தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, September 16, 2011

வெட்டிப் பேச்சு - 09/16/2011

2011ல் ஒரு பதிவு கூட இன்னும் எழுதலயேனு தோணுச்சு. சரி எப்பவும் போல ஏதாவது ஒரு மொக்கைப் பதிவு எழுதி ஜீப்ல ஏறிடுவோம்னு முடிவு பண்ணியாச்சு.

.....

நியூ யார்க் அளவிற்கு ஜார்ஜியாவில் வேலைப் பளு இல்லை. அதே போல அங்கு இருந்து அளவிற்கு கட்டுப்பாடும் இல்லை. ஓரளவு ஜாலியாவே வாழ்க்கை போகுது.

நியூ யார்க் விட்டு நாம வந்த நேரம், நில அதிர்வு, புயல், வெள்ளம்னு அங்க நிறைய லீவ் போல. ங்கொய்யாலே, அவன் அவன் கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டா நீ ஜாலியா லீவு கிடைக்கலையேனு ஃபீல் பண்றியானு நீங்க திட்டலாம். என்ன பண்ண, மழைப் பெஞ்சா பள்ளிக் கூடம் லீவ்னு கொண்டாடியே பழக்கப் பட்டாச்சு.

அதுவும் நான் பத்தாவது படிக்கும் போது (1997) கடலூர்ல அடிச்ச புயல்ல என் அரையாண்டு பரிட்சையே ஒரு மாசம் தள்ளி போச்சு. சாப்பாடு போட முடியாம ஹாஸ்டல்ல இருந்து எல்லாரும் ஊருக்கு போங்கனு சொல்லிட்டாங்க. கஷ்டப்பட்டு பஸ் புடிச்சி போனோம். கண்ணு முன்னாடியே ரோடெல்லாம் அடிச்சிட்டு போச்சு. பாலம் எல்லாம் உடைஞ்சி, சூப்பரா இருந்துச்சு.

.....

பள்ளிக் கூடம்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது. சம்ச்சீர் கல்வி எல்லாம் நாம படிக்கும் போதே வந்திருக்க கூடாதானு ஒரே ஏக்கம். மூணு மாசமா பசங்க ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு எதுவும் பாடம் படிக்காம, ஜாலியா கதை பேசிட்டு, அரட்டை அடிச்சிட்டு வந்தாங்களாம்.

ப்ளாக் எல்லாம் படிச்சி ஒரு சமுதாய புரட்சியாளரா உங்களுக்கு கோபம் வரலாம். ஆனா நான் ஸ்கூல் படிக்கும் போது இப்படி இருந்தா ஜாலியா இருந்திருப்பேன். சமச்சீர் வேலை நான் இந்தியா வந்த பிறகு நடக்கணும்னு திருப்பதி பாலாஜியை வேண்டியிருக்கிறேன். பார்க்கலாம்.

......

போன முறை இந்தியா வந்த பொழுது நல்ல படியாக கிரஹப் பிரவேசம் முடிந்தது. வீடு வாடகைக்கு விட்டு வந்தது மட்டும் தான் ஒரு வருத்தம். எப்படியும் ஆறு மாதத்தில் கோவை வந்து செட்டிலாக வேண்டும். பார்க்கலாம்.

......

விஜய் டீவி புகழ் சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். சிவா மனசுல சக்தி மாதிரி படங்கள் அவருக்கு நன்றாக செட் ஆகும் என்பது என் எண்ணம். டீவியில் காம்பயரிங்கை நிறுத்தி அவர் சினிமாவில் சீரியசாக முயற்சி செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். இல்லைனா தெலுகுல சித்தார்த் நடித்த படங்கள் கூட இவருக்கு செட் ஆகும்.

இப்ப உன்கிட்ட யார் கேட்டானு நீங்க நினைக்கலாம். ஏதோ சொல்லணும்னு தோணுச்சு அவ்வ‌ள‌வு தான்.

......

இந்த பதிவு எழுத பத்து நிமிஷம் கூட ஆகலை. "ஆமா இவர் பெரிய காவியம் எழுதிட்டாரு, அப்படியே ஃபீல் பண்றாரு. இதுக்கு பத்து நிமிஷமே அதிகம்"னு நீங்க நினைக்கலாம். ஆனா மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்னனா, இப்படி வாரத்துல ஒரு பத்து நிமிஷமாவது இந்த வலைப்பதிவுக்கு ஒதுக்கலாம்னு ஒரு முடிவு பண்ணிருக்கேன். பார்க்கலாம்.

17 comments:

.:dYNo:. said...

>>>ஒரு முடிவு பண்ணிருக்கேன்<<<

வாட் எ டெரர் ;))

middleclassmadhavi said...

Ippa samacheer book vandhu, aduThtha vaaram quarterly exam!

Interesting reading

ILA (a) இளா said...

>>>ஒரு முடிவு பண்ணிருக்கேன்<<<

வாட் எ டெரர் ;))

Rereattee

SurveySan said...

:)

வெட்டிப்பயல் said...

//.:dYNo:. said...
>>>ஒரு முடிவு பண்ணிருக்கேன்<<<

வாட் எ டெரர் ;))//

ஏன் பாஸ் நாங்க எல்லாம் எழுதக் கூடாதா? :)

வெட்டிப்பயல் said...

//middleclassmadhavi said...
Ippa samacheer book vandhu, aduThtha vaaram quarterly exam!
//
வரட்டும். எப்படியும் யாரும் பாஸ் ஆக முடியாது இல்லை :)

//

Interesting reading
//

நன்றி :)

வெட்டிப்பயல் said...

//ILA(@)இளா said...
>>>ஒரு முடிவு பண்ணிருக்கேன்<<<

வாட் எ டெரர் ;))

Rereattee
//

????

முரளிகண்ணன் said...

welcome

கைப்புள்ள said...

எழுத பத்து நிமிஷம் தான் ஆச்சா? :((((

பதிவு ஜாலியா இருந்துச்சு :)

Santhose said...

Vetti,

Welcome back. When I browse TM during your active period it took at least 1hr to read (most active and interesting blockers only) at that time.

But now the blockers who got more hits (???? Namuku namaa) are horrible and it took only 5 mints for me to read all the postings in TM.

G.Ragavan said...

வாங்க வாங்க. ஒரு வாரமா நான் நெனச்சிட்டிருந்தது. நீங்க செஞ்சிட்டீங்க. எனக்கும் உந்துதல் ஆகி புதுசா ஒரு வலைப்பு தொடங்கீட்டேன். :)

http://gragavanblog.wordpress.com

பெருசா எழுதுறமோ இல்லையோ. எழுதனும். எழுத்து உள்ள இருக்கு. வெளிய வராதப்போ உள்ள பயங்கர ஆட்டம் போடுது. அத வெளிய எடுத்து விட்டுருவோம்னு இந்தப் புது வலைப்பூ.

சிவகார்த்திகேயன் சினிமாவில்... சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நல்ல பெயர் கிடைக்கலாம்.

வெட்டிப்பயல் said...

//SurveySan said...
:)//

:)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
welcome//

Thanks Boss :)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...
எழுத பத்து நிமிஷம் தான் ஆச்சா? :((((
//
இது வெட்டிப் பேச்சு தானே. கதையா இருந்தா 5-6 மணி நேரம் ஆகியிருக்கும்.

//
பதிவு ஜாலியா இருந்துச்சு :)
//
நன்றி தல :)

வெட்டிப்பயல் said...

//Santhose said...
Vetti,

Welcome back. When I browse TM during your active period it took at least 1hr to read (most active and interesting blockers only) at that time.

But now the blockers who got more hits (???? Namuku namaa) are horrible and it took only 5 mints for me to read all the postings in TM.//

Thanks Santhose...

Even I visited TM after a long time and was really surprised. Twitter and Buzz are the happening place now.

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...
வாங்க வாங்க. ஒரு வாரமா நான் நெனச்சிட்டிருந்தது. நீங்க செஞ்சிட்டீங்க. எனக்கும் உந்துதல் ஆகி புதுசா ஒரு வலைப்பு தொடங்கீட்டேன். :)

http://gragavanblog.wordpress.com

பெருசா எழுதுறமோ இல்லையோ. எழுதனும். எழுத்து உள்ள இருக்கு. வெளிய வராதப்போ உள்ள பயங்கர ஆட்டம் போடுது. அத வெளிய எடுத்து விட்டுருவோம்னு இந்தப் புது வலைப்பூ.
//
சூப்பர்...

அப்ப இனிமே சரவெடி தான்னு சொல்லுங்க :)

//
சிவகார்த்திகேயன் சினிமாவில்... சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நல்ல பெயர் கிடைக்கலாம்.//

ஆமாம். அது தான் முக்கியம். நல்ல டைமிங் சென்ஸ் உள்ளவர். சரியான படங்களை அவர் தேர்ந்தெடுப்பதில் தான் அவரது திரை வாழ்க்கை உள்ளது :)

Arun said...

siva karthikeyan nadikum padam peru " Marina". directed by pandiraj