தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, September 04, 2008

யாருக்கும் புரியாத என்னுடைய கதை

லிப்ட் ப்ளீஸ்னு முன்னாடி நான் ஒரு தொடர் எழுதினேன். அப்ப யாருக்கும் புரியல. உங்களுக்கு புரியுதானு பார்த்து சொல்லுங்க :)...

இந்த கதை பிடிச்சா இப்ப எழுதற ஆடு புலி ஆட்டமும் உங்களுக்கு பிடிக்கறதுக்கான வாய்ப்பு அதிகம். அது இன்னும் ஒரு பாகத்தோட முடியப்போகுது.. படிச்சி பாருங்க... பிடிக்கும் ;)

--------------------------------------1-------------------------------------------

ஈஸிஆர் ரோட்டின் இருளை கிழித்துக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த சிகப்பு நிற மாருதி எஸ்டீம்.

வழக்கத்தைவிட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பாண்டியிலிருந்து சென்னை வரும் சொகுசு பேருந்துகளே பெரும்பாலும் அந்நேரத்தில் பார்க்க முடிந்தது.

வேகமாக சென்று கொண்டிருந்த அந்த எஸ்டீம், தன் வேகத்தை குறைத்து சாலையின் ஓரத்தில் நின்றது. காரின் ஜன்னல் திறந்தது...

"என்னங்க இந்த நேரத்திலும் லிஃப்டா???" காரிலிருந்து கேட்டவருக்கு சுமார் முப்பத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது.

"ஆமாங்க... கொஞ்சம் அவசரமா கோயம்பேடு போகனும். நீங்க சிட்டிக்குள்ள இறக்கிவிட்டுட்டீங்கனா நான் டேக்ஸி பிடிச்சி போயிக்கறேன்"

"நான் அண்ணா நகர்தான் போறேன்... அப்படியே உங்கள கோயம்பேடுல இறக்கி விட்டுடறன். ஏறுங்க!!!"

காருக்குள் ஏறிய பெண்ணிற்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது. அந்த காலத்து காஞ்சனாவை நியாபகப்படுத்தினாள்.

"என்னங்க இந்த நேரத்துல இப்படி தனியா இந்த மாதிரி இடத்துல நின்னுக்கிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன அவசரம். காலைல போகக்கூடாதா?"

"இல்லைங்க சேலத்துல இருக்கிற அப்பாக்கு உடம்பு சரியில்ல. நெஞ்சுவலினு போன் வந்துச்சு... சரி எப்படியும் ஏதாவது பஸ் பிடிச்சி போயிடலாம்னு புறப்பட்டுட்டேன்"

"பரவாயில்லைங்க இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் தைரியமா இருக்கீங்க"

"இல்லைனா பொழைக்க முடியாதுங்களே"

"அதுவும் சரிதான்... நீங்க என்ன பண்றீங்க?"

"நான் எம்.எஸ்.ஸி மைக்ரோபயலஜி படிச்சிருக்கேன். இங்க திருவான்மியூர்ல இருக்குற அன்னை ஹாஸ்பிட்டல்ல லேப் டெக்னீஷியனா இருக்கிறேன்"

"ஓ!!! அப்ப நிறைய இரத்தம் பாப்பீங்க போல இருக்கே!!!"

"ஹிம்... இரத்தம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்..."

....


காரில் ஒரு இனம் புரியாத நிசப்தம் நிலவியது.

--------------------------------------2-------------------------------------------

"என்னங்க இப்படி பக்கத்துல இருக்குற பிரெண்ட் வீட்டுக்கு போறன்னு அக்காட்ட சொல்லிட்டு இப்ப எங்கயோ போயிட்டு இருக்கீங்க???"

"கொஞ்சம் பேசாம அமைதியா வா"

"சரி. நம்ம இப்ப எங்க போறோம்???"

"ஊட்டி"

"என்ன ஊட்டியா??? என்னங்க இப்படி பண்றீங்க"

"பின்ன டூ-வீலர்ல ஊட்டி போறோம்னு சொன்னா உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா??? அதனாலதான் பிரெண்ட் வீட்ல லன்ச்க்குன்னு சொல்லி கூப்பிட்டு வந்துருக்கேன். சாயந்திரம் 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிடலாம்... அமைதியா வா"

"இருந்தாலும் நீங்க பண்றது தப்பு.. ஃபிரெண்ட் வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு எங்க மாமாகிட்ட வண்டி வாங்கிட்டு வந்து இப்படி ஊட்டி போனாம்னு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க"

"இங்க பாரு... நான் காலேஜ் படிக்கும் போதே பிரெண்ட்ஸ் கூட நிறைய தடவை டூ-வீலர்ல ஊட்டி போயிருக்கேன். அப்பவே அவன் அவன் கேர்ள் பிரெண்ட்ஸோட வருவாங்க. நான் மட்டும் எந்த பொண்ணையும் ஏத்தாம தனியா வருவேன். அப்பவே மனசுல தீர்மானிச்சுக்கிட்டேன். கால்யாணம் ஆனவுடனே கண்டிப்பா என் பொண்டாட்டிய வண்டில கூப்பிட்டு வருவேன்னு. இப்பவே 6 மாசம் லேட். நல்ல வேளை உங்க அக்கா வீடு கோயம்பத்தூர்ல இருக்கு"

"இருந்தாலும் யாராவது பாத்து மாமாகிட்ட சொல்லிட்டா"

"அதெல்லாம் யாரும் பாக்க மாட்டாங்க. தெரிஞ்சாலும் உங்க மாமா எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. நான் என் பொண்டாட்டிய தான கூப்பிட்டு போறேன். இந்த மாதிரி பேசாம சந்தோஷமா எதாவது பேசிட்டு வா"

"நீங்க நிஜமாலுமே எந்த பொண்ணையும் கூப்பிட்டு போகலையா???"

"பார்த்தியா!!! இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் சந்தேக புத்தி போகவே போகாது"

--------------------------------------3-------------------------------------------

"உங்க ரெக்கார்ட பாத்தா நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு"

"டாக்டர்... நீங்க சரியா புரிஞ்சிக்க மாட்றீங்க"

"இல்ல. நீங்க சொல்றது எனக்கு புரியுது. எனக்கு என்னுமோ நீங்க நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு.எதுக்கும் நான் என் சீனியர் டாக்டர்கிட்ட கன்ஸெல்ட் பண்ணி சொல்றன். அவர் ஒரு கான்ஃபரன்ஸ்க்கு டெல்லி போயிருக்கார். நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க... நான் அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிடறேன். அவர் டெஸ்ட் பண்ணா கரெக்டா இருக்கும்னு நான் ஃபீல் பண்றேன்"

"ஓகே டாக்டர். தேங்க்ஸ்"

"ஓகே. அடுத்த வாரம் பாக்கலாம்"

----------------------------------------------4--------------------------------------------

"இப்பவே மணி 5 ஆச்சு... சீக்கிரம் போங்க. வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் 8 ஆயிடும்"

"ஏய்!!! ஐயா டிரைவிங் பத்தி என்ன நினைச்ச!!! 6:30க்கு எல்லாம் வீட்ல இருக்கலாம்"

"ஐயோ சாமி !!! நீங்க பொறுமையாவே போங்க... லேட்டா போனாலும் பிரச்சனையில்லை"

"என்ன சீக்கிரம் போன்னு சொல்லற... பொறுமையா போனு சொல்லற... மனஷன பைத்தியமாக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட"

"உங்க இஷ்டத்துக்கு ஓட்டுங்க!!! நான் எதுவும் சொல்லல"

.....

"என்னங்க இப்படி தூறல் போட ஆரம்பிச்சிடுச்சு... மழை பெய்யறதுக்குள்ள சீக்கிரம் போங்க"

"கவலைப்படாத சீக்கிரம் போய் சேந்துடலாம்..."

பத்தாவது ஹேர் பின் வளைவில் வண்டி அதன் கட்டுப்பாட்டை இழந்தது. மழையில் நனைந்து வழுவழுப்பாக இருந்த ரோட்டை பிரேக்கால் வெற்றி கொள்ள முடியவில்லை. வண்டி எதிரில் வந்த காரில் மோதியது.

----------------------------------------------5--------------------------------------------

"என்னங்க இரத்தம்னா பிடிக்குமா??? "

"ஆமாங்க... அதுவும் பாவம் செய்றவங்க இரத்தம்னா ரொம்ப பிடிக்கும்"

அவள் கையில் மின்னிய கத்தி அந்த இருளிலும் அவன் கண்களில் பயத்தை உண்டாக்கி அதன் கடமையை செய்தது.

"ஏ...என்ன செய்யப்போற நீ... நான் எந்த தப்பும் பண்ணல"

"என்ன நீ எதுவும் தப்பு பண்ணலையா??? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊட்டில நடந்தது உனக்கு நியாபகமில்ல" அவள் வார்த்தைகள் மிக கடுமையாக இருந்தன.

"ஊட்டிலயா??? நான் எந்த தப்பும் செய்யலையே"

"ஊட்டில இருந்து இறங்கற ஒரு வண்டில மோதிட்டு வந்தியே நியாபகமில்ல???" அவள் கண்கள் சிவந்திருந்தன.

"அது என் தப்பு இல்ல.. அந்த டூ-வீலர்தான் ராங் சைட்ல வந்தான்"

"இருக்கட்டும்... ரெண்டு உயிர் அடிப்பட்டு துடிச்சிட்டு இருக்கும் போது... உனக்கு வண்டிய நிறுத்தி காப்பாத்தனும்னு தோனல... இல்ல"

"போலிஸ் கேஸாகிடும்னு பயந்து நிறுத்தாம வந்துட்டேன்... என்ன மன்னிச்சிடு" அவன் வார்த்தைகள் பயத்தில் குழறின.

"அன்னைக்கு நீ மட்டும் நிறுத்தியிருந்தா நான் என் புருஷன இழந்திருக்கமாட்டேன்..."

"வேணாம் என்ன எதுவும் பண்ணிடாத... ப்ளீஸ்.... என்ன எதுவும் பண்ணிடாத ஆஆஆஆஆஆஆஆஆ.........."

----------------------------------------------6--------------------------------------------

"என்ன எஸ்.ஐ சார்... காலைலே ஆக்ஸிடெண்ட் கேஸா"

"ஆமாம்... நம்ம தாலி அறுக்கறத்துக்குனே வரானுங்க.
நானும் இந்த ஏரியா வேணாம்... மாத்திக்குடுங்கனா அந்த டி.எஸ்.பி வேற விடமாட்றான்... வாரத்துக்கு ஒரு பொணம் பாக்க வேண்டியதா இருக்கு"

"இன்னைக்கு எத்தன???"

"ஒன்னுதான்... தண்ணியடிச்சிட்டு ஓட்டிருப்பான்னு நினைக்கறேன். மரத்துல போய் மோதியிருக்கான்...
சரி... டாக்டர் எப்ப வருவாரு???"

"போன் பண்ணிட்டன் சார்... வந்துடுவாரு. ஷிப்ட் முடிஞ்சி அஞ்சி நிமிஷத்துக்கு முந்திதான் மூர்த்தி சார் போனாரு"

"சரி... நான் ஒரு கான்ஸ்டெபுல இங்க போட்டுட்டு போறேன். போஸ்ட்மார்டம் முடிஞ்சவுடனே ரிப்போர்ட்ட அவர்ட குடுத்துடுங்க. இன்னைக்கு வேற என் மச்சான் ஊர்ல இருந்து வரான். நான் 7 மணிக்குள்ள கறி வாங்காம போனா என் வூட்டுக்காரி என்ன வீட்லயே சேத்துக்க மாட்டா... நான் ரொம்ப நேரம் இங்க வெயிட் பண்ண முடியாது"

"சரி சார்..."

"மாரிமுத்து... நான் எஸ்.ஐதான் பேசறன். உடனே புறப்பட்டு ஜி.எச் வந்துடுங்க. ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸ். நீங்க பக்கத்துல இருந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்ட வாங்கிட்டு வந்துடுங்க.. நீங்க வர வரைக்கும் நான் இங்க வெயிட் பண்றேன்"


--------------------------------------7--------------------------------------

"என்னங்க சகல... இன்னைக்கு உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் லன்ச்க்கு கூப்பிடலயா???"

"அன்னைக்கு சாப்பிட்ட லன்ச்சே இன்னும் செரிக்காம இருக்கு"

"உங்களுக்கு மட்டுமா??? எனக்கும்தான்... நீங்க ஏன் வண்டி சாவிய குடுத்திங்கனு என்ன புடிச்சி திட்டிக்கிட்டே இருந்தா"

"பின்ன... இவரே யூஸ் பண்ணாத வண்டிய குடுத்தா திட்டாம என்ன செய்வாங்க??"

"பரவால விடுக்கா... எல்லாம் இவர சொல்லனும்.
இப்ப நெனச்சாலும் எனக்கு கொல நடுங்குது.
நல்ல வேள புண்ணியவான் ஒருத்தன் கார நிறுத்தி ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனான்... இல்லனா... நெனிச்சுப்பாக்கவே பயமா இருக்கு"

--------------------------------------8--------------------------------------

"என்ன சரவணன்... ஏதோ ரொம்ப சிக்கலான கேஸ்னு சொன்னீங்க!!! பாத்தா அப்படி ஒண்ணும் தெரியலையே"

"சார்... நீங்க இது என்னவா இருக்கும்னு ஃபீல் பண்றீங்க???"

"உங்க குழப்பம் என்னனு சொல்லுங்க... நான் அப்பறம் சொல்றேன்"

"நான் டெஸ்ட் பண்ணத வெச்சி பாக்கும் பொது அவருக்கு Schizophreniaவா இருக்குமோனு சந்தேகப்படறேன்"

"எத வெச்சி அப்படி சொல்றீங்க???"

"முதல் காரணம்... அவர் பேச்சு சில சமயம் சம்பந்தமே இல்லாம இருந்துச்சு"

"அடுத்து..."

"அவர ஹிப்னாடிக் ட்ரிட்மெண்ட் பண்ணும் போது அவர் ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஏதோ ஆக்ஸிடெண்ட் பண்ணியிருக்கார். அதுல வண்டி ஓட்னவர் இறந்துட்டார். அவர் மனைவி விதவையாகிட்டாங்கனு தீர்க்கமா நம்பறார். அதுவும் இல்லாம அவுங்க இவர பழிவாங்க தேடறாங்கனு பரிபூர்ணமா நம்பறார்"

"வேற..."

"அவருக்கு நிறைய உருவங்கள் நகரமாதிரி தெரிஞ்சிருக்கு... ஆனா அதெல்லாம் போட்டோல இருக்குற உருவங்கள்... இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கு"

"சரி... இப்ப உங்க சந்தேகம் என்ன??? சொல்லுங்க"

"போதுவா Schizophrenia பேஷண்ட்டுக்கு ஆடியோ ஹாலோஸினேஷன் தான இருக்கும்... இவருக்கு எப்படி விஷ்வல் ஹாலோஸினேஷன் இருக்குன்றதுதான்"

"சரவணன்!!! யு ஹேவ் ப்ருவ்ட் யுவர் பிரில்லியன்ஸி. பட் நீங்க பண்ண தப்பு நீங்க முதல்ல ஒரு விஷயத்தை திர்மானிச்சிட்டு அப்பறம் ஆராய ஆரம்பிச்சிருக்கிங்க. சரி Schizophreniaனா என்ன சொல்லுங்க?"

"அது ஒருவகையான மன நோய். அது இதனாலதான் வருதுனு சொல்ல முடியாது. ஆனால் அதனுடைய அறிகுறிகள் ஒரு விஷயத்தில் தீவிர நம்பிக்கை, மாய ஒலிகள், நேர்த்தியற்ற பேச்சு, தீவிரமடையும் நிலையில் செயல்பட முடியாத நிலை"

"சரியா சொன்னீங்க... ஆனா அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு.. அத கவனிச்சீங்களா???"

"சார்... யூ மீன் டு சே... இட்ஸ் பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ்" (Peduncular Hallucinosis)

"யு ஆர் அப்சல்யூட்லி ரைட்... பொதுவா இந்த டிஸிஸால பாதிக்கப்பட்டவங்க கண்ணுக்கு இந்த மாதிரி பல மாய தோற்றங்கள் தெரியும். முதல்ல சொன்னதுக்கும் இதுக்கும் வித்தியாசம்... இதுல மாய உருவங்கள் தெரியும் ஆனா Schizophreniaல மாய ஒலிகள் மட்டும் கேக்கும்."

"ஆனா பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ் மாய குரல் எதுவும் கேக்காதே... "

"அங்க தான் நீங்க தப்பு பண்ணறீங்க... Caplan 1980ல பண்ண முக்கியமான தீஸிஸ்ல இது இருக்கு... இந்த நோயால பாதிக்கப்பட்டங்களுக்கு சில சமயம் உருவங்களுடன் சத்தங்களும் கேட்கும்னு சொல்லி ப்ரூஃப் கொடுத்துருக்காரு"

"சார்... ஆனா அவர் பண்ண அந்த ஆக்ஸிடெண்ட் பயம்... அந்த பொண்ணு பழி வாங்குவானு அவர் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை"

"அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே பயம்னு... அவ்வளவுதான்.
அதுக்குத்தான் மனசாட்சினு பேர்"

"எனக்கு என்னுமோ அவர் Schizophreniaவாலயும் அஃபக்ட் ஆகியிருப்பார்னு இன்னமும் தோனுது சார்...
எனக்கு இருந்த அந்த ஒரு சின்ன சந்தேகத்தால தான் நான் அவர்ட எதையும் சொல்லல..."

"குட்... டெஸ்ட்க்கு எப்ப வருவார்னு சொன்னீங்க???"

"நாளைக்கு சாயந்திரம் 7 மணிக்கு அப்பாயின்மெண்ட்"

"அப்ப நாளைக்கு தெரிஞ்சிடும்..."

---------------------------------------9---------------------------------------

"என்னது!!! ஹார்ட் பீட் முதல்ல நின்னதுக்கப்பறம்தான் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கா???"

"ஆமாம் சார்... டாக்டர் அப்படிதான் சொன்னாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லயும் ஹார்ட் அட்டாக்னு தான் எழுதியிருக்காறாம். எதுக்கும் உங்கள ஒரு தடவ போன் பண்ண சொன்னாரு"

"இந்த போனை கண்டுபிடிச்சவன முதல்ல உள்ள தூக்கி போடனும்யா. எதுக்கு எடுத்தாலும் போன் பண்ண சொல்லிடுவானுங்க... அதுதான் ஹார்ட் அட்டாக்னு ரிப்போர்ட் கொடுத்துட்டாரில்ல. கேஸ க்ளோஸ் பண்ண வேண்டியதுதான்"

(முற்றும்)

43 comments:

வெண்பூ said...

மன்னிச்சிகுங்க வெட்டி. நிஜமாவே எனக்கு புரியல. :( வேகமா கும்மி பதிவுகளை படிக்கிற மாதிரி படிச்சது ஒரு காரணமா இருக்கலாம். ஒருதடவை மெதுவா படிச்சி டிரை பண்ணி பாக்குறேன். :)

Anonymous said...

naan dhan first a.....


Kathir

வெட்டிப்பயல் said...

வெண்பூ,
அதான் சொன்னனே.. இந்த லிங் பாருங்க...

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

naan dhan first a.....


Kathir//

இல்லைங்க ரெண்டாவது :)

வெட்டிப்பயல் said...

வெண்பூ,
சொல்ல மறந்துட்டேன்.. அதுல மூணாவது பின்னூட்டம் பாருங்க :)

அதுல நாமக்கல் சிபினு இருக்கறது எல்லாம் நான் போட்ட பின்னூட்டம் தான்.. புது ப்ளாகர் மாறும் போது ஏற்பட்ட கோளாறுல மாறிடுச்சி :)

Anonymous said...

Thala ...erkanave padicha katha than ....Katha Theliva puriyuthu ...Regulara naval , kathaigal padikkiravangalikku easya puriyum....Katha puriyalan avunga ellam kthaya porumaya padikkalainu artham

Anonymous said...

எனக்கும் முதல் தடவை படிச்சதும் புரியலை.

உங்க பின்னூட்டம் படிச்ச அப்புறம் தான் புரிஞ்சது......

நல்லா இருக்கு..

:))))

Kathir.

விஜய் ஆனந்த் said...

தலைவா...முன்னாடி படிச்சப்பவே (ஹிஹி...ரெண்டாவது அட்டம்ப்ட்டுலதான்!!!) புரிஞ்சுடிச்சி...அதான் பின்னூட்டங்கள்லயே நல்லா (விம் போட்டு!!)வெளக்கிட்டீங்களே...

அவ்வ்வ்...இப்போ புரிஞ்சிடிச்சி...ஆடுபுலி ஆட்டத்துக்கு யோசிக்க(மெருகேத்த!!!) டைம் தேவ...அதனால இப்படி ஒரு பிட்டா...நாங்க கண்டுபிடிச்சிட்டோம்ல!!!

வெண்பூ said...

கதை சூப்பர் வெட்டி. கதை முதல்தடவை புரியாமல் போனதற்கான முக்கிய காரணமே கதையின் முடிச்சுகளை அவிழ்க்கும் டாக்டர்களுக்கிடையேயான உரையாடலில் மருத்துவ ஜார்கன்கள் அதிகமாக இருப்பதுதான்.(ஹி..ஹி.. அத நான் புரியலன்னு சாய்ஸ்ல விட்டுட்டேன்)

Ramya Ramani said...

இந்த கதை நான் மினிமம் 4 டைம்ஸ் படிச்சப்புறம் தான் விளங்கிச்சு.. But a Different approach kudos :)

வெட்டிப்பயல் said...

// Anbu said...

Thala ...erkanave padicha katha than ....Katha Theliva puriyuthu ...Regulara naval , kathaigal padikkiravangalikku easya puriyum....Katha puriyalan avunga ellam kthaya porumaya padikkalainu artham//

ஆமாம் அன்பு.. தொடர்ந்து நாவல் படிக்கறவங்களுக்கு இது சாதாரணமா புரியும் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

எனக்கும் முதல் தடவை படிச்சதும் புரியலை.

உங்க பின்னூட்டம் படிச்ச அப்புறம் தான் புரிஞ்சது......

நல்லா இருக்கு..

:))))

Kathir.//

ஓ.. அப்படியா?

ரெண்டு மூணு தடவை படிச்சா புரியும்னு நினைக்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

தலைவா...முன்னாடி படிச்சப்பவே (ஹிஹி...ரெண்டாவது அட்டம்ப்ட்டுலதான்!!!) புரிஞ்சுடிச்சி...அதான் பின்னூட்டங்கள்லயே நல்லா (விம் போட்டு!!)வெளக்கிட்டீங்களே...

அவ்வ்வ்...இப்போ புரிஞ்சிடிச்சி...ஆடுபுலி ஆட்டத்துக்கு யோசிக்க(மெருகேத்த!!!) டைம் தேவ...அதனால இப்படி ஒரு பிட்டா...நாங்க கண்டுபிடிச்சிட்டோம்ல!!!//

இல்லை.. இது விளம்பறத்துக்கு போடறது :)

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...

கதை சூப்பர் வெட்டி. கதை முதல்தடவை புரியாமல் போனதற்கான முக்கிய காரணமே கதையின் முடிச்சுகளை அவிழ்க்கும் டாக்டர்களுக்கிடையேயான உரையாடலில் மருத்துவ ஜார்கன்கள் அதிகமாக இருப்பதுதான்.(ஹி..ஹி.. அத நான் புரியலன்னு சாய்ஸ்ல விட்டுட்டேன்)//

ஆமா வெண்பூ...

இதை நான் படிச்சி புரிஞ்சி எழுத ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு... இதுக்கு அப்பறம் கஷ்டப்பட்டு எழுதனது தாய்ப்பால் கதை தான்... அதுக்கும் இதே மாதிரி நேரமெடுத்துச்சு :)

ஆனா இந்த கதைக்கு ரெஸ்பான்ஸ் குறைவு :) (தேன்கூடு போட்டியில இந்த கதை படுதோல்வி அடைஞ்சிது)

வெட்டிப்பயல் said...

//Ramya Ramani said...

இந்த கதை நான் மினிமம் 4 டைம்ஸ் படிச்சப்புறம் தான் விளங்கிச்சு.. But a Different approach kudos :)//

ஆஹா.. நாலு தடவை படிச்சியா??? ரொம்ப டேங்க்ஸ்மா :)

மங்களூர் சிவா said...

Oh no!!!

பேசாம பேய் கதையே எழுதியிருக்கலாம் ;)

மங்களூர் சிவா said...

இங்க படிச்சே புரிஞ்சது! பழைய லிங்குலயும் உங்க பின்னூட்டம் பாத்தேன்!

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

Oh no!!!

பேசாம பேய் கதையே எழுதியிருக்கலாம் ;)//

ஹ ஹ ஹா...

இதை தான் நான் அப்பவே சொன்னேன் :)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

இங்க படிச்சே புரிஞ்சது! பழைய லிங்குலயும் உங்க பின்னூட்டம் பாத்தேன்!//

அப்ப சூப்பர்... எங்க கதை யாருக்குமே புரியலையோனு நினைச்சேன் :)

Unknown said...

எனக்கு புரிஞ்சுது வெட்டி

நாடோடி said...

//ஆனா இந்த கதைக்கு ரெஸ்பான்ஸ் குறைவு :) (தேன்கூடு போட்டியில இந்த கதை படுதோல்வி அடைஞ்சிது)//

படுதோல்வியெல்லாம் இல்ல வெட்டி.. அப்போ இந்த கதைக்கு தான் ஓட்டு போட்டேன்னு நினைக்கிறேன்.. ஏதாவது வெளிநாட்டு சதி நடந்திருக்கும்.. :)

#BMN said...

வெட்டி, சரியான த்ரில்லிங் கதை...
ரொம்ப அழகா எல்லாத்தையும் சேர்த்து இருக்கீங்க...
வாழ்த்துக்கள்...விரைவில், உங்களிடமிருந்து துப்பறியும் நாவலை எதிர்பார்கிறேன்...
மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்...
உங்கள படைப்புகளை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டுகிறேன்...

வெட்டிப்பயல் said...

//Blogger Raja said...

எனக்கு புரிஞ்சுது வெட்டி//

ஆஹா.. மிக்க நன்றி ராஜா :)

வெட்டிப்பயல் said...

// நாடோடி said...

//ஆனா இந்த கதைக்கு ரெஸ்பான்ஸ் குறைவு :) (தேன்கூடு போட்டியில இந்த கதை படுதோல்வி அடைஞ்சிது)//

படுதோல்வியெல்லாம் இல்ல வெட்டி.. அப்போ இந்த கதைக்கு தான் ஓட்டு போட்டேன்னு நினைக்கிறேன்.. ஏதாவது வெளிநாட்டு சதி நடந்திருக்கும்.. :)//

ஹி ஹி ஹி...

அதே போட்டில என்னோட கரிக்கை சோழி நாலாவதோ அஞ்சாவதோ வந்துச்சு...

அப்ப நடந்தது வெளிநாட்டு சதி இல்லை உள்நாட்டு சதினு ஜெயிச்சவர் ஒருத்தரே பதிவு போட்டு சொல்லி பெரிய பிரச்சனை நடந்துச்சு :)

வெட்டிப்பயல் said...

// மித்ரா குட்டி said...

வெட்டி, சரியான த்ரில்லிங் கதை...
ரொம்ப அழகா எல்லாத்தையும் சேர்த்து இருக்கீங்க...
வாழ்த்துக்கள்...விரைவில், உங்களிடமிருந்து துப்பறியும் நாவலை எதிர்பார்கிறேன்...
மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்...
உங்கள படைப்புகளை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டுகிறேன்...//

மிக்க நன்றி மித்ரா குட்டி :)

இப்ப எழுதற ஆடு புலி ஆட்டமே பாக்கெட் நாவல் அளவுக்கு தான் இருக்கு... படிச்சி பாருங்க. பிடிக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் :)

பாபு said...

ரொம்ப நல்லாவே புரியுது.நல்ல தெளிவாதான் இருக்கு.
ஆடு புலி ஆட்டம் எங்கே???

Anonymous said...

good story and we can also understand easily, but you could have used names for the characters so that all can understand easily.

Anonymous said...

'A Beautiful Mind' படத்தை Christopher Nolan எடுதிருந்தா இப்படி தான் இருந்திருகுமோ...

நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள்...

Anonymous said...

"என்னங்க இப்படி பக்கத்துல இருக்குற பிரெண்ட் வீட்டுக்கு போறன்னு அக்காட்ட சொல்லிட்டு இப்ப எங்கயோ போயிட்டு இருக்கீங்க???"

"கொஞ்சம் பேசாம அமைதியா வா"

"சரி. நம்ம இப்ப எங்க போறோம்???"

"ஊட்டி"

"என்ன ஊட்டியா??? என்னங்க இப்படி பண்றீங்க"

"பின்ன டூ-வீலர்ல ஊட்டி போறோம்னு சொன்னா உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா??? அதனாலதான் பிரெண்ட் வீட்ல லன்ச்க்குன்னு சொல்லி கூப்பிட்டு வந்துருக்கேன். சாயந்திரம் 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிடலாம்... அமைதியா வா"

"இருந்தாலும் நீங்க பண்றது தப்பு.. ஃபிரெண்ட் வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு எங்க மாமாகிட்ட வண்டி வாங்கிட்டு வந்து இப்படி ஊட்டி போனாம்னு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க"

"இங்க பாரு... நான் காலேஜ் படிக்கும் போதே பிரெண்ட்ஸ் கூட நிறைய தடவை டூ-வீலர்ல ஊட்டி போயிருக்கேன். அப்பவே அவன் அவன் கேர்ள் பிரெண்ட்ஸோட வருவாங்க. நான் மட்டும் எந்த பொண்ணையும் ஏத்தாம தனியா வருவேன். அப்பவே மனசுல தீர்மானிச்சுக்கிட்டேன். கால்யாணம் ஆனவுடனே கண்டிப்பா என் பொண்டாட்டிய வண்டில கூப்பிட்டு வருவேன்னு. இப்பவே 6 மாசம் லேட். நல்ல வேளை உங்க அக்கா வீடு கோயம்பத்தூர்ல இருக்கு"

"இருந்தாலும் யாராவது பாத்து மாமாகிட்ட சொல்லிட்டா"

"அதெல்லாம் யாரும் பாக்க மாட்டாங்க. தெரிஞ்சாலும் உங்க மாமா எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. நான் என் பொண்டாட்டிய தான கூப்பிட்டு போறேன். இந்த மாதிரி பேசாம சந்தோஷமா எதாவது பேசிட்டு வா"

"நீங்க நிஜமாலுமே எந்த பொண்ணையும் கூப்பிட்டு போகலையா???"

"பார்த்தியா!!! இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் சந்தேக புத்தி போகவே போகாது"
"இப்பவே மணி 5 ஆச்சு... சீக்கிரம் போங்க. வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் 8 ஆயிடும்"

"ஏய்!!! ஐயா டிரைவிங் பத்தி என்ன நினைச்ச!!! 6:30க்கு எல்லாம் வீட்ல இருக்கலாம்"

"ஐயோ சாமி !!! நீங்க பொறுமையாவே போங்க... லேட்டா போனாலும் பிரச்சனையில்லை"

"என்ன சீக்கிரம் போன்னு சொல்லற... பொறுமையா போனு சொல்லற... மனஷன பைத்தியமாக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட"

"உங்க இஷ்டத்துக்கு ஓட்டுங்க!!! நான் எதுவும் சொல்லல"

.....

"என்னங்க இப்படி தூறல் போட ஆரம்பிச்சிடுச்சு... மழை பெய்யறதுக்குள்ள சீக்கிரம் போங்க"

"கவலைப்படாத சீக்கிரம் போய் சேந்துடலாம்..."

பத்தாவது ஹேர் பின் வளைவில் வண்டி அதன் கட்டுப்பாட்டை இழந்தது. மழையில் நனைந்து வழுவழுப்பாக இருந்த ரோட்டை பிரேக்கால் வெற்றி கொள்ள முடியவில்லை. வண்டி எதிரில் வந்த காரில் மோதியது.


"உங்க ரெக்கார்ட பாத்தா நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு"

"டாக்டர்... நீங்க சரியா புரிஞ்சிக்க மாட்றீங்க"

"இல்ல. நீங்க சொல்றது எனக்கு புரியுது. எனக்கு என்னுமோ நீங்க நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு.எதுக்கும் நான் என் சீனியர் டாக்டர்கிட்ட கன்ஸெல்ட் பண்ணி சொல்றன். அவர் ஒரு கான்ஃபரன்ஸ்க்கு டெல்லி போயிருக்கார். நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க... நான் அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிடறேன். அவர் டெஸ்ட் பண்ணா கரெக்டா இருக்கும்னு நான் ஃபீல் பண்றேன்"

"ஓகே டாக்டர். தேங்க்ஸ்"

"ஓகே. அடுத்த வாரம் பாக்கலாம்"


"என்ன சரவணன்... ஏதோ ரொம்ப சிக்கலான கேஸ்னு சொன்னீங்க!!! பாத்தா அப்படி ஒண்ணும் தெரியலையே"

"சார்... நீங்க இது என்னவா இருக்கும்னு ஃபீல் பண்றீங்க???"

"உங்க குழப்பம் என்னனு சொல்லுங்க... நான் அப்பறம் சொல்றேன்"

"நான் டெஸ்ட் பண்ணத வெச்சி பாக்கும் பொது அவருக்கு Schizophreniaவா இருக்குமோனு சந்தேகப்படறேன்"

"எத வெச்சி அப்படி சொல்றீங்க???"

"முதல் காரணம்... அவர் பேச்சு சில சமயம் சம்பந்தமே இல்லாம இருந்துச்சு"

"அடுத்து..."

"அவர ஹிப்னாடிக் ட்ரிட்மெண்ட் பண்ணும் போது அவர் ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஏதோ ஆக்ஸிடெண்ட் பண்ணியிருக்கார். அதுல வண்டி ஓட்னவர் இறந்துட்டார். அவர் மனைவி விதவையாகிட்டாங்கனு தீர்க்கமா நம்பறார். அதுவும் இல்லாம அவுங்க இவர பழிவாங்க தேடறாங்கனு பரிபூர்ணமா நம்பறார்"

"வேற..."

"அவருக்கு நிறைய உருவங்கள் நகரமாதிரி தெரிஞ்சிருக்கு... ஆனா அதெல்லாம் போட்டோல இருக்குற உருவங்கள்... இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கு"

"சரி... இப்ப உங்க சந்தேகம் என்ன??? சொல்லுங்க"

"போதுவா Schizophrenia பேஷண்ட்டுக்கு ஆடியோ ஹாலோஸினேஷன் தான இருக்கும்... இவருக்கு எப்படி விஷ்வல் ஹாலோஸினேஷன் இருக்குன்றதுதான்"

"சரவணன்!!! யு ஹேவ் ப்ருவ்ட் யுவர் பிரில்லியன்ஸி. பட் நீங்க பண்ண தப்பு நீங்க முதல்ல ஒரு விஷயத்தை திர்மானிச்சிட்டு அப்பறம் ஆராய ஆரம்பிச்சிருக்கிங்க. சரி Schizophreniaனா என்ன சொல்லுங்க?"

"அது ஒருவகையான மன நோய். அது இதனாலதான் வருதுனு சொல்ல முடியாது. ஆனால் அதனுடைய அறிகுறிகள் ஒரு விஷயத்தில் தீவிர நம்பிக்கை, மாய ஒலிகள், நேர்த்தியற்ற பேச்சு, தீவிரமடையும் நிலையில் செயல்பட முடியாத நிலை"

"சரியா சொன்னீங்க... ஆனா அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு.. அத கவனிச்சீங்களா???"

"சார்... யூ மீன் டு சே... இட்ஸ் பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ்" (Peduncular Hallucinosis)

"யு ஆர் அப்சல்யூட்லி ரைட்... பொதுவா இந்த டிஸிஸால பாதிக்கப்பட்டவங்க கண்ணுக்கு இந்த மாதிரி பல மாய தோற்றங்கள் தெரியும். முதல்ல சொன்னதுக்கும் இதுக்கும் வித்தியாசம்... இதுல மாய உருவங்கள் தெரியும் ஆனா Schizophreniaல மாய ஒலிகள் மட்டும் கேக்கும்."

"ஆனா பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ் மாய குரல் எதுவும் கேக்காதே... "

"அங்க தான் நீங்க தப்பு பண்ணறீங்க... Caplan 1980ல பண்ண முக்கியமான தீஸிஸ்ல இது இருக்கு... இந்த நோயால பாதிக்கப்பட்டங்களுக்கு சில சமயம் உருவங்களுடன் சத்தங்களும் கேட்கும்னு சொல்லி ப்ரூஃப் கொடுத்துருக்காரு"

"சார்... ஆனா அவர் பண்ண அந்த ஆக்ஸிடெண்ட் பயம்... அந்த பொண்ணு பழி வாங்குவானு அவர் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை"

"அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே பயம்னு... அவ்வளவுதான்.
அதுக்குத்தான் மனசாட்சினு பேர்"

"எனக்கு என்னுமோ அவர் Schizophreniaவாலயும் அஃபக்ட் ஆகியிருப்பார்னு இன்னமும் தோனுது சார்...
எனக்கு இருந்த அந்த ஒரு சின்ன சந்தேகத்தால தான் நான் அவர்ட எதையும் சொல்லல..."

"குட்... டெஸ்ட்க்கு எப்ப வருவார்னு சொன்னீங்க???"

"நாளைக்கு சாயந்திரம் 7 மணிக்கு அப்பாயின்மெண்ட்"

"அப்ப நாளைக்கு தெரிஞ்சிடும்..."



ஈஸிஆர் ரோட்டின் இருளை கிழித்துக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த சிகப்பு நிற மாருதி எஸ்டீம்.

வழக்கத்தைவிட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பாண்டியிலிருந்து சென்னை வரும் சொகுசு பேருந்துகளே பெரும்பாலும் அந்நேரத்தில் பார்க்க முடிந்தது.

வேகமாக சென்று கொண்டிருந்த அந்த எஸ்டீம், தன் வேகத்தை குறைத்து சாலையின் ஓரத்தில் நின்றது. காரின் ஜன்னல் திறந்தது...

"என்னங்க இந்த நேரத்திலும் லிஃப்டா???" காரிலிருந்து கேட்டவருக்கு சுமார் முப்பத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது.

"ஆமாங்க... கொஞ்சம் அவசரமா கோயம்பேடு போகனும். நீங்க சிட்டிக்குள்ள இறக்கிவிட்டுட்டீங்கனா நான் டேக்ஸி பிடிச்சி போயிக்கறேன்"

"நான் அண்ணா நகர்தான் போறேன்... அப்படியே உங்கள கோயம்பேடுல இறக்கி விட்டுடறன். ஏறுங்க!!!"

காருக்குள் ஏறிய பெண்ணிற்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது. அந்த காலத்து காஞ்சனாவை நியாபகப்படுத்தினாள்.

"என்னங்க இந்த நேரத்துல இப்படி தனியா இந்த மாதிரி இடத்துல நின்னுக்கிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன அவசரம். காலைல போகக்கூடாதா?"

"இல்லைங்க சேலத்துல இருக்கிற அப்பாக்கு உடம்பு சரியில்ல. நெஞ்சுவலினு போன் வந்துச்சு... சரி எப்படியும் ஏதாவது பஸ் பிடிச்சி போயிடலாம்னு புறப்பட்டுட்டேன்"

"பரவாயில்லைங்க இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் தைரியமா இருக்கீங்க"

"இல்லைனா பொழைக்க முடியாதுங்களே"

"அதுவும் சரிதான்... நீங்க என்ன பண்றீங்க?"

"நான் எம்.எஸ்.ஸி மைக்ரோபயலஜி படிச்சிருக்கேன். இங்க திருவான்மியூர்ல இருக்குற அன்னை ஹாஸ்பிட்டல்ல லேப் டெக்னீஷியனா இருக்கிறேன்"

"ஓ!!! அப்ப நிறைய இரத்தம் பாப்பீங்க போல இருக்கே!!!"

"ஹிம்... இரத்தம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்..."

....


காரில் ஒரு இனம் புரியாத நிசப்தம் நிலவியது.

"என்னங்க இரத்தம்னா பிடிக்குமா??? "

"ஆமாங்க... அதுவும் பாவம் செய்றவங்க இரத்தம்னா ரொம்ப பிடிக்கும்"

அவள் கையில் மின்னிய கத்தி அந்த இருளிலும் அவன் கண்களில் பயத்தை உண்டாக்கி அதன் கடமையை செய்தது.

"ஏ...என்ன செய்யப்போற நீ... நான் எந்த தப்பும் பண்ணல"

"என்ன நீ எதுவும் தப்பு பண்ணலையா??? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊட்டில நடந்தது உனக்கு நியாபகமில்ல" அவள் வார்த்தைகள் மிக கடுமையாக இருந்தன.

"ஊட்டிலயா??? நான் எந்த தப்பும் செய்யலையே"

"ஊட்டில இருந்து இறங்கற ஒரு வண்டில மோதிட்டு வந்தியே நியாபகமில்ல???" அவள் கண்கள் சிவந்திருந்தன.

"அது என் தப்பு இல்ல.. அந்த டூ-வீலர்தான் ராங் சைட்ல வந்தான்"

"இருக்கட்டும்... ரெண்டு உயிர் அடிப்பட்டு துடிச்சிட்டு இருக்கும் போது... உனக்கு வண்டிய நிறுத்தி காப்பாத்தனும்னு தோனல... இல்ல"

"போலிஸ் கேஸாகிடும்னு பயந்து நிறுத்தாம வந்துட்டேன்... என்ன மன்னிச்சிடு" அவன் வார்த்தைகள் பயத்தில் குழறின.

"அன்னைக்கு நீ மட்டும் நிறுத்தியிருந்தா நான் என் புருஷன இழந்திருக்கமாட்டேன்..."

"வேணாம் என்ன எதுவும் பண்ணிடாத... ப்ளீஸ்.... என்ன எதுவும் பண்ணிடாத ஆஆஆஆஆஆஆஆஆ.........."



"என்ன எஸ்.ஐ சார்... காலைலே ஆக்ஸிடெண்ட் கேஸா"

"ஆமாம்... நம்ம தாலி அறுக்கறத்துக்குனே வரானுங்க.
நானும் இந்த ஏரியா வேணாம்... மாத்திக்குடுங்கனா அந்த டி.எஸ்.பி வேற விடமாட்றான்... வாரத்துக்கு ஒரு பொணம் பாக்க வேண்டியதா இருக்கு"

"இன்னைக்கு எத்தன???"

"ஒன்னுதான்... தண்ணியடிச்சிட்டு ஓட்டிருப்பான்னு நினைக்கறேன். மரத்துல போய் மோதியிருக்கான்...
சரி... டாக்டர் எப்ப வருவாரு???"

"போன் பண்ணிட்டன் சார்... வந்துடுவாரு. ஷிப்ட் முடிஞ்சி அஞ்சி நிமிஷத்துக்கு முந்திதான் மூர்த்தி சார் போனாரு"

"சரி... நான் ஒரு கான்ஸ்டெபுல இங்க போட்டுட்டு போறேன். போஸ்ட்மார்டம் முடிஞ்சவுடனே ரிப்போர்ட்ட அவர்ட குடுத்துடுங்க. இன்னைக்கு வேற என் மச்சான் ஊர்ல இருந்து வரான். நான் 7 மணிக்குள்ள கறி வாங்காம போனா என் வூட்டுக்காரி என்ன வீட்லயே சேத்துக்க மாட்டா... நான் ரொம்ப நேரம் இங்க வெயிட் பண்ண முடியாது"

"சரி சார்..."

"மாரிமுத்து... நான் எஸ்.ஐதான் பேசறன். உடனே புறப்பட்டு ஜி.எச் வந்துடுங்க. ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸ். நீங்க பக்கத்துல இருந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்ட வாங்கிட்டு வந்துடுங்க.. நீங்க வர வரைக்கும் நான் இங்க வெயிட் பண்றேன்"

"என்னது!!! ஹார்ட் பீட் முதல்ல நின்னதுக்கப்பறம்தான் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கா???"

"ஆமாம் சார்... டாக்டர் அப்படிதான் சொன்னாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லயும் ஹார்ட் அட்டாக்னு தான் எழுதியிருக்காறாம். எதுக்கும் உங்கள ஒரு தடவ போன் பண்ண சொன்னாரு"

"இந்த போனை கண்டுபிடிச்சவன முதல்ல உள்ள தூக்கி போடனும்யா. எதுக்கு எடுத்தாலும் போன் பண்ண சொல்லிடுவானுங்க... அதுதான் ஹார்ட் அட்டாக்னு ரிப்போர்ட் கொடுத்துட்டாரில்ல. கேஸ க்ளோஸ் பண்ண வேண்டியதுதான்"


"என்னங்க சகல... இன்னைக்கு உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் லன்ச்க்கு கூப்பிடலயா???"

"அன்னைக்கு சாப்பிட்ட லன்ச்சே இன்னும் செரிக்காம இருக்கு"

"உங்களுக்கு மட்டுமா??? எனக்கும்தான்... நீங்க ஏன் வண்டி சாவிய குடுத்திங்கனு என்ன புடிச்சி திட்டிக்கிட்டே இருந்தா"

"பின்ன... இவரே யூஸ் பண்ணாத வண்டிய குடுத்தா திட்டாம என்ன செய்வாங்க??"

"பரவால விடுக்கா... எல்லாம் இவர சொல்லனும்.
இப்ப நெனச்சாலும் எனக்கு கொல நடுங்குது.
நல்ல வேள புண்ணியவான் ஒருத்தன் கார நிறுத்தி ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனான்... இல்லனா... நெனிச்சுப்பாக்கவே பயமா இருக்கு"

வெட்டிப்பயல் said...

//பாபு said...

ரொம்ப நல்லாவே புரியுது.நல்ல தெளிவாதான் இருக்கு.//

இதை புரியலைனு நிறைய பேர் சொன்னாங்க :)

//
ஆடு புலி ஆட்டம் எங்கே???//

போட்டாச்சு :) முடிச்சாச்சி :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

good story and we can also understand easily, but you could have used names for the characters so that all can understand easily.//

அதுக்கு தான் பேர் அதிகம் வைக்காம எழுதினேன் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

'A Beautiful Mind' படத்தை Christopher Nolan எடுதிருந்தா இப்படி தான் இருந்திருகுமோ...

நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள்...//

ஆஹா.. நான் "A Beautiful Mind" பாக்கலயே :(

Christopher Nolan யாருனு எனக்கு தெரியாது :))

வெட்டிப்பயல் said...

அனானி நண்பரே,
அட்டகாசம்.. அதே கதையை எப்படி மாத்தி போட்டா சுலபமா புரியும்னு பண்ணிட்டீங்க :)

Syam said...

எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது...அலோ சரக்கு எல்லாம் ரீசன் இல்ல...நெம்ப லேட் ஆகிடுச்சு...நெக்ஸ்ட் டுமாரோ மீட் பண்றேன் :-)

Anonymous said...

I think I understood the story in the fist attempt :D
new approach for a story!good one anna

Prabu Raja said...

Why Namakkal Sibi wrote all your comments in this link? http://vettipaiyal.blogspot.com/2006/09/3.html

YET ANOTHER HALLUCINATION? :-)

X said...

Hi,
Idhu dhaan naan unga blog la mudhal muraiyaaga ezhudum comment. migavum nandraaga ezhudhugireergal.

Indha kadhai konjam Quentin Tarantino stylil irukkiradhu... nalla muyarchi.

PS: aadu puli aattam kadhai pramaadham! :)

வெட்டிப்பயல் said...

//Syam said...

எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது...அலோ சரக்கு எல்லாம் ரீசன் இல்ல...நெம்ப லேட் ஆகிடுச்சு...நெக்ஸ்ட் டுமாரோ மீட் பண்றேன் :-)//

:)

வெட்டிப்பயல் said...

//துர்கா said...

I think I understood the story in the fist attempt :D
new approach for a story!good one anna//

danksma Thangachi :)

வெட்டிப்பயல் said...

//Prabu Raja said...

Why Namakkal Sibi wrote all your comments in this link? http://vettipaiyal.blogspot.com/2006/09/3.html

YET ANOTHER HALLUCINATION? :-)//

அதான் முன்னாடியே சொல்லிட்டனே

// வெட்டிப்பயல் said...

வெண்பூ,
சொல்ல மறந்துட்டேன்.. அதுல மூணாவது பின்னூட்டம் பாருங்க :)

அதுல நாமக்கல் சிபினு இருக்கறது எல்லாம் நான் போட்ட பின்னூட்டம் தான்.. புது ப்ளாகர் மாறும் போது ஏற்பட்ட கோளாறுல மாறிடுச்சி :)//

:)

வெட்டிப்பயல் said...

// Pradeep said...

Hi,
Idhu dhaan naan unga blog la mudhal muraiyaaga ezhudum comment. migavum nandraaga ezhudhugireergal.

Indha kadhai konjam Quentin Tarantino stylil irukkiradhu... nalla muyarchi.

PS: aadu puli aattam kadhai pramaadham! :)//

Quentin Tarantino யாருனே எனக்கு தெரியாதே :(

இருந்தாலும் பாராட்டிற்கு நன்றி :)

Prabu Raja said...

//
YET ANOTHER HALLUCINATION? :-)//

அதான் முன்னாடியே சொல்லிட்டனே
//

OH! I MISSED THAT....

THANKS.. :-)

X said...

@Vetti:
Quentin Tarantino oru Hollywood thiraippada iyakkunar. Pulp Fiction, Reservoir Dogs pondra pugazh petra thiraippadangalai iyakkiyavar.