"கண்டிப்பா முடியாதுனு சொல்லிட்டாங்களா?”
“ஆமாம். எந்த வீட்ல தான் ஒத்துப்பாங்க? நீ லவ் பண்றியானு கேட்டாங்க. நான் இல்லைனு சொன்னேன். அப்ப அந்த பையன்ட சொல்லிடுனு சொல்லிட்டாங்க”
“ஏன் தீபா, உனக்கு என்னை பிடிக்கலையா?”
“பிடிக்குதுங்கறது வேற காதலிக்கறதுங்கறது வேற. உன்னை எனக்கு பிடிக்கும் எங்க வீட்ல உன்னை பார்த்திருந்தாங்கனா நிச்சயம் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்குவேன். ஆனா உனக்காக எங்க வீட்ல சண்டையெல்லாம் போட எனக்கு விருப்பமில்லை”
“அப்ப உங்க வீட்ல நான் பேசட்டுமா?”
“அதெல்லாம் தேவையில்லை. அது இன்னும் பிரச்சனை தான் ஆகும்”
“எங்க வீட்ல சொல்லி உங்க வீட்ல பேச சொல்லவா?”
“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா? இப்ப எல்லார்கிட்டயும் சொல்லி பெரிய பிரச்சனையாக்க போற. தயவு செஞ்சி அதெல்லாம் பண்ணிடாத. அப்பறம் எங்க வீட்ல என்னை தப்பா நினைப்பாங்க”
“நீ தானே உங்க வீட்ல சொன்னா சந்தோஷமா ஒத்துக்குவேனு சொன்ன?”
“நான் சந்தோஷமா எல்லாம் ஒத்துக்குவேனு சொல்லலை. சோகமா ஒத்துக்க மாட்டேனு சொன்னேன். உனக்கு உலகத்துல ரெண்டே கலர் தானா? வெள்ளை இல்லை கருப்பு. ஒண்ணு கருப்பா இல்லைனா வெள்ளையா இருக்குனு அர்த்தமா?”
””
“இப்ப ஏன் இப்படி அசிங்கமா அழுவுற. முதல்ல இங்க இருந்து எழுந்திரி. நான் சொல்றேன் இல்லை எழுந்திரி”
“டேய் நண்பா எழுந்திரிடா. நேத்து என்ன நடந்துச்சு? மச்சான், எழுந்திரிடா”
ஆ. இவ்வளவும் கனவா! நல்ல வேளை கனவா போச்சு.
“எழுந்திரிடா. நேத்து ராத்திரி நான் வரதுக்குள்ள நீ தூங்கிட்ட. எனக்கும் வேலை பிஸில மறந்தே போச்சு. இப்பவும் சீக்கிரம் கிளம்பனும். அதான், சீக்கிரம் சொல்லு”
“நேத்து அவ வரலைடா. ஃபோன் பண்ணலாமானு பார்த்தேன். எதுக்கு வீணா பிரச்சனைனு பண்ணலை. இன்னைக்கு வரலைனா ஃபோன் பண்ணி கேக்கணும்”
”ச்ச. இப்படி ஆகிடுச்சே. சரி பாஸிட்டிவா இருந்தா உடனே எனக்கு பண்ணு. சரியா. நான் கிளம்பறேன்.”
“சரிடா மச்சான். தேங்க்ஸ் ஃபார் வேக்கிங் மி அப்”
“எதோ மோசமா கனவு கண்டிருக்க போல. இனிமே படுக்காத. அப்படியே எழுந்திரிச்சி கிளம்பு”
”ஓகேடா”
“ஆல் தி பெஸ்ட் மச்சான்”
“தேங்க் யூ”
..............
”என்னடா, இவ்வளவு லேட்டு? நீ சீக்கிரம் வந்துடுவனு நான் சீக்கிரம் வந்துட்டேன். ஃபோன் பண்ணாலும் எடுக்கல. என்னடா ஆச்சு?”
“சாரிடா. கொஞ்சம் லேட்டாகிடுச்சி”
“டேய், இது என்ன காலேஜ்க்கு லேட்டா வந்தா, ஏன் லேட்டுனு லெக்சரர் கேட்டா, சாரி சார் லேட்டாகிடுச்சினு சொல்ற மாதிரி இருக்கு. பத்து மணிக்கு நீ வந்தா அது லேட்டு தான். என்ன நடந்துச்சுனு சொல்லி தொலை. டென்ஷன் தாங்கல”
“இரு சொல்றேன். காலைல எட்டு மணிக்கு ஆபிஸ் போயிட்டேன்”
“இப்ப அந்த கருமத்தை எல்லாம் எவன் கேட்டான். அவ ஓகே சொன்னாலா இல்லையானு சொல்லி தொலைடா”
“இருடா. சொல்றேன். காலைல அவ ஒன்பது மணிக்கு தான் வந்தா. எதுவும் பேசாம அவ சீட்டுக்கு போயிட்டா”
“ம்ம்ம்”
“மதியம், நாங்க நாலு பேர் லஞ்ச்க்கு போகும் போதும் எதுவும் அதை பத்தி பேசலை. நல்லா சிரிச்சி பேசிட்டு தான் வந்தா. ஆனா எதுவுமே தெரியாத மாதிரி”
“எல்லா பொண்ணுங்களும் இப்படி தான். சரி நீ மேட்டருக்கு வா”
“மதியம் மூணு மணிக்கா பிங் பண்ணி, மூன்ரைக்கா காபி குடிக்க போகலாம்னு சொன்னா”
“ம்”
“நான் சரியா மூணு இருபதுக்கு எல்லாம் புறப்பட்டு போயிட்டேன். அவளுக்காக காத்துட்டு இருந்தேன்”
“வந்தாளா வரலையா?”
“சரியா மூன்ரைக்கு வந்துட்டா. வந்து நேரா காபி வாங்க போயிட்டா. நானும் சரினு போய் அங்க காபி வாங்கினேன். அவ அவளுக்கு மட்டும் தான் வாங்கினா. எனக்கு நான் தான் தனியா வாங்கினேன்”
“ரொம்ப முக்கியம். கதையை சொல்லுடா”
“ரெண்டு பேரும் காபி வாங்கிட்டு வந்து சீட்ல உட்கார்ந்தோம். ரெண்டு சிப் குடிச்சிட்டு நான் பேச ஆரம்பிச்சேன். ’சொல்லு தீபா, வீட்ல என்ன சொன்னாங்க?’ அப்படினு கேட்டேன்.
‘நல்லபடியா பொயிட்டு பத்திரமா இருமானு சொன்னாங்க’ அப்படினு ரொம்ப கேஷ்வலா சொன்னா”
“டார்ச்சர்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கு. சரி அப்பறம் என்ன ஆச்சு”
“எனக்கும் கடுப்பாயிடுச்சு. ‘தீபா, வீட்ல நம்ம கல்யாணத்தை பத்தி பேசறனு சொன்னியே. என்னாச்சு’.
‘நான் வீட்ல சொல்லலை. எனக்கு எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியலை. அவுங்க கேட்டா என்ன பதில் சொல்றதும்னு தெரியலை’”
“அடப்பாவி. அப்பறம் எதுக்கு வீட்ல கேட்டு சொல்றேனு சொன்னா?”
”இரு இன்னும் முடியலை. சொல்றேன் கேளு. ‘அப்ப வீட்ல கேட்டு சொல்றேனு சொன்ன’.
‘அப்ப ஏதோ ஒரு தைரியத்துல சொல்லிட்டேன். வீட்டுக்கு போனவுடனே அந்த தைரியமெல்லாம் பயமா மாறிடுச்சு. அவுங்க கல்யாண பேச்சு எடுத்தா அப்ப ஞாபகம் வந்தா சொல்றேன்’”
“விடு மச்சி. ரொம்ப புத்திசாலியா இருக்கா. வேற பொண்ணை பார்த்துக்கலாம்”
“டேய் நாயே இன்னும் முடியல. கேளு. ஒரு நிமிஷம் நானும் எதுவும் பேசாம உட்கார்ந்திருந்தேன். அவளே பேச ஆரம்பிச்சா, ‘எங்க வீட்ல பேசறனு சொன்னதுக்கு பதிலா, உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லைனு நான் அப்பவே சொல்லிருக்கலாம். என் தப்பு தான். சாரி’”
“”
“ஒரு நிமிஷம் எனக்கு மூளை எல்லாம் ப்ளாங்கா ஆகிடுச்சு. இதே பதிலை அவ அன்னைக்கு சொல்லிருந்தா கூட நான் இந்த அளவுக்கு ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன். ஆஃப் ஷோர்ல இருந்து கஷ்டப்பட்டு வீசாவெல்லாம் வாங்கிட்டு ஆன் சைட்டுக்கு கிளம்பி ஏர் போர்ட்டுக்கு போனதுக்கப்பறம் ஃபோன் பண்ணி, பிராஜக்ட் ஊத்திக்கிச்சி. நீ ஆன் சைட் எல்லாம் போக வேண்டாம். திங்க கிழமை ஆபிஸுக்கே வா, பேசிக்கலாம்னு சொன்னா எப்படி இருக்கும். விசா ரிஜக்ட் ஆகறதை விட இது கொடுமையில்லையா. அதே மாதிரி தான் எனக்கும் இருந்துச்சு. நிச்சயம் கண்ணு கலங்க கூடாதுனு ஒரு முடிவோட இருந்தேன்”
“வீட்றா மச்சி. இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு”
“இருடா. இன்னும் முடியல”
“இன்னும் முடியலையா. இப்பவே இவ்வளவு சொன்னா, இன்னும் அடிச்சிட்டு எவ்வளவு நேரம் பேசப்போறியோ. சரி சீக்கிரம் சொல்லு”
“ஒரு நிமிஷம் அமைதியா இருந்துட்டு, என் முகத்தை பார்த்து சிரிச்சிக்கிட்டே பேச ஆரம்பிச்சா, ’இந்த மாதிரி நான் பொய் சொன்னாலும், நீ என்னை கடைசி வரைக்கும் இதே மாதிரி நேசிப்பாயா’ அப்படினு கேட்டா”
“வாவ்.... சூப்பர்டா மச்சான் “
”டேய் விசிலடிக்கறதை நிறுத்துடா”
“மச்சி... பட்டையை கிளப்பிட்டடா. எப்படிடா ஒன்னைய போய் ஒரு பொண்ணு லவ் பண்ண ஒத்துக்கிச்சு?”
“டேய், இதுல ஒத்துக்கறதெல்லாம் ஒண்ணுமில்லை. அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்குமாம். நான் சொன்னப்ப அவளுக்கு உடனே எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியலையாம். வீட்ல போய் யோசிக்கும் போது அவளுக்கு என்னை பிடிச்சிருக்குதுனு அவளேக்கே புரிஞ்சிடுச்சாம்”
“சூப்பர்டா மச்சான். இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு. வா இதை தண்ணி அடிச்சி எஞ்சாய் பண்றோம்”
(முற்றும்)
தத்துவம்
உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா?. Show all posts
Showing posts with label தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா?. Show all posts
Wednesday, February 11, 2009
Sunday, February 08, 2009
பொய் சொன்னால்... நேசிப்பாயா? - 2
"தீபா, நான் இவ்வளவு சீக்கிரம் எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை”
“நானும்”
“ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கிட்டு, இவ்வளவு க்ராண்டா கல்யாணம் நடத்தி, இவ்வளவு அழகான முதல் இரவு அறைல இப்படி நீயும், நானும் இருப்போம்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை”
”ம்ம்ம்”
“நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீயே”
“ “
“ஏன் அப்படி பாக்கற. நான் எதுவும் தப்பா கேக்க மாட்டேன்”
“மட சாம்பிராணி. நீ என் புருஷன். நீ எது கேட்டாலும் தப்பில்லை”
“அடிப்பாவி. நான் கேக்க வந்தது, நீ நிஜமாலுமே என்னை லவ் பண்ணியா இல்லை நான் பேசனதை கேட்டு என்னை பிடிக்க ஆரம்பிச்சிதா?”
”இப்ப எதுக்கு அது?”
”சும்மா தெரிஞ்சிக்கதான். என் கல்யாணம் காதல் கல்யாணமா, இல்லை அரேஞ்சிடு மேராஜானு எனக்கே சந்தேகமா இருக்கு”
“
ஓ! உங்க கல்யாணமா? நான் கூட நம்ம கல்யாணமோனு நினைச்சேன். உங்க கல்யாணம் எப்படினு நீங்க தான் சொல்லனும். என்னை கேட்டா?”
“ஆமாம். நான், நான் அவனில்லை ஜீவன். அப்படியே நாலஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
“ஏன் பண்ணி தான் பாருங்களேன்”
“கோச்சுக்காதடா. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவியாம். ப்ளீஸ்”
”சொன்னா என்ன தருவீங்க?”
“நீ சொல்லு அதுக்கேத்த மாதிரி ஒண்ணு தரேன்”
”லவ் மேரேஜ் தான்”
“ச்சீ. என்ன இது இப்படி எச்சி பண்ணிட்டு. ச்சீ. நீ இப்படி பண்ணுவனு தெரிஞ்சிருந்தா நான் சொல்லியிருக்கவே மாட்டேன்”
“ஏ அதுக்கு ஏன் இப்படி அடிக்கற”
“இத்தனை தடவை எழுந்திரி எழுந்திரினு சொல்லி எழுந்திருக்கலனா, உன்னை அடிக்காம என்ன கொஞ்சியா எழுப்புவாங்க? எழுந்திருச்சி தொலைடா”
ச்சி. மறுபடியும் கனவா?
“சனிக்கிழமையானா போதும், இப்படி இழுத்து போட்டுட்டு தூங்கி தொலைய வேண்டியது. எழுந்திரிச்சி தொலைடா. எனக்கு பசிக்குது”
“மணி என்ன?”
“பதினொன்னு ஐம்பத்தஞ்சு. ஏன் இப்ப ஏதாவது கனவை கெடுத்துட்டனா?”
“ஆமாம். ஆனா நல்ல வேளை ஒரு பத்து செகண்ட் கழிச்சி எழுப்பன”
“ஓஹோ. அப்படி போகுது. அப்துல் கலாம் சொன்னதை ஒழுங்கா ஃபாலோ பண்றவன் நீ ஒருத்தன் மட்டும் தான். ஆனா அவர் வேற ஒரு மேட்டருக்கு கனவு காண சொன்னாரு”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“சரி சரி. இந்த வாரமாவது சொன்னியா இல்லை வாஸ்து சரியில்லை, குரு பெயர்ச்சி வரட்டும்னு சொல்லாம விட்டுட்டயா?”
“சொல்லிட்டன்டா”
“வாவ். என்ன சொன்னா?”
“அவ என்ன சொன்னானு எனக்கு புரியல”
“புரியலையா? ஏன் தெலுகுல சொன்னாளா? அவ தமிழ் பொண்ணா இல்லை கொல்ட்டியா?”
“விளக்கெண்ணெய். அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. அவ தமிழ் பொண்ணுதான். ஆனா அவ சொன்னதுல இருந்து அவ என்னை காதலிக்கறால இல்லையான புரியல”
“இப்படி பசங்களை அலைய விடறதே அவளுகளுக்கு வேலையா போச்சு. என்ன நடந்ததுனு சொல்லு. நான் வேணா டீகோட் பண்ணி சொல்றேன்”
”இரு பல்லு விளக்கிட்டு வரேன்”
“ஏன்டா, காட்ல சிங்கம், புலி எல்லாம் பல்லா விளக்குது. சொல்லிட்டு போய் பல்லு விளக்கிக்கோடா”
“இரு வரேன்”
...
“சரி. இப்ப சொல்லு. எப்ப சொன்ன? என்ன சொன்ன?”
”நேத்து தான் சொன்னேன். எங்க கம்பெனில எல்லா ப்ராஜக்ட் பார்ட்டியும் நிறுத்திட்டாங்க”
“இது என்ன பிரமாதம், எங்க கம்பெனில எல்லாம் பாதி பேருக்கு வேலையை விட்டே நிறுத்திட்டாங்க”
“சொல்றதை கேளுடா. சும்மா குறுக்க குறுக்க பேசாத”
“சரி சொல்லி தொலை. இன்னைக்கு உனக்கு நல்ல நேரம்”
“கம்பெனில எப்படியும் பிராஜக்ட் பார்ட்டினு தலைக்கு 250 ரூபாய் கொடுப்பாங்க. அந்த பணத்தை நாமலே போட்டு பிராஜக்ட் பார்ட்டி போகலாம். ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கும்னு எங்க மேனஜர் சொன்னாரு”
“குட் மேனஜர். இவரை மாதிரி நாலு பேர் இருந்தா கம்பெனி தானா முன்னேறிடும்”
“சரி, எப்படியாவது பாதி நாள் ஃபிரியா இருந்தா போதும்னு எல்லாரும் ஓகே சொல்லிட்டோம்”
“இல்லைனா மட்டும் வேலை செய்யற மாதிரி”
“டேய் சொல்றதை கேளு.
நேத்து மதியம், அந்த ரிசார்ட்ல எல்லாரும் ஆளாளுக்கு ஏதோ விளையாடிட்டு இருந்தாங்க. நாங்க நாலு பேரும் ஷெட்டில் கார்க் விளையாடிட்டு இருந்தோம். ஒரு செட் முடிஞ்சவுடனே, ரெண்டு பேர் வந்து அவுங்களையும் சேர்த்துக்க சொல்லி சொன்னாங்க. அந்த சைட்ல இருந்து பேட்டை கொடுத்துட்டு தீபா போனா, நானும் சரினு எங்க சைட்ல இருந்து கொடுத்துட்டு வெளிய வந்துட்டேன்”
“டேய், அது பேட் இல்லைடா ஷெட்டில் ராக்கெட். கிரிக்கெட் பேட்டுக்கும் ஷெட்டில் ராக்கெட்டுக்கும் வித்யாசம் தெரியாம எப்படிடா ஒரு ஆட்டம் ஆடின?”
“இப்ப நீ வாய மூடலைனா நான் சொல்ல மாட்டேன்”
“சரி சரி. சொல்லு சொல்லு. நான் எதுவும் பேசல”
“விளையாடின களைப்புல தீபா தண்ணி குடிக்க போனா. நானும் அப்படியே தண்ணி குடிக்க போனேன்”
“இப்ப தான் விறுவிறுப்பா போகுது. சொல்லு சொல்லு”
“தண்ணி குடிச்சிட்டு ரெண்டு பேரும் அந்த ரூம்ல இருந்து வெளிய வந்தோம். வெளிய அழகா ரோடுக்கு ரெண்டு பக்கமும் செடியெல்லாம் வெச்சி கார்டென் மாதிரி இருந்துச்சு”
“ரொம்ப முக்கியம். கதையை சொல்லுடா”
”சரி இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காதுனு நானே அவள்ட பேச ஆரம்பிச்சேன்”
“சூப்பர்டா மச்சான். இப்ப தான் என் ரூமேட்னு ப்ரூவ் பண்ற”
“ம்ம்ம். தீபா, அப்படியே ஒரு வாக் போகலாமானு கேட்டேன்”
“ம்ம்ம்”
“என்னை ஒரு மாதிரி பார்த்தா. அவ பார்வைலயே ஒரு குழப்பம் தெரிஞ்சிது. சரினு சொல்லி ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சோம்”
“ம்ம்ம்”
“ஒரு ரெண்டு நிமிஷம் ரெண்டு பேரும் அமைதியா நடந்து போனோம். நான் தான் பேச ஆரம்பிச்சேன். தீபா, ஒரு முப்பது வருஷம் கழிச்சி இப்படி நாம நடந்து போனாலும் நான் இப்ப இருக்கற மாதிரி சந்தோஷமா இருப்பேனு தோனுது. எனக்கு வேற எப்படி சொல்றதுனு தெரியல. உன் கூட இந்த வாழ்க்கை முழுசும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது தீபா. எனக்கு இந்த ஃபீலிங்ஸ்க்கு பேற என்னனு சொல்ல தெரியல. ஆனா உன் கூட இருந்தா மன நிறைவா இருக்கு. நீ சந்தோஷப்பட்டா என் மனசும் சந்தோஷமடையுது, நீ கஷ்டப்பட்டா எனக்கும் கஷ்டமா இருக்கு. இந்த ஆயூசு முழுக்க உன்னை சந்தோஷமா வெச்சிட்டு நானும் சந்தோஷமா இருப்பேனு என் உள்மனசு சொல்லுது தீபா”
“வாவ். கலக்கிட்டடா மச்சான். எப்படிடா இப்படியெல்லாம்? சரி.. சரி. அவ என்ன சொன்னா?”
“அவ என்னை வித்தியாசமா பார்த்தா. ப்ரொபோஸ் பண்றியா”?னு கேட்டா. அதுக்கு நான், “தெரியலை. எனக்கு இதுக்கு பேரு என்னனு தெரியலை. என் மனசுல இருக்கறதுக்கு பேரு காதல்னா, நான் உன்னை காதலிக்கிறேன். இப்ப நான் உனக்கு என் மனசுல இருக்கறதை சொல்றதுக்கு பேரு ப்ரோபோஸ்னா நான் உனக்கு ப்ரொபோஸ் பண்றேனு தான் நினைக்கிறேன்”
“கலக்கல்டா மச்சான். அப்பறம்?”
“அவளுக்கு என்ன பேசறதுனே தெரியல. ஒரு நிமிஷம் அமைதியா இருந்தா. அப்பறம் பேச ஆரம்பிச்சா, to be frank, எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியலை. நான் கொஞ்சம் யோசிக்கனும். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுப்பீங்களா?”
“ஆஹா. அப்ப திங்க கிழமை தான் தெரியுமா?”
“இருடா. இன்னும் முடியலை”
“ஓ. சொல்லு சொல்லு”
“அப்படியே பார்ட்டி முடிஞ்சி எல்லாரும் ஆபிஸ்க்கு வந்தோம். ப்ளான் எப்படினா, எல்லாரும் ஆறு மணிக்கு ஆபிஸ்க்கு வந்து ஸ்வைப் அவுட் பண்ணிட்டு, அவுங்க அவுங்க பஸ் பிடிச்சி போகற மாதிரி”
“நல்ல விவரமா இருக்கீங்கடா. சரி சொல்லு”
“கொஞ்சம் வேலை இருந்ததால நான் என் சீட்டுக்கு போனேன். கொஞ்ச நேரம் வேலை பார்த்துட்டு இருக்கும் போது, அவ என் பின்னாடி வந்து நின்னு கூப்பிட்டா”
“ம்ம்ம்”
“இதுல நான் யோசிக்கறதுக்கு பதிலா எங்க வீட்லயே கேக்கலாம்னு யோசிக்கிறேன். எங்க அப்பா, அம்மாகிட்ட பேசிடலாம்னு பாக்கறேன். ஆர் யூ ரியல்லி சீரியஸ் அபோட் திஸ்? அப்படினு கேட்டா?”
“அடப்பாவி. என்னடா டைரக்டா, அப்பா, அம்மானு போயிட்டா?”
“எனக்கும் அது தான் ஷாக். இருந்தாலும் அதுல எனக்கும் சந்தோஷம் தான். அவளால மனசளவுல என்னை ஏத்துக்க முடிஞ்சிதுனு. நானும் தெளிவா பேச ஆரம்பிச்சேன், தீபா, வேணும்னா நான் நேர்ல வந்து பேசறதுனாலும் பேசறேன். உனக்கு விருப்பமிருந்தால்... இல்லைனா நீயே பேசிட்டு சொல்லு”
”அட்ரா சக்கை. எப்படிடா டாக் உனக்கு இந்த அளவுக்கு பேச வந்துச்சு?”
“அது என்னுமோ அப்ப வந்துடுச்சு. சரி நான் வீக் எண்ட் முடிஞ்சி வந்து சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா”
“அப்ப, திங்ககிழமை தான் தெரியுமா?”
“ஆமா...”
(தொடரும்...)
“நானும்”
“ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கிட்டு, இவ்வளவு க்ராண்டா கல்யாணம் நடத்தி, இவ்வளவு அழகான முதல் இரவு அறைல இப்படி நீயும், நானும் இருப்போம்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை”
”ம்ம்ம்”
“நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீயே”
“ “
“ஏன் அப்படி பாக்கற. நான் எதுவும் தப்பா கேக்க மாட்டேன்”
“மட சாம்பிராணி. நீ என் புருஷன். நீ எது கேட்டாலும் தப்பில்லை”
“அடிப்பாவி. நான் கேக்க வந்தது, நீ நிஜமாலுமே என்னை லவ் பண்ணியா இல்லை நான் பேசனதை கேட்டு என்னை பிடிக்க ஆரம்பிச்சிதா?”
”இப்ப எதுக்கு அது?”
”சும்மா தெரிஞ்சிக்கதான். என் கல்யாணம் காதல் கல்யாணமா, இல்லை அரேஞ்சிடு மேராஜானு எனக்கே சந்தேகமா இருக்கு”
“
ஓ! உங்க கல்யாணமா? நான் கூட நம்ம கல்யாணமோனு நினைச்சேன். உங்க கல்யாணம் எப்படினு நீங்க தான் சொல்லனும். என்னை கேட்டா?”
“ஆமாம். நான், நான் அவனில்லை ஜீவன். அப்படியே நாலஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
“ஏன் பண்ணி தான் பாருங்களேன்”
“கோச்சுக்காதடா. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவியாம். ப்ளீஸ்”
”சொன்னா என்ன தருவீங்க?”
“நீ சொல்லு அதுக்கேத்த மாதிரி ஒண்ணு தரேன்”
”லவ் மேரேஜ் தான்”
“ச்சீ. என்ன இது இப்படி எச்சி பண்ணிட்டு. ச்சீ. நீ இப்படி பண்ணுவனு தெரிஞ்சிருந்தா நான் சொல்லியிருக்கவே மாட்டேன்”
“ஏ அதுக்கு ஏன் இப்படி அடிக்கற”
“இத்தனை தடவை எழுந்திரி எழுந்திரினு சொல்லி எழுந்திருக்கலனா, உன்னை அடிக்காம என்ன கொஞ்சியா எழுப்புவாங்க? எழுந்திருச்சி தொலைடா”
ச்சி. மறுபடியும் கனவா?
“சனிக்கிழமையானா போதும், இப்படி இழுத்து போட்டுட்டு தூங்கி தொலைய வேண்டியது. எழுந்திரிச்சி தொலைடா. எனக்கு பசிக்குது”
“மணி என்ன?”
“பதினொன்னு ஐம்பத்தஞ்சு. ஏன் இப்ப ஏதாவது கனவை கெடுத்துட்டனா?”
“ஆமாம். ஆனா நல்ல வேளை ஒரு பத்து செகண்ட் கழிச்சி எழுப்பன”
“ஓஹோ. அப்படி போகுது. அப்துல் கலாம் சொன்னதை ஒழுங்கா ஃபாலோ பண்றவன் நீ ஒருத்தன் மட்டும் தான். ஆனா அவர் வேற ஒரு மேட்டருக்கு கனவு காண சொன்னாரு”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“சரி சரி. இந்த வாரமாவது சொன்னியா இல்லை வாஸ்து சரியில்லை, குரு பெயர்ச்சி வரட்டும்னு சொல்லாம விட்டுட்டயா?”
“சொல்லிட்டன்டா”
“வாவ். என்ன சொன்னா?”
“அவ என்ன சொன்னானு எனக்கு புரியல”
“புரியலையா? ஏன் தெலுகுல சொன்னாளா? அவ தமிழ் பொண்ணா இல்லை கொல்ட்டியா?”
“விளக்கெண்ணெய். அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. அவ தமிழ் பொண்ணுதான். ஆனா அவ சொன்னதுல இருந்து அவ என்னை காதலிக்கறால இல்லையான புரியல”
“இப்படி பசங்களை அலைய விடறதே அவளுகளுக்கு வேலையா போச்சு. என்ன நடந்ததுனு சொல்லு. நான் வேணா டீகோட் பண்ணி சொல்றேன்”
”இரு பல்லு விளக்கிட்டு வரேன்”
“ஏன்டா, காட்ல சிங்கம், புலி எல்லாம் பல்லா விளக்குது. சொல்லிட்டு போய் பல்லு விளக்கிக்கோடா”
“இரு வரேன்”
...
“சரி. இப்ப சொல்லு. எப்ப சொன்ன? என்ன சொன்ன?”
”நேத்து தான் சொன்னேன். எங்க கம்பெனில எல்லா ப்ராஜக்ட் பார்ட்டியும் நிறுத்திட்டாங்க”
“இது என்ன பிரமாதம், எங்க கம்பெனில எல்லாம் பாதி பேருக்கு வேலையை விட்டே நிறுத்திட்டாங்க”
“சொல்றதை கேளுடா. சும்மா குறுக்க குறுக்க பேசாத”
“சரி சொல்லி தொலை. இன்னைக்கு உனக்கு நல்ல நேரம்”
“கம்பெனில எப்படியும் பிராஜக்ட் பார்ட்டினு தலைக்கு 250 ரூபாய் கொடுப்பாங்க. அந்த பணத்தை நாமலே போட்டு பிராஜக்ட் பார்ட்டி போகலாம். ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கும்னு எங்க மேனஜர் சொன்னாரு”
“குட் மேனஜர். இவரை மாதிரி நாலு பேர் இருந்தா கம்பெனி தானா முன்னேறிடும்”
“சரி, எப்படியாவது பாதி நாள் ஃபிரியா இருந்தா போதும்னு எல்லாரும் ஓகே சொல்லிட்டோம்”
“இல்லைனா மட்டும் வேலை செய்யற மாதிரி”
“டேய் சொல்றதை கேளு.
நேத்து மதியம், அந்த ரிசார்ட்ல எல்லாரும் ஆளாளுக்கு ஏதோ விளையாடிட்டு இருந்தாங்க. நாங்க நாலு பேரும் ஷெட்டில் கார்க் விளையாடிட்டு இருந்தோம். ஒரு செட் முடிஞ்சவுடனே, ரெண்டு பேர் வந்து அவுங்களையும் சேர்த்துக்க சொல்லி சொன்னாங்க. அந்த சைட்ல இருந்து பேட்டை கொடுத்துட்டு தீபா போனா, நானும் சரினு எங்க சைட்ல இருந்து கொடுத்துட்டு வெளிய வந்துட்டேன்”
“டேய், அது பேட் இல்லைடா ஷெட்டில் ராக்கெட். கிரிக்கெட் பேட்டுக்கும் ஷெட்டில் ராக்கெட்டுக்கும் வித்யாசம் தெரியாம எப்படிடா ஒரு ஆட்டம் ஆடின?”
“இப்ப நீ வாய மூடலைனா நான் சொல்ல மாட்டேன்”
“சரி சரி. சொல்லு சொல்லு. நான் எதுவும் பேசல”
“விளையாடின களைப்புல தீபா தண்ணி குடிக்க போனா. நானும் அப்படியே தண்ணி குடிக்க போனேன்”
“இப்ப தான் விறுவிறுப்பா போகுது. சொல்லு சொல்லு”
“தண்ணி குடிச்சிட்டு ரெண்டு பேரும் அந்த ரூம்ல இருந்து வெளிய வந்தோம். வெளிய அழகா ரோடுக்கு ரெண்டு பக்கமும் செடியெல்லாம் வெச்சி கார்டென் மாதிரி இருந்துச்சு”
“ரொம்ப முக்கியம். கதையை சொல்லுடா”
”சரி இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காதுனு நானே அவள்ட பேச ஆரம்பிச்சேன்”
“சூப்பர்டா மச்சான். இப்ப தான் என் ரூமேட்னு ப்ரூவ் பண்ற”
“ம்ம்ம். தீபா, அப்படியே ஒரு வாக் போகலாமானு கேட்டேன்”
“ம்ம்ம்”
“என்னை ஒரு மாதிரி பார்த்தா. அவ பார்வைலயே ஒரு குழப்பம் தெரிஞ்சிது. சரினு சொல்லி ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சோம்”
“ம்ம்ம்”
“ஒரு ரெண்டு நிமிஷம் ரெண்டு பேரும் அமைதியா நடந்து போனோம். நான் தான் பேச ஆரம்பிச்சேன். தீபா, ஒரு முப்பது வருஷம் கழிச்சி இப்படி நாம நடந்து போனாலும் நான் இப்ப இருக்கற மாதிரி சந்தோஷமா இருப்பேனு தோனுது. எனக்கு வேற எப்படி சொல்றதுனு தெரியல. உன் கூட இந்த வாழ்க்கை முழுசும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது தீபா. எனக்கு இந்த ஃபீலிங்ஸ்க்கு பேற என்னனு சொல்ல தெரியல. ஆனா உன் கூட இருந்தா மன நிறைவா இருக்கு. நீ சந்தோஷப்பட்டா என் மனசும் சந்தோஷமடையுது, நீ கஷ்டப்பட்டா எனக்கும் கஷ்டமா இருக்கு. இந்த ஆயூசு முழுக்க உன்னை சந்தோஷமா வெச்சிட்டு நானும் சந்தோஷமா இருப்பேனு என் உள்மனசு சொல்லுது தீபா”
“வாவ். கலக்கிட்டடா மச்சான். எப்படிடா இப்படியெல்லாம்? சரி.. சரி. அவ என்ன சொன்னா?”
“அவ என்னை வித்தியாசமா பார்த்தா. ப்ரொபோஸ் பண்றியா”?னு கேட்டா. அதுக்கு நான், “தெரியலை. எனக்கு இதுக்கு பேரு என்னனு தெரியலை. என் மனசுல இருக்கறதுக்கு பேரு காதல்னா, நான் உன்னை காதலிக்கிறேன். இப்ப நான் உனக்கு என் மனசுல இருக்கறதை சொல்றதுக்கு பேரு ப்ரோபோஸ்னா நான் உனக்கு ப்ரொபோஸ் பண்றேனு தான் நினைக்கிறேன்”
“கலக்கல்டா மச்சான். அப்பறம்?”
“அவளுக்கு என்ன பேசறதுனே தெரியல. ஒரு நிமிஷம் அமைதியா இருந்தா. அப்பறம் பேச ஆரம்பிச்சா, to be frank, எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியலை. நான் கொஞ்சம் யோசிக்கனும். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுப்பீங்களா?”
“ஆஹா. அப்ப திங்க கிழமை தான் தெரியுமா?”
“இருடா. இன்னும் முடியலை”
“ஓ. சொல்லு சொல்லு”
“அப்படியே பார்ட்டி முடிஞ்சி எல்லாரும் ஆபிஸ்க்கு வந்தோம். ப்ளான் எப்படினா, எல்லாரும் ஆறு மணிக்கு ஆபிஸ்க்கு வந்து ஸ்வைப் அவுட் பண்ணிட்டு, அவுங்க அவுங்க பஸ் பிடிச்சி போகற மாதிரி”
“நல்ல விவரமா இருக்கீங்கடா. சரி சொல்லு”
“கொஞ்சம் வேலை இருந்ததால நான் என் சீட்டுக்கு போனேன். கொஞ்ச நேரம் வேலை பார்த்துட்டு இருக்கும் போது, அவ என் பின்னாடி வந்து நின்னு கூப்பிட்டா”
“ம்ம்ம்”
“இதுல நான் யோசிக்கறதுக்கு பதிலா எங்க வீட்லயே கேக்கலாம்னு யோசிக்கிறேன். எங்க அப்பா, அம்மாகிட்ட பேசிடலாம்னு பாக்கறேன். ஆர் யூ ரியல்லி சீரியஸ் அபோட் திஸ்? அப்படினு கேட்டா?”
“அடப்பாவி. என்னடா டைரக்டா, அப்பா, அம்மானு போயிட்டா?”
“எனக்கும் அது தான் ஷாக். இருந்தாலும் அதுல எனக்கும் சந்தோஷம் தான். அவளால மனசளவுல என்னை ஏத்துக்க முடிஞ்சிதுனு. நானும் தெளிவா பேச ஆரம்பிச்சேன், தீபா, வேணும்னா நான் நேர்ல வந்து பேசறதுனாலும் பேசறேன். உனக்கு விருப்பமிருந்தால்... இல்லைனா நீயே பேசிட்டு சொல்லு”
”அட்ரா சக்கை. எப்படிடா டாக் உனக்கு இந்த அளவுக்கு பேச வந்துச்சு?”
“அது என்னுமோ அப்ப வந்துடுச்சு. சரி நான் வீக் எண்ட் முடிஞ்சி வந்து சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா”
“அப்ப, திங்ககிழமை தான் தெரியுமா?”
“ஆமா...”
(தொடரும்...)
Thursday, February 05, 2009
பொய் சொன்னால்... நேசிப்பாயா?
"ஏ! பயங்கரமா குளிருது. ஒரு முத்தம் கொடேன்”
“என்ன?”
“குளிருக்கு முத்தம் தான் மருந்துனு வெள்ளைக்காரன் சொல்லியிருக்கான். அதான் கேக்கறேன். ப்ளீஸ்”
“உதை வாங்கப் போற. இத்தனை நாள் நல்லா பையனா இருந்துட்டு திடீர்னு அட்டகாசம் பண்றியா?”
“முத்தம் கேட்டா கெட்ட பையனா? லவ் பண்ற பொண்ணுக்கிட்ட கேட்காம தெருவுல போற வரவக்கிட்டயா கேட்பாங்க?”
“ஏன் தைரியமிருந்தா கேட்டு பாரேன்”
“நான் என்ன காரணமில்லாமலா கேட்டேன். -10 டிகிரி ஃபேரன்ஹீட்ல இருந்து உள்ள வந்திருக்கோம். நம்ம ஊர் கணக்கு படி பார்த்தா -25 டிகிரி செல்சியஸ். அதனால தானே கேட்டேன்”
“ “
“என்னது இது கன்னத்துல கொடுக்கற. அதுவும் இதுக்கு பேரு முத்தமா? வெறும் சத்தம்”
“இதுக்கு மேல நீ பேசன உன் கன்னத்துல வரும் ரத்தம்”
“என்ன டீ.ஆர் மாதிரி பேசற. பெரிய கவிஞினு மனசுல நினைப்பா?”
“என்னது கவிஞியா?”
”கவிஞர்க்கு பெண் பால் கவிஞி தானே”
“அப்பா. செம்ம மொக்கை”
“சரி அது இருக்கட்டும். நான் கேட்ட முத்தம் என்னாச்சு”
“நான் சொன்ன ரத்தம் மறந்து போச்சா ?”
“டேய் மணி பன்னெண்டு ஆச்சு... எழுந்திரி”
“ஆஹா முத்தத்துக்கும், ரத்தத்துக்கும் நடுவுல இது என்ன புது சத்தம்?”
“டேய் எழுந்திரிடா. சாப்பிட போகலாம். பசிக்குது”
ஆஹா. இவ்வளவும் கனவா?
“டேய் இந்த வெயில்ல இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்க. எழுந்திரிடா”
“டேய் நீ போய் சாப்பிடு. இப்படி ஒரு முக்கியமான கனவு கண்டுட்டு இருக்கும் போது எழுப்பிட்டியேடா பாவி. போய் தொலை”
“டேய் பகல் கனவு பலிக்காதுடி. ஒழுங்கா எழுந்திரி. அப்பறம் தனியா போக போர் அடிக்குதுனு என்னைய மறுபடியும் கூப்பிட்டு டார்ச்சர் பண்ணுவ”
“மச்சான். பகல் கனவு பலிக்காதா?” வேகமாக எழுந்து உட்கார்ந்தான்.
“நாதாரி. பன்னெண்டு மணிக்கு காணறது பகல் கனவாடா? அது மதிய கனவு. இந்த நேரம் வரைக்கும் எந்த நாயும் தூங்காதுனு நினைச்சி எவனும் இது வரைக்கும் பழமொழி சொன்னதில்லை. நான் வேணா புது மொழியா உனக்காக ஒண்ணு க்ரியேட் பண்றேன். மதிய கனவு மறக்காது. ஓகேவா?”
”அப்படினா?”
“பழமொழி சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது. புரியுதா?”
“டேய். எவ்வளவு சூப்பர் கனவு தெரியுமாடா? இப்படி அநியாயமா கெடுத்துட்டடா”
“சரி என்ன கனவு சொல்லி தொலை”
“நானும் தீபாவும் கார்ல ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வரோம். வெளிய -10 டிகிரி ஃபேரன்ஹீட். கார் பார்க் பண்ற இடத்துல இருந்து வீட்டுக்கு வர வழியெல்லாம் செம குளிர். அதுல அஞ்சு நிமிஷம் நடந்து வீட்டுக்கு வறோம். பயங்கர குளிர்”
“அதான் இந்த சென்னை வெயில்லையும் போர்வையை இழுத்து போட்டு தூங்கனையாக்கும்? அது சரி, இது நடக்கறது எங்க? ஸ்விசர் லேண்ட்லயா? செலவே இல்லாம கூப்பிட்டு போயிட்ட போல?”
”அதெல்லாம் இல்லைடா. நாங்க ரெண்டு பேரும் பாஸ்டன்ல ஆன்சைட்ல இருக்குற மாதிரி கனவு. நேத்து ஆன்சைட் கால்ல ரெண்டு பேரும் இருக்கும் போது அங்க -10னு சொன்னாங்க. அதுக்கு அவ அந்த ரூம்லயே அந்த குளிரோட எஃபக்டை கொடுத்தா. அது மனசுல பதிஞ்சு போச்சு. அதான் கனவுல வந்துடுச்சு. ரெண்டு பேரும் ஒரே அப்பார்ட்மெண்ட். டூ பெட்ரூம்.”
“ஓ. அந்த ரேஞ்சுக்கு போயிட்ட. சரி, அப்பவாது லவ் பண்றனு சொல்லி தொலைச்சயா இல்லை இதயம் முரளி மாதிரி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தியா?”
“நான் லவ் சொன்னனானு தெரியலை. ஆனா ரெண்டு பெருக்கும் காதலிக்கறோம்னு தெரிஞ்சிருந்தது. முத்தம் கொடுக்க வந்தா, அந்த நேரம் பார்த்து எழுப்பிட்ட. பாவி”
”ஓ. அந்த அளவுக்கு. மொதல்ல லவ்வை சொல்லி தொலைடா. இல்லைனா எவனாவது பிக் அப் பண்ணிட்டு போயிட போறான்”
“நானும் சொல்லலாம்னு தான்டா பாக்கறேன். ஆனா அவக்கிட்ட போனாலே அவ பார்க்கற பார்வைலயே என் வாய்ல வார்த்தை நின்னுடுது”
“இந்த பார்வை, போர்வைனு சொல்லியே வீணா போக போற. மூடிட்டு திங்க கிழமை போனவுடனே சொல்லிடு. சரியா?”
“எப்படி சொல்றதுனு ஏதாவது ஐடியா கொடேன்”
“நான் ஐடியா கொடுக்கறது இருக்கட்டும். நீ போய் பல்லு விளக்கிட்டு வா. கப்பு தாங்கல. இந்த கப்புல நான் யோசிச்சா எதுவும் ஒர்க் அவுட் ஆகாது”
...
“சரி இப்ப சொல்லு”
“நான் சொல்றது இருக்கட்டும், எப்படி சொல்லலாம்னு ஏதாவது நீயே யோசிச்சி வெச்சிருப்பியே. அதை எடுத்து விடு”
"எனக்கும் அடிக்கது தோணும். ரொம்ப சாதாரணமா இப்படி சொல்லலாமா? I want to share the rest of my life with you னு”
“ஏதோ ஷேர் ஆட்டோ பிடிக்க கூப்பிடறனு நினைச்சிக்க போறாடா. என்னுமோ ஃபாதர் ஆஃப் பாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு பேசறியே. இந்த மாதிரி எல்லாம் பேசறதுக்கு இது என்ன கௌதம் மேனன் படமா? தமிழ்ல சொல்லுடா என் வெண்ட்ரு”
“கவிதை மொழியில சொல்லலாமா?”
”எங்க சொல்லு பார்க்கலாம்?”
“வானமோ நீலம்...
நீதான் என் பாலம்”
”நிறுத்து நிறுத்து... இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே”
“சென்னை 28ல அவன் இதை ஆரம்பிப்பான். முடிக்காம விட்டுடுவான். அதான் நான் கண்டினியூ பண்ணலாம்னு பார்த்தேன்”
“அதுக்கு
இலையோ பச்சை
நீ ஒரு எச்சை” னு அவ கண்டினுயூ பண்ணா என்ன பண்ணுவ?”
“ஏன்டா அபசகுனமா பேசிட்டு இருக்க?”
“டேய், ரொம்ப சாதாரணமா சொல்லுடா. இதை இவ்வளவு காம்ப்ளிக்கேட்டடா மாத்தாத. புரியுதா?”
“சாதாரணமானா எப்படி?
”அவளை உனக்கு எதுக்காக பிடிக்கும்னு யோசிச்சி பாரு. அதையே அவக்கிட்ட சொல்லி புரிய வை”
“அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”
“அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு. நல்ல பொண்ணா உங்க வீட்ல பார்ப்பாங்க, அவளை கல்யாணம் பண்ணிக்கோ”
“போடா நாயே. இப்படியெல்லாம் சொல்லாத”
“எப்படியாவது சொல்லி தொலை. இப்ப எனக்கு பசிக்குது. வா சாப்பிட போகலாம்”
(தொடரும்...)
Subscribe to:
Posts (Atom)