தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, July 13, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2

இப்ப நான் சொல்ல போறது, காலேஜ் முடித்து வேலை தேடுபவர்களுக்கு. (நான் சொல்வது எல்லாம் average மற்றும் Below average மாணவர்களுக்கு. புத்திசாலி மாணவர்களுக்கு சொல்லி தரும் அளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை)

நீங்க எந்த இஞ்ஜினியரிங் (even MCA/ MSc) வேண்டுமென்றாலும் படித்திருக்கலாம். கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்களுக்கு மட்டும் தான் Software field என்று நினைக்காதீர்கள்.
எனக்கு மேனாஜராக இருந்தவர்கள் மெக்கானிக்கல் மற்றும் சிவில் படித்தவர்களே. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கலாம். ஆனால் யார் வேண்டுமென்றாலும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவையான ஒன்று ஈடுபாடு மட்டுமே.

நீங்க Fresherஆக வேலை தேடுபவர்கள் என்றால் உங்களிடம் இந்த புத்தகங்கள் இருப்பது அவசியம்.
1) Quantitative Aptitude by R.S. Aggarwal
2) Dictionary (even u can have the E-copy, its OK)
3) Let Us C
4) Pointers in C

இதை எப்படி படிப்பது என்பது பின்னால் சொல்கிறேன். இப்ப எங்க கதைய சொல்றேன்.

நம்ம பசங்களுக்கு எல்லாம் (என்னையும் சேர்த்து) இங்கிலிபிஸ் அவ்வளவு நல்லா பேச வராது. காரணம் காலேஜ்ல நாமாலும் இங்கிலிபிஸ்ல பேச மாட்டோம். பேசறவனையும் விட மாட்டோம். ஏன்னா காலேஜ்ல படிக்கும் நம்மளைப் பொருத்தவரை
இங்கிலீஸில் பேசவது ஒரு பாவச்செயல்.
இங்கிலீஸில் பேசவது ஒரு பெருங்குற்றம்.
இங்கிலீஸில் பேசவது ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.

கடலை போடுபவர்கள் மட்டும் தான் இங்கிலீஸில் பேசுவார்கள். நம்மல மாதிரி ஆளுங்க எல்லாம் காலேஜ்க்கு வந்தாலே பெரிய விஷயம். அதுல போயி இங்கிலீஸ்ல பேசிட்டாலும் (இதுக்கெல்லாம் பின்னாடி அனுபவித்தோம்).
ஆனால் எங்களை மாதிரி கூட்டம் தான் எல்லா காலேஜ்லயும் அதிகம்.
Cosmopoliton cityல படித்த நாங்களே இப்படினா (சும்மா build-up :-)), மத்த ஊர்ல படித்தவர்களின் நிலைமை இன்னும் மோசம்.

எதுவுமே தெரியலனாலும் Software Industryக்கு நல்லா இங்கிலீஸ் பேச தெரிஞ்சா பொதும். வேலையும் வாங்கிடலாம், வாழ்க்கையும் ஓட்டிடலாம். ஆனால் நமக்கு அங்க தான் தகராறு. Linked List Programகூட 15 நிமிஷத்துல போட்டுடுவன். ஆனால் 15 நிமிஷம் தொடர்ந்து இங்கிலீஸ் பேசனும்னா??? ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிறனு தோணும்!!!

ஆனால் நாங்களும் இங்கிலிஸ்ல பேசி வேலை வாங்கனோம். அதுக்கு நாங்க நிறையா கஷ்டப்பட்டோம். நாங்க என்ன செய்தோம்.....

----தொடரும்

12 comments:

Vaikunth said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

நன்றி vaik.
தொடர்ந்து படிங்க!!! உங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

பாலசந்தர் கணேசன். said...

சரியான திசையில் போகிறது கட்டுரை. என் 8 வருட அனுபவத்தில் ஆங்கிலத்தில் நன்கு உரையாடுவது என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதன் முக்கியத்தை முதலிலேயே வலியிறுத்தி நீங்கள் எழுதி இருப்பது பாராட்டதக்கது.

நாமக்கல் சிபி said...

பாலசந்தர்,
மிக்க நன்றி. எங்க நாம சரியான திசைல போறோமானு சந்தேகமா இருந்தது. உங்களுடைய பின்னூட்டம் பார்த்தவுடம் தான் ஒருவிதமான திருப்தி ஏற்பட்டது.
ஏதாவது தப்பு இருந்தால் உடனே சுட்டிக் காட்டவும். சரி செய்து கொள்கிறேன்.

வடுவூர் குமார் said...

....பயல்
எனக்கும் software துறையில் வரணும் தான் ஆசை ஆனால் இந்த வயதுக்கு பிறகு தொழிலை மாற்ற முடியுமா என்ற சந்தேகத்தில்....ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

குமார்,
எனக்கு இதற்கு பதில் சரியாக தெரியவில்லை.

விவரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கப்பா...

நாகை சிவா said...

நீ ஆங்கில தேவையை பற்றி சொன்னதை எல்லாம் ஒத்துக்குறேன். ஆனா ப்ளிச்சு இப்படி சொல்லிட்டியே!
இது நியாயமா?
//Linked List Programகூட 15 நிமிஷத்துல போட்டுடுவன். //

நாகை சிவா said...

//எனக்கும் software துறையில் வரணும் தான் ஆசை ஆனால் இந்த வயதுக்கு பிறகு தொழிலை மாற்ற முடியுமா என்ற சந்தேகத்தில்....ஓடிக்கொண்டு இருக்கிறேன். //
குமார் அண்ணன், வேண்டாம் என்பது என் எண்ணம். நானும் இது போல யோசித்து கைவிட்டவன் என்ற முறையில் சொல்கின்றேன்

நாமக்கல் சிபி said...

//நீ ஆங்கில தேவையை பற்றி சொன்னதை எல்லாம் ஒத்துக்குறேன். ஆனா ப்ளிச்சு இப்படி சொல்லிட்டியே!
இது நியாயமா?
//Linked List Programகூட 15 நிமிஷத்துல போட்டுடுவன். //
//

சும்மா ஒரு பில்ட்-அப் தான் :-))

(நிஜமாலுமே போட்டு இருக்கன். 15-20 நிமிடமாகியிருக்கும்)

அன்பு said...

இன்றுதான் இந்தப்பக்கம் வந்தேன்...

மிக அருமையான வேலை செய்கின்றீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

நாமக்கல் சிபி said...

//அன்பு said...
இன்றுதான் இந்தப்பக்கம் வந்தேன்...

மிக அருமையான வேலை செய்கின்றீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து செய்யுங்கள். //

அன்பு,
மிக்க நன்றி!!!

Unknown said...

thanks to blogspot. very useful to me. very nice.