெஸ்ட் பண்ணிடலாம். நான் வெற்றி மாதிரி பேச இன்னும் கொஞ்சம் ப்ராக்டீஸ் எடுத்துக்கறேன்"

"சரி ஓகே"

........


என்னடா கொஞ்சம் டென்ஷனா இருக்கேனு பாக்கறீங்களா? செல்ஃபோன்ல Caller ID Spoofing நல்லா வேளை செய்யுது. நிறைய டெஸ்டிங் செஞ்சி பார்த்தாச்சு. நானும் வெற்றி மாதிரி நல்லா பேசி பழகிட்டேன். ஆனா இப்ப எதிர்ல இருக்கறவன் என்ன பேசினாலும் பேசி சமாளிக்கனும். ராத்திரி முழுசா வெற்றி செல்ஃபோனுக்கும் பண்ணி பார்த்துட்டேன். அது Not Reachable Areaல தான் இருக்கு. நான் பேசி அவனுக்கு சந்தேகம் வந்தாலும் அவன் உடனே பண்ண முடியாது. இருங்க அசோக் அந்த குமாருக்கு டயல் பண்ணி கொடுக்கறான். ரிங் போக ஆரம்பிச்சிடுச்சி.

"சொல்லு வெற்றி. என்ன ஊருக்கு பத்திரமா போயிட்டயா?"

"பத்திரமா போயிட்டேன் குமார். ஒரு முக்கியமான விஷயம். அது தான் ஃபோன் பண்ணேன்"

"சொல்லு"

"நேத்து உன்னை எல்லா CDயும் காப்பி போட சொன்னனே. அதை போட்டு வெச்சிட்டயா?"

"இல்லையே"

"சரி. அதுல ரெண்டாவது CDயை மட்டும் உடனே காப்பி போடனும்"

"ரெண்டாவதுனா யாரு? அந்த திருச்சி பொண்ணா? பேருக்கூட சசிரேகாவோ என்னுமோ"

"ஆமாம். அதே தான். அந்த பொண்ணுக்கு இப்ப பேசினா சுளையா லட்சக்கணக்குல கறந்துடலாம். அந்த CDயை எடுத்து ஒரு காப்பி போட்டுட்டு போய் தினேஷ்கிட்ட கொடு. அவன் பேசிக்குவான்"

"தினேஷ்கிட்டயா? அவனுக்கு இதை பார்த்தா நம்மல ஒழிச்சி கட்டிட மாட்டானா?"

"பயப்படாத. மீதி எல்லாம் நம்மக்கிட்ட தான் இருக்கு. நான் சொல்றதை கேளு. மீதி எல்லாம் நான் நேர்ல வந்து சொல்றேன். மத்த CDயை எல்லாம் பத்திரமா ஒளிச்சி வெச்சிடு. சரியா?"

"சரி"

"அப்பறம். சொல்ல மறந்துட்டேன். அந்த CDல இங்கிலீஷ்ல நான் சொல்றதை எழுதி கொண்டு போய் கொடு. அப்ப தான் இன்ஸ்டிடியூட்ல யாருக்கும் சந்தேகம் வராது"

"இன்ஸ்டிடியூட்லயா கொண்டு போய் கொடுக்கறது?"

"ஆமாம். நேரமில்லை. அந்த பொண்ணு சீக்கிரம் பெங்களூரைவிட்டு போயிடும். அதான். சரி நான் சொல்றதை ஒரு பேப்பர்ல எழுதிக்கோ. அப்பறம் அந்த பையனை அதை CDல எழுத சொல்லி கொண்டு போய் கொடு"

"சரி"

"ஓ ஆர் ஏ சி எல் இ. திரும்ப சொல்லு"

"ஓ ஆர் ஏ சி எல் இ"

"சரி. நான் நாளைக்கு உனக்கு ஃபோன் பண்றேன். அது வரைக்கும் நீ பண்ணாத. நான் வெளிய போறேன். அங்க என்னால இதை பத்தி பேச

முடியாது. தினேஷ் இதை எல்லாம் பாத்துக்குவான்."

"சரி வெற்றி"

"நான் வெச்சிடறேன்.அப்பறம் பார்க்கலாம்"

"சரி"

ஆண்டவா. ஒரு வழியா பேசி முடிச்சிட்டேங்க. நாங்க திட்டம் போட்ட மாதிரி எல்லாம் நல்ல படியா நடக்கனும். இது வரைக்கும் எல்லாம் சரியா நடக்குது. இது மட்டும் நடக்கலனா இவ்வளவு பண்ணது வேஸ்ட். சரி இப்ப உடனே இன்ஸ்டிடியூட் கிளம்பனும்.

ஒரு வழியா இன்ஸ்டிடியூட் வந்து சேர்ந்தாச்சிங்க. நித்யா நான் ஃபோன் பேசறதுக்கு முன்னாடியே இன்ஸ்டிடியூட் வந்துட்டா. யாராவது தினேஷ்கிட்ட CD கொடுத்தா அவளை போய் வாங்கி வைக்க சொன்னேன். இன்னும் வரலைனு சொல்லிட்டா. இனிமே தான் வருவாங்க போல.

இருங்க யாரோ ஒருத்தன் வரான். அவனை தினேஷ் பார்த்ததும் டென்ஷனா வெளிய போறாரு. அவனை முறைச்சிக்கிட்டே போறாரு. அவன் அந்த CD கவரை ஏதோ சொல்லி கொடுத்துட்டு வேகமா போயிட்டான். அனேகமா "வெற்றி கொடுக்க சொன்னா"னு சொல்லியிருப்பான்.

இருங்க ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சி வாங்கிட்டு வரேன்.

தினேஷ் அந்த CDயை பார்த்துட்டு குழப்பமாவே இருக்கான். இருங்க போய் பேசறேன். அதுக்கெதுக்கு கூட நித்யாவும்னு யோசிக்கறீங்களா? பொண்ணுங்க முன்னாடி எல்லாரும் நல்லவனா தான் இருப்பாங்க. இருங்க அவன் பக்கத்துல போயாச்சு

"சார்"

"என்னப்பா?"

"வெற்றி சார்கிட்ட ஆரக்கிள் CD கேட்டிருந்தோம். புதுசா எழுதி தரேனு சொல்லியிருந்தாரு. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி உங்ககிட்ட கொடுத்திருக்கேன். வாங்கிக்கோங்கனு சொன்னாரு"

தினேஷ் எங்களை சந்தேகமா பார்க்கிறானு அவன் கண்ணுல தெரியுது...

(ஆட்டம் தொடரும்...)