தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, July 08, 2009

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

கவிதை எனக்குப் புரியாத‌ ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்ப‌தைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

குட்டிசுவற்றில் அமர்ந்து
கடக்கும் ஃபிகர்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்த இளைஞ‌ன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன ஃபிகர்கள்.

இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவனும்... நானும்

வகுப்பறையில் அவ‌னுக்கு
ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று
தலையை நிமிர்த்தி
பார்க்கிறான் அவன்.

எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
த‌லையை டேபிளில்
சாய்க்கிறேன் நான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

க‌டைசி க‌வுஜைக்கு கொஞ்ச‌ம் நிறைய‌ யோசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்க‌லாம்.

Thursday, April 30, 2009

போட்டியில் வென்று வாங்கிய புத்தகங்கள்!!!

சங்கமம் போட்டிக்கு கதை எழுதறதுக்கு செலவிட்ட நேரத்தை விட புத்தகம் வாங்கறதுக்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டியதா போச்சு. என் கதைக்கு குறைவா மார்க் போட்ட பாவத்துக்கு (ஹி ஹி) பாபாவையும் பிரிச்சி மேஞ்சாச்சு. நமக்கு தெரிஞ்ச எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், அகிலன், சுஜாதா, பாலகுமாரன். அதுவும் சுஜாதா, பாலகுமாரன் கதை போன நவம்பர்ல இந்தியா வந்தப்ப தான் படிச்சேன். அதனால இந்த முறை 1250க்கு என்ன புத்தகம் வாங்கறதுனு தெரியல. சரினு uyirmmai.com ல போய் சுஜாதாவோட குறுநாவல்கள் எல்லாம் செலக்ட் பண்ணேன். அப்பறம் இன்னும் ரெண்டு சுஜாதா புக். பார்த்தா 1250 தாண்டிடுச்சி. 

எழுத்துலகுல எப்பவும் நமக்கு வழிகாட்டி (ஹி ஹி. தமிழ்ல எப்படி எழுதறதுனே அவர் தான் எனக்கு சொல்லி கொடுத்தாரு) பாபா தானே. அதான் அவருக்கு லிஸ்ட்டை அனுப்பினேன். அவர் அப்படியே ரிஜக்ட் பண்ணிட்டாரு. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன் (மறைவாய் சொன்ன கதைகள்), ஆதவன், அ.முத்துலிங்கம் (உண்மை கலந்த நாட்குறிப்புகள்) இப்படி கலவையா வாங்க சொன்னாரு. ஜெயமோகன் எல்லாம் புரியாத மாதிரி எழுதுவாரு (நான் கடவுள் பார்த்த எஃபக்ட்) அப்படினு நான் சொன்னவுடனே, அப்படியெல்லாம் இல்லை. படிச்சா நிச்சயம் புரியும். அதனால தவற விடாதேனு சொன்னாரு. 

அப்பறம், இதை எல்லாம் நல்லா ஆராய்ச்சி பண்ணிட்டு, கிழக்கு பதிப்பகத்துல என்ன இருக்குதுனு பார்க்கலாம்னு போனேன்.

இந்திரா பார்த்தசாரதி பேர் முதல்ல இருந்தது. நான் கேள்விப்பட்டது குருதிப்புனல் மட்டும் தான். அதுவும் கமல் நடிச்சதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு கேள்விப்பட்டதால ஞாபகம் இருக்கு. வேற எதுவும் தெரியலை. அதனால அதை மட்டும் செலக்ட் பண்ணேன். அப்பறம் பா.ராகவனோட என் பெயர் எஸ்கோபர், நிலமெல்லாம் ரத்தம் செலக்ட் பண்ணேன். அடுத்து இரா.முருகனோட அரசூர் வம்சம், மூன்று விரல், இரா.முருகன் சிறுகதைகள் செலக்ட் பண்ணி அவர்ட்ட கருத்து கேட்டு அனுப்பியிருந்தேன். முன்னாடி அனுப்பன லிஸ்ட்க்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை. இருந்தாலும் அவர் அதைப் பத்தியெல்லாம் எதுவும் சொல்லாம, எல்லாமே நல்ல புத்தகம் தான். தாராளமா வாங்கலாம்னு சொன்னாரு. அரசூர் வம்சம் மட்டும் எடுத்தவுடனே படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம்னு சொன்னாரு.

நாம அப்பவும் விடுவோமா, கடைசியா அவருக்கு ஃபோன் போட்டே பேச ஆரம்பிச்சிட்டேன். அப்படி பேசி கடைசியா கொண்டு வந்த லிஸ்ட் தான் இது. 

Ashokamithran - 

தண்ணீர் - http://nhm.in/shop/978-81-8368-087-5.html 

கரைந்த நிழல்கள் - http://nhm.in/shop/978-81-8368-082-0.html

18வது அட்சக்கோடு - http://nhm.in/shop/978-81-8368-102-5.html

மானசரோவர் - http://nhm.in/shop/978-81-8368-107-0.html

Indira Parthasarathy

வேர்ப்பற்று - http://nhm.in/shop/978-81-8368-152-0.html

சுதந்தர பூமி - http://nhm.in/shop/978-81-8368-121-6.html

தந்திர பூமி - http://nhm.in/shop/978-81-8368-129-2.html

குருதிப்புனல் - http://nhm.in/shop/978-81-8368-072-1.html


Aadhavan


Devan

ஸ்ரீமான் சுதர்சனம் - http://nhm.in/shop/978-81-8368-303-6.html

ராஜத்தின் மனோரதம் - http://nhm.in/shop/978-81-8368-314-2.html

வாங்கணும்னு லிஸ்ட் போட்டு வாங்காம விட்டதெல்லாம் சொந்த காசுல வாங்கிட வேண்டியது தான். ஆனா முதல்ல வாங்கினதை எல்லாம் படிக்கணும். வீட்டுக்கு எல்லா புத்தகங்களும் வந்துடுச்சாம்.

முக்கியமான விஷயம். இந்த பரிசை தர Oviam Hosting நிறுவனர் கணேஷ் சந்திரா ரொம்ப அக்கறையோட பேசினாரு. அவரும் நிறைய ஆப்ஷன்ஸ் சொன்னாரு. நான் புத்தகம் பாக்கற சமயத்துல Anyindian.com வேலை செய்யலை. எல்லா புத்தகங்களையும் தூக்கிட்டாங்க. (இப்ப மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி). அதனால உயிர்மை, கிழக்கு பதிப்பகம் இப்படி பிரிச்சி வாங்கிக்கறதுனா கூட ஓகே தானு சொல்லி 25$ கிப்ட் கார்ட் கொடுத்துட்டாரு. பக்கா ஜெண்டில் மேன். 

அப்பறம் கிழக்கு பதிப்பகம் பத்தியும் சொல்லி ஆகணும். ஆர்டர் பண்ணவுடனே ஆர்டர் ஸ்டேடஸ் பத்தி மெயில் அனுப்பினாங்க. அதே மாதிரி புத்தகத்தை அனுப்புன உடனே ஒரு மெயில். அதே மாதிரி ஒரு புத்தகத்தோட விலை அதிகமா இருந்ததுனு மீதி காசையும் அனுப்பிட்டாங்க. ஆனா உயிர்மைல அதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி ரெண்டு புத்தகம் ஆர்டர் பண்ணினேன். என்ன ஆச்சுனே தெரியல. மெயில் அனுப்பி கேட்கணும். சுஜாதாவோட திரைக்கதை எழுதுவது எப்படி? புத்தகம் தான். அடுத்து சினிமா இண்டஸ்ட்ரி தான் நம்ம டார்கெட் :-)

இனிமே புத்தகம் கிடைக்கலனு கடை கடையா ஏறி இறங்கறதுக்கு பதிலா அழகா இப்படி ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணிடலாம். மூணே நாள்ல வீட்டுக்கு வந்துடும்.

கடைசியா வழக்கம் போல எல்லாருக்கும் நன்றியை சொல்லிடுவோம். போட்டி நடத்தின சங்கமம், பரிசு கொடுத்த oviam hosting, கதைக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த வாசகர்கள், நடுவர்கள், புத்தகங்களை தேர்ந்தெடுக்க உதவிய பாபா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Friday, April 10, 2009

நன்றி! நன்றி!! நன்றி!!!

வழக்கமா எல்லாக் கதைப் போட்டிகளிலும் கலந்து வெற்றிகரமா தோத்து நன்றி சொல்லுவேன். அப்ப எல்லாம் நிச்சயம் நம்ம கதை ஜெயிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனா இந்த முறை வித்தியாசமா இந்தக் கதை நிச்சயம் ஜெயிக்காதுனு தான் நினைச்சேன். போட்டிக்கு வேற ஒரு கதை எழுதலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.

கடைசி நாள் வெள்ளிக்கிழமை எப்படியும் எழுதிடனும்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசியா பார்த்தா வெள்ளி மதியம் போட்டிக்கு சமர்ப்பிக்கும் நேரம் முடியும்னு இருந்ததை நான் கவனிக்கல. தமிழ்மணம், தேன்கூடு எல்லாம் ESTல தான் சொல்லுவாங்க. இது ISTல இருந்ததை கவனிக்காம விட்டுட்டேன். என் தப்பு தான்.

ஓட்டெடுப்புலயும் நமக்கு பெருசா வராதுனு தெரியும். நடுவர்களுக்கும் நமக்கும் ராசியே இருக்காது. எல்லாம் ஜெயிச்சி வந்து ஒரு தடவை எழுத்துப் பிழை நிறைய இருக்குனு மார்க் குறைச்சி தோத்து போனேன் :-). அதனால இந்த முறையும் அப்படி ஏதாவது நடக்கும்னு நினைச்சேன். பாபா வேற அதுக்கு ஏத்த மாதிரி விமர்சனம் எழுதி கும்மாங்குத்து குத்திட்டாரு. எப்பவும் என் கதைக்கு அவர் சொல்ற அதே கமெண்ட். முடிக்க தெரியாத பாரதிராஜா கதை மாதிரி இருக்கு.

இப்படி நான் நினைச்சதுக்கு எல்லாம் எதிரா நடந்து மக்கள் ஓட்டெடுப்புல சுமாரா மார்க் வாங்கி, நடுவர்கள் தீர்ப்புல நல்ல மதிப்பெண்ணோட கல்லூரிப் பயணம் இனிதே முடிந்தது.

என் கதைல காதலர்கள் பிரியறதும், சில பல சாவுகள் வரதும் தடுக்க முடியாத ஒண்ணா மாறிடுச்சி. வீட்டு அம்மணிக்கிட்ட இதுக்கு எல்லாம் நல்லா திட்டு வாங்கறது வேற. கொலை செய்வது எப்படினு ஒரு கதைல ஒரு பாட்டியை கத்தியால குத்தி கொல்ற மாதிரி ஒரு சீன் இருக்கு. அதை சொல்லி சொல்லி தினமும் எனக்கு திட்டு தான். பாவம் அந்த பாட்டி என்ன பண்ணுச்சு, அதை போய் கொல்ற மாதிரி எழுதறீங்களேனு. என்ன பண்றது. வேற மாதிரி இனிமே எழுத முயற்சி செய்யறேனு சொல்லிருக்கேன்.

அப்படி மத்த கதைல காதலர்கள் பிரியும் போதோ, சாகும் போதோ கொஞ்சம் கூட எனக்கு கஷ்டம் இருக்காது. சிரிச்சிக்கிட்டே எழுதிடுவேன். கதை எப்பவுமே மனசுல இருந்து வராது. அறிவு சொல்றதை தான் கேட்பேன் (யார் அந்த அறிவுனு கேக்கப்படாது). மனசும் கஷ்டப்படாது. ஆனா இந்தக் கதை எழுதும் போது என்னனு தெரியல. கடைசியா கண்ணுல இருந்து தானா தண்ணி வந்துச்சு. ஏதோ மனசே பாரமா ஆகிடுச்சி. இவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு இருந்துச்சு.

கதையை எழுதி ஜி.ராக்கிட்ட அனுப்பினா, டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாரு. அப்பறம் நிறைய இடத்துல எடிட் பண்ண சொல்லி சொன்னாரு. திரும்ப ஒரு நாலைஞ்சி தடவைப் படிச்சி பார்த்து எடிட் பண்ணேன். அப்பறம் ராயல் அண்ணா படிச்சிட்டு, நீ சொல்ற ஃபீலிங் எதுவுமே வரலப்பா. நீ அதை சரியான வார்த்தைல வடிக்கலைனு சொல்லிட்டாரு. நான் மறுபடி படிச்சி பார்த்தாலும் எனக்கு அந்த வலி இருந்துச்சு. எப்பவும் படிச்சி சொல்ற என் ஃபிரெண்ட் தனாக்கு அனுப்பினேன். அவன் நல்லா இருக்குனு சொன்னான். கொஞ்சம் நம்பிக்கை. இருந்தாலும் நான் மனசுல நினைச்ச அளவுக்கு சொல்லலைனு நினைக்கிறேன். படிச்சிட்டு மனசு பாரமாகற அளவுக்கு ஒரு அன்னோன்யத்தை ஏற்படுத்த தவறிட்டேனு நினைக்கிறேன்.

சரி, ஒரு கதைக்கு இவ்வளவு பெரிய கதையானு கேட்காதீங்க. சும்மா சொல்லணும்னு தோனுச்சு.

இது நிஜமா சொல்லணும்னு தோனுச்சு...

ஓட்டு போட்டவர்களுக்கும், நடுவர்களுக்கும், போட்டியை நடத்திய சங்கமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கலந்து கொண்ட அனைவருக்கு என் நன்றிகள். போட்டினா நூறு தடவை தோக்கறதும், ஒரு தடவை ஜெயிக்கறதும் தான் நம்மல மாதிரி வீரனுக்கு அழகு.

இது வரை படிக்க தவறியவர்கள் இங்கே சொடுக்கவும்

Saturday, March 28, 2009

தண்ணீர் தண்ணீர்

இந்தப் பதிவு நான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சிட்டு இருந்த ஒண்ணு. இன்னைக்கு தான் சரியா நேரம் கிடைச்சிருக்கு.

இன்னைக்கு எல்லாம் பைப்பத் திறந்தா தண்ணி வருது. மோட்டார் போட்டா வீட்ல தண்ணி தொட்டி ரொம்பிடுது. அதை நம்ம இஷ்டத்துக்கும் பயன்படுத்தறோம், நிறைய பேர் தண்ணீரை தேவைக்கு அதிகமா பயன்படுத்தறதும் பார்த்திருக்கேன். ஆனா இந்த தண்ணிக்காக ஒரு காலத்துல நாங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. 

எங்க ஊர்ல ஆறுனு பேருக்கு தான் ஒண்ணு இருக்கு. மழை காலத்துல நிறையா தண்ணி ஓடும், ஆனா அது ரெண்டு மூணு மாசத்துலயே வறண்டு போய் மண்ணு தெரிய ஆரம்பிச்சிடும். இன்னமும் அப்படி தான். ஆனா இப்ப திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆத்து தண்ணி எங்க ஊருக்கும் கிடைக்குது. அப்ப எல்லாம் அப்படி இல்லை.

நான் சொல்றது தொன்னூறுகளின் ஆரம்பத்தில். எங்க ஊரை நான் எப்பவும் காஞ்சிப் போன கள்ளக்குறிச்சினு தான் சொல்லுவேன். எப்ப பார்த்தாலும் தண்ணி பஞ்சம் தான் இருக்கும். வீட்டு உபயோகத்துக்கு தேவையான தண்ணீரை (குளிக்கறது, துணி துவைக்கிறது) கிணத்துல இருந்து இறைச்சி தான் பயன்படுத்தனும். அப்ப நான் நாலாவது, அஞ்சாவது தான் படிப்பேன். ஒரு குடத்து தண்ணீரை என்னால முழுசா இறைக்க முடியாது. பொதுவா அப்பா, அம்மா தான் இறைப்பாங்க. ஆனா சில சமயம் அவசரத்துக்கு நானும், அக்காவும் சேர்ந்து தண்ணி இறைப்போம். எங்க கிணறு ஒரு அம்பது அடி ஆழம் இருக்கும். தண்ணி எப்பவும் குறைவா தான் இருக்கும். 

கிணத்துல தண்ணி இறைக்கறதும் ஒரு கலை தான். குடத்தை கீழ விடும் போது ரொம்ப வேகமா விடறோம்னு விட்டா கயிறு கையை கிழிக்கும். கொஞ்சம் பொறுமையா பார்த்து விடணும். அப்பறம் குடத்தை இந்த பக்கம், அந்த பக்கம்னு ஆட்டி முழுசா நிரப்பணும். அப்பறம் ரெண்டு பேர் சேர்ந்து இழுக்கும் போது மாத்தி மாத்தி இழுக்கறதுல ஒரு சின்க் இருக்கனும். இதை விட பெரிய விஷயம், அந்த குடம் மேல வந்தவுடனே, அதிக தண்ணி கீழ சிந்தாம கிணத்தை விட்டு வெளிய எடுக்கனும். கொஞ்சமும் தண்ணீரை வீணாக்காம அதை அண்டா, குண்டா, பக்கெட் எல்லாத்துலயும் ஊத்தணும். எப்படியும் ஒரு நாளைக்கு இருபது குடமாவது தேவைப்படும். 

இது சாதா தண்ணிக்கு, அதே குடிக்கிற தண்ணி பிடிக்கிறது இதை விட ரொம்ப கஷ்டமான விஷயம். ஊரை விட்டு தள்ளி அடிக்கிற பம்ப் இருக்கும். அங்க தண்ணி பிடிக்க சைக்கிள்ல குடத்தை கட்டிக்கிட்டு காலங்காத்தாலயே அப்பா போவாரு. ரொம்ப விடிஞ்சதுக்கு அப்பறம் போனா கூட்டம் அதிகமா இருக்கும். சில சமயம் தண்ணியும் வராம போற வாய்ப்பு இருக்கும். அதனால காலைல அப்பா போகும் போது என்னையும் சைக்கிள்ல உக்கார வெச்சி கூப்பிட்டு போவாரு. 

இந்த சைக்கிள்ல குடத்தை வெச்சிட்டு போறதே ஒரு டெக்னிக் தான். ரெண்டு குடத்தை கயிறு போட்டு கட்டி பின்னாடி கேரியர்ல வைப்பாங்க. இது ரெண்டு பக்கமும் தொங்கிட்டு வரும். ஒரு குடத்தை சைக்கிள் கேரியர் மேல நிக்க வெச்சி, முன்னாடி சீட்ல இருந்து சைக்கிள் டயர் டியூப் போட்டு மாட்டியிருப்பாங்க. அது அப்படியே நிக்கும். சில பேர் இன்னும் ரெண்டு குடத்தை முன்னாடி இருக்குற பார்ல தொங்கவிட்டு எடுத்துட்டு வருவாங்க. ஆனா நான் அப்பாவோட போறதால அந்த முன்னாடி இருக்குற பார்ல நான் உக்கார்ந்துட்டு போவேன். அப்பாவோட அட்லஸ் சைக்கிள்ல முன்னாடி அந்த பார்ல சின்னதா ஒரு குஷன் வெச்ச சீட்டு இருக்கும். அது எனக்கு தான். இதெல்லாம் இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு.

அப்படி குடத்தை எடுத்துட்டு தண்ணி அடிக்கிற பம்ப்க்கு போனா அங்க நாலு மணில இருந்து க்யூ இருக்கும். எப்படியும் நமக்கு முன்னாடி ஒரு இருபது பேராவது இருப்பாங்க, ஆளுக்கு நாலு அஞ்சி குடத்தோட. இந்த மாதிரி தினமும் தண்ணி பிடிக்க வந்து நண்பர்கள் ஆனவங்களும் இருப்பாங்க. அவுங்க் எல்லாம் அடிச்சி முடிச்சதுக்கு அப்பறம் அப்பா அடிக்க ஆரம்பிப்பாரு. முதல்ல குடத்தை கழுவிட்டு அப்பறம் குடத்து மேல ஒரு துணி போட்டு அடிப்பாங்க. மண்ணு ஏதாவது வந்தா வடிகட்டிடும். நானும் சில சமயம் அடிக்கறனு பிரச்சனை பண்ணுவேன், ஆனா அதுக்கு நேரமாகும் பின்னாடி இருக்கறவங்க எல்லாம் பிரச்சனை பண்ணுவாங்கனு சொல்லி என்னை அடிக்க விட மாட்டாங்க. சில சமயம் கூட்டம் இல்லாத போது நான் முயற்சி செஞ்சி பார்ப்பேன். ஆனா அதுல தண்ணி அடிக்கறது ரொம்ப கஷ்டம்.

இதெல்லாம் எங்களை மாதிரி ஊருல இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கறவங்களுக்கு. டவுன்லயே இருக்கறவங்களுக்கு தெருலயே தண்ணி வரும். ஒரே ஒரு பைப் தான் இருக்கும். அதுல அந்த தெருவே தண்ணி பிடிக்கனும். இது பெண்கள் ராஜியம். ஒரு ஆம்பிளை கூட இந்த இடத்துக்கு வர மாட்டாங்க. எங்க பாட்டி வீட்டுக்கு எதிர்லயே இந்த பைப் இருக்கும். அங்க திண்ணைல உட்கார்ந்து பார்த்தா போதும், ஊருல இருக்குற அத்தனை கெட்ட வார்த்தையும் தெரிஞ்சிக்கலாம். தண்ணி பைப் சண்டை அப்படி நடக்கும். யாராவது குடத்தை வெச்சிட்டு வீட்டுக்கு போயிடுவாங்க. பின்னாடி வரவங்க அதை நகர்த்திட்டு தண்ணி பிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இது தான் தொன்னூறு சதவீதம் நடக்கும். அப்ப திட்டிக்குவாங்க பாருங்க. அப்படியே காதுல தேனா பாயும். குடும்பத்துல ஒருத்தவங்களை விட மாட்டாங்க. டோட்டல் ஃபேமிலி டேமேஜ் தான்.

சில சமயம் எங்க ஏரியால தண்ணி லாரி வரும். இது பொதுவா மே மாசம் தான் வரும். அந்த லாரி வருதுனு தெரிஞ்சவுடனே எல்லாரும் குடத்தோட ரெடி ஆகிடுவோம். வண்டி எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற க்ரவுண்ட்ல தான் வந்து நிக்கும். இப்ப எல்லாம் அங்க ஃபுல்லா வீடு கட்டிட்டாங்க. லாரி வரும் போது அது பின்னாடி தெருவே ஓடுவோம். ஏன்னா லாரில தண்ணி தீரதுக்கு முன்னாடி கிடைக்கணும்னு தான். அதுவும் இதுல ஆளுக்கு ஒரு குடம்னு ரூல்ஸ் இருக்கும். அதனால வீட்ல நாலு பேருமே குடத்தை எடுத்துட்டு ஓடுவோம். அந்த லாரி எப்பவும் உச்சி வெயில்ல தான் வரும். 

வேர்க்க விறுவிறுக்க தண்ணி குடத்தோட ஓடிப்போய் க்யூல நின்னு தண்ணி பிடிக்கனும். இதுல நான், அக்கா எல்லாம் பிடிச்ச உடனே குடத்தை கொஞ்ச தூரம் தள்ளி வெச்சிடுவோம். அப்பா, அம்மா அதை கொண்டு போவாங்க. இங்கயும் பல சண்டைகள் நடக்கும். யாரு முன்னாடி வந்தா, யாரு பின்னாடி வந்தானு செம சண்டை நடக்கும். சில சமயம் பொம்பளைங்க முடிய பிடிச்சி சண்டை போடறதையும் பார்க்கலாம்.

இப்படி கஷ்டப்பட்டு பிடிக்கிற தண்ணீரை கொஞ்சமும் வீணாக்காம சிக்கனமா பயன்படுத்தறது ரொம்ப முக்கியம். எங்க அம்மா அதை ரொம்ப வலியிருத்துவாங்க. இப்ப கூட எங்க அம்மா தண்ணீரை சிக்கனமா தான் பயன்படுத்துவாங்க. எனக்கும் அது தான் பிடிக்கும். இன்னைக்கும் தண்ணி எடுக்க ஏழு எட்டு கிலோ மீட்டர் நடக்குற மக்கள் இருக்காங்க. அதனால தண்ணியோட 
சிறப்பை உணர்ந்து சிக்கனமா பயன்படுத்துங்க மக்களே. தண்ணி சிக்கனமா பயன்படுத்தறவங்க வீட்ல தான் மகாலட்சுமி தங்குவானு எங்க பெரியம்மா சொல்லுவாங்க. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது ஆனா தண்ணி சிக்கனமா பயன்படுத்துலனா சீக்கிரமா அவுங்க அக்கா நம்ம வீட்டுக்கும், நாட்டுக்கும் வந்துடுவாங்கனு மட்டும் எனக்கு தெரியுது.

தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்த சில ஆலோசனைகள்.

பல்லு விளக்கும் போது பைப்பை திறந்து விட்டுட்டு விளக்காதீங்க. முடிஞ்ச வரை Mugல தண்ணி பிடிச்சி பயன்படுத்துனா நல்லது.

ஷவர்ல குளிக்கறதை விட பக்கெட்ல தண்ணி பிடிச்சி குளிக்கறது நல்லது.

வெஸ்டர்ன் டாய்லட் பயன்படுத்தினா தேவையில்லாம ஃபிளஷ் பண்ணாதீங்க. (அதுக்குனு தேவையானப்ப ஃபிளஷ் பண்ணாம விட்டுட்டாதீங்க).

ஷேவ் பண்ணும் போது பைப்பை திறந்து விட்டுட்டே ஷேவ் பண்ணாதீங்க. ரேசரை கழுவும் போது மட்டும் தண்ணீரை திறந்து விடவும்.

ஏதாவது பைப்ல இருந்து தண்ணி சொட்டிட்டு இருந்தா பைப்பை டைட்டாக மூடவும். அப்படி இல்லைனா கீழ பக்கெட் ஏதாவது வைத்து தண்ணிரை சேகரிக்கவும்.

பாத்திரம் விளக்கும் போதும் தேவையில்லாமல் பைப்பைத் திறந்து வைக்காதீர்கள்.

ரஜினியோட ஒரு துளி வியர்வையை விட ஒரு துளி தண்ணீருக்கு மதிப்பு அதிகமா குடுங்க. அதான் ஒரு பவுன் காசுக்கு கொடுக்கற மதிப்பை கொடுங்கனு சொன்னேன்.

Tuesday, January 27, 2009

சாப்ட்வேர் இஞ்சினியர் - மாணவர்களுக்கு...

”ஏன்டா ஐடி எடுத்த?”

”மெக்கானிக்கல் கிடைக்கலண்ணே. அதான். ”

“வேற எந்த டிப்பார்ட்மெண்டும் கிடைக்கலயா?”

”இல்லைண்ணே. அதான் வேற வழியில்லாம ஐடி எடுத்தோம்.”

”இந்த அண்ணே, ஆட்டுக்குட்டியெல்லாம் செகண்ட் இயர் பசங்ககிட்ட சொல்லிடாதீங்கடா. பிரிச்சி மேஞ்சிடுவானுங்க. புரியுதா?”

“புரியுது சார்”

என்ன யாருக்கும் புரியலையா? 

இது நான் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் போது மெஸ்ல முதல் வருட மாணவனிடம் நிகழ்ந்த உரையாடல். எங்க செட்ல முதல்ல ஐடியும், கம்ப்யூட்டர் சயின்ஸும் ஒரே சமயத்துல ஃபில் ஆச்சு. எங்களுக்கு அடுத்த வருஷம், முதல்ல ஐடி, அடுத்து கம்ப்யூட்டர் சயன்ஸ். அதுக்கு அடுத்த வருஷம் முதல்ல ECE. 

இதெல்லாம் புரியணும்னா நான் எந்த வருஷம், ஐடி எடுத்தேனு உங்களுக்கு புரியணும். நான் சேர்ந்தது 99ல. 2000த்துலயும் கவுன்சிலிங் நடக்கும் போது ஐடி தான் டாப். அதுக்கு அடுத்த வருஷம் செம்ம அடி. நாங்க படிச்சி முடிச்சிட்டு வரும் போது வேலையில்லை. எங்க காலேஜ்ல எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவே இல்லை. எங்க சீனியர் செட்ல அதை விட மோசம். செலக்ட் ஆன ஒரு சிலருக்கும் ஆஃபர் லெட்டர் வரலை. நாங்க வெளிய வரும் போது எங்க சீனியர்ஸே வேலை தேடிட்டு இருந்தாங்க. 

2003 கடைசில நிலைமை மாற ஆரம்பிச்சுது. போன வருஷம் (2007) வரைக்கும் நல்லா இருந்தது. இப்ப மறுபடியும் ஃபீல்ட் டவுன். அடுத்த வருஷம் கவுன்சிலிங் முடிஞ்சி வரும் போது இதே டயலாக்கை மெஸ்ல 2007ல ஐடி எடுத்தவங்க கேட்கலாம். என்ன பண்ண... உலகம் உருண்டை ;)

சரி, இந்த வருஷம் முடிச்சிட்டு வரவங்க நிலைமை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கும். அதுக்காக பயந்துட்டு இருக்க வேண்டாம். எப்படியும் நிலைமை ஒரு வருஷத்துல சரி ஆகும். மிஞ்சி போன அதுக்கு அடுத்து ஒரு ஆறு மாசம் ஆனாலும் ஆகலாம். அது வரை என்ன செய்யலாம்னு சொல்ல தான் இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் அனுபவத்தை வெச்சி சொல்றது தான். 

ஃபில்ட் சரியாகும் போது 2009ல முடிச்சவங்க மட்டுமிருக்கலாம், இல்லை 2010ல முடிச்சிட்டு வரவங்களும் சேர்ந்து இருக்கலாம். அதனால 2009ல முடிச்சவுங்க முதல்ல வர ஓப்பனிங்ஸை பயன்படுத்தி உள்ளே நுழையற அளவுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளவும். 

இப்ப ஜனவரி முடியப்போகுது. உங்க பிராஜக்டை முடிவு பண்ணிருப்பீங்க. பாதி பேர் காசு கொடுத்து வாங்குற ஐடியால இருக்கலாம். முடிந்த வரை சொந்தமா செய்ய பாருங்க. அது தான் என் சீரியஸ் அட்வைஸ். அப்படி செய்யாம போகும் போது, வாங்கற ப்ராஜக்டை புரிஞ்சிக்கோங்க. அதை அக்குவேற ஆணிவேறயா பிரிச்சி, புரிஞ்சிக்க முயற்சி செய்யவும். அதுல ஏதாவது மாற்றம் செய்ய முயற்சி செய்யவும். அதனால கடைசி நாள்ல காசு கொடுத்து வாங்கற வேலையை செய்யாதீங்க. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வாங்க பாருங்க. மறுபடியும் என்னுடைய சஜஷன் சொந்தமா செய்யறது தான்.

அடுத்து, முடிஞ்ச வரைக்கும் பேப்பர் ப்ரசண்டேஷனெல்லாம் முயற்சி செய்யவும். நீங்க மூன்றாமாண்டு படிக்கும் மாணவராக இருந்தால் இதை நிச்சயம் முயற்சி செய்யவும். இதனால வேலை கிடைக்குமா, ரெஸ்யுமேக்கு வேல்யூ அதிகமாகுமானு எல்லாம் என்னால சொல்ல முடியாது. ஆனா உங்க தன்னம்பிக்கை கூடும். அது தான் முக்கியம். நினைச்சதை தடையில்லாமல் நாலு  பேர் முன்னாடி ஆங்கிலத்துல பேச வாய்ப்பிருக்கும்.

வகுப்புல க்ருப் டிஸ்கஷன் எல்லாம் முயற்சி செய்யலாம். இல்லைனா இரண்டாமாண்டு படிச்ச Data Structures, DBMS, OOPS.... இந்த மாதிரி ஏதாவது ஒரு சப்ஜக்டை க்ளாஸ் முழுக்க பிரிச்சி மறுபடியும் நீங்களே உங்களுக்குள்ள நடத்திக்கலாம். இது உங்களுக்கு ஒரு முறை Refresh பண்ணிக்க உதவும். அதுவுமில்லாமல் உங்க நண்பர்கள் முன்னாடி பேசி பழகறது உங்க கூச்சப்பழக்கத்தை குறைக்கும். 

காலேஜ் லைஃப்ல நிறைய படிக்க முடியும். முடிஞ்ச வரைக்கும் Quantitative Aptitude (RS Agarwal), Shakunthala Devi (Puzzles to Puzzle you, More Puzzles) எல்லாம் காலேஜ்லயே முடிச்சிடுங்க. இந்த லிங்க்ல இருக்கறதை படிச்சா உங்களுக்கு இன்னும் பயன்படும்னு நினைக்கிறேன். நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள காலேஜ் சரியான இடம். வெளிய வந்தா ஒரு கேள்வி புரியலைனா சொல்லி தர ஆள் இருக்காது. அதுக்கு ட்ரெயினிங்னு சொல்லி கொள்ளை அடிப்பாங்க. அதனால படிக்கிற காலத்துல அதை நல்லா படிச்சிட்டா பின்னாடி சுலபமா இருக்கும்.

வெளிய வந்ததும், வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா வீட்ல இருக்கலாம்னு நினைக்காதீங்க. சென்னையோ, பெங்களூரோ வந்து கொஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் வேலை தேடற வெறி வரும். குண்டு சட்டில குதிரை ஓட்ற வேலையெல்லாம் ஆகாது. முடிஞ்ச வரை Communication skillsஐ வளர்த்துக்கோங்க. உங்களோட டெக்னிக்கல் ஸ்கில்ஸை விட இது தான் அதிகமா வேலை செய்ய போகுது. அதனால அதுல கவனத்தை செலுத்தவும்.

தெரியாததை தயக்கமில்லாமல் நல்லா படிக்கிற (சொல்லித்தற) பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அதே மாதிரி தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க. உலகம் ரொம்ப பெருசு, நீங்க சொல்லி தருவதால் உங்ககிட்ட கேட்டவன் உங்க வேலையை தட்டிட்டு போயிடுவானு பொறாமைல சொல்லி தராம விட்டுடாதீங்க. காலேஜ் வந்து அந்த அளவுக்கு சின்ன புள்ளை தனமா இருக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன். 

ஃபீல்ட் டவுன்னு சொல்லி சோகமா உட்கார்ந்துடாதீங்க. வேலை வாய்ப்பு வரும் போது தயார் செய்ய ஆரம்பிச்சா நிச்சயம் அந்த வாய்ப்பை வேற யாராவது தட்டிட்டு போயிடுவாங்க. அதனால எப்பவும் தயாரா இருக்கவும்... All the very best my dear juniors...

Tuesday, October 14, 2008

சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு சில டிப்ஸ்

நிறைய இடங்கள்ல ஆள் குறைப்பு நடந்துட்டு இருக்கு. இது இன்னும் அதிகமா இருக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கு. இந்த நேரத்துல நாம செய்ய வேண்டியதெல்லாம் என்ன?

1. முடிந்த வரை பெஞ்ச்ல இருக்காதீங்க. ஏதாவது ஒரு ப்ராஜக்ட்ல சேர்ந்திடுங்க. எனக்கு டெக்னாலஜி தெரியாதுனு சொல்லி ப்ராஜக்டை தவிர்க்காதீங்க. எந்த டெக்னாலஜியா இருந்தாலும் தெரிஞ்சிக்கலாம்.

2. நிறைய படிங்க. அதே மாதிரி முடிஞ்ச வரைக்கும் ஏதாவது சர்ட்டிபிகேஷன் பண்ணுங்க.

3. இந்த மாதிரி செய்தவுடனே அதை உங்க மேனஜருக்கு கண்டிப்பா தெரிவிங்க. மத்தவங்களுக்கும் அதோட முக்கியத்துவம்னு எடுத்து சொல்லி சும்மா கெயிட் பண்ணுங்க.

4. உங்களோட விசிபிலிட்டியை எப்படியாவது அதிகப்படுத்திக்கோங்க.

5. புது கம்பெனிக்கு தாவுவதை தவிர்க்கவும். பெரும்பாலும் Last in First Out பாலிஸி தான் இருக்கும்.

6. தேவையில்லாம தண்ட செலவு செய்யாதீங்க. புது ஃபோன், லேப் டாப்னு கண்டதெல்லாம் இந்த நேரத்துல வாங்காதீங்க.

7. முடிந்த வரை க்ரெடிட் கார்ட் பயன்படுத்துவதை குறைக்கவும். கைல இருந்து காசு கொடுத்தா தான் செலவு பண்ணறது தெரிஞ்சி கொஞ்சமாவது செலவை குறைப்போம். கைல காசை தொடாம எல்லாமே கார்ட்லயும் ஆன்லைன்லயும் பண்ணா எவ்வளவு செலவு பண்றோம்னு சுத்தமா தெரியாது.

8. ஏதாவது பெருசா நடந்து வீட்டு விலையெல்லாம் குறைஞ்சா (வாய்ப்பு குறைவு தான்... இருந்தாலும்) வேலைல இருக்கறவங்க (கைல காசு இருக்கறவங்க) போட்டி போட்டு வாங்காதீங்க. அப்படி வாங்கினா மறுபடியும் விலையேறத்தான் செய்யும். கொஞ்சம் அமைதி காக்கறது நல்லது. பின்னாடி விலை ஏறும்னு போட்டி போட்டு வாங்கினா மறுபடியும் இதே நிலைமை தான் வரும்.

9. லிக்விட் கேஷ் வெச்சிருங்க. எல்லாத்தையும் அசட்டா வெச்சிருக்காதீங்க.

10. தினமும் "வரவு எட்டணா, செலவு பத்தனா" பாட்டை காலையில் எழுந்தவுடனேவும், படுக்க போவதற்கு முன்பும் கேட்கவும்.

இதுக்கு மேல விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க. ஒரு லிஸ்ட் தயாரிச்சிடலாம்...

Wednesday, June 25, 2008

சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு

ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...