தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, August 10, 2008

ஆடு புலி ஆட்டம் - 9

"ரவி, உன்னால கண்டிப்பா இது ட்ரெயினிங் இன்ஸ்டிடியுட்ல இருக்கவங்க ஒருத்தவங்க வேலைதானு சொல்ல முடியுமா?"

"நிச்சயமா அவுங்க தானு இப்ப இருக்கற நிலைமைல சொல்ல முடியாது. எனக்கு இன்னும் கொஞ்சம் இன்ஃபர்மேஷன் வேணும்"

"ஹிம்ம்ம்"

"உங்ககிட்ட முதல் தடவை காசு கேக்கும் போது நீங்க காசை அவுங்க அக்கவுண்ட்ல போடறேனு சொன்னீங்களா?"

"நான் சொன்னேன். அவுங்க ஒத்துக்கல"

"அப்பறம்?"

"என்னை நேரா பரிஸ்டா காபி சென்டருக்கு வர சொன்னாங்க. அங்க ஒருத்தர் நீல சட்டையும், கருப்பு பேண்டும் போட்டு தனியா காபி குடிச்சிட்டு இருப்பாரு. நானும் காபி வாங்கிட்டு அவர் எதிர்ல போய் உக்காரணும்னு சொன்னாங்க"

"அப்பறம்?"

"பாதி குடிச்சி முடிச்சவுடனே என் ஹேண்ட் பேக்ல இருந்து பணத்தை எடுத்து கொடுக்கணும்னு சொன்னாங்க"

"ஹிம்ம்ம்"

"அப்பறம் காபி குடிச்சி முடிச்சவுடனே அவர் கூடவே வெளிய வந்து அவர் போற டைரக்ஷனுக்கு ஆப்போசிட்டா போகனும்னு சொன்னாங்க"

"ஹிம்ம்ம்ம். லெட் மீ திங்"

பணத்தை அக்கவுண்ட்ல வேண்டாம்னு சொன்னது சரி. ஆனா மக்கள் வர இடத்துல வந்து அவனுக்கு எதிர்ல உக்கார்ந்து ஏன் காபி குடிக்க சொன்னானுங்க? அப்பறம் ஏன் அவன் எழுந்திரிக்கும் போது கூடவே எழுந்து வெளிய வர சொன்னானுங்க?
சம் திங் ஃபிஷ்ஷி. இல்லைங்களா? பொதுவா இந்த மாதிரி பிரச்சனை பண்றவனுங்க முகத்தையே காட்ட மாட்டாங்களே.

"பணத்தை ஏதாவது கவர்ல வெச்சி கொடுத்தீங்களா?"

"இல்லைப்பா. பணத்தை எந்த கவர்லயும் வைக்காம கொடுக்கனும்னு சொன்னாங்க. எல்லாமே முன்னாடியே தெளிவா சொல்லிட்டாங்க"

"ஹிம்ம்ம்"

இது கொஞ்சம் கஷ்டமான விஷயமா தான் இருக்கும் போல. நம்ம தமிழ் படத்துல எல்லாம் ஒரு பாலிதின் பைல சுத்தி துணி பைல வெச்சி கொடுக்க சொல்லுவாங்க. இவனுங்க ஏன் பணத்தை எதுலயும் போடாம அவன் கைல தர சொல்லியிருக்காங்க. பணத்தை கைல கொடுத்துட்டு சேர்ந்து வெளிய வரணும். இதுல ஏதோ சீரியஸா இருக்கு போல இருக்குங்க. உங்களுக்கு தோணல?

"சரி நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. இது தான் என்னோட ஆர்டர். முதல்ல உங்க ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட், அடுத்து உங்க HR, அடுத்து உங்க ஃபிரெண்ட்ஸ் கூட்டத்துல ஒருத்தன். எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்"

"நாளைக்கு என்னை காசு எடுத்துட்டு ரெடியா இருக்க சொல்லியிருக்கானுங்க"

"அதெல்லாம் போக தேவையில்லை. பார்த்துக்கலாம். வாங்க இப்ப முதல்ல சாப்பிடலாம்"

"இல்லை எனக்கு வேண்டாம்பா"

"வாங்கக்கா. பசியா இருந்தா எனக்கு மூளை வேலை செய்யாது"

"ரவி. எனக்கு ஒரு சந்தேகம்"

"சொல்லுங்கக்கா"

"இவ்வளவு விஷயம் உனக்கு தெரியுது. ஆனா நித்யா உனக்கு எதுவுமே தெரியாது. நீ லூசுனு சொல்லிட்டு இருக்கா. எனக்கு உன் மேலயே சந்தேகமா இருக்கு"

"கிழிஞ்சிது. உங்ககிட்ட மட்டும் உண்மையை சொல்றேன். நித்யாகிட்ட சொல்லாதீங்க"

நான் உண்மையை சொல்லி முடிச்சவுடனே வினோதினி அக்கா முகத்துல பெரிய ஆச்சரியம். என்னால இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்னு அவுங்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை வந்துடுச்சிங்க. அவுங்களே சாப்பிட ஓ.கே சொல்லிட்டாங்கனா பாருங்களேன். இருங்க சாப்பிட்டு வந்துடறேன்.

இந்த வீட்ல எனக்கு தெரிஞ்சி யாருமே பேசாம சாப்பிடறது இது தான் முதல் தடவை. நித்யா லூசுக்கூட பேசலை. நானும் எவ்வளவோ டாபிக் ஆரம்பிச்சேன் எதுவும் வொர்க் அவுட் ஆகலைங்க. சரி விடுங்க. நம்ம இப்ப பிரச்சனையை பத்தி யோசிப்போம். வேற எதையும் யோசிக்காம இந்த சினாரியோல மட்டும் கான்சன்ட்ரேஷன் செய்வோம். ஒவ்வொரு ஃபிரேமா பார்க்கலாம்.

பரிஸ்டா காபி ஷாப் அவுட் டோர்ல சேர் போட்டிருப்பாங்க. குடை குடையா இருக்கும். ஒரு குடைக்கு கீழ ஒரு அஞ்சு ஆறு பேர் சேர்ல உக்கார்ந்து காபி குடிக்கலாம். இப்படி இருக்கும் போது அங்க ஒருத்தவன் மட்டும் ஒரு குடைக்கு கீழ காபி குடிக்கறான். அங்க நம்ம வினோதினி அக்கா காபி வாங்கிட்டு போறாங்க. இப்ப அவனுக்கு எதிர்ல நம்ம அக்கா உக்காராங்க. பாதி காபியை குடிச்சதுக்கு அப்பறம் காசு எடுத்து கொடுக்கறாங்க. அந்த பணம் இப்ப நம்ம கண்ணுக்கு தெரியுது. அது எந்த கவர்லயும் இல்லை. இப்ப காபி குடிச்சி முடிக்கறாங்க. ரெண்டு பேரும் ஒட்டுகா எழுந்து வெளிய MG ரோட்டுக்கு வராங்க. ரெண்டு பேரும் வெவ்வேற திசைல போறாங்க.

இது தான் எனக்கு கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கு. இந்த மாதிரி பொது இடத்துக்கு வர சொல்றவன் ஒண்ணு புத்தியில்லாம சொல்லலாம். இல்லை ரொம்ப புத்திசாலியா இருந்தா சொல்லலாம். நம்ம மாட்டிட்டு இருக்கறது ரெண்டாவது வகையா தான் எனக்கு படுது. முதல் வகைல இருக்கறவன் நம்பர் மாத்தனதுக்கு அப்பறமும் கண்டுபிடிச்சிருக்க மாட்டான். அப்ப அதி புத்திசாலியா இருக்கவன் இந்த மாதிரி செஞ்சா என்ன காரணம் இருக்கலாம்? பணம் மட்டுமே நோக்கமா இருக்காதுனு என் மனசுக்கு படுது.

HR இதை பண்ணலாம். இவுங்களை கண்டுபிடிக்கறது சுலபம். இவுங்க ஃபேக்னு சொல்லி அந்த இண்ஸ்டிடியூட்ல இருந்து பண்ற மாதிரி HRக்கு போன் பண்ணாலாம். அவன் இந்த அக்காவை கூப்பிட்டு விசாரிச்சா நல்லவன். இல்லைனா தப்பு அங்க இருக்கலாம். ஆனா அப்படி பண்ணா இந்த அக்கா வேலை போயிடும். அதனால அந்த ஐடியா கடைசியா வைக்கலாம்.

அடுத்து ட்ரெயினிங் இண்ஸ்டிடியூட். இவனுங்களும் இதே மாதிரி பொண்ணுங்களை தப்பா பயன்படுத்தலாம். இதை கண்டுபிடிக்கவும் வழி இருக்கனும்.

(தொடரும்...)

41 comments:

Anonymous said...

Me the firstuuuuuuuu....Irunga padichittu varen

Anonymous said...

Kadha intrestinga poguthu.....hmmm wait pannithan parkanum ....Namma hero IF.....THEN.....ELSE.... logica eppadi apply panni in the issueva approach panrarunnu .... :-)....Thala aduttha pagam ennaikku...

Divya said...

கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு,investigation Super!!

ஒருவழியா வினோதினி அக்காவுக்கு மட்டும் உண்மை சொல்லியாச்சா:))


[ஏதோ சீயஸா இருக்கு போல இருக்குங்க. உங்களுக்கு தோணல? -> சீரியஸா , திருத்திடுங்கண்ணா]

Ramya Ramani said...

அட்ரா சக்கை கல்க்கலா இருக்கு கதையோட வேகம்..
நடக்கட்டும்.நடக்கட்டும் :))...

உங்க ஹீரோ நல்லாவே ஸிஷுவேஷன் அனலைஸ் பண்ராரே! சூப்பர்..

வெட்டிப்பயல் said...

// Anbu said...

Kadha intrestinga poguthu.....hmmm wait pannithan parkanum ....Namma hero IF.....THEN.....ELSE.... logica eppadi apply panni in the issueva approach panrarunnu .... :-)....Thala aduttha pagam ennaikku...//

மிக்க நன்றி அன்பு.

அடுத்த பாகம் புதன் காலை :-)

வெட்டிப்பயல் said...

// Divya said...

கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு,investigation Super!!
//
ரொம்ப டாங்ஸ்மா :)

// ஒருவழியா வினோதினி அக்காவுக்கு மட்டும் உண்மை சொல்லியாச்சா:))//
ஆமாம்... ஆனா இப்ப அதை விட ஒரு முக்கியமான உண்மையை கண்டுபிடிக்க வேண்டியது இருக்கே :-)

//

[ஏதோ சீயஸா இருக்கு போல இருக்குங்க. உங்களுக்கு தோணல? -> சீரியஸா , திருத்திடுங்கண்ணா]//

மாத்தியாச்சுமா... ரொம்ப டாங்க்ஸ்...

வெட்டிப்பயல் said...

//Ramya Ramani said...

அட்ரா சக்கை கல்க்கலா இருக்கு கதையோட வேகம்..
நடக்கட்டும்.நடக்கட்டும் :))...

உங்க ஹீரோ நல்லாவே ஸிஷுவேஷன் அனலைஸ் பண்ராரே! சூப்பர்..//

மிக்க நன்றி ரம்யா...

பார்க்கலாம் எப்ப கண்டுபிடிக்கிறார்னு :-)

Raghav said...

இன்னாபா இது, வேட்டையாடு விளையாடு படம் கணக்கா கதை கீது.. இம்பூட்டு ரோசனை இன்னாத்துக்கு.. அந்தப் பொண்ணு நாளைக்கு காசு கொடுக்கச்ச மூஞ்சில நாளு உடு உட்டா, கக்கிட்டுப் போறான்..

பாலாஜி, ஜூப்பர்.. கடலையில் ஆரம்பித்து, காதலாகுமோ என்று பார்த்தால், வேறொரு திசையில் ஜெட் வேகத்தில் பறக்கிறது. வெட்டிப்பயல் னு சொல்றதுக்குப் பதிலா, சுட்டிப்பயல் னு மாத்திடலாம்.

வெட்டிப்பயல் said...

//Raghav said...

இன்னாபா இது, வேட்டையாடு விளையாடு படம் கணக்கா கதை கீது.. இம்பூட்டு ரோசனை இன்னாத்துக்கு.. அந்தப் பொண்ணு நாளைக்கு காசு கொடுக்கச்ச மூஞ்சில நாளு உடு உட்டா, கக்கிட்டுப் போறான்..
//
வேட்டையாடு விளையாடு ராகவன் ரேஞ்ச்க்கு ஹீரோ இருந்தா அப்படி பண்ணலாம். ஆனா இது யார் பண்றாங்க என்னனு தெரியாம இப்படி அடி தடில இறங்கனா ஆபாத்துனு ஹீரோ நினைச்சிருக்கலாம் :-)

//
பாலாஜி, ஜூப்பர்.. கடலையில் ஆரம்பித்து, காதலாகுமோ என்று பார்த்தால், வேறொரு திசையில் ஜெட் வேகத்தில் பறக்கிறது. வெட்டிப்பயல் னு சொல்றதுக்குப் பதிலா, சுட்டிப்பயல் னு மாத்திடலாம்.//
காதலும் இருக்கும்னு நினைக்கிறேன் :)

ஆஹா... சுட்டிப்பயலை விட வெட்டிப்பயல் தான் நமக்கு பிடிக்கும் :-)

Sen22 said...

Story is very intersting....

Arunkumar said...

training institute
HR
marubadiyum last para training institute-aa? naan thaan thappa padikkurena?

வெட்டிப்பயல் said...

//Sen22 said...

Story is very intersting....//

மிக்க நன்றி செந்தில் :-)

Anonymous said...

vetti aapeesar, Love storyanu patha detective storya poinu keedu?? Great going. Na ippathan konja naala unga blog padikiren. Nalla iruku kadaigal. Nanu ungala mariye software vetti aapeesar than. So padika nariyave neram kedaikudu .. hehe. ;-) Waiting for the next part!

-> Hermione.

Divyapriya said...

கதை சூப்பர்ங்க்ணா…கலக்குங்க…
தனியா ஒரு டேபிள்ல, கவர் இல்லாம பணம் குடுக்க சொல்றான்னா, ஒரு வேளை evidence க்கு photo எடுத்திருப்பானோ??? ஆனா ஒன்னா வெளிய வந்து அப்புறம் opposite direction ல போறதா? இது எதுக்கு? super thrilling...சீக்ரம் அடுத்த பார்ட் போடுங்க…:))

வெங்கட்ராமன் said...

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பார்த்தார்னா உடனே புக் பண்ணீடுவாரு.


ஆனா நித்யா உனக்கு எதுவுமே தெரியாது. நீ லூசுனு சொல்லிட்டு இருக்கா



நித்யா லூசுக்கூட பேசலை


டச்சிங்கா இருக்கு. . . .

தமிழினி..... said...

Logical reasoning nalla irukku....
infoscian nu nirubikiringa....kalakkunga..!

திவாண்ணா said...

ஒரு 'கீரேன் மட்டும் போட்டுக்கீறேன்.

உருப்புடாதது_அணிமா said...

எனக்கு ஏதோ மர்ம நாவல் படிக்குற மாதிரி கீதுங்க..
என்னவோ போங்க..
இன்னொரு 007 பாண்ட் கதை யா??
அப்புறம் முக்கியமான விசயம்..



உருப்புடாதது போனி ஆஜர் ஸார்...

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

training institute
HR
marubadiyum last para training institute-aa? naan thaan thappa padikkurena?//

அருண்,
இப்பவும் யார் இதை பண்றாங்கனு தெளிவா தெரியாது. அவனுக்கு இன்னும் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட், HR, Friends மூணு பேர் மேலயும் சந்தேகம் இருக்கு...

ஒரு சாலிட் எவிடென்ஸ் கிடைக்கிற வரைக்கும் சந்தேகம் குறையாது...

இன்னும் நம்ம ஆளு போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு :-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

vetti aapeesar, Love storyanu patha detective storya poinu keedu?? Great going. Na ippathan konja naala unga blog padikiren. Nalla iruku kadaigal. Nanu ungala mariye software vetti aapeesar than. So padika nariyave neram kedaikudu .. hehe. ;-) Waiting for the next part!

-> Hermione.//

மிக்க நன்றி Hermione. தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் :-)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

கதை சூப்பர்ங்க்ணா…கலக்குங்க…
தனியா ஒரு டேபிள்ல, கவர் இல்லாம பணம் குடுக்க சொல்றான்னா, ஒரு வேளை evidence க்கு photo எடுத்திருப்பானோ??? ஆனா ஒன்னா வெளிய வந்து அப்புறம் opposite direction ல போறதா? இது எதுக்கு? super thrilling...சீக்ரம் அடுத்த பார்ட் போடுங்க…:))//

Very good thinking.

போக போக தெரியும்...

இவன் said...

கலக்கல் கலக்கல் அடுத்த பகுதி எப்போ??

வெட்டிப்பயல் said...

// வெங்கட்ராமன் said...

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பார்த்தார்னா உடனே புக் பண்ணீடுவாரு.
//
என்னது ஆட்டோவையா? :-))

// ஆனா நித்யா உனக்கு எதுவுமே தெரியாது. நீ லூசுனு சொல்லிட்டு இருக்கா


நித்யா லூசுக்கூட பேசலை

டச்சிங்கா இருக்கு. . . .//

அதெல்லாம் செல்லமா கொஞ்சிக்கறது. கண்டுக்கப்பிடாது :-)

வெட்டிப்பயல் said...

// தமிழினி..... said...

Logical reasoning nalla irukku....
infoscian nu nirubikiringa....kalakkunga..!//

ஆஹா... இன்னும் போக போக தானே தெரியும் எந்த அளவுக்கு நம்ம ஹீரோ சரியா சிந்திக்கிறார்னு :-)

வெட்டிப்பயல் said...

//திவா said...

ஒரு 'கீரேன் மட்டும் போட்டுக்கீறேன்.//

மிக்க நன்றி திவா:-)

வெட்டிப்பயல் said...

// உருப்புடாதது said...

எனக்கு ஏதோ மர்ம நாவல் படிக்குற மாதிரி கீதுங்க..
என்னவோ போங்க..
இன்னொரு 007 பாண்ட் கதை யா??
//
கண்டிப்பா பாண்ட் கதை இல்லை :-))
ஹீரோயிசம் எதுவுமே இருக்காது கதைல :-)


// அப்புறம் முக்கியமான விசயம்..



உருப்புடாதது போனி ஆஜர் ஸார்...//
மிக்க நன்றி உருப்புடாதது :-)

மங்களூர் சிவா said...

சூப்பர்ப்
சூப்பர்ப்
சூப்பர்ப்

வெட்டிப்பயல் said...

//இவன் said...

கலக்கல் கலக்கல் அடுத்த பகுதி எப்போ??//

மிக்க நன்றி இவன்...

அடுத்த பகுதி புதன் காலை :-)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

சூப்பர்ப்
சூப்பர்ப்
சூப்பர்ப்//

மிக்க நன்றி சிவா :-)

manikandan said...

***** கலக்கறீங்க வெட்டி *****

Vijay said...

துப்பறியும் சாம்பு நாவல் படிக்கற எஃபெக்ட் கொடுக்கறீங்க. அடுத்த பாகம் எப்போ?
அன்புடன்,
விஜய்

வெட்டிப்பயல் said...

//அவனும் அவளும் said...

***** கலக்கறீங்க வெட்டி *****//

மிக்க நன்றி அ அ :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் said...

துப்பறியும் சாம்பு நாவல் படிக்கற எஃபெக்ட் கொடுக்கறீங்க. அடுத்த பாகம் எப்போ?
அன்புடன்,
விஜய்//

இது வரைக்கும் நான் சாம்பு கதை படிச்சதில்லையே :-(

இல்லை ஒரு வேளை ஞாபகம் இல்லையோ...

எப்படியோ நல்லா இருக்குனு சொல்றீங்கனு நினைச்சிக்கிறேன் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பரிஸ்டா காபி ஷாப் எப்படி பாலாஜி?
ரொம்ப பசையுள்ள பார்ட்டிங்க காபி குடிக்கிற இடமோ?

பணத்தை ஓப்பனா வச்சிக் கொடுத்தாக் கூட அதெயெல்லாம் சீண்டுவார் யாருமில்லை-ன்னு ஓப்பனா கொடுக்கச் சொல்றாங்களோ?

சரி, அடுத்த தபா, ஞாபக மறதியா, கவர்-ல போட்டுக் கொடுக்கறா மாதிரி ஆக்ட் வுட்டா? வாங்குறவன் டென்சன் ஆயிருவானோ? :)

என்னமோ, போ! என்னாலேயே (ரவியாலேயே) கண்டு புடிக்க கஷ்டமா இருக்கே! :)

Karthik said...

Nalla eluthi irukunga Balaji..Keep the momentum.

கயல்விழி said...

ராஜேஷ்குமார் நாவல் மாதிரி இருக்கு. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பரிஸ்டா காபி ஷாப் எப்படி பாலாஜி?
ரொம்ப பசையுள்ள பார்ட்டிங்க காபி குடிக்கிற இடமோ?
//
அப்படித்தானு நினைக்கிறேன்... நானெல்லாம் ஒரு தடவை கூட அங்க போனதில்லை :-)

வெளிய இருந்து பார்த்ததோட சரி :-)


// பணத்தை ஓப்பனா வச்சிக் கொடுத்தாக் கூட அதெயெல்லாம் சீண்டுவார் யாருமில்லை-ன்னு ஓப்பனா கொடுக்கச் சொல்றாங்களோ?
//
தெரியலையே... போக போக தெரியலாம் ;)

// சரி, அடுத்த தபா, ஞாபக மறதியா, கவர்-ல போட்டுக் கொடுக்கறா மாதிரி ஆக்ட் வுட்டா? வாங்குறவன் டென்சன் ஆயிருவானோ? :)
//
போக போக தெரியலாம் :-)

// என்னமோ, போ! என்னாலேயே (ரவியாலேயே) கண்டு புடிக்க கஷ்டமா இருக்கே! :)//

ரவிக்கு எப்படியும் தெரிய தானே போகுது :-)

வெட்டிப்பயல் said...

//Karthik said...

Nalla eluthi irukunga Balaji..Keep the momentum.//

மிக்க நன்றி கார்த்திக்... கண்டிப்பா முயற்சி பண்றேன் :-)

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

ராஜேஷ்குமார் நாவல் மாதிரி இருக்கு. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்//

ஒரு காலத்துல ராஜேஷ்குமார் தான் என்னோட ஆதர்சன எழுத்தாளர் :-)

அடுத்த பாகம் போட்டாச்சு :-)

Sridharan said...

யோவ் வெட்டி..அடுத்த அத்யாயம் எப்ப?....

Unknown said...

ராஜேஷ்குமார் உங்க ஆதர்சன எழுத்தாளர் என்பதால், ராஜேஷ்குமார் கதைகள் http://www.emagaz.in இல் இருக்கிறது.