தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Sunday, September 25, 2011

Dookudu - Telugu Movie

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிமெண்ட் காட்சியில் பலர் கண்களில் நீர். இது போதாதா சூப்பர் ஹிட் ஆக? தூக்குடு - அமெரிக்காவிலும், ஆந்திராவிலும் தியேட்டரில் நின்று கொண்டு பார்க்கும் அளவுக்கு ஹிட்.



போக்கிரி ஹிட் ஆனது மகேஷ் பாபுவிற்கு நல்லதா? கெட்டதா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி வைத்தாலும் வழக்கம் போல வழவழா கொழகொழா முடிவு தான் கொடுப்பார் சாலமன் ஆப்பைய்யா. போக்கிரி எதிர்பார்ப்பில் அடுத்து வந்த அனைத்து படங்களுமே தொடர்ந்து ஃப்ளாப். 3 இடியட்ஸ் ரீமேக் ஆந்திராவில் எப்படி போகும் என்று எனக்கு ஒரு சந்தேகம். ஏனென்றால் தமிழில் காலேஜ் பசங்க ஹிந்தி படம் பார்ப்பது குறைவு. ஆனால் ஆந்திராவில் ஹிந்தி அவர்களுக்கு மூன்றாவது மொழி, மேலும் ஹைதிராபாத்தில் தெலுகுக்கு குறைவில்லாமல் ஹிந்தி பேசும் மக்கள். அதனால் 3 இடியட்ஸ் தெலுகில் சூப்பர் ஹிட் ஆக சான்ஸ் குறைவு என்பது என் எண்ணம்.

அப்படினா மகேஷ் அவ்வளவு தானா என்று நினைத்து கொண்டிருக்கும் போது வந்து அந்த குறையைப் போக்கிவிட்டது தூக்குடு. அப்பாவிடமிருந்து சூப்பர் ஸ்டார் பட்டம் மகேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி ப்ரின்ஸ் மகேஷிலிரிந்து சூப்பர் ஸ்டார் மகேஷ் ஆகிவிட்டார். போக்கிரியைவிட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். அதைவிட வேகமும் அதிகம். ட்விட்டரில் நண்பர் ஒருவர் மகேஷ் பாபுவிடம் அப்படி என்ன இருக்கிறது? சாக்லேட் பையன் மாதிரி இருக்கிறார் என்றார். அதற்கு ஒரே பதில் ஸ்டைல்.

தூக்குடு கதை ஒன்றும் உலகத்தரக் கதை கிடையாது. தெலுகு மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் நூறு படங்களில் தொன்னூறு படங்களில் இதே கதை தான். ஒரு நிழலுலக டானை எப்படி கதாநாயகன் அழிக்கிறார் என்பது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சீனு வைத்லா. ப்ரமானந்தம், MS நாராயணா காமெடி தான் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். அதிலும் MS நாராயணா நகைச்சுவைக் காட்சிகள் ப்ரமானந்தத்தையே மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கிறது. அதுவும் இரண்டுமே கரண்ட் ட்ரெண்ட் வைத்து செய்திருப்பது தான் ஹை லைட். தமிழில் ரீ-மேக் செய்தால் வடிவேலுக்கு அட்டகாசமாக பொருந்தும், இரண்டு வேடங்களுமே. அதான் அம்மாவுக்கும் கேப்டனுக்கும் நட்டு புட்டுக்கிச்சே, இனிமேவாது வடிவேலுவை கொண்டு வாங்கப்பா.

ஆக்‌ஷன் காட்சிகள் போக்கிரிக்கு குறைவில்லாமல் அதே ஸ்டைலில் இருக்கிறது. அத்தடுவில் ஒரு சண்டைக் காட்சியில் தனிக்கல பரணி சொல்லுவார், அவன் அடிக்கறதே வித்யாசமா இருக்கு. ஒண்ணு கோபமா அடிப்பாங்க இல்லை வேகமா அடிப்பாங்க. இவன் என்னடா நிதானமா அடிக்கறான். ஏதோ கோட்டைக் கட்ற மாதிரி, பூ கட்ற மாதிரி ரொம்ப ஜாக்கிரதையா, ரூல்ஸ் ஃபாலோ பண்ற மாதிரி அடிக்கிறான் அப்படினு. அது தான் மகேஷ் பாபு ஸ்டைல். இதுலயும் ஆக்‌ஷன் காட்சிகள் அப்படி தான்.

செண்டிமெண்ட் - அப்பா மகன் செண்டிமெண்ட். பிரகாஷ் ராஜ் மகேஷ் பாபு அப்பா. அவருக்கு அல்வா சாப்பிடற ரோல். முதல் சில நிமிடங்களுக்கு வீரமான பாத்திரம், இரண்டாவது பகுதியில் செண்டிமண்ட் அப்பா பாத்திரம். இதெல்லாம் அவருக்கு ஜுஜூபி. அட்டகாசமாக செய்திருக்கிறார். நாசருக்கு பெரிய பாத்திரம் இல்லையென்றாலும் அவர் இருப்பது ஒரு செண்டிமண்ட் போல. ஹீரோயின் சமந்தா வருகிறார், போகிறார், டான்ஸ் ஆடுகிறார். முகத்தில் கலை இல்லை, கலராக இருக்கிறார். சோனு சூத் வழக்கம் போல டான் கேரக்டர். மொக்கையான வில்லன். இசை பெரிதாக கவரவில்லை.

நான் ரசிச்ச சின்ன சின்ன காட்சிகளெல்லாம் சொல்லி உங்க அனுபவத்தைக் கெடுக்க வேண்டாம் என்பதால் அதைப் பற்றி பெரிதாக சொல்லவில்லை. போக்கிரி, அத்தடு, பிருந்தாவனம் இதெல்லாம் உங்களுக்கு பிடித்திருந்தால் தூக்குடுவும் நிச்சயம் பிடிக்கும். வெறும் மசாலா என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால் ஆந்திரா ஃபுல் மீல்ஸ் என்று சொல்லலாம்.

Sunday, June 14, 2009

பசங்க

”பசங்க படத்தை நிச்சயம் மிஸ் பண்ணிடாத” இதை தேவ் அண்ணா, கைப்ஸ் அண்ணா ரெண்டு பேருமே சாட் பண்ணும் போது சொன்னாங்க.

நேத்து தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. என் ரூமெட்கிட்ட பயங்கர பில்ட் அப் கொடுத்துட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். இந்த வருஷத்துலயே இதை சிறந்த படம்னு வேற சொல்றாங்க. இன்னொரு அஞ்சலினு சொல்றாங்க அப்படி இப்படினு பயங்கர பில்ட் அப். 



பெயர் போடும் போதே ஓரளவு கிரியேட்டிவிட்டி தெரிஞ்சிது. சின்ன பசங்க விளையாட்டு எல்லாம் பேக் க்ரவுண்ட்ல வரும், பெயர் அப்படியே ப்ளாக் ஸ்கிரின்ல ஓடிட்டு இருக்கும். அதுக்கு அப்பறம் அந்த மூணு வாண்டுகளைப் பத்தி போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கும் போதும் அந்த பசங்களைக் காட்டும் போதும் ஓவர் பில்ட் அப்பா தெரிஞ்சிது. 

அதே மாதிரி அன்புக்கரசு அறிமுகமும் செம பில்ட் அப். அவன் வண்டி ஓட்டறதும், எக்ஸர்சைஸ் செய்யறதும் ஏதோ பத்ரி படம் பார்க்கற எஃபக்ட்ல இருந்தது. எனக்கு அதைப் பார்க்கும் போது செம கடுப்பு. இந்த படத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பானு. அதுவும் சின்ன பசங்களுக்குள்ள கேங் வார்னு காட்டும் போது அதைவிட எரிச்சல். ஆனா அதுவே போக போக அந்த பசங்களால பெற்றோர்களுக்கிடைய ஆரம்பிக்கும் பிரச்சனைனு களம் மாறும் போது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

அதுக்கப்பறம் அப்பா, அம்மாக்கிடைய நடக்கும் பிரச்சனை பசங்கள எப்படி பாதிக்குதுனு பார்க்கும் போது ஏதோ மனசைக் குத்த ஆரம்பித்துவிட்டது. அன்புக்கரசு அப்பாவும் வாத்தியாரும் பேசிக் கொள்ளும் இடம் மிகவும் ரசித்தேன். இந்த மாதிரி கணவன், மனைவி சண்டை நான் நிறைய பார்த்திருக்கேன். அதனால பாதிக்கப்பட்ட பசங்களும் எனக்கு தெரியும். 

என் அப்பா, அம்மா கூட நாங்க சின்ன வயசுல இருக்கும் போது இப்படி நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. அன்புக்கரசு அழுத மாதிரி நான் கூட அழுதிருக்கேன். அப்பறம் நான் பெருசாக பெருசாக சண்டை ஓரளவு குறைந்தது. இப்பக்கூட எப்பவாது சண்டைப் போட்டா ”ஆமாம் புது மணத் தம்பதிகள். சண்டை போடறீங்க. நிறுத்துங்க” அப்படினு நான் கிண்டல் பண்றதுல ரெண்டு பேரும் சண்டையை நிறுத்திடுவாங்க.


அப்பறம் அன்புக்கரசு சித்தப்பாக்கும், ஜீவா அக்காக்கும் நடுவுல ஓடற காதல் ட்ராக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரசிக்கும்படியா இருந்தது. அதுவும் பல நாடுகள்ல இருந்து ஃபோன் பண்ற கான்செப்ட் அட்டகாசம். நல்லா சிரிக்க வைத்தது.

ஜீவா, அன்பரசு ரோல் பண்ண சின்ன பசங்க ரெண்டு பேருமே அட்டகாசமா நடிச்சிருந்தாங்க. குறிப்பிட்டு சொல்லனும்னா எனக்கு ஜீவா ரோல்ல பண்ண குட்டிப் பையன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. அதே போலவே பகோடா, குட்டிமணி, அப்பத்தா ரோல்ல நடிச்ச பசங்களும் அருமை. படத்துல நடிச்ச யாருமே குறை சொல்ற மாதிரி நடிக்கல. எல்லாமே இயல்பான நடிப்பு தான். 

சில காட்சிகள்ல இயல்புக்கு மீறி, பிஞ்சிலே முத்தின மாதிரி காட்டியிருந்தாலும் ரசிக்கும் படியாவே இருந்தது. இந்த படத்தை பசங்களுக்கு ரெக்கமெண்ட் பண்றதை விட பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் ரெக்கமெண்ட் செய்வேன். நிச்சயம் பாருங்க. முதல் பாதியை இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருந்தா மிகச் சிறந்த படமா வந்திருக்கும். சசிக்குமார் நல்ல இயக்குனர் மட்டுமில்ல நல்ல தயாரிப்பாளரும் கூடனு நிருபிச்சிருக்காரு. இயக்குனர் பாண்டிராஜுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும். 

தியேட்டரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். 

சும்மா கடைசியா ஒரு பஞ்ச் : “பசங்க” - பசங்களுக்கான படமல்ல. பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக

Thursday, June 11, 2009

காதல்னா சும்மா இல்லை

இன்னைக்கு எங்கயே ஆன்லைன்ல மேஞ்சிட்டு இருக்கும் போது (மேயறதுக்கு நீ என்ன மாடானு கேட்டு புடாதீங்க) ராஜ் டீவி திரை விமர்சனம் பார்க்க வாய்ப்பு கிடைச்சிது. அதுல அ, ஆ, இ, ஈ விமர்சனமும், காதல்னா சும்மா இல்லை விமர்சனமும் பார்த்தேன். ரெண்டு படமும் நல்லா இருக்குற மாதிரி ஒரு எண்ணம். சரி இன்னைக்கு எப்படியும் பார்த்துடுவோம்னு களம் இறங்கினேன். காதல்னா சும்மா இல்லை பார்க்க வாய்ப்பு கிடைச்சிது.

”காதல்னா சும்மா இல்லை” இந்த படத்துக்கு பெரிய மைனஸா நான் நினைக்கிறது படத்தோட பேர் தான். எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. கமிலினியைத் தேடி கதாநாயகன் புறப்படும் இடத்தில் ஆரம்பிக்கும் படம் ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடிக்கும் போது முடிகிறது. கதாநாயகியைத் (கமிலினி) தேடும் படலத்தில் வாழ்க்கையை புரிந்து கொள்கிறார் பணக்கார நாயகன். அவருடைய இருபது லட்ச ரூபாய் பைக்கை ஆட்டயைப்போட (திண்டிவனம் ஏரியால இந்த வார்த்தை எல்லாம் புழங்குவாங்களானு தெரியல) அவருக்கு உதவுவது போல சேருகிறார் ரவி கிருஷ்ணா. பிறகு அவரே நாயகனுக்கு நாயகியைக் கண்டுபிடிக்க உதவுகிறார். 

காதல்ல மொத்தம் மூணு வகை இருக்காம், லவ், பிக் லவ், க்ரேட் லவ். லவ் ரெண்டு மாசம் எஃபக்ட் இருக்குமாம், பிக் லவ் ரெண்டு வருஷம் எஃபக்ட் இருக்குமாம். க்ரேட் லவ்னா மொத்த வாழ்க்கையையே மாத்திடுமாம். இந்த படம் மூணாவது வகை காதலைப் பத்தி தான் பேச போகுதுனு படத்து பேரை வெச்சே சொல்லிடலாம்.

படத்துல எனக்கு பிடித்த விஷயங்களை சொல்லிடறேன்.

படம் பார்க்கவே ஜாலியா இருந்தது. ரவி கிருஷ்ணா இப்படி எல்லாம் கூட நடிப்பாரானு ஒரு சந்தேகம். ஒரு வகைல அவருக்கு ஏத்த கேரக்டர் தான். அதை அழகா செய்திருந்தார். அவர் பேசற தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சது. டயலாக்ஸும் அருமை. “உங்க பைக்கு சும்மா பறக்குது பாஸு. ஜப்பான்காரன்னா சும்மாவா? அவன் மூக்கு தான் சப்பை. மூளை செம்ம ஷார்ப்பு” இந்த மாதிரி பல வசனங்கள் எனக்கு பிடிச்சிருந்தது. ரவி கிருஷ்ணா படத்துக்கு பெரிய ப்ளஸ். 7G படத்துக்கு பிறகு அவர் நல்லா பண்ண படமா இது தான் எனக்கு தெரிஞ்சிது. 


கமிலினி வழக்கம் போல ரொம்ப அழகு, ரொம்ப அமைதி. செம ஹோம்லி. 

அடுத்து கதாநாயகனா அறிமுகமான ஷர்வானந்தும் குறை சொல்ற மாதிரி இல்லை. முதல் படத்துக்கு நிறைவா செஞ்சிருக்காருனே சொல்லலாம். குறிப்பா ஆக்‌ஷன் சீன்ல அவரோட பாடி லேங்வேஜ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சரியா அழ வரலை. ஆனா முதல் படம்னு மன்னிச்சிடலாம். 

படத்துல டச்சிங் சீன்ஸ் நிறைய இருக்கு. கமிலினி அறிமுகமே அப்படி ஒரு டச்சிங் சீன்ல தான். 


”ஜெய் சம்போ சம்போ சம்போ” பாட்டு எனக்கு பிடிச்சிருந்தது.   

படத்துல சில குறைகளும் இருக்கு. அநேகமா இது தெலுகு படம் காப்பியா இருக்கும்னு நினைக்கிறேன். நக்சலைட் சீன்ஸ் எல்லாம் அப்படி தான் தெரியுது. திண்டீவனம் ஏரியால எங்க நக்சலைட்ஸ் இருக்காங்க? அந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் தெலுகு படத்துக்கு தான் ஒத்து வரும். அதையெல்லாம் தூக்கிட்டு தமிழ் படத்துக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கனும். 

அதே மாதிரி படத்தை இன்னும் ரொம்ப அழகா கவிதை மாதிரி சொல்லியிருக்கலாம்னு தோணுது. கொஞ்சம் வெட்டியிருக்கணும். அப்பறம் ரசிக்கிற மாதிரியான காட்சிகளை இன்னும் அதிகமாக்கியிருக்கலாம். 

பார்க்க வாய்ப்பு கிடைத்தா தவறாம பார்க்கலாம்.