தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, June 25, 2008

சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு

ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

Monday, June 23, 2008

கவுண்டரும் நடிகர்களின் டைரக்டர் அவதாரமும்

வீட்டைவிட்டு வெளிய வந்தே பல நாட்கள் ஆன கடுப்பில் யாருக்கும் தெரியாமல் செந்திலுக்கு போன் போட்டு வர சொல்லி, வெளியே சாப்பிட கிளம்புகிறார் கவுண்டர். பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் ஓரமாக ஒரு டேபிளில் உட்கார்ந்து ஆர்டர் செய்கிறார்கள் இருவரும்.

க: என்னடா மண்டையா எப்படி இருக்க?

செ: என் நிலைமை ட்ராவிட் மாதிரி ஆகிடுச்சுண்ணே. கங்குலிக்கிட்ட திட்டு வாங்கிட்டே இருந்தப்பவாது பரவாயில்லை. இப்ப தோனி வந்தவுடனே டீம்லயே சேர்த்துக்க மாட்றாங்க. அந்த மாதிரி உங்ககிட்ட மிதி வாங்கிகிட்டாவது நடிச்சிட்டு இருந்தேன். இப்ப நீங்க இல்லாம என் நிலைமையை பார்த்தீங்களாண்ணே.

க: சரி விடு. பீல் பண்ணாத.

பக்கத்து டேபிலில் இருந்து கேட்ட குரல்கள் மிகவும் பரிட்சையமாக தெரிந்ததால் திரும்பி பார்க்கிறார்கள். கோடம்பாக்கமே அங்கே ஆஜராகி இருந்ததை பார்த்து ஜெர்க்காகிறார்கள்.

க: ஹாய் ஹீரோஸ். என்ன இங்க எல்லாருமே சேர்ந்து வட்ட மேஜை மாநாடு நடத்திட்டு இருக்கீங்க? ஹிந்தி படம் மாதிரி எல்லாரும் சேர்ந்து ஒரே படத்துல நடிக்க போறீங்களா?

விஜய்: ண்ணா. வாங்கண்ணா. பார்த்து ரொம்ப நாளாச்சி. ரொம்ப இளைச்சி போயிருக்கீங்க. ரெண்டு பாட்டில் குலுகோஸ் ஏத்தினா பழைய படி ஜம்முனு ஆகிடுவீங்கண்ணா.

க: டேய் வயசானவனுக்கும் உடம்பு சரியில்லாதவனுக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தான் பாரு. அவனை
சொல்லனும்டா. நான் இங்க இருந்தா ரணகளம் ஆகிடும். நான் கிளம்பறேன்.

விஜய்: ண்ணா. என்னங்கண்ணா இப்படி சொல்லிட்டீங்க? நாங்க இங்க ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கோம்ணா. நீங்க தான் எங்களை எல்லாம் நல்லா வழி நடத்தணும்.

க: சரி. ஹெல்ப்னு கேட்டுட்டா நாம எல்லாம் கர்ணன் மாதிரி. மேட்டரை சொல்லு

விஜய்: ண்ணா. S.J சூர்யால ஆரம்பிச்சி கரு.பழனியப்பன் வரைக்கும் நடிக்க வந்துட்டாங்க. போற போக்குல தமிழ்நாட்ல எங்களை எல்லாம் வெச்சி டைரக்ட் பண்ண ஆளே இல்லாம போயிடும் போலிருக்கு. அதுக்கு தான் ஒரு முடிவெடுக்கணும்னு இங்க கூடியிருக்கோம்.

க: ஒரு விதத்துல தமிழ் நாட்டு மக்கள் தப்பிச்சிட்டாங்கனு சந்தோஷப்பட்டாலும் அந்த கலர் மண்டையன் எல்லாம் நடிக்கறதை பார்க்கறது அவுங்களுக்கு தண்டனை தான். சரி, அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க. ஹாலிவுட் டைரக்டர்ஸை யாரையாவது இம்போர்ட் பண்ண போறீங்களா?

விஜய்: ண்ணா. என்னங்கண்ணா இப்படி சொல்றீங்க. அவுங்களுக்கு எல்லாம் திருப்பாச்சி மாதிரி சூப்பர் படம் எடுக்க தெரியுமா? அதான் நாங்களே படம் டைரக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.

க: டேய் குருவி மண்டையா. நீ நடிச்சாலே மக்கள் தாங்க மாட்டாங்க. நீ டைரக்ட் பண்ணா எப்படிடா தாங்குவாங்க? கதையை எங்க இருந்து பிடிப்ப?

விஜய்: என்னங்கண்ணா. இதுக்கூட தெரியாம இருக்கீங்க. இதுக்கூட யோசிக்காமலா முடிவெடுப்பேன். போன வாரமே பழைய தெலுகு படமெல்லாம் பார்த்தேன். 'டாக்டர்' NTR நடிச்ச "ராமுடு பீமுடு"வை ரீ மேக் பண்ணலாம்னு இருக்கேன்ணா. படம் கண்டிப்பா கில்லி மாதிரி ஓடும்னா.

க: அதான்னே. ரீமேக் படத்தை எந்த டைரக்டர் டைரக்ட் பண்ணா என்ன? அது என்னடா கில்லி மண்டையா அதுல அப்படி ஒரு சூப்பர் கதை?

விஜய்: ண்ணா. தமிழ்நாட்ல அப்படி ஒரு கதையோட எந்த படமும் இது வரைக்கும் வந்ததில்லை. அப்படி ஒரு கதை.

செந்தில் : அண்ணே. அந்த கதையை கொஞ்சம் சொல்ல சொல்லுங்கண்ணே. எனக்கு கேக்கணும்னு ஆசையா இருக்கு.

கவுண்டர்: டேய் அவிஞ்ச மண்டையா அவனுக்கு அவன் படத்து கதையே தெரியாது. இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான். அதுக்கே அவனுக்கு டபுல் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கணும். இவன் சொல்றானு கதையை கேக்கனும்னு சொல்றீயே.

செந்தில்: அண்ணே. நாம கதைல ஏதாவது சேஞ்ச் பண்ணி அப்படியே ஒரு சீன்ல நுழைஞ்சிடலாம்ணே.

கவுண்டர்: சரி விடு. ஏம்பா டாக்டர் மண்டையா. குழந்த புள்ள ஆசைப்படுது இல்லை. அப்படியே அந்த கதையை கொஞ்சம் சொல்லேன்.

விஜய் : ண்ணா. இதுல ஹீரோ டபுல் ஆக்ட்ண்ணா. ரெட்டை பிறவிங்க. ஒருத்தர் அக்கா வீட்ல பணக்கரணா, கோழையா வளர்றாரு. இன்னொருத்தர் பாட்டிக்கிட்ட வீரமா வளர்றார். கோழையா வளர்றவர் அவுங்க மாமாக்கிட்ட பயங்கரமா அடி வாங்கிட்டு வீட்டை விட்டு வெளியேறிடறாரு. அதுக்கு அப்பறம் ஆள் மாறாட்டம். அதுல பாருங்களேன், அந்த வீரமா இருக்கறவர் அவுங்க மாமாவை சவுக்கால அடிப்பாரு பாருங்க. அப்படி இருக்கும். இதுல இன்னொரு ஸ்பேஷாலிட்டி என்னன்னா வீரமா இருக்கறவருக்கு குத்து பாட்டுண்ணா, கோழையா இருக்கறவருக்கு மெலடி பாட்டுண்ணா. தமிழ் நாடே அலற போகுது பாருங்கண்ணா.

கவுண்டர்: டேய் போக்கிரி மண்டையா, இந்த படம் வந்து தமிழ் நாடே அலறிடுச்சிடா. நான் ஆணையிட்டால்னு MGR பாடின பாட்டை இன்னைக்கும் எல்லா எலக்ஷனுக்கும் போட்டுட்டு தான்டா இருக்காங்க.

விஜய்: ஆஹா. இதை MGR ஏற்கனவே நடிச்சிட்டாரா? அப்ப நான் என்ன பண்ண?

கவுண்டர்: நீ வேணா 'டாக்டர்' ராஜசேகர் நடிச்ச "இது தான்டா போலிஸ்" படத்தை ரீ-மேக் பண்ணு.

விஜய்: ண்ணா. சூப்பருங்கண்ணா. அவரும் டாக்டர் நானும் டாக்டர். அட்டகாசமா ப்ரஃபஷன் மேட்ச் ஆகுங்கண்ணா. இன்னைக்கே DVD வாங்கிடறேண்ணா.

சொல்லிவிட்டு விஜய் அங்கிருந்து எஸ் ஆகிறார்.

கவுண்டர் அடுத்த நபரை பார்க்கிறார்.

கவுண்டர்: ஏன்டா இந்த மெட்ராஸ் வெயில்ல கருப்பு கோர்ட், கருப்பு கண்ணாடி போட்டுட்டு வந்திருக்க?

அஜித்: ஏ! நா இந்த கர்ப்பு கலர் கன்னாடியும் கோர்ட்டும் போட்டு நட்ச்சா தான் படம் ஓடுது. அதான் இப்படி வந்துருக்கேன்.

கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. அது சரி நீ என்னா படம் டைரக்ட் பண்ண போற?

அஜித்: ஏ நான் தன் இ ஆள் இல்ல. முன்னூறு அசிஸ்டண்ட் டைரக்டர்களின் மூச்சு

கவுண்டர்: நீ பேசறது ஒரு பேச்சு. இதுல நீ மூன்னூறு பேரோட மூச்சா? உதை வாங்கறதுக்கு முன்னாடி ஓடிப்போ.

அஜித்: நான் முழுச்சிட்டேன். இதோ வரேன்.

சொல்லிவிட்டு எஸ் ஆகிறார்.

கவுண்டர்: அடப்பாவி. அப்ப இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?

செந்தில்: அண்ணே. அவர் முப்பது படம் தூங்கிட்டே நடிச்சிருக்காரு. இப்ப தான் அட்டகாசம் படத்துல எழுந்திரிச்சாரு.

கவுண்டர் : டேய் ஆஃப் பாயில் மண்டையா. அது பஞ்ச் டையிலாக்காம்.

அடுத்து கவுண்டர் கண்ணில் சிக்குகிறார் ஜெயம் ரவி.

கவுண்டர்: டேய் வளர்ந்து கெட்டவனே. நீ என்னடா இங்க பண்ணிட்டு இருக்க.

ஜெ.ரவி: இவுங்க பண்ற வித்தியாசத்தையே எங்க குடும்பத்துல நாங்க வித்தியாசமா பண்ண போறோம்?

கவுண்டர்: அப்படி என்னடா வித்யாசமா பண்ண போறீங்க? சொந்தமா கதை எழுதி நடிக்க போறீங்களா?

ஜெ.ரவி: அதெல்லாம் வித்யாசமாண்ணா? நாங்க அதைவிட வித்யாசமா பண்ண போறோம். அதாவது ஒரு நல்ல தெலுகு படத்தை ரீ மேக் பண்ண போறோம்.

கவுண்டர்: டேய் ரீ-மேக் மண்டையா என்னை டென்ஷனாக்காத.

ஜெ.ரவி: நான் இன்னும் சொல்லியே முடிக்கலைண்ணா. இதுல வித்யாசம் என்னன்னா, படத்தை நான் டைரக்ட் பண்ணறேன். எங்க அண்ணன் ஹீரோவா நடிக்கிறார். இன்னும் நல்ல படம் எதுவும் வராததால நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். எப்படி எங்க வித்தியாசம்?

சொல்லிவிட்டு ஒரு பக்க புருவத்தை மட்டும் உயர்த்தி காட்டுகிறார்.

கவுண்டர்: டேய் ஒழுங்கா ஓடிப்போயிடு. இந்த பக்கமே வராத.

அவர் அருகிலிருக்கு தனுஷை பார்க்கிறார் கவுண்டர்.

கவுண்டர் : ஏன்டா நீயும் உங்க அண்ணனை நடிக்க வெச்சி படம் எடுக்க போறியா? வேணாம்டா தமிழ் நாட்டு மக்கள் பாவம்டா. விட்டுடுங்கடா.

தனுஷ் : இல்லைங்கண்ணா. நான் தான் ஹீரோவா நடிக்க போறேன். கதை ரெடி. படத்துக்கான டைட்டில் தான் யோசிச்சிட்டு இருக்கேன்.

கவுண்டர்: ஓ. இந்த சின்ன உடம்புக்குள்ள இவ்வளவு திறமையிருக்கா. எங்க கதை சொல்லு பார்ப்போம். நான் வேணா டைட்டில் சொல்றேன்.

தனுஷ் : ரெண்டு அரியர் வெச்ச ஒரு பையன் இருக்கான். அவனுக்கு தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு. வேலை தேடாம தறுதலையா சுத்திட்டு இருக்கான். அவுங்க அப்பா எப்பவுமே அவனை தண்ட சோறுனுதான் திட்டிட்டு இருப்பாரு. திடீர்னு ஒரு நாள் அப்பாக்கும் மகனுக்கும் பிரச்சனையாகிடுது. உடனே மகன் பொறுப்பாகி வேலை தேடி வேலைல சேர்ந்திடறான். அப்படியே அவன் டாவடிக்கிற பொண்ணும் செட் ஆகிடுது. அப்படியே ஒரு குத்து பாட்டு. ரெண்டு ஃபைட்டு. இதுக்கு டைட்டில் என்ன வைக்கலாம்னு தெரியல. படிக்காதவன், அண்ணாமலை, தளபதி, பாட்ஷா இதுல ஏதாவது ஒண்ணு வைக்கலாம்னு இருக்கேன்.

கவுண்டர் : "பாபா"னு வை படம் பிச்சிக்கிட்டு ஓடும். டேய் ஓணான் மண்டையா ஒரே படத்து கதையை வெச்சிக்கிட்டு பேர் மட்டும் மாத்தி போட்டு மக்களை ஏமாத்தலாம்னு பார்க்காதீங்கடா. திருந்துங்கடா...

சொல்லிவிட்டு கவுண்டர் திரும்பி பார்க்கிறார். எல்லாரும் அந்த இடத்திலிருந்து எஸ் ஆகியிருந்தார்கள்.