தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, April 13, 2007

புத்தாண்டு சுடர்

சுடர் என் கைகளில் வந்த நாளன்று அதை கொடுத்தவர் யாரென்று எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயலவில்லை. ஆனால் அது தெரிந்து கொண்ட பொழுது மனம் கனக்கவே செய்தது. அவர் ஆன்மா சாந்தியடையவும், அவர் இழப்பை அவரது குடும்பம் தாங்கி கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

மகேந்திரன் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னளவிளான பதில்கள்...

1. திராவிடன் என்பவன் யார் என்ற உங்கள் நெடுநாள் சந்தேகம் தீர்ந்ததா?

இந்த கேள்விக்கு பதில் ஆம்/இல்லை. கேள்விகள் தான் நிறைய இருக்கு.
கேள்வி கேட்டாலே தப்பா நினைக்கறாங்கனு நான் அதிகமா கேக்கறதில்லை. இப்பவும் மனசுல இந்த கேள்விகள் எல்லாம் இருக்கு.
1. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லாம் திராவிட நாடுகளா?
2. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் அவ்வாறு சொல்லி கொள்வதில்லை?
3. பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்னும் பட்சத்தில், வட இந்தியாவில் உள்ள பிராமணர் அல்லாத சமூகம் என்ன இனம்?

இன்றைய என்னுடைய புரிதல். பார்ப்பணியத்திற்கு (பிறப்பால் மட்டுமே தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் குணம். பிறாப்பாலே தனக்கு எல்லா தகுதிகளும் வந்துவிடுகிறது என்று நினைக்கும் அகம்பாவம், ஆணவம் நிறைந்த கூட்டத்திற்கு) எதிராக பெரியாரால் வளர்க்கப்பட்டதே திராவிடம்.
ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.

-----------------------------------------------------------------------------------

2. அனானி கழக தோழர்களால் வலைப்பூ உலகம் ஏற்றம் அடைகிறதா இல்லையா?

செந்தழல் ரவி போஸ்டா இல்லை லக்கி லுக் போஸ்டானு ஞாபகம் இல்லை இந்த கமெண்டை ஒரு 3, 4 மாசத்துக்கு முன்னாடி பார்த்தேன்... பொன்ஸ் அக்காவை பாரதி கண்ட புதுமை பெண்ணு சொல்லி இருந்தாரு. அதுக்கு உடனே ஒரு அனானி "தலைவா நீ பாரதி கண்ட புதுமை பையன்"னு சொல்லி போட்டிருந்தாரு. இதை அடிக்கடி நினைச்சி சிரிச்சிக்குவேன். ரொம்ப சாதாரணமா ரவுஸ் விட்டிருந்தாரு ஒரு அனானி.

ப்ளாகர் எப்படி ஆரம்பிக்கறது, ஆரம்பிச்சி என்ன எழுதறதுனு தெரியாதவங்க அனானிமஸா பின்னூட்டம் போடறாங்க. அனானிமஸா இருக்கவங்க படிக்கக்கூடாதுனு சொல்லி சட்டம் போட்டா இங்க யாராவது எழுதுவாங்களா??? ப்ளாக் எழுதறவன் நம்மல பாராட்டி பின்னூட்டம் போட்டா அதுக்கு பல காரணம் இருக்கலாம். முக்கியமா அடுத்து நமக்கும் ஒரு பின்னூட்டம் இவன்கிட்ட இருந்து வரும்னு கூட இருக்கலாம். ஆனா அனானியா ஒருத்தர் போடும் போது அந்த மாதிரி எதுவும் சொல்ல முடியாது.

பிரச்சனை சில சமயம் அனானியா அசிங்கமா பின்னூட்டம் போடறதுதான். வலைப்பதிவுளையும் அசிங்கமா எழுதறவங்க இருக்காங்க. அவுங்களால எல்லா வலைப்பதிவையும் தடை செய்ய சொல்லலாமா? எனக்கு ப்ளாக் இல்லாதப்ப நானே அனானியா கமெண்ட் போட்டிருக்கேன். செல்வன் பதிவுகளில் போட்டிருக்கிறேன் (கதைக்கு தான்.. ஆனா அவர் அதை முடிக்கவே இல்லை :-(()

அனானி தோழர்கள் தான் வலைப்பூ உலகின் ஏற்றத்திற்கு பெரும் காரணம். இதை நான் முழுதும் நம்புகிறேன்.

-----------------------------------------------------------------------------------------

3.உங்களுக்கு நெருக்கமானவர் ஒரு போலி என்று அறிய வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன ?

நான் கொஞ்சம் ஓட்ட வாய். யார் எது கேட்டாலும் மனசுல இருக்கறத சொல்லிடுவேன். அதனால என்கிட்ட யார் பேசினாலும் மத்தவங்களை பத்தி சொல்லிடுவேன். அப்படி என்கிட்ட இருந்து ஒரு இன்ஃபர்மேஷனை வாங்கி அவரை அசிங்கப்படுத்தினால் கண்டிப்பாக அவரை மன்னிக்க மாட்டேன். அடுத்து பேசவும் மாட்டேன். ரொம்ப ரொம்ப வருத்தப்படுவேன்.

என்கிட்ட இருந்து என்னை பற்றி இன்ஃபர்மேஷன் வாங்கிட்டு என்னை மட்டும் அசிங்கமா திட்டி எழுதினா ஏன்டா நாயே இப்படி பண்ணனு உரிமையா கேட்பேன். என்னை திட்றதுனா நீ பேசும் போதே திட்லாம்டா. தனியா வேற பேர்ல திட்டினா உன் மனசுக்கே பின்னாடி கஷ்டமா இருக்கும்டானு சொல்லுவேன். சண்டை போடறதுக்கு நான் எப்பவுமே ரெடி தான். நான் எந்த கருத்து சொன்னாலும் பொதுவா எனக்கும் ஜி.ராக்கும் சண்டை தான் வரும். இருந்தாலும் அவர் என்னுடைய ஒரு சிறந்த வழிக்காட்டி. அந்த மாதிரி ஜாலியாவே சண்டை போட்டுக்கலாம்டானு சொல்லுவேன்.

அவரே ஒரு பெயரில் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வேறு பெயரில் பலமாக எதிர்ப்பு தெரிவித்தால் (உனக்கு என்ன பெருசா கருத்து இருக்கு? ஆதரிக்கவும் சண்டை போடவும்னு சொல்லப்படாது) சூப்பர்டா மச்சி... கலக்கறனு சொல்லுவேன். சில சமயம் நானே என் கருத்துக்கு பலமான எதிரி. அதனால இது சாதரணம்னு விட்டுடுவேன்.

வேற யாரையாவது அசிங்கமா திட்டியோ இல்லை அவுங்க குடும்பத்தை பத்தி திட்டியோ எழுதினான்னா கண்டிப்பா அவன்ட பேசி அதை நீக்க சொல்லுவேன். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும்னு சொல்லுவேன். கோழைகள் தான் அந்த மாதிரி செய்வாங்க. வீரனா எழுந்து சண்டை போடுனு சொல்லுவேன். என்ன சொல்லியும் கேக்கலைனா போட வெண்டரு உன்கிட்ட இனி பேசவே போறதில்லைனு சொல்லி விலகிடுவேன். ஆனா அது கடைசி வரை முடியாத பட்சத்தில்...

---------------------------------------------------------------------------------------------

4.உயர்கல்வியில் இடஒதுக்கீடும் க்ரீமி லேயரும் எல்லோருக்கும் புரியும் விதமாக விளக்கவும்

ஆஹா... சொல்றேன்
முதலில் இட ஒதுக்கீடு எதுக்குனு என்னுடைய புரிதலை சொல்லிடறேன்...
இன்னைக்கு என்னதான் சாதி பார்க்க கூடாதுனு நம்ம சவுண்ட்விட்டாலும் நம்மலையும் அறியாம சாதி பார்க்கத்தான் செய்யறோம். ஒரு உதாரணத்திற்கு ஒரு X சாதில இருக்கறவங்களே அதிக அளவுல வக்கீலா இருக்காங்கனு வைங்க. ஒரு சமயமில்லனா ஒரு சமயத்துல அந்த`சாதிக்காரன் சாதாரணமா தப்பு பண்ணி சுலபமா தப்பிக்கலாம். தப்பிக்கலாம்னு சொல்றத விட அவனுக்கு செக்யுரிட்டி கொஞ்சம் அதிகம். அதே மாதிரி`டாக்டர், போலிஸ் இப்படி ஒவ்வொரு துறையும் சொல்லலாம்.

ஒரு ஊர்ல போலிஸ்காரர்களெல்லாம் ஒரே சாதியிலிருந்தால் அல்லது மேல் அதிகாரிகள் எல்லாம் ஒரே சாதியிலிருந்தால் மற்ற சாதியிலிருப்பவருக்கு நீதி கிடைப்பதில் பிரச்சனையிருக்கும்.

எல்லாருக்கும் மனசுல நம்ம சாதிக்காரனு ஒரு பாசம் இருக்கு. சிலர் இல்லைனு சொல்லலாம். ஆனா சுத்தி இருக்கவங்க அந்த மாதிரி சிந்திக்க வெச்சிடுவாங்க. (ஆனா இந்த ஜென்ரேஷன்கிட்ட குறையிதுனு நினைக்கிறேன்). இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் அனைத்து பணியிடங்களிலும் இருக்கனும்னு (Social Equality) கொண்டு வந்தது தான் இந்த இட ஒதுக்கீடு. அதனால குழலியோ செல்லாவோ சொல்ற மாதிரி இது ஒருவனுடைய வசதியை கணக்கில் கொண்டு வந்த திட்டமல்ல. They are right in that.

இதெல்லாம் ஒரு 40 - 50 வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஆளுங்க வகுத்த திட்டங்கள். (Except MBC, I beleive). இன்றைய நிலைமைல இந்த திட்டத்துல நிறைய ஓட்டைகள் இருக்கு. ரெண்டு மூணு ஜெனேரேஷனை கணக்குல வெச்சி எல்லாம் அவுங்க போடுவாங்கனு நம்ம ஆசைப்படக்கூடாது. அதுவும் இல்லாம அவுங்களும் உன்னையும் என்னையும் மாதிரி சாதாரண மனுஷங்க தான். அதனால அந்த திட்டத்துல இன்னைக்கு தப்பு இருக்குனு சொல்றதால அன்னைக்கு அவுங்க போட்ட திட்டத்தில தப்புனு அர்த்தமில்லை.

முதல்ல க்ரீமி லேயர்னா யாரு?
நல்ல கல்வி கற்கும் சூழலும், வசதி வாய்ப்புகளும் கிடைத்த மாணவர்கள்தான் இந்த க்ரீமி லேயர்ல வரான். இதுல வருபவர்கள் ஒரு ஒரு பிரிவிலும் 10% - 20% என்று எடுத்து கொண்டாலும், அவர்களே போதும் அனைத்து தரமான கல்லூரிகளிலும் இடம்பிடித்து கொள்ள.

சின்ன எடுத்துக்காட்டு தரேன்...
ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு SC ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு SSLC முடிக்கிறாருனு வைங்க (கண்டிப்பா அவர் அதை முடிக்கனும்னா அவரும் ரொம்ப அவமானங்களை சந்தித்திருக்கணும், அவர் அப்பாவும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்க வேண்டும்). அவருக்கு அரசாங்க சலுகைல எப்படியோ ஒரு கான்ஸ்டெபில் வேலை கிடைக்கிறது.

அதிலும் அவர் பல அவமானங்களை அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்கிறார். அவர் மகனுக்கு இருபது வயதாகும் நிலையில் அவர் ஓரளவு நல்ல நிலையை அடைகிறார் (மினிமம் ஒரு இன்ஸ்பெக்டர்). கையில் நல்ல காசும் சம்பாதித்து வைத்திருக்கிறார். இவர் மகன் சென்னை SBOAவிலோ, இல்லை ஈரோடு BVBயிலோ படிக்கிறார் என்று வைத்து கொள்ளவும்.

இந்த நிலைமையில் இவருக்கு கோட்டாவில் அண்ணா யுனிவர்சிட்டியில் சீட் கிடைக்கிறது. இவர் இந்த இட ஒதுக்கீட்டை இரண்டாவது தலைமுறையாகவோ இல்லை மூன்றாவது தலைமுறையாகவோ பயன்படுத்துகிறார். ஆனால் முதல் முறையே இட ஒதுக்கீட்டால் பயன்பெறாத ஒரு பெரிய கூட்டம் நம்மிடையே இருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்த உயர் போலிஸ் அதிகாரியின் மகனுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை விட அதே சாதியில் அதை பயன்படுத்தாத ஒரு கூட்டத்திற்கு சென்று அடைய வேண்டும் என்றே நான் சொல்கிறேன். சமத்துவத்தை ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட திட்டம் அது. காலத்திற்கு ஏற்றவாரு மாற்றம் கொண்டு வரப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும்.

இட ஒதுக்கீட்டால் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டவர்கள் பலர். அவர்களை அப்படியே தூக்கிட்டு புதுசா வரவனுக்கு இடம் கொடுக்கணும். இல்லைனா அதே கூட்டம் எல்லா இடத்துலயும் சலுகையை அனுபவிச்சிட்டு இருக்கும். இந்த இட ஒதுக்கீட்டுமுறை முதலில் வந்தவனை மட்டுமே வாழ வைக்கிறது. விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன மாதிரி முதல்ல விழிச்சிக்கிட்டவனுக்கு மட்டுமே திரும்ப திரும்ப பலனளிக்கிறது. ஒரு தலைமுறை பின்னாலிருக்கும் கூட்டத்திற்கு வழி அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. அந்த வழியை ஏற்படுத்தி அனைவருக்கும் பலனளிக்கும் ஒரு திட்டமாக மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.


இது சும்மா கொசுறு:

இப்ப பார்த்தீங்கனா, யாரும் சமுதாய சம நிலைக்காக வாழ நினைப்பதில்லை. எந்த தொழிலில் பணம் கிடைக்கிறதோ அதில் நுழையவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள். எந்த ஆசிரியரும் தன் பிள்ளைகள் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. அனைவரும் ஒரு இஞ்சினியராகவோ, டாக்டராகவோ அல்லது MBAவோ படித்து பணம் சம்பாதிக்கவே ஆசைப்படுகிறார்கள். இது தான் உண்மையும் கூட. ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரென்றால், அவன் நன்றாக படிக்காத நிலைமையில் மட்டும் தான். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க ஒரு திட்டம் இருப்பது எவ்வளவு சரியென்று நாம் யோசிக்க வேண்டும்.

அடுத்து ஒரிசால கேக்கல, பிகார்ல கேக்கல நீங்க மட்டும் ஏன் இட ஒதுக்கீடு கேக்கறீங்கனு கேக்கறவங்களுக்கு. அங்க அவங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் இருக்கறதே தெரியுமானு தெரியல. நான் இது வரைக்கும் ஒரு 300 - 400 வட இந்திய பசங்களை பார்த்திருக்கேன். பெரும்பாலும் எல்லாம் FC தான். அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.

----------------------------------------------------------------------------------------

5. நீங்கள் எழுதுவதெல்லாம் கற்பனை கதையா இல்லை சொந்த கதைகளா? அப்படி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இது தெரியுமா?

என்னை முதன்முதலில் கதை எழுத தூண்டியது நீங்களும், கப்பியும் தான். சும்மா முயற்சி செய்னு நீங்க சொல்ல போக நான் அப்படியே செஞ்சி பார்த்தேன். ஓரளவு க்ளிக்காகிடுச்சி.

கதை எல்லாமே கற்பனை தான். கோழி காமெடி மட்டும் தான் உண்மை. அதிலும் எது எது உண்மை என்று அங்கங்கே சொல்லி விட்டேன். அவனுக்கு அது நன்றாக தெரியும் :-).

-------------------------------------------------------------------------------------

நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

36 comments:

சிவபாலன் said...

பாலாஜி

சுடர் நன்றாக ஜொலித்தது.

வாழ்த்துக்கள்..

( ஆமா, எங்க கையில் எல்லாம் வரவே இல்லையே..Ha Ha Ha..)

வெட்டிப்பயல் said...

சிபா,
மிக்க நன்றி!!!

நிறைய பேர் கைல வரலை... அதனால சீக்கிரமே புது விளையாட்டை ஆரம்பிச்சிடலாம் :-)

Unknown said...

பாலாஜி

சுடரை அருமையாக கொண்டு சென்று சாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு சுடராக மாற்றிவிட்டீர்கள். இந்த சுடர் சாகரனின் நினைவுக்கு அஞ்சலி செய்யும் மோட்ச தீபமாக அமைந்து விட்டது.

சர்வஜித்து ஆண்டில் சாகரனின் குடும்பமும், வலையுலக குடும்பமும் மன அமைதிபெற்று மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

Anonymous said...

//முதல்ல க்ரீமி லேயர்னா யாரு?
நல்ல கல்வி கற்கும் சூழலும், வசதி வாய்ப்புகளும் கிடைத்த மாணவர்கள்தான் இந்த க்ரீமி லேயர்ல வரான். இதுல வருபவர்கள் ஒரு ஒரு பிரிவிலும் 10% - 20% என்று எடுத்து கொண்டாலும், அவர்களே போதும் அனைத்து தரமான கல்லூரிகளிலும் இடம்பிடித்து கொள்ள.//

கிரீமி லேயர் என்பதை நீங்கள் என்ன மாதிரி புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? இப்போதைய நிலவரம் எனக்கு சரியாக தெரியாது. ஆனால் கிரீமி லேயரின் ஆரம்பம் என்புரிதலில் இப்படி

கிரீமிலேயர் குழப்பங்கள்

Rasigan said...

//

அனானி தோழர்கள் தான் வலைப்பூ உலகின் ஏற்றத்திற்கு பெரும் காரணம். இதை நான் முழுதும் நம்புகிறேன்.

//

kavalai padatha... nee eppadi sollama ponalum... naanga ellam un pathivugala padipom... rombha ice vachu enna panna pora ... :-)

ஏன்னா நானும் ஒரு அனானிதான.....(i dont think you get much info from the word RASIGAN )

உண்மைத்தமிழன் said...

கிரீமிலேயர் பற்றி நீங்கள் எழுதியிருந்ததை நான் வழி மொழிகிறேன்.

ஒரே ஜாதிக்காரர்கள் இருவர் ரேஸில் நிற்கும்பட்சத்தில் யார் பணக்காரர், யார் ஏழை என்று பார்க்கும் அளவுகோல் சரியானதுதான்..

ஒரு குடும்பம் ஒரு தலைமுறையில் முன்னேறி அந்த முன்னேற்றத்தின் விளைவாக அவர்களுக்கு ஏற்பட்ட கல்வி, பொருளாதார வளர்ச்சியால் மீண்டும் இட ஒதுக்கீட்டை பெற்று மேலும் மேலும் அந்த ஒரு குடும்பமே முன்னேறுவது சமச்சீர் அளவுகோல் அல்ல..

வலியவன், எளியவனுக்கு வழி விடுவதுதான் நல்லது.

ஒரு இனம் முன்னேறியிருக்கிறது என்பதற்கு அர்த்தம் அந்த இனத்தில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருமே திருப்தியாக இருக்கிறார்கள் என்றால்தான். அது நமது தமிழ் இனத்தில் இல்லை..

இப்போதும் இந்த கிரீமிலேயரை எதிர்ப்பவர்கள் அரசியல்வாதிகள்தான்..

காரணம் வெரிசிம்பிள்.. அனைவருமே லட்சாதிபதிகள்.. மேலும் மேலும் கஷ்டப்படாமல் தங்களது பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் சீட் வேண்டும் என்கிறார்கள்.

கோவணத்தைக் கட்டியவன் கடைசிவரை அப்படியேதான்..

நாகை சிவா said...

//எதிராக பெரியாரால் வளர்க்கப்பட்டதே திராவிடம்.
ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.//

வளர்க்கப்பட்டது வேண்டுமானால உண்மையாக இருக்கலாம். ஆனால் திராவிடர்கள் என்று தென் இந்தியர்களை குறிப்பது பல இடங்களில் உள்ளது.

நாகை சிவா said...

//விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன //

இதை தவிர்ப்பதற்கு முயற்சி பண்ணனும் சொன்னா, நம்மளை இட ஒதுக்கீட்டுற்கு எதிரானவன் என்று முத்திரை குத்துறாங்க. என்னத சொல்ல...

நம்ம முன்னாள் ஜனாதிபதி நாராயணன், கிரன் பேடி போன்றவர்களை ஒதுக்கீடு பெற முயற்சித்தார்கள் என்பதை கேட்கும் போது, மற்றவர்களை பற்றி என்ன சொல்லுறது ....

நாகை சிவா said...

// பெரும்பாலும் எல்லாம் FC தான். அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.//

நான் கூட இதை பற்றி யோசித்து இருக்கேன், ரொம்பவே அடிமட்ட நிலையில் இருக்காங்க போல...

Anonymous said...

பாலாஜி உங்கள் கருத்து என்ன? நீங்கள் இதே எண்ணத்துடன் தான் இங்கே எழுதி இருக்கிறீர்களா?

வல்லிசிம்ஹன் said...

பாலாஜி,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சுடர் ,ஒளி கூடிய சுடராக எரிந்துகொண்டிருக்கட்டும்.
உங்கள் எழுத்திலும் நல்ல புரிதல் தெரிகிறது.
நான் இப்போது படிக்கவில்லை என்ற அளவில் எனக்கு
இந்த க்ரீமிலேயர் பற்றி அதிகம் விவாதிக்க முடியவில்லை.
ஆனால் மாற வேண்டும் என்பது தெரிகிறது.

குமரன் (Kumaran) said...

பாலாஜி. முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்களை மட்டும் படிச்சேன். நல்ல முறையில் பதில் சொல்லியிருக்கிறீர்கள். :-)

//ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.
//

நல்ல பதில். நல்ல முடிவு. எவ்வளவு ஆராய்ந்தாலும் அறுதியான உண்மையைக் காண இயலாது.

இரண்டாவது கேள்வி 'அனானி கழக நண்பர்களை'ப் பற்றியது. ஆனால் நீங்கள் அதற்குப் பதில் சொல்லாமல் 'அனானி' ஆப்சனில் பின்னூட்டம் இடும் நண்பர்களைப் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். வேண்டுமென்றே செய்தீர்களா என்று தெரியாது. ஆனால் நல்ல முறையில் சொல்லப்பட்ட பதில். என் பதிவுகளிலும் 'அனானி' ஆப்சனை என்றைக்கும் வைத்திருக்கிறேன்.

மற்ற கேள்விகளையும் அவற்றின் பதில்களையும் மீண்டும் நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்.

கோபிநாத் said...

பாலாஜி

அருமையாக, நிதானமாக பதில் சொல்லியிருக்கிறிங்க.

உண்மையில் எனக்கு இந்த கீரிமி லேயர் என்னன்னு சரியாக தெரியவில்லை.... நான் கவுன்சிலிங் எல்லாம் பார்த்தது இல்லை அதானல் தான்னு நினைக்குறேன்.


\\ இந்த இட ஒதுக்கீட்டுமுறை முதலில் வந்தவனை மட்டுமே வாழ வைக்கிறது. விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன மாதிரி முதல்ல விழிச்சிக்கிட்டவனுக்கு மட்டுமே திரும்ப திரும்ப பலனளிக்கிறது. ஒரு தலைமுறை பின்னாலிருக்கும் கூட்டத்திற்கு வழி அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. அந்த வழியை ஏற்படுத்தி அனைவருக்கும் பலனளிக்கும் ஒரு திட்டமாக மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.\\

ஆனால் உங்களின் இந்த சுடர் பதிவில் நீங்கள் தந்திருக்கும் பதில் சூடாக இருக்கின்றது. நானும் இதுக்கு முழுக்க ஒத்துபோகிறேன்.

கோபிநாத் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-)

SathyaPriyan said...

//
ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரென்றால், அவன் நன்றாக படிக்காத நிலைமையில் மட்டும் தான்.
//
தங்களிடமிருந்து இப்படி ஒரு கருத்தை எதிர் பார்க்கவில்லை வெட்டி.

சட்டம் படித்து தேர்வு பெறுவது பொறியியல் தேர்ச்சியை விட கடினம். என்னால் உறுதி படுத்திக் கொள்ள முடியாத ஒரு தகவலை தருகிறேன். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இதுவரை அதிகபட்ச மதிப்பெண்களை எடுத்தவர் திரு. ப. சிதம்பரம். அவர் எடுத்த மதிப்பெண்கள் 69 சதவிகிதம். இது அங்கே படித்த எனது நண்பனால் எனக்கு கூறப்பட்டது.

மேலும் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாக இருக்க, பன்னிரண்டாவதில் MPC யில் 60 சதவிகிதம் வாங்கினாலே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை தான் இன்று தமிழகத்தில் உள்ளது. தேர்ச்சி பெருவதும் கடினம் ஒன்றும் இல்லை.

May be தாங்கள் கூற வந்தது வேறாக இருக்கலாம். தெளிவு படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

சுடரை அருமையாக முடித்து வைத்ததற்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

//இப்ப பார்த்தீங்கனா, யாரும் சமுதாய சம நிலைக்காக வாழ நினைப்பதில்லை. எந்த தொழிலில் பணம் கிடைக்கிறதோ அதில் நுழையவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.//

கிராமப்புறங்களை நீங்கள் பார்த்திருகிறீர்களா தெரியவில்லை. சக்கிலிய காலனியிலிருந்து சிங்கப்பூருக்கோ அமெரிக்காவுக்கோ தப்பித் தவறி ஒருவன் போய்விட்டால் திரும்பக் கிராமத்துக்கு வரும்போது, லட்சாதிபதியாக இருந்தாலும் சமுதாய சம நிலை அவன் கேட்டாலும் கிடைக்காது. சென்னை போன்ற பெருநகரங்களில்தான் இந்த வித்தியாசம் பெரும்பாலும் இருப்பதில்லை - ஜாதிவாரியான ஏரியாக்கள் அங்கே இருந்தாலும். சென்னை போன்ற பெருநகரங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்கு வந்தீர்களானால் நகர் நகர் என்று ஏரியாக்கள் பிரிக்கப்பட்டிருக்கும் - காந்தி நகர், நேரு நகர், இந்திரா நகர் என்று - அசலில் பார்த்தீர்களானால் ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு ஜாதிக்கான நகராக இருக்கும். வீடு வாங்குவதில் இருந்து தண்ணீர்த் தகராற்றில் இருந்து, பால்பண்ணையில் பால் வாங்குவதில் இருந்து எப்படி இந்த நகரங்கள் ஜாதி ரீதியிலான தீவுகளாகக் கட்டமைக்கப்பட்டு இயங்குகின்றன என்று பார்த்தால் தெரியும்.

//அடுத்து ஒரிசால கேக்கல, பிகார்ல கேக்கல நீங்க மட்டும் ஏன் இட ஒதுக்கீடு கேக்கறீங்கனு கேக்கறவங்களுக்கு. அங்க அவங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் இருக்கறதே தெரியுமானு தெரியல. நான் இது வரைக்கும் ஒரு 300 - 400 வட இந்திய பசங்களை பார்த்திருக்கேன். பெரும்பாலும் எல்லாம் FC தான். அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.//

மிகச் சரி. வேறு ஒன்றும் வேண்டாம், ரஜினிகாந்தின் நடிப்பைப் பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கலாம், ஆனால் நாகரிகம் தெரிந்தவர்கள் யாரும் அவரைக் கருவாப்பயல் என்ற ரேஞ்சில் எல்லாம் திட்டமாட்டார்கள் - ia.rediff.com/movies/2007/apr/03rahman.htm - இங்கே பாருங்கள் - abuse alertடின்பின் நீக்கப்பட்ட பெரும்பாலான கமெண்டுகள் அந்த மாதிரித்தான் இருந்தன. இதே மனோநிலையுள்ள கும்பல்தான் AIIMS பிரச்னையிலும் இட ஒதுக்கீட்டுப் பிரச்னையிலும் குதி குதி என்று குதிப்பது.

CVR said...

உங்க ஸ்டைல்-ல நல்லா பதில் கொடுத்திருக்கீங்க பாலாஜி.
உங்களுக்கும் ஏனைய தமிழ் அன்பர்களுக்கும் என் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! :-)

வெட்டிப்பயல் said...

சிந்தாநதி,
உங்க பதிவுக்கு வந்து பதில் சொல்லிட்டேன்...

வெட்டிப்பயல் said...

சத்யா அண்ணா,
தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... வெளிய கிளம்பிட்டேன் வந்து சொல்றேன்

இராம்/Raam said...

பாலாஜி,

சுடர் பதிவை அழகாக முடிஞ்சு வைச்சிட்டேப்பா...

வாழ்த்துக்கள் :)

க்ரீமி லேயர் பற்றிய கேள்விக்கான பதிலை இன்னும் தெளிவாக சொல்லிருக்கலாமோன்னு தோணுதுப்பா.....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் கொஞ்சம் ஓட்ட வாய்//

ஆகா...பாலாஜி...சுடர் ப்[அதிவில் இப்படிக் கொளுத்திப் போட்டா என்ன அர்த்தம்? :-))

உங்கள் புரிதலை, உள்ளபடியே எடுத்து வைத்து இருக்கீங்க, உங்க ஸ்டைலில்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! //

இப்படி வெறுமனே வாழ்த்துக்கள் ன்னு சொன்னா நாங்க உங்களை விட்டுடுவோமா? :-)

யுகாதிக்கு மட்டும் படத்துடன் கூடிய தனிப்பதிவு போட்டீர்களே!
சுந்தரத் தெலுங்கிற்கு ஒரு நீதி!
செந்தமிழிற்கு வேறொரு நீதி!!

ஆகா...பாலாஜி, யூ டூ?
நீங்கள் இப்படிச் செய்தால் திராவிடன் என்பவன் யார் என்ற நெடுநாள் சந்தேகம் எப்படித் தீரும்? :-)))

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், பாலாஜி மற்றும் பதிவர் அனைவருக்கும்!

Anonymous said...

பாலாஜி,

புதுவருட வாழ்த்துக்கள்.....இந்த பதிவும் சூப்பர்.

உண்மைத்தமிழன் : நீங்க என்னமோ இன்னுமொறு திராவிடக் குஞ்சு என்றுதான் நினைத்தேன்....ஆனால் இந்த பதிவில் தங்களுடைய பின்னூட்டம் ஏதோ வித்தியாசமாத்தெரிகிறது....என்னய்யா ஆச்சு?

வெட்டிப்பயல் said...

// Rasigan said...

//

அனானி தோழர்கள் தான் வலைப்பூ உலகின் ஏற்றத்திற்கு பெரும் காரணம். இதை நான் முழுதும் நம்புகிறேன்.

//

kavalai padatha... nee eppadi sollama ponalum... naanga ellam un pathivugala padipom... rombha ice vachu enna panna pora ... :-)

ஏன்னா நானும் ஒரு அனானிதான.....(i dont think you get much info from the word RASIGAN ) //

ஐஸ் எல்லாம் வைக்கல ரசிகன்...
எனக்கு நிறைய மெயில் வந்திருக்கு. யாருக்கும் ப்ளாக் கிடையாது. எல்லாரும் நல்ல நண்பர்களே!!!

நானெல்லாம் எழுதி கிழிக்கிறேனா அதுக்கு காரணம் கண்டிப்பா உங்களை மாதிரி பாராட்டும் அனைவரும் தான்...

வெட்டிப்பயல் said...

//இப்போதும் இந்த கிரீமிலேயரை எதிர்ப்பவர்கள் அரசியல்வாதிகள்தான்..

காரணம் வெரிசிம்பிள்.. அனைவருமே லட்சாதிபதிகள்.. மேலும் மேலும் கஷ்டப்படாமல் தங்களது பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் சீட் வேண்டும் என்கிறார்கள்.

கோவணத்தைக் கட்டியவன் கடைசிவரை அப்படியேதான்..//

உண்மை தமிழன்,
உண்மை தமிழன் :-)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//எதிராக பெரியாரால் வளர்க்கப்பட்டதே திராவிடம்.
ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.//

வளர்க்கப்பட்டது வேண்டுமானால உண்மையாக இருக்கலாம். ஆனால் திராவிடர்கள் என்று தென் இந்தியர்களை குறிப்பது பல இடங்களில் உள்ளது. //

ஆமா புலி,
தாகூர் கூட திராவிட உட்கல பங்கானு தான் பாடினார்.

அதுல அவர் திராவிடனு குறிப்பது தென் இந்தியாவை தான்...

ஆனா இப்ப பயன்படுவது அந்த அர்த்ததில் இல்லைனு நினைக்கிறேன்...

இலவசக்கொத்தனார் said...

நல்ல சுடரோட்டம். சில கேள்விகளுக்கு ரொம்பவே அடக்கி வாசிச்சு இருக்கீங்க. அடக்கம் அழகு!! :))

Premma said...

First time I dint understand ur creamy layer post. But its really clear. Iam also waiting for ur C post.

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன //

இதை தவிர்ப்பதற்கு முயற்சி பண்ணனும் சொன்னா, நம்மளை இட ஒதுக்கீட்டுற்கு எதிரானவன் என்று முத்திரை குத்துறாங்க. என்னத சொல்ல...

நம்ம முன்னாள் ஜனாதிபதி நாராயணன், கிரன் பேடி போன்றவர்களை ஒதுக்கீடு பெற முயற்சித்தார்கள் என்பதை கேட்கும் போது, மற்றவர்களை பற்றி என்ன சொல்லுறது .... //

புலி இது தான் இதில் உள்ள இடர்பாடு...

கொஞ்சம் மனசாட்சி வேணும். அவ்வளவுதான்... வேற என்ன சொல்ல?

வெட்டிப்பயல் said...

//வல்லிசிம்ஹன் said...

பாலாஜி,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சுடர் ,ஒளி கூடிய சுடராக எரிந்துகொண்டிருக்கட்டும்.
உங்கள் எழுத்திலும் நல்ல புரிதல் தெரிகிறது.
நான் இப்போது படிக்கவில்லை என்ற அளவில் எனக்கு
இந்த க்ரீமிலேயர் பற்றி அதிகம் விவாதிக்க முடியவில்லை.
ஆனால் மாற வேண்டும் என்பது தெரிகிறது. //

வல்லியம்மா,
வாழ்த்துக்களுக்கு நன்றி...

ஏதோ திரும்ப திரும்ப சொன்னாவாது கொஞ்ச பேர் புரிஞ்சிக்குவாங்கனு பாக்கறேன்...

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

// பெரும்பாலும் எல்லாம் FC தான். அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.//

நான் கூட இதை பற்றி யோசித்து இருக்கேன், ரொம்பவே அடிமட்ட நிலையில் இருக்காங்க போல... //

ரொம்ப உண்மை புலி...

அங்க இடஒதுக்கீடு தீவிரமா வரணும்... சீக்கிரமா...

Anonymous said...

Hai Balaji,
u answered well for all questions except the creamy layer.
i hope you support reservation. don't you ever think of the poor FC people? the reservation system had introduced 56 yrs back, it might have stopped before 6 yrs. (according to the law) just not to loose the votes of non fc and non fc supporters, politicians didn't take it back. all over india reservation system is there. according to state it varies slightly, it doesn't mean in north india there is no reservation system.
deepa
email :deepashivaa@rediffmail.com

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி. முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்களை மட்டும் படிச்சேன். நல்ல முறையில் பதில் சொல்லியிருக்கிறீர்கள். :-)

//ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.
//

நல்ல பதில். நல்ல முடிவு. எவ்வளவு ஆராய்ந்தாலும் அறுதியான உண்மையைக் காண இயலாது.
//
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :-)

//
இரண்டாவது கேள்வி 'அனானி கழக நண்பர்களை'ப் பற்றியது. ஆனால் நீங்கள் அதற்குப் பதில் சொல்லாமல் 'அனானி' ஆப்சனில் பின்னூட்டம் இடும் நண்பர்களைப் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். வேண்டுமென்றே செய்தீர்களா என்று தெரியாது. ஆனால் நல்ல முறையில் சொல்லப்பட்ட பதில். என் பதிவுகளிலும் 'அனானி' ஆப்சனை என்றைக்கும் வைத்திருக்கிறேன்.
//
எனக்கு பிரிச்சி பார்க்க தெரியல குமரன். அது தான் உண்மை...

// மற்ற கேள்விகளையும் அவற்றின் பதில்களையும் மீண்டும் நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன். //
பொறுமையா படிச்சி சொல்லுங்க...

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

பாலாஜி

அருமையாக, நிதானமாக பதில் சொல்லியிருக்கிறிங்க.

உண்மையில் எனக்கு இந்த கீரிமி லேயர் என்னன்னு சரியாக தெரியவில்லை.... நான் கவுன்சிலிங் எல்லாம் பார்த்தது இல்லை அதானல் தான்னு நினைக்குறேன். //

மிக்க நன்றி கோபிநாத்...

இது ஒண்ணும் கம்பசூத்திரமில்ல கோபி... நல்ல படிக்கக்கூடிய நிலைமைல இருந்து வரவனுக்கு சலுகைகள் தரக்கூடாதுனு சொல்லறதுதான்...

வெட்டிப்பயல் said...

//SathyaPriyan said...

//
ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரென்றால், அவன் நன்றாக படிக்காத நிலைமையில் மட்டும் தான்.
//
தங்களிடமிருந்து இப்படி ஒரு கருத்தை எதிர் பார்க்கவில்லை வெட்டி.

சட்டம் படித்து தேர்வு பெறுவது பொறியியல் தேர்ச்சியை விட கடினம். என்னால் உறுதி படுத்திக் கொள்ள முடியாத ஒரு தகவலை தருகிறேன். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இதுவரை அதிகபட்ச மதிப்பெண்களை எடுத்தவர் திரு. ப. சிதம்பரம். அவர் எடுத்த மதிப்பெண்கள் 69 சதவிகிதம். இது அங்கே படித்த எனது நண்பனால் எனக்கு கூறப்பட்டது.

மேலும் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாக இருக்க, பன்னிரண்டாவதில் MPC யில் 60 சதவிகிதம் வாங்கினாலே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை தான் இன்று தமிழகத்தில் உள்ளது. தேர்ச்சி பெருவதும் கடினம் ஒன்றும் இல்லை.

May be தாங்கள் கூற வந்தது வேறாக இருக்கலாம். தெளிவு படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

சுடரை அருமையாக முடித்து வைத்ததற்கு பாராட்டுக்கள். //

சத்யா அண்ணா,
நான் நல்லா படிக்காதவங்கதான் சட்டம் படிப்பாங்கனு சொல்லல. ஒரு வசதியான வக்கீலை எடுத்து கொண்டால் அவர் பிள்ளைகள் டாக்டரோ/இன்ஜினியரோ ஆகவே விரும்பிகிறார்கள்.

மைக்ரோ பயலஜி, பயோ டெக்னாலஜி எல்லாம் ரொம்ப கஷ்டமானா படிப்புதான். ஆனா 1100க்கு மேல மார்க் எடுத்து நல்ல கட் ஆப் வெச்சிருக்கவன் எத்தனை பேர் அந்த கோர்ஸ் எல்லாம் படிப்பான்?

எதில் சுலபமாக வேலையும், நல்ல காசும் கிடைக்குமோ அதை படிக்க வைக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

ஸ்டேட்ல முதல் 100 மார்க் வரும் நபர்களை பார்த்தாலே புரியும்...

பொன்ஸ்~~Poorna said...

பாலாஜி,
திராவிடம் என்றால் என்னுடைய புரிதல், இது: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் -இவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. மற்ற இந்திய மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்துப் பிள்ளைகள்.

ஒவ்வொரு மொழிக் குடும்பமும் பொதுவாக ஒவ்வொரு இனக்குழுவில் பிறந்தன. அந்த விதத்தில் தான் தமிழ்பேசும் நாம் திராவிடர்கள் ஆகிறோம். மேலும் தெரிந்து கொள்ள Dravidian Languages என்று கூகிளாண்டவரைக் கேட்டுப் பாருங்கள்.. தெளிவு கிடைக்கலாம்..