மகாபரத கதைல எனக்கு எப்பவும் இருக்கறது இந்த சந்தேகம். யாராவது விளக்கம் தெரிஞ்சா சொல்லுங்க.
திருதராஷ்டிரன் கண் பார்வை இழந்ததனால் அரச பொறுப்பை ஏற்க முடியாமல் போனதால் அரசு உரிமையை இழக்கிறான். உரிமையை இழக்க காரணம் பொறுப்பை ஏற்க முடியாது என்பது தான். ஆனால் அதே பொறுப்பை அவன் தம்பி பாண்டு காட்டுக்கு செல்லும் போது ஏற்கிறான். எதன் காரணமாக அவன் உரிமையை இழந்தானோ அந்த பொறுப்பையே அவன் ஏற்று திறம்பட நடத்துவதால் (பிதாமகர், விதுரர் துணையோடு தான்) அவனுக்கு அந்த உரிமை மீண்டும் கிடைப்பது தானே தருமம்?
அப்படி அவனுக்கு உரிமை கிடைக்கும் பட்சத்தில் குரு வம்சத்தின் மூத்த மகனின் மகனான துரியோதனனுக்கு தானே அரச பதவி கிட்டியிருக்க வேண்டும்? விதுர நீதி இதை ஏற்காதது ஏன்? (இதில் திறமையை அவர்கள் முன் வைக்கவேயில்லை. அப்படி பார்த்திருந்தல் 105 பேருக்கும் போட்டி வைத்தே இளவரசனை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்). இங்கே உரிமை தான் முதலில் பேசப்படுகிறது.
இதுல இன்னொரு சந்தேகமும் இருக்கு. விதுரனை எமதர்மனின் அவதாரம் என்று சொல்வார்கள். யுதிஷ்டிரன் எம தர்மனின் மகன். ஒரு வேளை இது தான் விதுர நீதியாக யுதிஷ்டிரனுக்கு அரச பட்டத்தை அளிக்கிறதா?