ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அப்படியே ஹொசூர் ரோட்டுக்கு போய் போற வர வண்டியெல்லாம் நிறுத்தி ஹேப்பி நியூ இயர்னு கத்திட்டு, ஒரு ரெண்டு மணிக்கா வீட்டுக்கு வந்து விடிய விடிய அரட்டை அடிச்சிட்டு, நடு ராத்திரி ஆறு மணிக்கு தூங்கின காலமெல்லாம் அது ஒரு கனா காலம்னு ஆகி போச்சு :-(
இன்னைக்கு இங்க எல்லாரையும் பாட் லாக் கூப்பிட்டிருக்காங்க. என்ன செய்யறதுனு தங்கமணி (யூ டூ பாலாஜி!!!) க்கு ஐடியா கொடுக்கனும். (ரொம்ப பொறுப்பான பையனா மாறிட்டே வறியே பாலாஜினு யாரும் சொல்லாததால நானே சொல்லிக்கிறேன் ;))
ஒரு வழியா இந்த வருஷம் 100 பதிவு போட்டுட்டேன். அடுத்த வருஷம் எப்படியும் பாதியா குறைஞ்சிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம் ;)
சரி அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! ENJOY MAADI :-)