தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, November 02, 2007

இப்படியிருக்கற நான்.. எப்படியாக போறேன்

இப்படியிருக்கற நான்...


வர நவம்பர் 15ல இருந்து இப்படியாக போறேன்




உங்கள் நல்லாசிகளை வேண்டும் வெட்டி...

Thursday, November 01, 2007

பயணக் கட்டுரை 4

சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு கிளம்புவது அதற்கு முதல் நாள் இரவு தான் முடிவானது. மாமா வீட்டுக்கு கோவை போகலாம்னு இருந்த ப்ளான் கேன்சலானவுடன் இந்த பயணம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தாச்சி எப்படியும் எல்லாரையும் பார்த்துடலாம்னு முடிவு பண்ணி கப்பிக்கு ஃபோன் போட்டு சொல்லி ரெடியாயாச்சு. மூணு மணிக்கு அலாரம் வெச்சி கரெக்டா எழுந்துட்டேன். மூணுரை வண்டியை பிடிச்சி சென்னைக்கு எட்டு மணிக்கு போய் சேர்ந்தேன். சென்னை எனக்கு சுத்தமா பழக்கமில்லாத ஊரு. ஒரு மூணு நாலு தடவை தான் போயிருப்பேன். அதுவும் கௌன்சிலிங், HCL இண்டர்வியூ இந்த மாதிரி.

சென்னைல எட்டு மணிக்கே என்னமா வெயில் அடிக்குது. அதுவும் ஜீன் மாச கடைசில. சரி ஒரு எளனி (இளநீர்) குடிக்கலாம்னு பார்த்தேன். விலைய கேட்டா பதினஞ்சி ரூபானு சொன்னான். நான் ஒரு எளனி தாங்க கேட்டேனு சொன்னேன். அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தான். எனக்கு உதயகீதம் கவுண்ட மணி தேங்காய் கதை தான் நியாபகத்துக்கு வந்துச்சு. பேசாம எளனில பாம் வெச்சிருக்காங்கனு சொல்லிடலாமானு கூட ஒரு நிமிஷம் யோசிச்சேன். ஆனா வேண்டாம் வம்புனு விட்டுட்டேன். ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி கொயம்பத்தூர்லயே அஞ்சி ரூபாய்க்கு தான் வாங்கினேன். அதுக்குள்ள பதினஞ்சி ரூபாயானு யோசிச்சிட்டு இருக்கும் போதே நிறைய பேர் வாங்கி குடிப்பதையும் பார்த்தேன். எல்லார்டயும் நிறைய காசு இருக்கு போலனு நினைச்சிட்டு இருக்கும் போதே என் அண்ணன் (பெரியம்மா பையன்) வந்து கூப்பிட்டு போனான்.

முதல்ல சரவண பவன் போய் டிபன் சாப்பிடலாம்னு போனோம். எனக்கு கோவை அண்ணபூர்ணா தான் ஃபெவரைட் (எல்லாத்தையும் கொயம்பத்தூரோட கம்பேர் பண்ணாம இருக்க முடியல). முதல்ல ஆளுக்கு ஒரு பொங்கல் ஆர்டர் பண்ணோம். தட்டுல வந்த பொங்கல் அளவை பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி. எங்க வீட்ல சாப்பிட்டு முடிச்சதும் எங்க அம்மா பாத்தரத்துல ஒட்டிட்டு இருக்குனு வழிச்சி ஒரு கைல எடுத்து போடுவாங்க. அதைவிட குறைவாதான் இருக்கும். வேணும்னா ஒரு சின்ன கரண்டி அளவுனு சொல்லலாம். கோவில் பிரசாதம் மாதிரி. அதுக்கு சட்னி என்னனா ஒரு டீ ஸ்பூன் அளவு. அடப்பாவிகளானு நினைச்சி சாப்பிட்டு அப்பறம் ஒரு செட் பூரி ஒரு காபி குடிச்சோம். பில் பார்த்தா நூத்து இருபதுக்கு மேல. சென்னைல இந்த மாதிரி சாப்பிடனும்னா கொயம்பத்தூர்ல பணம் அச்சடிக்கனும் போலனு அவன்ட சொல்லிக்கிட்டே வந்தேன். அதுக்கு அவன் எல்லாத்துக்கும் நீங்க தான் (சாப்ட்வேர் இஞ்சினியருங்க) காரணம்னு சொல்லி புலம்பனான். இனிமே இந்த கடைக்கு வரக்கூடாதுனு முடிவு பண்ணிக்கிட்டேன்.

அப்பறம் அண்ணன் வீட்டுக்கு போயிட்டு மதியம் ஒரு மூணு மணிக்கா நம்ம கப்பி நிலவரை சந்திச்சேன். பதிவுல இருக்குற மாதிரியே அதே அந்நோனியம். எப்பவும் சிரிச்ச முகம் (யாரோ கேட்ட மாதிரி தூங்கும் போதும் சிரிப்பியா ராசா?). ரெண்டு பேரும் ஒரு ஹோட்டலுக்கு போயிட்டு காபி குடிச்சிட்டு வலைப்பதிவர் சந்திப்புக்கு கிளம்பினோம். ஒரு வழியா தேடி பிடிச்சி வித்யலோகா புக் செண்டருக்கு போய் சேர்ந்தோம். (நாலு மாசத்துக்கு அப்பறம் எழுதறங்க. அதனால யார் பேராவது விட்டிருந்தா தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க).

போனவுடனே வெளிய பொன்ஸக்கா ஃபோன் பேசிட்டு இருந்தாங்க. கப்பிய பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போன்ல கண்டினியூ பண்ணிட்டு இருந்தாங்க. அடுத்து உள்ள போனவுடனே பாலபாரதி கப்பிக்கிட்ட வாயானு பாசமா கூப்பிட்டாரு. நான் யாருனு யாருக்கும் தெரியாது. பேசாம அனானியா இருந்துடலாமானு ஒரு நிமிஷம் யோசிச்சேன். ஆனா நல்லா இருக்காதுனு பேர் சொல்லியே அறிமுகப்படுத்தி கொண்டேன். ரொம்ப சந்தோஷமா கை கொடுத்து வரவேற்றார்.

அடுத்து அவர் பக்கத்துல ஒரு வயசானவர் நின்னுட்டு இருந்தார். நான் தான் டோண்டு ராகவனு கப்பி நிலவன்கிட்ட கை கொடுத்தார். அடுத்து நானும் அறிமுக படுத்தி கொண்டேன். நம்ம அந்த அளவுக்கு ஃபேமஸில்லாததால் அவருக்கு யாருனு தெரியலைனு நினைக்கிறேன் :-). அங்க இருந்த கொஞ்ச பேர் பாஸ்டன்ல இருந்து பாலாஜினு சொன்னவுடனே பாஸ்டன் பாலாவானு ஆர்வமா கேட்டாங்க. நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லைங்கோ. நான் வெட்டிப்பயங்கோனு சொன்னவுடனே எல்லாருக்கும் யாருனு தெரியாம "ஓ! அப்படியானு" ஒரு ரியாக்ஷன் கொடுத்தாங்க.

அடுத்து எல்லாரும் வட்டமா உக்கார்ந்தாங்க. என் பக்கத்துல ரொம்ப சாந்தமா ஒருத்தர் உக்கார்ந்தாரு. பாலராஜன்கீதானு சொல்லி கை கொடுத்தாரு. ஏற்கனவே அவரை பற்றி KRS சொல்லி இருந்ததால் ஆர்வமாக அவரிடம் பேச துவங்கினேன். ரொம்ப பாசமா பேசினார். அவர்ட பேசினதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

அடுத்து வலைப்பதிவர் பட்டரை பத்தி பேச்சு துவங்கியது. பத்ரி, லக்கி லுக், மா.சி, விக்கி (ரொம்ப ஆர்வமா இருந்தாரு), ஐகாரஸ் பிரகாஷ் எல்லாரும் அவுங்க அவுங்க கருத்தை சொன்னாங்க. என்ன கருத்துனு எல்லாம் கேக்க கூடாது. (Unconferenceக்கு தமிழ்ல என்னனு ஒரு அஞ்சு நிமிஷம் விவாதம் நடந்துச்சு :). அது தான் அதிகமா நியாபகம் இருக்கு). ஏன்னா பட்டரை முடிஞ்சே நாலு மாசமாகுது. வரவணையானும், முத்து தமிழினியும் ஏதாவது சொல்லுவாங்கனு ஆர்வமா இருந்தா பாஸ் சொல்லிட்டாங்க. நானும் ஏதோ என் கருத்தை சொல்ல அதை என்னயே செய்ய சொல்லி விக்கி சொல்லிட்டாரு. சரினு நானும் ஒத்துக்கிட்டு வந்து அரை குறையாக செய்திருக்கிறேன் :-(

முத்துலட்சுமி அக்கா குழந்தையோட வந்திருந்தாங்க. வினையூக்கி, அருள் குமார், சிவ ஞானம்ஜி ஐயா எல்லாரும் வந்திருந்தாங்க. சிவஞானம்ஜி ஐயா அண்ணா பல்கலை கழக தமிழ்துறையிடம் பேசி பட்டரைக்கு இடம் வாங்கி கொடுத்தார் என நினைக்கிறேன் (தவறிருந்தால் சொல்லவும்). சந்திப்பு அப்படியே முடிஞ்சிடுச்சி. என்னடா எல்லாரும் மொக்கை போடுவாங்கனு ஆசையா வந்தா பட்டறை பத்தி பேசி முடிச்சிட்டாங்கனு ஏமாற்றம்.

அப்பறம் எல்லாரும் கூட்டம் கூட்டமா பேச ஆரம்பிச்சாங்க. முதல்ல நான் மா.சிக்கிட்ட தான் பேசினேன். மக்களுக்கு பயன்படும் மாதிரி ஏதாவது எழுதனும் என்ன எழுதலாம்னு கேட்டேன். அவர் நீங்க வேலை செய்யற துறை என்னனு கேட்டாரு. நான் Performance Testingனு சொன்னேன். சரி அதை பத்தி எழுதுங்கனு சொன்னாரு. நான் வேணா சாப்ட்வேர் ஃபீல்ட்ல எப்படி Fake போட்டு வேலை வாங்கறதுனு எழுதவானு கேட்டேன். அவர் பார்த்த லுக் இன்னும் மனசிலே இருக்கு. இருந்தாலும் பின்னாடி எப்பவாது இதை பத்தி எழுதுவேன் :-)

அப்பறம் வெளிய கூட்டம் கூட்டமா நின்னு பேசிட்டு இருந்தாங்க. முதல்ல முத்துலட்சுமி அக்காக்கிட்ட பேச துவங்கினேன். உங்க வலைப்பூ தான் நான் முதல்ல படிச்ச வலைப்பூ. அதுக்கு அப்பறம் தான் நான் வலைப்பதிய ஆரம்பிச்சேனு சொன்னாங்க. கப்பி பார்த்து சிரிச்சான். நீங்களே எழுதும் போது நாங்க எழுதக்கூடாதானு ஆரம்பிச்சிருப்பாங்கனு சொல்லிட்டு எஸ்கேப் ஆகியாச்சு. அப்பறம் கப்பி எழுதுன நாய் கதையை பத்தி ஏதோ சொன்னாங்க. அந்த கதை எங்கனு நான் தேடிக்கிட்டே இருக்கேன். (கப்பி அப்ப நீ கொடுத்த ரியாக்ஷனுக்கு இப்ப தான் எனக்கு அர்த்தம் புரியுது)

அடுத்து லக்கிலுக், முத்து தமிழினியோட பேச ஆரம்பிச்சேன். முத்து தமிழினி உங்களோட க்ரீமி லேயருக்கு எதிரான பதிவுக்கு எதிரா பதிவு போடனும்னு நினைச்சேன். ஆனா வேலை பளுல போட முடியலைனு சொன்னாரு. பொறுமையா போடுங்க. எங்க போயிட போறேனு சொன்னேன். சிரிச்சாரு. அப்பறம் இட ஒதுக்கீடு பத்தி ஒரு பத்து நிமிஷம் டிஸ்கஷன் நடந்துச்சு. இன்னும் ஒரு இருபது வருஷத்துக்கு க்ரீமி லேயர் பத்தியே பேசாதீங்கனு சொன்னாரு. க்ளார்க் பசங்க எல்லாம் இப்ப தான் இஞ்சினியர் ஆகறாங்க. அந்த இஞ்சினியர் பசங்க வரும் போது பார்த்துக்கலாம்னு சொன்னாருனு நினைச்சிட்டு விட்டுட்டேன்.

கிருஷ்ணா (லக்கிலுக்) நேர்ல பார்க்கும் போது பதிவு மாதிரி அடிச்சி ஆடற டைப் இல்லைனு பட்டுச்சி. மனுஷன் ரொம்ப அமைதி. பேசறதை எல்லாம் கவனமா கேக்கறாரு. பெரியார் பத்தியும் பெரியார் படம் பத்தியும் நான் பேசனதை ரொம்ப ஆர்வமா கேட்டாரு. தனக்கும் பெரியார் அறிமுகம் இந்த மாதிரி ஒரு சாதரண பத்திரிக்கைல தான் கிடைச்சிதுனு சொன்னாரு. ஒரு நல்ல நண்பர் மாதிரி பேசனாரு.

அடுத்து சோமிக்கிட்ட பேசினேன். பத்தாயிரம் வாலா மாதிரிங்க மனுசன். பட படனு பேசறார். அவர் பேசறதை கேட்கும் போது நம்ம சூப்பர் ஸ்டார் பேசற மாதிரி தான் இருந்துச்சி. செம ஆக்டிவ். சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா பேசுங்க. நீங்க அவரோட நட்பாகறதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு மேல ஆகாது. மொக்கை பதிவுகளை பற்றி சொன்னார். யாழ்பாணத்தில் எரிந்து போன நூலகத்தை பற்றி சொல்லி வருத்தப்பட்டார். எங்கயாவது சோமி வரார்னா அந்த சந்திப்பை தவற விட்டுடாதீங்க.

அப்பறம் கடைய பூட்டிட்டு தல பாலபாரதி வந்தார். வெளிய போய் டீக்குடிச்சிட்டு அவர்ட கொஞ்ச நேரம் பேசினேன். நான் எழுதிய பெரியார் பதிவு ரொம்ப பிடிச்சிதுனு சொன்னார். அந்த ட்விஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சுனு சொன்னார். பெரியார் பத்தி இன்னும் நான் நிறைய எழுதனும்னு சொன்னப்ப கண்டிப்பா பண்ணுனு சொன்னார். ஆனா நான் தான் எழுதாம இத்தனை நாள் வீணாக்கிட்டேன் :-(

அப்பறம் எங்க காதல் முரசு அருட்பெருங்கோவை பத்தி சொல்லாம விட்டுட்டேன். ரொம்ப அமைதியான பையன். அந்த காதல் கவிதை எல்லாம் கற்பனை தான். அனுபவம் இல்லைனு சொன்னான். நானும் நம்ப முயற்சி செய்யறேனு சொன்னேன். இன்னும் முயற்சி செஞ்சிக்கிட்டே இருக்கேன்.

நான் சென்னை வந்ததே சங்கத்து மக்கள்ல கப்பி தவிர யாருக்கும் தெரியாது. ஏன்னா முதல் நாள் இராத்திரி பத்து மணிக்கு முடிவு பண்ணி மூணு மணிக்கு கிளம்பி வந்தது. எல்லார்கிட்டயும் கப்பியை சொல்ல சொல்லிட்டேன். தேவ் அண்ணாவிற்கு நாங்க சொல்லும் போது மணி சாயந்திரம் அஞ்சு ஆயிடுச்சு. அவரால சந்திப்புக்கு வர முடியல. அதனால ஒரு சின்ன மீட்டிங் பீச்ல போட்டுடலாம்னு முடிவு பண்ணோம்.

ரிப்பீட்டே கோபி, காதல் முரசு, தேவ், நான், கப்பி எல்லாரும் பெசண்ட் நகர் பீச்ல ஒரு மணி நேரம் சந்திச்சி பேசனோம். ரிப்பிட்டே கோபியும் ரொம்ப அமைதியான டைப் தான். முதல்ல ரிப்பீட்டே கோபி தான் காதல் முரசுனு மாத்தி தேவ் அண்ணாக்கிட்ட சொல்லியாச்சு. இதுக்கும் கப்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு அவன் சொன்னதை அவனே நம்பலை.

காதல் முரசுக்கிட்ட தினமணி பத்திரிக்கை நிருபர் பத்தி தேவ் ஏதோ கேட்க அவர் என் கிளாஸ் மேட் தான் ரிப்பீட்டே கோபி சொல்ல, அம்பது வயசு நிருபர் எப்படி இவன் கூட படிச்சாருனு யோசிச்சி ஒரு வழியா அவரே கண்டிபிடிச்சிட்டாரு. அப்பறம் ஒரு மணி நேரம் நம்ம காதல் முரசை ஓட்டிட்டு கிளம்பியாச்சி. ஜொள்ளுப்பாண்டி வர முடியலைனு ரொம்ப வருத்தப்பட்டார். ஃபோன் பண்ணாததுக்கு ரொம்ப சாரிங்க பாண்டி.

நானும் கப்பியும் ஒரு வழியா சாப்பிட்டோம். அப்பறம் என்னை கோயம்பேடு வந்து பஸ் ஏத்திவிட்டு கிளம்பினான் கப்பி. பாசக்காரப்பையன்... அன்னைக்கு வரேனு சொன்ன அபி அப்பாவையும் சென்ஷியையும் பார்க்காதது தான் பெரிய வருத்தம். எப்படியும் ஒரு நாள் சந்திப்போம்னு நினைச்சிட்டு கிளம்பினேன்...

(தொடரும்...)