தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, September 05, 2006

கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்

முன்குறிப்பு: சிரிக்க மட்டுமே...

சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் யார் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்கே வருகிறார் நாரதர்.

அவரிடம் சென்று அவர்கள் நாரதரிடம், எங்களுள் சிறந்தவர் யார் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

நாரதர்: வள்ளல் சிகாமணிகளே!!! எனக்கு கலகம் செய்துதான் பழக்கமே தவிர, தீர்ப்பு சொல்லி பழக்கமில்லை. அதனால் நீங்கள் சரியாக தீர்ப்பு சொல்லும் யாரிடமாவது செல்லலாம்.

பாரி: நான்முகன் புதல்வனே!!! இந்த கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதியானவரை நீரே கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

நாரதர்: மன்னர் மன்னா!!! மேலுலகில் அனைவரும் பிஸியாக உள்ளனர். அதனால் பூவுலகில் இருக்கும் ஒருவரை நீங்கள் அணுகலாம்.

காரி: மூவுலகில் பவனம் வருகின்ற மூர்த்தியே!!! பூவுலகில் இதற்கு சரியாக தீர்ப்பு வழங்கும் தகுதி படைத்தவர் யார் என்றும் நீரே சொல்ல வேண்டும்.

நாரதர்: தானத்தில் சிறந்தவனே!!! பூலோகத்தில் இதற்கு தீர்ப்பு சொல்ல பல பேர் இருக்கிறார்கள். இப்போழுது யார் ஃபிரியாக இருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறேன்.

நாரதர் தன் ஞான திருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: குப்புசாமி வாத்தியார்னா பாடம் சொல்லி குடுக்குற வாத்தியார் இல்ல, சிலம்பம் சொல்லி குடுக்குற வாத்தியார்னு ஊருக்கே தெரியாத உண்மையை கண்டுபிடிச்ச "சின்ன கவுண்டர்" தற்போது தர்மபுரி படத்தில் பிஸியாக இருக்கிறார்.

கடையேழு வள்ளல்கள்: ஐய்யய்யோ!!!

நாரதர்: கவலைப்பட வேண்டாம். இதை போல் பல பேர் இருக்கிறார்கள்.

மீண்டும் ஞானதிருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: பைனான்ஸ் கம்பெனில பணத்த போட்டு ஏமாந்தவங்களுக்கு "மழ நிக்கறதுக்குள்ள" னு சொல்லி பணத்தை வாங்கி கொடுத்த ரெட் அஜித்தை காணவில்லை.

க.வ: ஓ!!! நோ

நாரதர்: சரி இதற்கு சரியான ஆள் நம்ம நாட்டமையோட 3வது பங்காளி கவுண்டர்தான்.

பேகன்:பிரபோ!!! அவர் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா???

நாரதர்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வெச்சிருந்ததை கண்டு பிடித்தது அவர்தான்.

ஆய்: ஓ!!! அவ்வளவு திறமைசாலியா??? அப்ப அவரிடமே செல்வோம்... அனைவரும் என்ன சொல்கிறீர்கள்???
அனைவரும் ஒத்துக்கொண்டு கவுண்டர் வீட்டுக்கு செல்கிறார்கள்.

வெளியே அவருடைய தந்தை செந்திலை பார்த்து விஷயத்தை சொல்கிறார்கள். செந்தில் அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.

செந்தில்: மை சன்!!!

கவுண்ட்ஸ்: என்னடா பைசன்!!! சவுண்டு கொடுக்கற???

செந்தில்: மை சன்! விருந்தாளிங்க வந்துருக்காங்க... அவுங்க முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க???

கவுண்ட்ஸ்: உனக்கு எங்க இருந்து வந்துச்சுடா மானம்? அதுசரி அது யார்டா நம்ம வீட்டுக்கு விருந்தாளி???

செந்தில்: கடையேழு வள்ளல்களும் நம்ம வீட்டுக்கு உங்கிட்ட ஒரு வழக்கு சம்பந்தமா வந்துருக்காங்க!!! நீ தான் தீர்ப்பு சொல்லனுமாம்...

கவுண்ட்ஸ்: சத்தியராஜ் நடிச்ச படம் வள்ளல் தெரியும். அதுயார்டா கடையேழு வள்ளல்???

செந்தில்: கடைசியா இருந்த 7 வள்ளல்கள்.

கவுண்ட்ஸ்: அது சரி... நம்மகிட்ட தீர்ப்புகாக வந்துருக்காங்க... அதனால ஐ கிவ் ரெஸ்பெக்ட்யா!!! பிரச்சனை என்ன சொல்லுங்க???

பாரி: எங்களில் யார் சிறந்த கொடையாளி என்று தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

கவுண்ட்ஸ்: ஓ!!! இது ரொம்ப சாதாரண விஷயம்... சரி நீங்க என்ன என்ன செஞ்சிங்கனு சொல்லுங்க.... ஐ கிவ் தீர்ப்பு...

பாரி: நான் தான் பாரி... பரம்பு மலை அரசன்...

கவுண்ட்ஸ்: அதுக்கு என்ன இப்ப??? நீ என்ன பண்ணனு சொல்லு

பாரி: முல்லை கொடிக்கு தேர் கொடுத்தேன்...

கவுண்ட்ஸ்: எது நம்ம மூணாவது சந்து முக்கு வீட்ல இருக்கே அந்த முல்லைக் கொடிக்கா????

செந்தில்: மை சன்... அவுங்கள பத்தி தப்பா பேசாதீங்க... அவுங்க உங்களுக்கு சித்தி முறை ஆகறாங்க...

கவுண்ட்ஸ்: டேய் தகப்பா... நீ அவளையும் விட்டு வெக்கலயா... இவுங்க எல்லாம் போகட்டும்... உனக்கு இருக்கு

பாரி: இல்லை இல்லை.... நான் சொன்னது செடி, கொடி வகையை சார்ந்த முல்லை கொடி... அது படற வழியில்லாமல் வாடியதை பார்த்து என் மனம் பதைத்ததால் அதற்கு நான் சென்ற தேரை பரிசாக வழங்கினேன்

கவுண்ட்ஸ்: ஏன்டா... ஆனா ஊனா யாரங்கே யாரங்கேனு கையை தட்டுவீங்க... இதுக்கு ஒரு தடவை யாரங்கேனு கைய தட்டி குச்சி நட சொல்றத விட்டுட்டு அவ்வளவு காஸ்ட்லி தேர விட்டுட்டு வந்துருக்க... அது என்ன தேர்ல ஏறி நகர்வலமா வர போகுது. உனக்கு மூளையே இல்ல. யு ஆர் அன்செலக்டட்... நெக்ஸ்ட்...

பேகன்: என் பெயர் பேகன். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை வழங்கினேன்.

கவுண்ட்ஸ்: யாரு 16 வயதினிலேல வருமே அந்த மயிலுக்கா??? 16 வயது வந்த மயிலே மயிலே என்னை பாடா படுத்துதடி மயிலே மயிலே

கவுண்டர் தன்னுடைய வழக்கமான பாணியில் கையையும் காலையும் தூக்கி ஆட ஆரம்பிக்கிறார்.

பேகன்: இல்லை இல்லை... நான் சொல்வது பறவை இனத்தை சேர்ந்த மயில்.

கவுண்ட்ஸ்: ஏன்டா உங்க ரவுசுக்கு எல்லாம் அளவே கிடையாதா??? அது அப்படியே முச்சு முட்டி செத்துருக்கும்... அப்பறம் கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு மயில் கறி சாப்பிட்டிருப்பீங்க... யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்... நெக்ஸ்ட்

ஆய் எழுனி: என் பெயர் ஆய் எழுனி.

கவுண்ட்ஸ்: என்ன மேன் பெர் இது??? இது பேரா??? யு ஆர் அன்செலக்டட்

செந்தில்: மை சன்... அதுக்குள்ள அன்செலக்ட் பண்ணிட்டீங்க...

கவுண்ட்ஸ்: ஏன்டா இது என்ன வாய்ல வர விஷயமா??? ஏன் ஒரு அஜித், விஜய், சூர்யானு பேர் வெச்சிக்க வேண்டியதுதான?... அவன் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்.

மற்ற நால்வரும் அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல அஞ்சுகிறார்கள்.

கவுண்ட்ஸ்: ஹு இஸ் தி நெக்ஸ்ட்???

செந்தில்: மை சன். அவுங்க எல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கே பயப்படறாங்க...

கவுண்ட்ஸ்: ஆமாம் இவனுங்க என்ன பண்ணிருப்பானுங்கனு தெரியாதா??? இவனுங்கள பத்தி பாட்டு பாடற 4-5 அள்ளக்கைங்கள வச்சிக்கிட்டு அவனுங்களுக்கு மக்கள் வரி பணத்துல இருந்து வர காச அள்ளி வீசிருப்பானுங்க... இவுங்கள எல்லாம் பாத்துதான் இப்ப இருக்குற அரசியல்வாதிங்க எதுவும் தெரியாத ஜால்ரா கேஸ்ங்கல எல்லாம் மந்திரி ஆக்கறானுங்க...

எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...

செந்தில்: நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு....

கவுண்ட்ஸ்: ஏன்டா அந்த முல்லைக்கொடி பொண்ணு அல்லிராணிய எப்படியாவது நான் கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா அவளை எனக்கு தங்கச்சியாக்கிட்ட... உன்ன நான் இன்னைக்கு பலி போடாம விடமாட்டன்...

கவுண்டர் துரத்த செந்தில் எஸ்கேப் ஆகிறார்.

69 comments:

இராம்/Raam said...

பாலாஜி,

நல்லா இருக்குங்க. அதுவும் பேகன் பத்தின கவுண்டரு கமண்ட் சூப்பர்.

நாமக்கல் சிபி said...

ராம்,
மிக்க நன்றி... நம்ம வீட்டுக்கு முதல் முறையா வந்துருக்கீங்கனு நினைக்கிறேன்...

நாமக்கல் சிபி said...

சதயம்,
நல்ல சிரிங்க... அதுதான் நமக்கு வேணும்

குமரன் (Kumaran) said...

கவுண்டரின் தீர்ப்பு மிக மிக அருமை. நல்லா இருக்கு பாலாஜி.

நாமக்கல் சிபி said...

மிக்க நன்றி குமரன்.

கப்பி | Kappi said...

கலக்கல் வெட்டி!

Porkodi (பொற்கொடி) said...

நல்ல வேளை ஆபீச்ல படிக்கல :) தனியா இப்படி சிரிச்சா என்ன ஆகறது?

Anonymous said...

super machi!!! romba nalla irunthadhu. ha ha ha !!.

Anonymous said...

super machi!!! romba nalla irukku ha ha ha !!!

Anonymous said...

super machi!!! romba nalla irukku ha ha ha !!!

கதிர் said...

பாபாஜி

செம காமெடிபா! இன்னிக்கு விளாண்டுற வேண்டியதுடுதான்!

இப்போ வரேன்!

G.Ragavan said...

இதானா அது.........நானும் வேலைப் பளுவுல கவனிக்கல....நல்லாவே வந்திருக்கு!

கடையெழு வள்ளல்ல அதியமான் இல்லையா! ஐயோ! எனக்கு மறந்து போச்சே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உங்க பதிவ ஆபீஸ்ல படிக்கக் கூடாதுப்பா சாமி.
சிரிப்பு தாங்க முடியாம சிரிச்சிப் போட்டு, பக்கத்தில் உள்ள நார்வே நாட்டு அழகி ஒரு மாதிரியா பாக்க, எதுக்குச் சிரிச்சோம்ன்னு சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம......

கலக்கல் VP!

//செந்தில்: மை சன். அவுங்க எல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கே பயப்படறாங்க...//
இது ஒரு காலத்துல, கவுண்டர் வாழ்வில், மெய்யாலுமே உண்மையோ உண்மைங்கோ!!!

நாமக்கல் சிபி said...

கப்பி,
ரெண்டே வார்த்தைல முடிச்சிட்ட...
இன்னும் உன்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கறன் ;)

பொற்கொடி,
எதுக்கு தனியா சிரிச்சிட்டு... பிராஜக்ட்ல இருக்கவங்களுக்கும் காட்டலாம் இல்ல... எல்லாரும் கும்பலா சேர்ந்து சிரிக்கலாம் இல்ல ;)

SP.VR. SUBBIAH said...

நல்ல கற்பனை - கவுண்டருக்குத் தெரிந்தால் உங்களை விடமாட்டார்!
அவருடைய காட்சிகளூக்கு உங்களை ஸ்கீரின் ப்ளே & டயலாக் எழுதச் சொல்லி கைவிட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்து கலக்க ஆரம்பித்துவிடுவார்

நாமக்கல் சிபி said...

சுமதி,
நன்றி! நன்றி!! நன்றி!!!


சின்னதம்பி,
யாரையும் விட்டு வெக்க கூடாது... எல்லாரையும் கலாய்ப்போம் ;)

நாமக்கல் சிபி said...

தம்பி,
வா வா வா... உன்ன தான் எதிர்பார்த்துட்டு இருந்தன்

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...
இதானா அது.........நானும் வேலைப் பளுவுல கவனிக்கல....நல்லாவே வந்திருக்கு!
//
மிக்க நன்றி... ஆமாம் இதுக்குதான் கேட்டேன்... சரி திரும்ப திரும்ப கடையேழு வள்ளல்களை பத்தி கேட்டுட்டு இப்படி கலாய்ச்சா டென்ஷன் ஆகிடுவீங்களோனு ஃபிரியா விட்டுட்டேன் :-)

//கடையெழு வள்ளல்ல அதியமான் இல்லையா! ஐயோ! எனக்கு மறந்து போச்சே! //
ஆமாம்... அவரையும் நக்கல் பண்றதுக்கு டயலாக் எல்லாம் ரெடியா இருந்துச்சு... ஆனா எஸ்ஸாயிட்டாரு ;)

நாமக்கல் சிபி said...

KRS,
//பக்கத்தில் உள்ள நார்வே நாட்டு அழகி ஒரு மாதிரியா பாக்க//
இருந்தாலும் இப்படியெல்லாம் வெறுப்பேத்தக் கூடாது...

அந்த அழகிக்கிட்ட வேணும்னா சொல்லி எங்க வெட்டி நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவருனு சொல்லி வைங்க


//கலக்கல் VP!//
மிக்க நன்றி

நாமக்கல் சிபி said...

//SP.VR.SUBBIAH said...
நல்ல கற்பனை - கவுண்டருக்குத் தெரிந்தால் உங்களை விடமாட்டார்!
அவருடைய காட்சிகளூக்கு உங்களை ஸ்கீரின் ப்ளே & டயலாக் எழுதச் சொல்லி கைவிட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்து கலக்க ஆரம்பித்துவிடுவார்
//
மிக்க நன்றி...

கவுண்டர் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே உள்ளது...
அவர் திரும்ப வரணும்னா என்ன வேணும்னாலும் செய்யலாமே!!!

கதிர் said...

//வா வா வா... உன்ன தான் எதிர்பார்த்துட்டு இருந்தன்//

யோவ் பாபாஜி. உக்காந்து யோசிச்சு எழுதி காமெடி பண்ணியிருக்க போல!
அப்படியே சீன்ல பாத்தா மாதிரி இருக்கு!

Syam said...

உங்க ரவுசுக்கு அளவே இல்லீங்க

//கவுண்ட்ஸ்: என்ன மேன் பெர் இது??? இது பேரா??? யு ஆர் அன்செலக்டட்

செந்தில்: மை சன்... அதுக்குள்ள அன்செலக்ட் பண்ணிட்டீங்க...

கவுண்ட்ஸ்: ஏன்டா இது என்ன வாய்ல வர விஷயமா??? ஏன் ஒரு அஜித், விஜய், சூர்யானு பேர் வெச்சிக்க வேண்டியதுதான?... அவன் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்.//

சிரிப்ப அடக்க முடியல...வெளில போய் அஞ்சு நிமிசம் சிரிச்சிட்டு வந்து இப்போ கமெண்ட் போடறேன் :-)))))))))

நாமக்கல் சிபி said...

//யோவ் பாபாஜி. உக்காந்து யோசிச்சு எழுதி காமெடி பண்ணியிருக்க போல!
அப்படியே சீன்ல பாத்தா மாதிரி இருக்கு!
//
பின்ன யோசிக்காம எழுத நம்ம என்ன பிறவி கலைஞனா???

கான்செப்ட் போன வாரமே யோசிச்சி வெச்சிட்டேன்.... நேத்துதான் எழுத ஆரம்பிச்சேன்...

நாமக்கல் சிபி said...

//Syam said...
உங்க ரவுசுக்கு அளவே இல்லீங்க
//
ரவுசுக்கு எல்லாம் அளவு வெச்சிட்டு விடமுடியுமா??? அப்படியே கலாய்ச்சிட்டே போக வேண்டியது தான் ;)

//சிரிப்ப அடக்க முடியல...வெளில போய் அஞ்சு நிமிசம் சிரிச்சிட்டு வந்து இப்போ கமெண்ட் போடறேன் :-)))))))))
//
ஆஹா... மிக்க மகிழ்ச்சி

கதிர் said...

கவுண்ட்ஸ்: உம்பேரு என்ன?

ஓல்டுலேடி: சங்கீதா..

கவுண்ட்ஸ்: சங்கு ஊதற வயசில சங்கீகீகீதா! யூ ஆர் அன்செலெக்டட்!

நாமக்கல் சிபி said...

தம்பி,
அதே சீன்ல வர இன்னொரு டயலாக்:

நீங்க சும்மாவே செஞ்சிட்டாலும் ;)

Unknown said...

கவுண்டர் செந்திலை ரெண்டு மிதி வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்:))))

முல்லை,மயில்:)))சூப்பர் காமடி

நாமக்கல் சிபி said...

செல்வன் said...
//
கவுண்டர் செந்திலை ரெண்டு மிதி வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்:))))
//
என்ன இருந்தாலும் அப்பா இல்லையா அதனால தான் கவுண்டர் மன்னிச்சி விட்டுட்டார்;)

//முல்லை,மயில்:)))சூப்பர் காமடி//
மிக்க நன்றி செல்வன்

-L-L-D-a-s-u said...

;) ;) ;)

-L-L-D-a-s-u said...

// குப்புசாமி வாத்தியார்னா பாடம் சொல்லி குடுக்குற வாத்தியார் இல்ல, சிலம்பம் சொல்லி குடுக்குற வாத்தியார்னு ஊருக்கே தெரியாத உண்மையை கண்டுபிடிச்ச "சின்ன கவுண்டர்" தற்போது தர்மபுரி படத்தில் பிஸியாக இருக்கிறார்.//
சூப்பர் ..

Anonymous said...

பாரி, பேகன் தவிர மத்தவங்களாம் என்னென்ன தானம் பண்ணினாங்கன்னு பார்ப்போம்னு நினைச்சா அப்படியே ஏமாத்திட்டேங்களே !!!!

என்ன பண்ணினாங்கன்னு உங்களுக்கேத் தெரியாதா ?!!!

வேந்தன் said...

இப்ப வர்ற சினிமா காமெடிகளை விட ஸுப்பரா எழுதி இருக்கீங்க

நாமக்கல் சிபி said...

தாஸ்,
மிக்க நன்றி

ஆறுமுகம்,
இப்படி பப்ளிக்கா வெச்சி கேள்வியெல்லாம் கேக்க கூடாது...
கூகுளாண்டவரை கேட்டு பார்த்தேன். அவருக்கே தெரியவில்லை என்றால் நன் எல்லாம் எம்மாத்திறம்.

வேந்தன்,
புல்லரிக்க வெச்சிட்ட்டீங்க...
மிக்க நன்றி

நாமக்கல் சிபி said...

தாஸ்,
கேப்டனோட அருமை உங்க ஒருத்தருக்கு தான் புரிஞ்சியிருக்கு ;)

தகடூர் கோபி(Gopi) said...

காமெடி சூப்பருங்க...

:-)))

//கடையெழு வள்ளல்ல அதியமான் இல்லையா!//

இது குறித்த சில தகவல்கள்:

அதியமான் என்பது ஒரு அரசரின் பெயர் அல்ல. அது சோழர் சேரர் போல ஒரு வம்சத்தினரின் பெயர்.

சேரன் + மகன் = சேரமான்
அதியன் + மகன் = அதியமான்

"அதியமான் ஆய் எழினி" கடையேழு வள்ளல்களில் ஒருவர் அல்ல.. (அவரின் காலத்தோடு ஒப்பிட்டால்... முதலேழு அல்லது இடையேழு வள்ளல்களில் ஒருவராய் இருக்கலாம். எனக்கு உறுதிபட தெரியவில்லை)

"அதியமான் நெடுமான் அஞ்சி" கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் "அதியமான் பொகுட்டெழினி"

அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர்.

ம்ம்.. ரொம்ப ப்ளேடு போட்டுட்டேனோ ?

Anonymous said...

மிகவும் நல்லா இருக்குங்க.

கைப்புள்ள said...

வெட்டி,
அருமையா எழுதியிருக்கீங்க. செம காமெடி. நல்லா சிரிச்சேன்.

ஒரு மெசேஜ் வேற சொல்லிருக்கீங்க. அதையும் கவனிச்சேன்.

//எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...//

நல்லாருக்கு

நாமக்கல் சிபி said...

கோபி,
//
காமெடி சூப்பருங்க...

:-)))
//

மிக்க நன்றி

//கடையெழு வள்ளல்ல அதியமான் இல்லையா!//

இது குறித்த சில தகவல்கள்:

அதியமான் என்பது ஒரு அரசரின் பெயர் அல்ல. அது சோழர் சேரர் போல ஒரு வம்சத்தினரின் பெயர்.

சேரன் + மகன் = சேரமான்
அதியன் + மகன் = அதியமான்

"அதியமான் ஆய் எழினி" கடையேழு வள்ளல்களில் ஒருவர் அல்ல.. (அவரின் காலத்தோடு ஒப்பிட்டால்... முதலேழு அல்லது இடையேழு வள்ளல்களில் ஒருவராய் இருக்கலாம். எனக்கு உறுதிபட தெரியவில்லை)

"அதியமான் நெடுமான் அஞ்சி" கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் "அதியமான் பொகுட்டெழினி"

அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர்.

ம்ம்.. ரொம்ப ப்ளேடு போட்டுட்டேனோ ?


சத்தியமா இல்லைங்க... இவ்வளவு நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க!!!

நான் கூகுளாண்டவரை பல முறைகளில் கேட்டுப் பார்த்தும் விஷயம் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை.

இப்போழுது தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி

நாமக்கல் சிபி said...

சு. பாலாஜி said...
//மிகவும் நல்லா இருக்குங்க. //
மிக்க நன்றி

நாமக்கல் சிபி said...

கைப்புள்ள said...
//வெட்டி,
அருமையா எழுதியிருக்கீங்க. செம காமெடி. நல்லா சிரிச்சேன்.
//
மிக்க நன்றி கைப்ஸ்

//
ஒரு மெசேஜ் வேற சொல்லிருக்கீங்க. அதையும் கவனிச்சேன்.

//எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...//

நல்லாருக்கு
//
கவுண்டர் எப்பவுமே கடைசியா ஒரு மெசேஜ் சொல்லிதான் முடிப்பாரு... நல்லா கவனிச்சு பாத்தாதான் அது தெரியும்.... நீங்க நல்லா கவனிச்சிருக்கீங்க ;)

Anonymous said...

I am not able to read ur blog but able to see the comments. Can you help me in what font r u using

நாமக்கல் சிபி said...

Open it in IE.
Also
1. Click on View tab
2. Select Encoding. Use Unicode(UTF) as Encoding Method.

Please let me know if u have issues even then.

Anonymous said...

still I am not able to view it. I am using windows 2000 prof. But i am able to view ur blogs from windows xp prof from my home.

Do u have an idea?

Anonymous said...

என்ன ஸ்கிரீன் ப்ளேல இறங்கிட்டீங்க போல இருக்கு :) நல்லா வந்திருக்கு

நாமக்கல் சிபி said...

Hi,
R u able to read other tamil blogs?

XP comes with default Latha font for tamil...so u dont have to install any fonts to read tamil...
2000 doesnt have any default tamil fonts...so you have to install any of the tamil fonts to read tamil web pages...

நாமக்கல் சிபி said...

Dubukku said...
//
என்ன ஸ்கிரீன் ப்ளேல இறங்கிட்டீங்க போல இருக்கு :) நல்லா வந்திருக்கு
//
வாங்க தலைவா!!!
எல்லாம் சும்மா ஒரு ட்ரை தான்... :-)

அப்புறம் தேன்கூடு போட்டிக்கு கதை எழுதலயா??? மரணம் போட்டிக்கே உங்களுடையது ஜெயிக்கலனு எனக்கு ரொம்ப வருத்தம் :-(

இராம்/Raam said...

//ராம்,
மிக்க நன்றி... நம்ம வீட்டுக்கு முதல் முறையா வந்துருக்கீங்கனு நினைக்கிறேன்... //

இல்லப்பா நானு நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா கமண்ட்ஸ் போட்டத்தில்லே.
ஹீ ஹீ

Anonymous said...

அன்பு பாலாஜி,

இப்போ உங்கள் பதிவு நல்லா தெரியுது. உங்கள் உதவிக்கு நன்றி. நல்லா இருந்திச்சு. அப்படியே மத்த 5 பேரும் எதனால வள்ளலானான்ங்கன்னு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும். அதியமான் மட்டும் அவ்வைக்கு நெல்லிக்காய் கொடுத்தாராம்.

நாமக்கல் சிபி said...

//இல்லப்பா நானு நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா கமண்ட்ஸ் போட்டத்தில்லே.
ஹீ ஹீ //

அப்ப இப்பதான் கமெண்ட் போடற அளவுக்கு எழுதியிருக்கேன் ;)

இனிமே அடிக்கடி வரவும் ;)

இராம்/Raam said...

//அப்ப இப்பதான் கமெண்ட் போடற அளவுக்கு எழுதியிருக்கேன் ;)

இனிமே அடிக்கடி வரவும் ;) //

அட நீங்க எவ்வளவு பெரிய ஆளு, விகடன்'ல்லாம் வந்தவர். இப்போதான் கமண்ட் போடுற அளவுக்குன்னு கேட்டிருக்கீங்க....

தட்ஸ் மீன் தன்னடக்கம்....?

நாமக்கல் சிபி said...

//இப்போ உங்கள் பதிவு நல்லா தெரியுது. உங்கள் உதவிக்கு நன்றி. நல்லா இருந்திச்சு.//
இவ்வளவு விளக்கமா கேட்டு என் பதிவ படிக்கறீங்களேனு எனக்குதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி.

// அப்படியே மத்த 5 பேரும் எதனால வள்ளலானான்ங்கன்னு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்.
//
நானும் ஒரு வாரமா தேடி பாத்தேன். எதுவும் கிடைக்கல. சரி இப்படியே தேடிக்கிட்டு இருந்தா எழுதாமலே விட்டுடுவோம்னு தோனுச்சு... தெரிஞ்சத வெச்சி ஒப்பேத்திட்டேன்.

நாமக்கல் சிபி said...

ராம்,
//அட நீங்க எவ்வளவு பெரிய ஆளு, விகடன்'ல்லாம் வந்தவர். இப்போதான் கமண்ட் போடுற அளவுக்குன்னு கேட்டிருக்கீங்க....

தட்ஸ் மீன் தன்னடக்கம்....? //

என்னது இது விளையாட்டு. விகடன்ல வந்தது எழுத்து திறமையால இல்ல. ஏதோ பசங்களுக்கு உதவட்டுமேனு போட்டுட்டாங்க. அதுவும் இல்லாம இங்க இருக்கறவங்க எல்லாரும் பெரிய காலேஜ்ல படிச்சி ஆன் கேம்பஸ்ல வந்தவங்க. நம்மல (என்ன) மாதிரி ஆவரேஜ் ஸ்டண்ட்ஸ் இல்ல ;)

மத்தபடி இப்பத்தான் நான் எழுத பழகிக்கிறேன் ;)

ராசுக்குட்டி said...

கொஞ்சம் சொந்த அலுவல்ல இந்த பக்கம் வரல... பாத்தா கலக்கி வச்சுருக்கிங்க போங்க... கவுண்டர் காமெடி அண்ட் மேட்டர கோத்துவுட்டது செம சூப்பரு!

சிரிப்பை நிறுத்துவதற்காக போய் என் பதிவையெல்லாம் படித்துவிட்டு வந்தேன்னா பாத்துக்கங்களேன்!

G.Ragavan said...

// கோபி(Gopi) said
காமெடி சூப்பருங்க...

:-)))

//கடையெழு வள்ளல்ல அதியமான் இல்லையா!//

இது குறித்த சில தகவல்கள்:

அதியமான் என்பது ஒரு அரசரின் பெயர் அல்ல. அது சோழர் சேரர் போல ஒரு வம்சத்தினரின் பெயர்.

சேரன் + மகன் = சேரமான்
அதியன் + மகன் = அதியமான்

"அதியமான் ஆய் எழினி" கடையேழு வள்ளல்களில் ஒருவர் அல்ல.. (அவரின் காலத்தோடு ஒப்பிட்டால்... முதலேழு அல்லது இடையேழு வள்ளல்களில் ஒருவராய் இருக்கலாம். எனக்கு உறுதிபட தெரியவில்லை)

"அதியமான் நெடுமான் அஞ்சி" கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் "அதியமான் பொகுட்டெழினி"

அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர்.

ம்ம்.. ரொம்ப ப்ளேடு போட்டுட்டேனோ ? //

கோபி, மிக்க நன்றி. சேரமான் சேரமான்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி படிச்ச எனக்கு அதியமான் சிக்காமப் போச்சே! கற்றது கைமண்ணளவு. சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க.

நாமக்கல் சிபி said...

//ராசுக்குட்டி said...
கொஞ்சம் சொந்த அலுவல்ல இந்த பக்கம் வரல... பாத்தா கலக்கி வச்சுருக்கிங்க போங்க... கவுண்டர் காமெடி அண்ட் மேட்டர கோத்துவுட்டது செம சூப்பரு!//

மிக்க நன்றி ராசுக்குட்டி. அப்பப்ப வாங்க...

//சிரிப்பை நிறுத்துவதற்காக போய் என் பதிவையெல்லாம் படித்துவிட்டு வந்தேன்னா பாத்துக்கங்களேன்!
//
தன்னடக்கத்தின் திருவுருவே!!! கொஞ்சம் கால காட்டுங்க ;)

தகடூர் கோபி(Gopi) said...

வெட்டிப்பயல்,

//நான் கூகுளாண்டவரை பல முறைகளில் கேட்டுப் பார்த்தும் விஷயம் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. //

தென்னிந்திய் வரலாறு/தொல்பொருள் ஆய்வுகள் குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாய் காணப்படுவதில்லை. நம் போன்ற வலைப்பதிவர்கள் முயன்றால் பதிவேற்ற இயலும்.

ஜி.ரா,

// கற்றது கைமண்ணளவு.//

உண்மை.

நான் மேற்சொன்ன மூன்று அதியமான்கள் குறித்தும் புறநானூற்றுப் பாடல்களில் உள்ளது.

'அதியமான்கள் வரலாறு' என்று ஒரு தொல்பொருள் ஆய்வறிக்கை புத்தக வடிவில் வந்துள்ளது.

நாமக்கல் சிபி said...

கோபி,
//தென்னிந்திய் வரலாறு/தொல்பொருள் ஆய்வுகள் குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாய் காணப்படுவதில்லை. நம் போன்ற வலைப்பதிவர்கள் முயன்றால் பதிவேற்ற இயலும்//

யோசிக்க வேண்டிய விஷயம்.

இராம்/Raam said...

//நம்மல (என்ன) மாதிரி ஆவரேஜ் ஸ்டண்ட்ஸ் இல்ல ;)//

என் இனம்டா நீயீ......:-))))

நாமக்கல் சிபி said...

ராம்,
இங்க பாதி பேருக்கு மேல நம்ம இனம்தான் (காலேஜ்ல படிக்காம ஊர் சுத்தன கேசுங்க தான்)... ஆனால் நம்மல மாதிரி வெளிய சோல்ல மாட்றாங்க ;)

Arunkumar said...

superaa kalakkirkinga...
good creativity.

Officela irukken. Elundu oru coffee kudikka pona theriyum. evalo peru oru maathiriya paakuraanunganu :)

neraya eludunga !!!

-Arun

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...
superaa kalakkirkinga...
good creativity.

Officela irukken. Elundu oru coffee kudikka pona theriyum. evalo peru oru maathiriya paakuraanunganu :)

neraya eludunga !!!

-Arun
//

மிக்க நன்றி அருண்... தொடர்ந்து படிக்கவும்

Anonymous said...

செம கலக்கல், படித்தேன் , ரசித்தேன், வயிறு வலிக்க சிரித்தேன்.
//யு ஆர் அன்செலக்டட்// இதுலே "அன்செலக்டட்" பதிலா ரிஜெக்டெட் போட்டிருந்தீங்கன்ன இன்னும் நல்லா இருந்திருக்கும். ( கவுண்டர், படங்கள்லே அப்படித்தான் சொல்லுவாருன்னு ஞாபகம்)

நாமக்கல் சிபி said...

//பரணீ said...

செம கலக்கல், படித்தேன் , ரசித்தேன், வயிறு வலிக்க சிரித்தேன்.
//யு ஆர் அன்செலக்டட்// இதுலே "அன்செலக்டட்" பதிலா ரிஜெக்டெட் போட்டிருந்தீங்கன்ன இன்னும் நல்லா இருந்திருக்கும். ( கவுண்டர், படங்கள்லே அப்படித்தான் சொல்லுவாருன்னு ஞாபகம்)//
பரணி மிக்க நன்றி!!!

கட்டபொம்மன் பாருங்க.. அதுல நம்ம தலைவர் சூப்பர்வைசர் சுப்பிரமணியா நடிச்சிருப்பாரு.... அதுல வர டயலாக்தான் "யூ ஆர் அன்செலக்டட்"...

Anonymous said...

ROFTL :-)

முரளிகண்ணன் said...

ஆஹா மனம் விட்டு சிரிக்கும்படி இருந்தது

Unknown said...

actually opened this one to really get a true story of any one vallal for my son's project and in contrary it was an outstanding comedy to read and finally made me forget the project. great?!

Sudhakar said...

superb..., eppadi ungalala mattum ippadiyellam yosika mudiuthu...

nice

Sowmiya said...

Super sibi,

This is the first time i'm coming to ur blog.. gounder comedy asattininga.. :)

Sowmiya said...

Super cibi, this is the first time i'm coming to ur blog. actuall y i wanted to see original kadai ezhu vallalgal..

Gounder comedy asatinga... :)