தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, April 30, 2009

போட்டியில் வென்று வாங்கிய புத்தகங்கள்!!!

சங்கமம் போட்டிக்கு கதை எழுதறதுக்கு செலவிட்ட நேரத்தை விட புத்தகம் வாங்கறதுக்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டியதா போச்சு. என் கதைக்கு குறைவா மார்க் போட்ட பாவத்துக்கு (ஹி ஹி) பாபாவையும் பிரிச்சி மேஞ்சாச்சு. நமக்கு தெரிஞ்ச எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், அகிலன், சுஜாதா, பாலகுமாரன். அதுவும் சுஜாதா, பாலகுமாரன் கதை போன நவம்பர்ல இந்தியா வந்தப்ப தான் படிச்சேன். அதனால இந்த முறை 1250க்கு என்ன புத்தகம் வாங்கறதுனு தெரியல. சரினு uyirmmai.com ல போய் சுஜாதாவோட குறுநாவல்கள் எல்லாம் செலக்ட் பண்ணேன். அப்பறம் இன்னும் ரெண்டு சுஜாதா புக். பார்த்தா 1250 தாண்டிடுச்சி. 

எழுத்துலகுல எப்பவும் நமக்கு வழிகாட்டி (ஹி ஹி. தமிழ்ல எப்படி எழுதறதுனே அவர் தான் எனக்கு சொல்லி கொடுத்தாரு) பாபா தானே. அதான் அவருக்கு லிஸ்ட்டை அனுப்பினேன். அவர் அப்படியே ரிஜக்ட் பண்ணிட்டாரு. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன் (மறைவாய் சொன்ன கதைகள்), ஆதவன், அ.முத்துலிங்கம் (உண்மை கலந்த நாட்குறிப்புகள்) இப்படி கலவையா வாங்க சொன்னாரு. ஜெயமோகன் எல்லாம் புரியாத மாதிரி எழுதுவாரு (நான் கடவுள் பார்த்த எஃபக்ட்) அப்படினு நான் சொன்னவுடனே, அப்படியெல்லாம் இல்லை. படிச்சா நிச்சயம் புரியும். அதனால தவற விடாதேனு சொன்னாரு. 

அப்பறம், இதை எல்லாம் நல்லா ஆராய்ச்சி பண்ணிட்டு, கிழக்கு பதிப்பகத்துல என்ன இருக்குதுனு பார்க்கலாம்னு போனேன்.

இந்திரா பார்த்தசாரதி பேர் முதல்ல இருந்தது. நான் கேள்விப்பட்டது குருதிப்புனல் மட்டும் தான். அதுவும் கமல் நடிச்சதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு கேள்விப்பட்டதால ஞாபகம் இருக்கு. வேற எதுவும் தெரியலை. அதனால அதை மட்டும் செலக்ட் பண்ணேன். அப்பறம் பா.ராகவனோட என் பெயர் எஸ்கோபர், நிலமெல்லாம் ரத்தம் செலக்ட் பண்ணேன். அடுத்து இரா.முருகனோட அரசூர் வம்சம், மூன்று விரல், இரா.முருகன் சிறுகதைகள் செலக்ட் பண்ணி அவர்ட்ட கருத்து கேட்டு அனுப்பியிருந்தேன். முன்னாடி அனுப்பன லிஸ்ட்க்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை. இருந்தாலும் அவர் அதைப் பத்தியெல்லாம் எதுவும் சொல்லாம, எல்லாமே நல்ல புத்தகம் தான். தாராளமா வாங்கலாம்னு சொன்னாரு. அரசூர் வம்சம் மட்டும் எடுத்தவுடனே படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம்னு சொன்னாரு.

நாம அப்பவும் விடுவோமா, கடைசியா அவருக்கு ஃபோன் போட்டே பேச ஆரம்பிச்சிட்டேன். அப்படி பேசி கடைசியா கொண்டு வந்த லிஸ்ட் தான் இது. 

Ashokamithran - 

தண்ணீர் - http://nhm.in/shop/978-81-8368-087-5.html 

கரைந்த நிழல்கள் - http://nhm.in/shop/978-81-8368-082-0.html

18வது அட்சக்கோடு - http://nhm.in/shop/978-81-8368-102-5.html

மானசரோவர் - http://nhm.in/shop/978-81-8368-107-0.html

Indira Parthasarathy

வேர்ப்பற்று - http://nhm.in/shop/978-81-8368-152-0.html

சுதந்தர பூமி - http://nhm.in/shop/978-81-8368-121-6.html

தந்திர பூமி - http://nhm.in/shop/978-81-8368-129-2.html

குருதிப்புனல் - http://nhm.in/shop/978-81-8368-072-1.html


Aadhavan


Devan

ஸ்ரீமான் சுதர்சனம் - http://nhm.in/shop/978-81-8368-303-6.html

ராஜத்தின் மனோரதம் - http://nhm.in/shop/978-81-8368-314-2.html

வாங்கணும்னு லிஸ்ட் போட்டு வாங்காம விட்டதெல்லாம் சொந்த காசுல வாங்கிட வேண்டியது தான். ஆனா முதல்ல வாங்கினதை எல்லாம் படிக்கணும். வீட்டுக்கு எல்லா புத்தகங்களும் வந்துடுச்சாம்.

முக்கியமான விஷயம். இந்த பரிசை தர Oviam Hosting நிறுவனர் கணேஷ் சந்திரா ரொம்ப அக்கறையோட பேசினாரு. அவரும் நிறைய ஆப்ஷன்ஸ் சொன்னாரு. நான் புத்தகம் பாக்கற சமயத்துல Anyindian.com வேலை செய்யலை. எல்லா புத்தகங்களையும் தூக்கிட்டாங்க. (இப்ப மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி). அதனால உயிர்மை, கிழக்கு பதிப்பகம் இப்படி பிரிச்சி வாங்கிக்கறதுனா கூட ஓகே தானு சொல்லி 25$ கிப்ட் கார்ட் கொடுத்துட்டாரு. பக்கா ஜெண்டில் மேன். 

அப்பறம் கிழக்கு பதிப்பகம் பத்தியும் சொல்லி ஆகணும். ஆர்டர் பண்ணவுடனே ஆர்டர் ஸ்டேடஸ் பத்தி மெயில் அனுப்பினாங்க. அதே மாதிரி புத்தகத்தை அனுப்புன உடனே ஒரு மெயில். அதே மாதிரி ஒரு புத்தகத்தோட விலை அதிகமா இருந்ததுனு மீதி காசையும் அனுப்பிட்டாங்க. ஆனா உயிர்மைல அதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி ரெண்டு புத்தகம் ஆர்டர் பண்ணினேன். என்ன ஆச்சுனே தெரியல. மெயில் அனுப்பி கேட்கணும். சுஜாதாவோட திரைக்கதை எழுதுவது எப்படி? புத்தகம் தான். அடுத்து சினிமா இண்டஸ்ட்ரி தான் நம்ம டார்கெட் :-)

இனிமே புத்தகம் கிடைக்கலனு கடை கடையா ஏறி இறங்கறதுக்கு பதிலா அழகா இப்படி ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணிடலாம். மூணே நாள்ல வீட்டுக்கு வந்துடும்.

கடைசியா வழக்கம் போல எல்லாருக்கும் நன்றியை சொல்லிடுவோம். போட்டி நடத்தின சங்கமம், பரிசு கொடுத்த oviam hosting, கதைக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த வாசகர்கள், நடுவர்கள், புத்தகங்களை தேர்ந்தெடுக்க உதவிய பாபா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Friday, April 17, 2009

பேயை ஏமாற்ற முடியுமா?

13B படம் பார்த்ததுக்கு அப்பறம் இந்த 13 நம்பர் பத்தியே சிந்தனை ஓடிட்டு இருந்தது.

எங்க ஆபிஸ் கட்டடம் 13 ஃபிளோர். ஆனா 13க்கு பதிலா 14 போட்டிருப்பாங்க. லிப்ட்ல 12க்கு அப்பறம் 14 தான் இருக்கும். போன வாரம் மதியம் சாப்பிட்டு வரும் போது என் டீம் லீட் கூடவே வந்தாரு. அவர் இந்த 13 கான்செப்ட்ல தீவர நம்பிக்கை வெச்சிருக்கறவரு. 13ம் தேதி வெள்ளிக்கிழமை வந்துச்சுனா, அன்னைக்கு எதுவும் வேலை செய்யாதுனு பரிபூர்ணமா நம்புவாரு. அதுவும் மதியம் 2 மணிக்கு மேல எந்த வேலையும் ஆரம்பிக்க வேண்டாம்னு சொல்லிடுவாரு. இது நமக்கு சாதகமா இருக்கேனு விட்டுடுவேன்.

லிப்ட்ல வரும் போது இதைப் பத்தி பேச ஆரம்பிச்சேன். ”ஏன் ரோஜர் இந்த 12க்கு அப்பறம் 14 போட்டிருக்கீங்களே. ஏன் அப்படினு கேட்டேன்”

உடனே அவர், “பேய் லிப்ட்ல ஏறுச்சுனா 13ம் நம்பரைத் தான் தேடும். அப்படித் தேடி, அது இல்லைனா ஏமாந்து போயிடும்” அப்படினு சொன்னாரு.

உடனே நான், “பேய் லிப்ட்ல வராம படிக்கட்டுல வந்துச்சுனா என்ன பண்ணுவீங்கனு” கேட்டேன்.

”ஒரு ஒரு ஃப்ளோர்லயும் படிக்கட்ல ஏறும் போது கதவுக்கு முன்னாடி ஃப்ளோர் நம்பர் போட்டிருக்கும். அங்கயும் 12க்கு அப்பறம் 14 தான். அதனால மேல கீழனு மாறி, மாறி ஏறி, இறங்கி ஏமாந்து போயிடும்”னு சொன்னாரு.

விடுவோமா நாம. “பேய்க்கு இந்த நம்பர் சிஸ்டம் தெரியாம, மம்மி பேய் மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க. இல்லைனா ரோமன் நம்பர் மட்டும் தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க”னு கேட்டேன். மனுஷன் அப்படியே ஷாக் ஆகிட்டாரு.

அப்பறம் ஒரு வழியா சமாளிச்சி, “அந்த பேய் எல்லாம் ஈஜிப்ட்ல தான் இருக்கும். இங்க வெறும் அமெரிக்க பேய் மட்டும் தான் இருக்கும்”னு சொன்னாரு.

”அப்படினா அந்த பேய்க்கு ஏற்கனவே தெரியுமில்லை. 13வது ஃப்ளோரைத் தான் இவனுங்க ஏமாத்தி நம்பர் மாத்தி வெச்சிருக்காங்கனு. அப்ப ஈசியா அந்த ஃப்ளோருக்கு போயிடுமே”னு சொன்னேன்.

“புரியலை”

“இப்ப ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்களே நாளைக்கு செத்து பேயாகறீங்கனு வெச்சிக்கோங்க. அப்ப உங்களுக்குனு இந்த பில்டிங்ல 13வது ஃபிளோர் ஒதுக்கி வெச்சா, உங்களுக்கு 14தான் உண்மையிலே 13னு தெரியுமில்லை. அப்பறம் கரெக்டா வந்துட மாட்டீங்க” அப்படினு சொன்னேன். மனுஷன் ஜெர்க்காகிட்டாரு.

“அடப்பாவி. இதுக்கு என்னைய சாகடிச்சி பேயாக்கிட்டியே. சரி உங்க ஊர்ல இந்த பேய் எல்லாம் எப்படி சமாளிப்பீங்க” அப்படினு கேட்டாரு.

”அப்படி கேளுங்க. இந்த மாதிரி வீட்டுக்குள்ள இல்லை பில்டிங் உள்ள வரக்கூடாதுனா, முன்னாடி வேப்பிலையைக் கட்டணும்”

“வாட் இஸ் தட்”

“அது ஒரு மரத்துல இலை. அதுல லேடி காட் (உம்மாச்சி) இருப்பாங்க. அதை சொருகி வெச்சா பேய் வராது”

“வாவ். திஸ் இஸ் சூப்பர்”

“இது என்ன. இதை விட இன்னும் சூப்பரா எல்லாம் இருக்கு. கைல தாயுத்து கட்டினா கூட பேய் வராது. ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கு”

“என்ன பிரச்சனை”

“அந்த பேயே ஒரு சூப்பர் ஃபிகரா வந்து, ஒரு டான்ஸ் போட்டு, தாயத்தை கழிட்டிடும்”

“ரியலி?”

“இல்லை பெருச்சாளி. எவண்டா இவன். எதை சொன்னாலும் நம்பறான். பேயை பார்க்கறதுக்கும் சில டெக்னிக்ஸ் இருக்கு. தெரியுமா?”

“அது என்ன டெக்னிக்?”

“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”

“யா யா. தட் இஸ் ட்ரூ”

பல நாடுகள்ல, பல பேய்கள் இருந்தாலும், எல்லாரும் ஒத்துக்கறது இந்த ஒரு பேயை தான்.

சரி சின்ன வயசுல பேய் எப்ப எப்ப நம்ம பின்னாடி வரும்னு சொன்ன சம்பவங்கள்.

1. மதியம் பனிரெண்டு மணிக்கோ, ராத்திரி பனிரெண்டு மணிக்கோ தனியா நடந்து போனா வரும்.

2. சட்டில கறி சோறு எடுத்துட்டு தனியா போனா பின்னாடி வந்து கேக்கும்.

3. பொண்ணுங்க மல்லைகைப் பூ வெச்சிட்டு போனா பின்னாடி வரும்.

4. ராத்திரி சுடுகாட்டுல போய் முட்டையை உடைச்சா, பின்னாடி பொடனியிலே தட்டும். (அங்க போய் எதுக்கு முட்டையை உடைக்கணும்னு தெரியல)

5. ஞாயிறு சாயந்தரம் ராகுகாலத்துல சுடுகாட்டு பக்கமோ, ஆத்து பக்கமோ போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.

6. பேய் பிடிச்சவங்க முடியை எடுத்து ஆலமரத்துலயோ, அரச மரத்துலயோ ஆணி வெச்சி அடிச்சி வெச்சிருப்பாங்க. அதை எடுத்த அந்த ஆவி நம்மல பிடிச்சிக்கும்.

7. கறி சோறு சாப்பிட்டு ராத்திரி தனியா நடந்து போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.

8. பேய் ஓட்டும் போது அங்க போய் நின்னு சிரிச்சா, அந்த பேய் நம்மல வந்து பிடிச்சிக்கும்.

9. சிலுவைப் போடலனா ரத்தக்காட்டேரி வரும்.

10. வயசுப்பசங்க பின்னாடி மோகினிப் பேய் வரும். அது வரது பூ வாசனை, கொலுசு சத்ததுல தெரிஞ்சிக்கலாம் (அது பின்னாடி பசங்க போகாம இருந்தா சரி)

11. இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும். (ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா அப்படினு புத்திசாலித்தனமா கேள்வி கேக்காதீங்க. உங்களுக்கு தான் முதல்லயே சொல்லிட்டனே.)

Friday, April 10, 2009

நன்றி! நன்றி!! நன்றி!!!

வழக்கமா எல்லாக் கதைப் போட்டிகளிலும் கலந்து வெற்றிகரமா தோத்து நன்றி சொல்லுவேன். அப்ப எல்லாம் நிச்சயம் நம்ம கதை ஜெயிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனா இந்த முறை வித்தியாசமா இந்தக் கதை நிச்சயம் ஜெயிக்காதுனு தான் நினைச்சேன். போட்டிக்கு வேற ஒரு கதை எழுதலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.

கடைசி நாள் வெள்ளிக்கிழமை எப்படியும் எழுதிடனும்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசியா பார்த்தா வெள்ளி மதியம் போட்டிக்கு சமர்ப்பிக்கும் நேரம் முடியும்னு இருந்ததை நான் கவனிக்கல. தமிழ்மணம், தேன்கூடு எல்லாம் ESTல தான் சொல்லுவாங்க. இது ISTல இருந்ததை கவனிக்காம விட்டுட்டேன். என் தப்பு தான்.

ஓட்டெடுப்புலயும் நமக்கு பெருசா வராதுனு தெரியும். நடுவர்களுக்கும் நமக்கும் ராசியே இருக்காது. எல்லாம் ஜெயிச்சி வந்து ஒரு தடவை எழுத்துப் பிழை நிறைய இருக்குனு மார்க் குறைச்சி தோத்து போனேன் :-). அதனால இந்த முறையும் அப்படி ஏதாவது நடக்கும்னு நினைச்சேன். பாபா வேற அதுக்கு ஏத்த மாதிரி விமர்சனம் எழுதி கும்மாங்குத்து குத்திட்டாரு. எப்பவும் என் கதைக்கு அவர் சொல்ற அதே கமெண்ட். முடிக்க தெரியாத பாரதிராஜா கதை மாதிரி இருக்கு.

இப்படி நான் நினைச்சதுக்கு எல்லாம் எதிரா நடந்து மக்கள் ஓட்டெடுப்புல சுமாரா மார்க் வாங்கி, நடுவர்கள் தீர்ப்புல நல்ல மதிப்பெண்ணோட கல்லூரிப் பயணம் இனிதே முடிந்தது.

என் கதைல காதலர்கள் பிரியறதும், சில பல சாவுகள் வரதும் தடுக்க முடியாத ஒண்ணா மாறிடுச்சி. வீட்டு அம்மணிக்கிட்ட இதுக்கு எல்லாம் நல்லா திட்டு வாங்கறது வேற. கொலை செய்வது எப்படினு ஒரு கதைல ஒரு பாட்டியை கத்தியால குத்தி கொல்ற மாதிரி ஒரு சீன் இருக்கு. அதை சொல்லி சொல்லி தினமும் எனக்கு திட்டு தான். பாவம் அந்த பாட்டி என்ன பண்ணுச்சு, அதை போய் கொல்ற மாதிரி எழுதறீங்களேனு. என்ன பண்றது. வேற மாதிரி இனிமே எழுத முயற்சி செய்யறேனு சொல்லிருக்கேன்.

அப்படி மத்த கதைல காதலர்கள் பிரியும் போதோ, சாகும் போதோ கொஞ்சம் கூட எனக்கு கஷ்டம் இருக்காது. சிரிச்சிக்கிட்டே எழுதிடுவேன். கதை எப்பவுமே மனசுல இருந்து வராது. அறிவு சொல்றதை தான் கேட்பேன் (யார் அந்த அறிவுனு கேக்கப்படாது). மனசும் கஷ்டப்படாது. ஆனா இந்தக் கதை எழுதும் போது என்னனு தெரியல. கடைசியா கண்ணுல இருந்து தானா தண்ணி வந்துச்சு. ஏதோ மனசே பாரமா ஆகிடுச்சி. இவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு இருந்துச்சு.

கதையை எழுதி ஜி.ராக்கிட்ட அனுப்பினா, டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாரு. அப்பறம் நிறைய இடத்துல எடிட் பண்ண சொல்லி சொன்னாரு. திரும்ப ஒரு நாலைஞ்சி தடவைப் படிச்சி பார்த்து எடிட் பண்ணேன். அப்பறம் ராயல் அண்ணா படிச்சிட்டு, நீ சொல்ற ஃபீலிங் எதுவுமே வரலப்பா. நீ அதை சரியான வார்த்தைல வடிக்கலைனு சொல்லிட்டாரு. நான் மறுபடி படிச்சி பார்த்தாலும் எனக்கு அந்த வலி இருந்துச்சு. எப்பவும் படிச்சி சொல்ற என் ஃபிரெண்ட் தனாக்கு அனுப்பினேன். அவன் நல்லா இருக்குனு சொன்னான். கொஞ்சம் நம்பிக்கை. இருந்தாலும் நான் மனசுல நினைச்ச அளவுக்கு சொல்லலைனு நினைக்கிறேன். படிச்சிட்டு மனசு பாரமாகற அளவுக்கு ஒரு அன்னோன்யத்தை ஏற்படுத்த தவறிட்டேனு நினைக்கிறேன்.

சரி, ஒரு கதைக்கு இவ்வளவு பெரிய கதையானு கேட்காதீங்க. சும்மா சொல்லணும்னு தோனுச்சு.

இது நிஜமா சொல்லணும்னு தோனுச்சு...

ஓட்டு போட்டவர்களுக்கும், நடுவர்களுக்கும், போட்டியை நடத்திய சங்கமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கலந்து கொண்ட அனைவருக்கு என் நன்றிகள். போட்டினா நூறு தடவை தோக்கறதும், ஒரு தடவை ஜெயிக்கறதும் தான் நம்மல மாதிரி வீரனுக்கு அழகு.

இது வரை படிக்க தவறியவர்கள் இங்கே சொடுக்கவும்

Thursday, April 02, 2009

விருது விருது!!!

இந்த விருதை சில மாதத்துக்கு முன்னாடி தங்கச்சி தமிழினி கொடுத்த பொழுது, நன்றிமா... கொஞ்ச நாள் கழிச்சி இதை தொடருகிறேனு சொல்லிட்டேன். முதல் காரணம், அந்த விட்ஜெட். ஏனோ இந்த மாதிரி விட்ஜெட் போட்டுக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை.



சர்வேசனோட விட்ஜட்டே அவர் கொடுத்த நூறு டாலருக்கு மரியாதை கொடுத்து தான் போட்டு வெச்சிருக்கேன். அதை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் எப்படி இருந்த நீ, இப்படி ஆகிட்டயேனு ஒரு கஷ்டம் வரும். 2006ல ஆறு மாசம் எழுதன அளவுக்கு கிரியேட்டிவா அதுக்கு அப்பறம் நான் எழுதல. அப்பவும் என்னை விட நல்லா எழுதின பல பேர் அவுங்க பேரை போட்டில இருந்து நீக்க சொல்லிட்டாங்க :-)




சரி இப்ப எதுக்கு இந்த எஸ்டீடீ எல்லாம்னு கேக்கறீங்களா? இந்த பட்டாம்பூச்சி விருதுல இருந்து நான் எஸ்கேப் ஆக முயற்சி செஞ்சதுக்கு இது தான் காரணம். அப்பறம் எப்படியும் எல்லாரும் எல்லாருக்கும் விருதை கொடுத்து எல்லார் வலைப்பதிவுலயும் தேவையில்லாம விட்ஜெட்டா இருக்கும்.




இதை சொல்லும் போது பத்தாவதுல எங்க எஸ்டீடீ வாத்தியார் சொன்னது தான் ஞாபகம் வருது. அரசியல் மீட்டீங் பத்தி சொன்னவரு, இந்த பன்னாடை அந்த பன்னாடைக்கு பன்னாடை போத்தும், பதிலுக்கு அந்த பன்னாடை இந்த பன்னாடைக்கு பன்னாடை போத்தும். இது தான் அரசியல்.


அப்பறம் பட்டாம்பூச்சி விருது முடிஞ்சி, தும்பி, ஈ, காக்கா, குருவி (இது நம்ம கார்க்கி ரிசர்வ் பண்ணிருப்பாருனு நினைக்கிறேன்) இப்படி பல விருதுகள் வர ஆரம்பிச்சிடும். அப்பறம் அதையும் எடுத்து டெம்ப்ளேட்ல போட்டு படிக்கிறவங்களை டார்ச்சர் பண்ணனுமா?


அத‌னால‌ விருது கொடுத்த‌ த‌ங்க‌ச்சி த‌மிழினி, அண்ண‌ன் கைப்ஸ், ந‌ண்ப‌ர் ஆ! இத‌ழ்க‌ள் மூவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். அப்பறம் இதை என் டெம்ப்ளேட்ல சைட்ல போடாததுக்கு என்ன மன்னிச்சிடுங்க.


இதுக்கு மூணு பேரை மாட்டிவிடணுமாம் (அதெல்லாம் நமக்கு ரொம்ப பிடிக்கும்). கொஞ்சம் யோசிச்சி பார்த்தா, மூணு பேருக்கு கொடுக்கறதை விட, என் மூணு பதிவை விட ஒரு பதிவை நீஈஈஈஈஈஈஈஈளமா எழுதற ஒருத்தருக்கு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அது "Coolest blog I ever know " இல்லை "Lengthiest blog I ever know "

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே...நீங்க இதை வெச்சி ஒரு பதிவு போடுங்க.

Wednesday, April 01, 2009

யாவரும் நலம் - 13 B

பேய் படம் பார்க்கறதுனு முடிவு எடுத்ததுக்கு அப்பறம் லாஜிக் பார்க்கக் கூடாது. பேய் டீவில எப்படி வருது, கரண்ட் போனதுக்கு அப்பறம் எப்படி டீவி தெரியும், மாதவன் ஃபோட்டோ மட்டும் ஏன் கோணலா தெரியுது, நாய் ஏன் வீட்டுக்குள்ள வரலை இப்படி எல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. இந்த மாதிரி படத்தை எல்லாம் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

எங்க ஏரியால யாவரும் நலம் வரலை. 13B தான். இங்கிலிஷ் சப் டைட்டிலோட பார்த்தாச்சு. உங்களுக்கு அட்ரனலின் சுரக்கறது பிடிக்கும்னா இந்த படம் நிச்சயம் பிடிக்கும். பல இடங்களில் உங்களுக்கு அட்ரனலின் சுரப்பது நிச்சயம். அனைத்து பேய் படத்திலும் இருக்கும் பழிவாங்கல் தான் கதை என்றாலும் அதைப் பிடித்த விதம் அருமை. படத்தின் முதல் நாயகன் PC ஸ்ரீராம் தான். கேமராவை எங்க எங்க வெச்சி எடுத்திருக்காருனு யோசிக்கறதுக்குள்ள அடுத்த ஆச்சரியத்துக்கு எடுத்துட்டு போயிடறாரு.

அடுத்து எல்லாப் பேய் படத்துக்கும் பலம் இசை. ம்யூட் பண்ணி பார்த்தா நிறைய பேய் படம் சிரிப்பு படமாகிடும். இந்த படத்துலயும் பின்னனி இசை பெரிய பலம். நிறைய காட்சிகளில் நமக்கு பயத்தை ஏற்படுத்த இந்த இசை முக்கியமான பணியை செய்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி பண்ணாம சில இடங்களில் பின்னனி இசை இல்லாம அமைதி காத்து நமக்கு நம்ம இதய துடிப்பைக் கேட்க வைத்ததற்கு இசை அமைப்பாளரை நிச்சயம் பாராட்டி ஆகணும்.

இது பேய் படம்னாலும் எந்த ஒரு இடத்திலும் முகம் ஃபுல்லா பவுடர் பூசியோ இல்லை உருவம் மோகன் மாதிரி சந்தனம் பூசியோ பயமுறுத்த முயற்சிக்கவில்லை. அங்க நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சியும் மாதவன் முகத்துல ஏற்படுத்துற கிலிக்கு குறையாம நமக்கும் ஏற்படுத்துற காட்சி அமைப்புகளுக்காக இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.




படத்தோட கதையை எங்கயும் சொல்லி உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு அருமையான அனுபவத்தை கெடுக்கக் கூடாதுனு தான் எந்த காட்சியையும் சொல்லலை. அட்ரனலின் சுரக்கறதை ரசிக்கிற ஆளா நீங்க இருந்தா இந்த படத்தை தவறாம தியேட்டர்ல போய் பாருங்க. நிச்சயம் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். ராத்திரி ஷோக்கு தனியா போயிடாதீங்க.

படத்துல சில பல குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல த்ரில்லர் கொடுத்ததுக்காக அதை எல்லாம் கண்டுக்காம விட்டுடலாம்.