தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Friday, January 04, 2008

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 9

ஆம்பலில் இதுவரை..

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்

ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்



"ஏ அஞ்சலி! நம்ம பானு வரதுக்கு லேட் ஆகுமாம் எப்பவும் போல ஏணியை இறக்கி வெச்சிடு" சொல்லி கொண்டே அஞ்சலி அருகில் சாப்பாட்டு தட்டுடன் அமர்ந்தாள் மீனா.

"மகராணி எங்க போயிருக்காங்க?"

"அவ சுரேஷோட ஷாப்பிங் போனாளாம். அப்படியே படத்துக்கு போயிட்டு வரலாம்னு போயிட்டாங்களாம்"

"அது என்னடி படிக்கும் போதே படம் கிடம்னு சுத்திட்டு இருக்கா?"

"ஏய்! நீ ஏன் இப்படி சீன் போடற? அவ லவ் பண்றா, படத்துக்கு போறா. இதுல என்ன இருக்கு? சுரேஷும் ரொம்ப நல்ல பையன் தான்"

'சுரேஷ் நல்ல பையனு இவ எனக்கு சொல்றா' மனதிற்குள் சொல்லி கொண்டாள்

"சரி அப்ப நீயே ஏணியை இறக்கி வெச்சிடு. நான் லைட் ஆஃப் பண்றதுக்குள்ள தூங்கிடுவேன். அதுவுமில்லாம இந்த வார்டனுக்கும் எனக்கும்

நேத்து தான் சண்டை"

"செல்லம் இல்லை. எனக்காக இதை செஞ்சிடு அஞ்சலி. கார்த்திக் ராத்திரி ஃபோன் பண்றனு சொல்லிருக்கான்பா. ப்ளீஸ்"

"யாரு அந்த கெமிக்கல் கார்த்தியா? எக்கேடோ கெட்டு போ!"

"ஏணி எடுத்து வெச்சிடற இல்லை? சரியா ஒரு மணிக்கு எல்லாம் எடுத்து வெச்சிடுடா. ப்ளீஸ்"

"சரி"

ஒரு மணி வரை என்ன செய்வதென்று புரியாமல் அடுத்த அறைக்கு சென்றாள் அஞ்சலி. அங்கே லதாவின் பழைய டைரி அவள் படுக்கை மேல்

கிடந்தது. அவள் வரும் வரை அவளுக்கு தெரியாமல் படிக்க ஆரம்பித்தாள் அஞ்சலி. காலேஜ் முதல் நாள்

"எங்க க்ளாஸ்ல ஆறே பொண்ணுங்க தான்.
Anita - மெட்ராஸ் பொண்ணு. எதுக்கெடுத்தாலும் இங்கிலீஷ்லயே பேசறா
Anjali - விழுப்புரம் பக்கத்துல ஒரு ஊர். பேர் மறந்து போச்சு. ரொம்ப நல்ல பொண்ணு. நல்லா பேசறா
Meena - இவ ஊர் சேலம். வாய திருந்தா மூடவே மாட்டா போல தெரியுது.
Banu - இவ மதுர பக்கத்து பொண்ணு. இன்னைக்கு முழுக்க அமைதியா இருந்தா.
Archana - இவ ஊரு திண்டுக்கல். இன்னும் இவக்கிட்டயும் பேசல.

ஸ்கூல்ல இருந்த மாதிரி எங்க எல்லாரோட பேரையும் சேர்த்து குருப்பா ஒரு பேர் வைக்கனும். என்ன வைக்கலாம்?

ஹிம்ம்ம்... எல்லாரோட முதல் எழுத்தையும் சேர்த்து பார்க்கலாம்.
AAMBAL கரெக்ட்- "ஆம்பல்"

"வேங்கையும் பூங்கொடி"ல படிச்ச பூ...

"ஆம்பல் பூத்த
அதரங்கள் நெகிழ
அன்றைய கடமைகள்
ஆற்ற வந்தாள்."

.....................................................

"இங்க பாருப்பா சுரேசு.. உங்க ஐயாரு கண்டிப்பா சொல்லிட்டாக நீ அவுக தங்கச்சி புள்ளய தான் கட்டிக்கனுமாம்"

"அம்மா உனக்கு எத்தனை முறைமா சொல்றது. அவுக ரொம்ப வசதியான இடம். அந்த பொண்ணும் நிறையா படிச்சிருக்கு. என்

உத்யோகத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதுமா"

"இங்க பாரு. அவக தங்கச்சி தான் இதை பத்தி உங்க அயாருக்கிட்ட பேசிருக்காங்க. பொட்ட புள்ள என்ன படிச்சா என்ன? வேலைக்கா போக

போகுது. உன் கூட நல்லா குடும்பம் நடத்துவாய்யா. நீ எதுவும் பயப்படாத"

"அம்மா. எனக்கு என்னுமோ இது சரியாப்படல. மெட்ராஸ்ல படிக்கிற புள்ள. அதுவுமில்லாம என் உத்யோகம் வேற ஒரு மாதிரி. எப்ப

வீட்டுக்கு வருவேன், எப்ப போவேனு எனக்கே தெரியாது"

"அதெல்லாம் நீ ஏண்டா பயப்படற. கயலு ரொம்ப தங்கமான பொண்ணு. உன்னைய நல்லா வெச்சி பார்த்துக்குவா"

"எதுக்கும் நீயே ஒரு தடவை பேசி பாரும்மா"

"அவளுக்கு நீயே வேணும்னா ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. உங்க ஐயா அந்த காலெண்டர்ல அவ நம்பர் எழுதி வெச்சிருக்காரு. அப்பறம்

ஃபோன் பண்ணி கயல்னு கேக்காத லதானு கேளு"

"தெரியும்மா..."

(தொடரும்...)
.....................

இதை ஆன்மீக முற்போக்குவாதி(???) KRS தொடருவார்...

Tuesday, May 15, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - 2

முதல் பகுதி படிக்க இங்கே சொடுக்கவும்

அந்த அரசாங்க பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெரிய அளவில் கூட்டமில்லையென்றாலும், ஓரளவு கூட்டமிருந்தது.

எந்த க்ரூப் எடுப்பது என்று அங்கே நின்றிருந்த பெண்களின் பெற்றோர்கள் ஓரளவு தீர்மானித்திருந்தனர். காவேரியின் பத்தாம் வகுப்பு வகுப்பாசிரியர் அவளுக்கு "ஏ" க்ரூப் எடுக்குமாறு சொல்லி அனுப்பியிருந்தார். அவளுக்கு அது என்னவென்று பெரிதாக தெரியாத நிலையிலும், அது படித்தால் மேற்கொண்டு என்னவேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று அவர் சொல்லியிருந்த காரணத்தால் அவள் அந்த க்ரூப்பையே தெர்ந்தெடுத்திருந்தாள்.

ஒவ்வொருவராக பள்ளி முதல்வர் அறையில் சென்று அவர்களுக்குரிய க்ரூப்பை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தனர். காவேரி சென்ற பொழுது உள்ளே முதல்வருடன் மூன்று ஆசிரியைகள் நின்றிருந்தனர்.

சிகப்பு புடவை கட்டியிருந்த ஆசிரியை, காவேரியிடம் பேச ஆரம்பித்தார்.

"இங்க பாரும்மா. நீ கேட்ட க்ரூப்ல சீட்டு தீர்ந்துடுச்சி. மொத்தம் 60 பேரு தான் ஒரு வகுப்புல. எல்லா சீட்டும் முடிஞ்சிடுச்சி. அதனால நீ வேற எதாவது க்ரூப் எடுத்துக்கோ"

இதை கேட்டதும் காவேரிக்கு எதுவும் புரியவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒரு க்ரூப் மட்டும் தான்.

பக்கத்திலிருந்த கண்ணாடி அணிந்திருந்த டீச்சர் அவள் திருதிருவென்று முழிப்பதை பார்த்து புரிந்து கொண்டார்

"இங்க பாரும்மா, முதல் குருப் கிடைக்காதவங்க ப்யூர் சயின்ஸ் எடுப்பாங்க, இல்லைனா தையல் பாடம் எடுக்கலாம். உனக்கு எது விருப்பம்னு சொல்லு"

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தையல் படிக்கறதுன்னா அப்பா வீட்லயே படிக்கலாம்னு சொல்லுவாரு. பக்கத்து வீட்டு சரசு அக்காவைவிட வேற யார் நல்லா தைச்சிட போறாங்க. அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே அந்த சிகப்பு புடவை டீச்சர் பேச துவங்கினார்.

"புதுசா வந்திருக்க க்ரூப்பை விட்டுட்டீங்களே டீச்சர். கம்ப்யூட்டருக்குனு புது க்ரூப் வந்திருக்குமா. ஆனா இங்க யாருக்கும் பெருசா சொல்லி தர தெரியாது. ஆனா அதுல கணிதம், இயற்பியல், வேதியல் எல்லாம் இருக்கு. இந்த உயிரியல் பாடம் மட்டுமில்ல. "

அவர் சொல்லியதை கேட்டதும் அதையே படிக்கலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாள். அவர்களிடம் அதற்கான சம்மதமும் சொல்லிவிட்டு வந்தாள். அப்பாவுடன் கிராமத்திற்கு புறப்படும் போது அவளுக்கு ஒருவித வருத்தம் கலந்த பயமே மனதில் படர்ந்திருந்தது.

தினமும் கிராமத்திலிருந்து பேருந்து மூலமாக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தாள் காவேரி. அவள் பக்கத்து தெருவிலிருந்த செண்பகமும் அதே வகுப்பில் அவளுடன் படித்து கொண்டிருந்தது அவளுக்கு ஒருவிதத்தில் தைரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்தது. ஒரு வழியாக பள்ளியில் சேர்ந்து ஒன்றரை மாதங்களாகியிருந்தது.

முதல் மாதம் நடந்த மாத தேர்வில் வேதியியலில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். அதில் காவேரியும் அடக்கம். அவளுக்கு நினைத்து பார்க்கவே வெட்கமாக இருந்தது. இது வரை கிராமத்து பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து வந்தவளுக்கு இந்த தோல்வி ஒரு வகையில் அதிர்ச்சியே.

பின்னர் செண்பகம் சொல்லி தான் அவளுக்கு விஷயம் புரிந்தது. அந்த டீச்சரிடம் டியூஷன் படிக்கும் மாணவிகள் மட்டுமே தெர்ச்சி பெற்றிருப்பதாகவும், மற்றவர்கள் எல்லாம் வேண்டுமென்றே ஃபெயிலாக்கினார் என்றும் புரிந்தது. அவரிடம் கண்டிப்பாக டியூஷன் சேர வேண்டும் என்ற உண்மை அவளுக்கு புரிய ஆரம்பித்தது. வகுப்பில் இருக்கும் அனைவரும் அவரிடம் டியுஷன் சேர்ந்தனர். காவிரிக்கு அப்பாவிடமிருந்து டியூனுக்கு முப்பது ரூபாய் வாங்குவதே அவளுக்கு பெரிய விஷயமாக பட்டது.

அவள் டியூஷன் போன போது அந்த வீட்டிலிருந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். வேதியியல் டீச்சரின் வீட்டுக்காரர், ஆண்கள் பள்ளியில் கணக்கு வாத்தியாராம். நன்றாக கணக்கு பாடம் சொல்லி தரக்கூடியவர். அவர் வீட்டில் மாணவர்கள் கூட்டம் குவிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு முக்கிய காரணம் வேதியியல் டீச்சரிடம் படிக்கும் பெண் பிள்ளைகள் தான் என்பது அவருக்கும் தெரியாமலில்லை.

அப்படி ஒரு நாள் அவள் டியூஷனிலிருந்து வரும் போது தான் வினோத்தை பார்த்தாள்...

(தொடரும்...)

....................................................................................................................................

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

மூன்றாவது அத்தியாயத்தை எழுத காதல் ஆராய்ச்சியாளர், தன்னடக்கத்தின் மொத்த உருவம் அண்ணன் CVR அவர்களை அழைக்கிறேன்.